Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் சந்தேகநபர்கள் கடற்படை அதிகாரிகளே

Featured Replies

5 மாணவர் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் சந்­தே­க­ந­பர்கள் கடற்­படை அதி­கா­ரி­களே

p25-d02a69abf5365f8b4ee7ab817c473d5bad875957.jpg

 

பெயர்ப் பட்­டி­யலும் நீதி­மன்­றிடம் ஒப்­ப­டைப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகு­தி­களில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல்போகச் செய்­யப்பட்­டுள்ள விவ­கா­ரத்­துக்கு பொறுப்புக் கூற வேண்­டிய, கைது செய்­யப்­பட வேண்­டிய சந்­தேக நபர்கள் யார் என்­பதை ஒரு மாத காலத்­துக்குள் மன்றுக்கு அறி­விக்க வேண்டும் என்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன நேற்று  சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்தார்.  

இது தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போது, இக்­க­டத்­த­லுடன் கடற்­ப­டை­யி­னரே தொடர்பு பட்­டுள்­ளமை விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் தற்­போது அதில் சந்­தேக நபர்கள் யார், சாட்­சி­யா­ளர்கள் யார் என்­பது குறித்து ஆராய்­வ­தா­கவும் கூறி, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் மன்றில் ஆஜ­ரான அரசின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க கால அவ­காசம் கோரிய போதே நீதிவான் லங்கா ஜய­ரத்ன மேற்­படி அறி­விப்பை விடுத்தார்.

இந்த விசா­ர­ணை­க­ளை­களை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு கடந்த காலத்தில் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும் புல­னாய்வுப் பிரி­வுக்கும் பாரிய முட்­டுக்­கட்­டைகள் ஏற்­ப­டுத்­தப்பட்­ட­த­னா­லேயே விசா­ர­ணைகள் இவ்­வ­ளவு கால­மாக நிலு­வையில் உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டியே மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் சந்­தேக நபர்­களை துல்லி­ய­மாக பெய­ரிட கால அவ­காசம் கோரினார். இதன் போது மன்­றுக்கு கடத்­த­லுடன் தொடர்­புடையோர், அவர்­க­ளுக்கும் கடத்­த­லுக்கும் இடை­யி­லான தொடர்பு உள்­ளிட்­ட­வற்றை பட்­டியல் படுத்து நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி நிசாந்த சில்வா நீதிவான் லங்கா ஜய­ரத்­னவிடம் சமர்­பித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை நேற்று மூன்று மாதங்­களின் பின்னர் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இது குறித்த வழக்கு கோட்டை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெறும் நிலையில் நேற்றும் அது குறித்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

நேற்­றைய விசா­ர­ணையின் போது இக்­க­டத்­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள கடற்­ப­டையின் முன்னாள் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் விசா­ரணை அதி­கா­ரி­யான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வாவும் மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ராக கடத்­தப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களின் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வின் சார்பில் சட்ட மா அதிபர் சார்பில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

 இந் நிலையில் வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மான போது, நீதி­மன்ற உத்­தர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு சக்­தி­யாக மன்றில் ஆஜ­ரான அரசின் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்தார்.

'கனம் நீதிவான் அவர்­களே, இந்த விசா­ர­ணைகள் இவ்­வ­ளவு காலமாக இழுத்­த­டிக்­கப்­பட கடந்த காலங்­களில் பல்­வேறு தடைகள் ஏற்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன. சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும், குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கும் இத்­த­கைய அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்பட்­டுள்­ளன. எனினும் தற்­போது அது இல்லை.

 இந் நிலையில் நீதி­மன்றம் அளித்த மூன்று மாத காலப்­ப­கு­தியில் நாம் இவ்­வ­ழக்கின் சந்­தேக நபர்­களை அடை­யாளம் கண்­டுள்ளோம். குறிப்­பாக அவர்­களை பெய­ரிட முன்னர் அவர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சிகள் குறித்து அவ­தானம் செலுத்­தினோம். இதன் போதே குற்­றத்­துக்கு உடந்­தை­யாக இருந்த பலரும் சாட்­சியம் வழ்ங்­கி­யுள்­ள­மையும் இக்­குற்­றத்­துடன் கடற் படை அதி­கா­ரி­களே தொடர்பு பட்­டுள்­ள­மை­யையும் நாம் அவ­தா­னிக்­கின்றோம்.

எனவே இதில் யார் சந்­தேக நபர், யார் சாட்­சி­யாளர் என்­பதை பிரித்து அறி­விக்க வேண்­டிய பொறுப்பு எமக்கு உள்­ளது. அத­னையே நாம் தற்­போது செய்­கின்றோம். எனவே அதனை தெளி­வாக மன்­றுக்கு அறி­விக்க எமக்கு ஒரு மாத காலம் கால அவ­காசம் வேண்டும். எனினும் இக்­கா­லப்­ப­கு­தியில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­க­ளுக்­காக அடை­யாளம் காணப்பட்­டுள்ள எவ­ரையும் கைது செய்ய முடியும். அது தொடர்பில் ஆட்­சே­பணம் இல்லை.' என்றார்.

இத­னை­ய­டுத்து மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த பாதிக்­கப்பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன, மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல், இவ்­வ­ளவு நாள் சந்­தேக நபர்­களைக் கைது செய்­வதில் இருந்த தயக்­கத்­துக்கு அழுத்­தங்­களே காரணம் என்­பதை இப்­போ­தா­வது ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை நல்­லது. எனினும் இது நீண்ட நாள் நிலு­வையில் உள்ள வழக்கு என்­ப­தையும் பிள்­ளை­களைப் பறி­கொ­டுத்த பெற்­றோரின் மன நிலை­யையும் கருத்தில் கொண்டு விரைவாக சந்­தேக நபர்­களை மன்றில் நிறுத்த வேண்டும். என கோரினார்.

இத­னை­ய­டுத்து சிறப்பு விசா­ரணை அதி­காரி நிசாந்த டி சில்­வா­விடம், விசா­ர­ணை­களின் அறிக்­கையை நீதிவான் லங்கா ஜய­ரத்ன பெற்­றுக்­கொண்டார். அதில் இந்த சம்பவத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து கடற்­ப­டை­யி­­னரதும் பெயர்கள் உள்­ள­டக்­கப்பட்­டி­ருந்­த­துடன் அவர்­களின் நட­வ­டிக்­கை­களும் தெளி­வாக குறிப்­பி­டப்பட்­டி­ருந்­தன. குறிப்­பாக கடத்­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய கடற்­படை அதி­கா­ரி­க­ளான ரண­சிங்க, ஹெட்டி ஆரச்சி, விக்­ர­ம­சூ­ரிய மற்றும் சம்பத் முன­சிங்க ஆகி­யோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் அவர்களின் நடவடிக்கைகளும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன. குறிப்பாக கடத்தல்களுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரிகளான ரணசிங்க, ஹெட்டி ஆரச்சி, விக்ரமசூரிய மற்றும் சம்பத் முனசிங்க ஆகியோரின் நேரடி பங்களிப்பு தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன..

 இந் நிலையில் திறந்த மன்றை அழைத்த நீதிவான் லங்கா ஜயரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மிகத் தெளிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சாட்சியங்கள் போதுமான அளவு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை செவி மடுத்து, சந்தேக நபர்களை பெயரிட ஒரு மாத கால அவகாசம் வழங்குகின்றேன். என அறிவித்து வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-06#page-1

  • கருத்துக்கள உறவுகள்

குமாரபுரம் மற்றும் ரவிராஜின் வழக்கு உதாரணம் இருக்கும் போது, இதன் மீதான வழக்கும், விசாரணைக்கும் என்ன தீர்ப்பு வரும் என்று நமக்கு தெரியுமே. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.