-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
இந்திய மக்களைவைத் தேர்தல் – இறுதி கட்டத்தை எட்டியுள்ள வாக்கு எண்ணிக்கை ! இந்திய மக்களை தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகிவரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளுக்கு இணங்க பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியாக் கூட்டணி இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், தமிழ் நாட்டின் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் ஜுன் முதலாம் திகதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பா.ஜ.க.வின் வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த மக்களவை தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல், மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம், பா.ஜ.க. தலையிமையான தேசிய ஜனநாயக கூட்டணி 239 இடங்களிலும், காங்ரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, 7 இலட்சத்து 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் 40 தொகுகளையும் கைப்பற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் பா.ஜ.க. ஒரு ஆசனத்தையேனும் கைப்பற்றும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள்கூட இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளனர். இதனிடையே, ஆந்திராவில் அதிக வாக்குளை பெற்று முன்னிலையில் உள்ள, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவத்துள்ளார். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளநிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி இன்று மாலை 4 மணிக்கு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரளாவின், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி 3,64,422 வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, ராகுல் காந்தி 647,445 வாக்குகளை பெற்றுள்ளார். மக்களவையிள்ள 543 ஆசனங்களுக்காக தேர்தல் நடைபெற்றநிலையில், 272 ஆசனங்களை கைப்பற்றும் கட்சி அல்லது கூட்டணியே இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386101 -
👍........ உத்தரபிரதேச மக்களே மோடி & யோகி பிம்பத்தை உடைப்பதில் முன்னுக்கு நிற்கின்றார்கள்.......❤️
-
By தமிழ் சிறி · Posted
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி! பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். பிரதமர் மோடி 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 24 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 6,12,970 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 4,60,457 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1386089 -
By வாத்தியார் · Posted
மோடியின் ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்று மற்றைய அரசியல் கட்சிகள் முடிவெடுக்கலாம் பா ஜ க கூட்டணியில் இருக்கும் நித்திஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இருவரும் நினைத்தால் மோடி காலி -
4% தக்க வைக்கிறதே முடியாது போல............ அவரின் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிற விசயத்தால் வந்த சேதம்.......
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts