Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தீயக் கோட்பாடு உபதேசமும் நடைமுறையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[04 - February - 2007] [Font Size - A - A - A]

சத்தியாக்கிரகம் என்ற அகிம்சைக் கோட்பாட்டையும் போராட்ட வடிவத்தையும் மோகனதாஸ் கரம்சந் காந்தி உலகிற்கு அறிமுகம் செய்து நூறு வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் `சமாதானம், அகிம்சை, அதிகாரமளித்தல்- 21 ஆம் நூற்றாண்டில் காந்தீயக் கோட்பாடு' என்ற தொனிப்பொருளில் இருநாள் சர்வதேச மகாநாடொன்று நடைபெற்றது. சுமார் 90 நாடுகளில் இருந்து இந்த மகாநாட்டுக்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். தென்னாபிரிக்காவில் வெள்ளையர் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கறுப்பின மக்களின் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த அங்கிலிக்கன் ஆயர் டெஸ்மண்ட் டுட்டு,நோபல் சமாதானப் பரிசு பெற்றவர்களான சாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி கென்னத் கவுண்டா போலந்தின் முன்னாள் ஜனாதிபதியான லெச் வலெசா உட்பட உலகின் அரசியல் பிரமுகர்களும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் மகாநாட்டில் பங்கு பற்றினர். தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா ஜோஹன்னஸ் பேர்க்கில் இருந்து செய்மதித் தொடர்பு மூலம் மகாநாட்டு பிரதிநிதிகளுக்கு உரையாற்றினார்.

வெறுப்புணர்வு மற்றும் வன்முறை இல்லாத உலகொன்றை உருவாக்குவதற்காக பாடுபடுவதற்கான பிரகடனமொன்றை ஏற்றுக் கொண்ட இந்த சர்வதேச மகாநாடு மகாத்மாகாந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் திகதியை சர்வதேச அகிம்சை தினமாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்தது. தென்னாபிரிக்காவில் வாழ்ந்த சகல இந்தியர்களையும் தனியான ஒரு இனக்குழுவாக வகைப்படுத்தி அவர்கள் பதிவு செய்ய வேண்டியதைக் கட்டாயமாக்குவதற்காக இன ஒதுக்கல் வெள்ளையர் ஆட்சியாளர்களினால் கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கண்டித்துக் குரலெழுப்புவதற்காக ஜோஹன்னஸ்பேர்க்கில் 1906 செப்டெம்பர் 11 இல் காந்தி நடத்திய எதிர்ப்புக் கூட்டமே சத்தியாக்கிரகத்தின் பிறப்பாக அமைந்தது. பின்னர் அந்த அகிம்சை ஆயுதத்தையே இந்தியாவில் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விடுதலைப் போராட்டத்திலும் காந்தி பயன்படுத்தினார். புதுடில்லி மகாநாட்டில் உரையாற்றிய தலைவர்களும் முக்கியஸ்தர்களும் அகிம்சைப் போராட்டக் கோட்பாடு வலுவிழந்து போய் விடவில்லை என்று தெரிவித்ததுடன், இன்றைய கால கட்டத்தின் தேவைகளுக்கு பொருத்தமானதாக சத்தியாக்கிரகத்தை மாற்றியமைத்துக் கொள்வதே உலகின் முன்னாலுள்ள சவால் என்றும் சுட்டிக் காட்டினர்.

ஆயர் டெஸ்மண்ட் டுட்டு உரையாற்றுகையில்; `அதிகாரத்தைக் கையிலெடுத்து மனிதப் பிறவிகளுக்கு அவலத்தை ஏற்படுத்தியவர்கள் எல்லோருமே மறக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், மனித குலத்தின் மேம்பாட்டுக்காக தங்களை அர்ப்பணித்த மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா மற்றும் அன்னை தெரேசா போன்றவர்கள் மீது உலகம் ஆழமான மதிப்பை வைத்திருக்கிறது' என்று சொன்னார். இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தனதுரையில்; `பேச்சுவார்த்தையை அல்லது மாற்றத்தை தடுக்கும் ஒரு வழிவகையாக சத்தியாக்கிரகத்தை நோக்கக் கூடாது. எதிர்ப்புணர்வின் பெறுமதியை நாம் மதிக்க வேண்டும். ஆனால்,அதே எதிர்ப்புணர்வை வெளிக்காட்டுபவர்கள் கருத்தொருமிப்பைக் கட்டியெழுப்புதலின் பெறுமதியையும் மதிக்க வேண்டும். ஏனைய கருத்துகளை சகித்துக் கொள்ளும் சுபாவத்தை நாம் வளர்க்க வேண்டும்.வன்முறை மோதல்கள் இதை அனுமதிப்பதில்லை. வன்செயல் எம்மைச் செவிடாக்குகிறது. அகிம்சை எமது காதுகளைத் திறந்து விடுகிறது' என்று குறிப்பிட்டார். இந்திய காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தி இன்றைய உலக மயமாக்கல் யுகத்திலே பொருளாதார விருத்தி என்பது காந்தியின் சர்வோதய இயக்கத்தைப் போன்று சகலரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

சமகால உலகில் காந்தீயக் கோட்பாட்டின் பொருத்தத் தன்மையை வலியுறுத்திய சோனியா காந்தி இன்றைய தேவைகளுக்கு ஏற்புடையதாக காந்தீயக் கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்வதே நாமெல்லோரும் எதிர்நோக்கும் சவாலாகும் என்றும் சொன்னார்.

சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு நிறைவு மகாநாட்டில் தலைவர்கள் அந்த அகிம்சைக் கோட்பாட்டின் மேன்மையைப் பற்றி செய்த உச்சாடனங்களும் உபதேசங்களும் கேட்பதற்கு இனிமையானவையாகவே இருக்கின்றன. இதை யாருமே மறுத்துரைக்க மாட்டார்கள். ஆனால், அதே சத்தியாக்கிரகத்துக்கு இன்று நேர்ந்திருக்கின்ற கதியென்ன என்ற கேள்வியையும் கேட்காமலிருக்க முடியவில்லை. இன்றும் கூட உண்ணாவிரதப் போராட்டம் எளியவர்களின் ஆயுதமென்று வர்ணிக்கப்படுகிறது. அதே ஆயுதத்தை கடந்த ஆறு வருடங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு இந்திய இளம் பெண்ணின் நிலை பற்றிய செய்திகளை அறியும் போது சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு நிறைவில் அந்த ஆயுதத்தின் கதி குறித்து பதிலளிப்பதற்கு பெரிதாக எதுவும் சிந்திக்க வேண்டியதில்லை.

வட, கிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆயுதப் படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து 35 வயதான இரோம் ஷர்மிளா சானு என்ற பெண்மணி 2000 நவம்பர் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். போராட்டத்தை ஆரம்பித்த மூன்று தினங்களில் அவரைக் கைது செய்த பொலிஸார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி விளக்கமறியலில் வைத்தனர். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரியில் ஷர்மிளாவை அன்று முதல் அனுமதித்த பொலிஸார் மூக்குத்துவாரங்களின் ஊடாக குழாய்களைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக நீராகாரங்களைச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

ஆயுதப் படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டம் மணிப்பூரில் 26 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. பிரிவினைவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இச்சட்டம் அவசியமானது எனக் கூறும் அரசாங்கம் அதை வாபஸ் பெறத் தயாராயில்லை. அதேவேளை, ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டு அவர் உயிர் துறப்பதை அனுமதிக்கவும் தயாராயில்லை. மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டத்துக்கு தார்மீக வலுவைக் கொடுக்கக் கூடிய நிலைமையை ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தோற்றுவித்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது. மேற்குறிப்பிட்ட சட்டத்தை நிபந்தனையற்ற முறையில் அரசாங்கம் வாபஸ் பெறுவதாக அறிவிக்காத பட்சத்தில் தனது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஷர்மிளா அறிவித்திருக்கிறார். அவரது அகிம்சைப் போராட்டம் தொடருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசுவதற்கான தனது விருப்பத்தை ஷர்மிளா எத்தனையோ தடவை வெளிப்படுத்தியிருந்த போதிலும் அவ்விரு தலைவர்களும் அதற்கு இணங்கத் தயாராயில்லை. சமகாலத்தின் மகத்தான ஒரு சத்தியாக்கிரகிக்கு இந்திய அரசாங்கமும் அதன் தலைவர்களும் கொடுக்கின்ற மதிப்பு எத்தகையதாக இருக்கிறது? சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு நிறைவில் இத்தலைவர்கள் செய்த உபதேசங்களின் பெறுமதி தான் என்ன?

thanks to w3.thinakkural.com

நாம் எமது கண்முன்னாலேயே காந்தியத்தையும் விஞ்சிய தியாகி திலீபனின், அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்தைப் பார்த்து விட்டோம்.

"காந்தியக் கோட்பாடும் உபதேசமும் நடைமுறையும்" இனிமேல் டாக்டர் பட்டம் வாங்குவதற்கு படிக்கும் மாணவர்களிற்கும் (சுப்பிர மணியம் சுவாமி மற்றும் கூலையும் கூட இதில் சேர்த்துக்கொள்ளலாம்), தொலைக்காட்சியில் பொழுதுபோவதற்கு பிரசங்கம் செய்யும் சாமியார்களுக்குமே இனிமேல் எதிர்காலத்தில் உதவும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.