Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின்


Recommended Posts

தேர்தல் முறைகேடு விவகாரத்தில் டிரம்பின் பாராட்டைப் பெற்ற புட்டின்

 

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 35 பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்ளாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாமிதிர் புட்டின் கூறிய கருத்தை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொணால்ட் டிரம்ப் பாரட்டியுள்ளார்.  

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிகின்டனின் பிரச்சாரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இணையவழி மோசடியூடாக களவாடி தரவுகளை விக்கிலீக்ஸ் மையத்திற்கு பறிமாறிய விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளே முன்னின்று செயற்பட்டனர் என்றும், இதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றிப்பெறச் செய்வதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

 இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு 72 மணித்தியாலயங்களுக்குள் வெளியேற வேண்டும் என ஓபாமா அறிவித்திருந்தார். அத்தோடு மேரிலாந்து மற்றும் நியூயோர்க்கில் அமைந்துள்ள ரஷ்ய தூதரங்களை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

 

 அமெரிக்காவின் குறித்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு பதிலாக நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை எனவும், மாறாக அடுத்த ஜனாதிபதி பதவியேற்றவுடன் ரஷ்யா தனது நிலைபாட்டை அறிவிக்கும் என்றும் அந்நாட்டு அறிக்கையில் ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டுள்ளார்.  

 

குறித்த தீர்மானம் தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதியின் முடிவு பாராட்டப்படக்கூடியது எனும் வகையிலான கருத்தை பதிவு செய்துள்ளார்.  

trump_tweet_abut_putin.jpg

 

 

டிரம்பின் இச்செயற்பாடுகள் எதிர்கால ரஷ்ய அமெரிக்க கூட்டணிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்பதோடு ஒரு நாகரீகமான அரசியல் களத்தை உருவாக்கும் என அரசியல் கருத்தாளர்கள் சமூவலைத்தளங்கள் ஊடாக கருத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/14945

Link to comment
Share on other sites

ரஷ்ய அதிபர் புதின் புத்திசாலி: அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப் புகழாரம்

 

 
டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்
 
 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி, அவரது பொறுமையை பாராட்டுகிறேன் என்று அமெரிக்கா வின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட் பாளர் ஹிலாரி கிளின்டன் தோல் வியைத் தழுவினார். அவரது தோல்விக்கு ரஷ்ய உளவுத் துறை யின் ‘சைபர் ஹேக்கிங்’ சதி செயலே காரணம் என்று தற் போதைய அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகங்களில் பணியாற்றும் 35 அதிகாரிகளை வெளியேற்ற அதிபர் ஒபாமா நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். மேலும் ரஷ்ய உளவு அமைப்புகள், சில ரஷ்ய நிறுவனங்கள் மீது தடை உத்தரவையும் பிறப்பித்தார்.

இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியபோது, பழிக்குப் பழி நடவடிக்கையாக அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற விரும்பவில்லை. பொறுத்திருந்து நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.

புதினின் முடிவை அமெரிக்கா வின் புதிய அதிபராக பதவி யேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இதுதொடர் பாக அவர் ட்விட்டரில் நேற்று வெளி யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புத்திசாலி என்பது எனக்கு தெரியும். அதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது நிதானம், பொறுமையைப் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/ரஷ்ய-அதிபர்-புதின்-புத்திசாலி-அமெரிக்காவின்-புதிய-அதிபர்-ட்ரம்ப்-புகழாரம்/article9453492.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.