Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களது வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருக்கிறார்கள்! வலி.வடக்கு மக்கள் கவலை

Featured Replies

27 வருடங்களாக சொந்த நிலத்தில், சொந்த வீட்டில் வாழ முடியாமல் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எங்களுடைய நிலத்தில், எங்களுடைய வீட்டில் சிங்கள மக்கள் தங்கியிருக்கின்றார்கள் எங்களுடைய கடலில் நீராடி மகிழ்கிறார்கள் என வலி.வடக்கு மக்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.

இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர்.

இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

விடயம் தொடர்பாக மக்கள் மேலும் குறிப்பிடுகையில்,

27 வருடங்களாக நாங கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் அகதி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடை ய நிலத்தை பார்க்க முடியாது. வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் சிங்கள மக்கள் மட்டும் தங்கியிருந்து நீராடி மகிழலாம்.

இது என்ன நியாயம்? எனவே எங்களுடைய நிலத்தில் எங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு கொண்டனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131715?ref=morenews

47 minutes ago, TNT said:

எங்களுடை ய நிலத்தை பார்க்க முடியாது. வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் சிங்கள மக்கள் மட்டும் தங்கியிருந்து நீராடி மகிழலாம்.

இது என்ன நியாயம்? எனவே எங்களுடைய நிலத்தில் எங்களை மீள்குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டு கொண்டனர்.

Edited by நிழலி

6 hours ago, TNT said:

இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.

உண்மையாவா?

ஆமா இன்று விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் ஒரு வீட்டையாவது உங்களால் காட்ட முடியுமா?

முதலில் இது விடுவிக்கப்பட்டதா என்று மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அதற்குப்பிறகு பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

உண்மையாவா?

ஆமா இன்று விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் ஒரு வீட்டையாவது உங்களால் காட்ட முடியுமா?

முதலில் இது விடுவிக்கப்பட்டதா என்று மக்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் - அதற்குப்பிறகு பார்க்கலாம்.

இதை யாரிடம் கேட்கிறீர்கள் ஜீவன்?

1 hour ago, MEERA said:

இதை யாரிடம் கேட்கிறீர்கள் ஜீவன்?

இணைத்தவரிடமும் + மூலத்திடமும்.

ஊறணியில் எடுத்த வீடியோவே என்னிடம் உள்ளது. அது போன நொவெம்பரில் எடுத்தது. அங்கு இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளில் எதுவுமே இல்லை, சில (ஆக மிஞ்சினால் ஒரு மூன்று) இப்பவும் உள்ளது - அங்கு இராணுவமே உள்ளது. இப்போது அங்கு வீடுகள் முளைத்ததாகவும் இப்போது அங்கு சிங்கள குடும்பங்கள் கும்மாளம் அடிப்பதாகவும் எழுதுவது தவறு என்பதை சுட்டிக்காட்டினேன் - அம்புட்டுத்தான்.

உண்மையை எழுதி பாருங்கள் - முடியவில்லையா 
உண்மை எதுவென்று தேடிப்பாருங்கள்
அதுவும் முடியவில்லையா - சும்மா இருங்கள்
புரளியை கிளப்பாதீங்கள்

ஆனால் நம் மக்கள் இவற்றை கடந்து வெகுதூரம் வந்து விட்டார்கள் - இனி பருப்பு வேகாது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இன்றைய தினம் ஊறணி, மயிலிட்டி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக ஊறணி பகுதியில் 400 மீற்றர் கரையோர பகுதியும், 2 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வ லிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெருமளவில் வந்திருந்தனர்.

இதன்போது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மக்களுடைய வீடுகளில் சிங்கள மக்கள் தங்கியிருந்து குடும்பம் குடும்பமாக கடலில் நீராடி மகிழ்வதை நேரில் பார்த்தனர்.

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என்றுதானே இருக்கிறது, ஊறணி என்று இல்லையே? 

25 minutes ago, ஜீவன் சிவா said:

இணைத்தவரிடமும் + மூலத்திடமும்.

ஊறணியில் எடுத்த வீடியோவே என்னிடம் உள்ளது. அது போன நொவெம்பரில் எடுத்தது. இப்போது அங்கு வீடுகள் முளைத்ததாகவும் இப்போது அங்கு சிங்கள குடும்பங்கள் கும்மாளம் அடிப்பதாகவும் எழுதுவது தவறு என்பதை சுட்டிக்காட்டினேன் - அம்புட்டுத்தான்.

உண்மையை எழுதி பாருங்கள் - முடியவில்லையா 
உண்மை எதுவென்று தேடிப்பாருங்கள்
அதுவும் முடியவில்லையா - சும்மா இருங்கள்
புரளியை கிளப்பாதீங்கள்

ஆனால் நம் மக்கள் இவற்றை கடந்து வெகுதூரம் வந்து விட்டார்கள் - இனி பருப்பு வேகாது.

உந்த பருப்பு கிளிநொச்சியில் இருந்தே அவிகிறது.

5 minutes ago, MEERA said:

படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி என்றுதானே இருக்கிறது, ஊறணி என்று இல்லையே? 

உந்த பருப்பு கிளிநொச்சியில் இருந்தே அவிகிறது.

நீங்கள் தொடர்ந்து அவியுங்கள் 
அவிஞ்சால் நாளை பேசலாம்.

மக்கள பற்றி மட்டும் எழுதிடாதீங்கோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஜீவன் சிவா said:

நீங்கள் தொடர்ந்து அவியுங்கள் 
அவிஞ்சால் நாளை பேசலாம்.

மக்கள பற்றி மட்டும் எழுதிடாதீங்கோ!!!!

நீங்கள் அவிக்கின்றபடியால் மற்றவர்களையும் அப்படி நினைக்க வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் வருடக்கணக்காக சிறீலங்கா புலனாய்வினரே இல்லை என்று அவித்த ஆள் அல்லவா தாங்கள். 

அங்குள்ள மக்களை பற்றி எழுத உங்களை விட எனக்கு மிக அதிக உரிமை உள்ளது. 

8 hours ago, MEERA said:

நீங்கள் அவிக்கின்றபடியால் மற்றவர்களையும் அப்படி நினைக்க வேண்டாம்.

யாழ்ப்பாணத்தில் வருடக்கணக்காக சிறீலங்கா புலனாய்வினரே இல்லை என்று அவித்த ஆள் அல்லவா தாங்கள். 

அங்குள்ள மக்களை பற்றி எழுத உங்களை விட எனக்கு மிக அதிக உரிமை உள்ளது. 

மீரா! இப்பிடி பட்டு பட்டு என்று உண்மைகளை போட்டு உடைக்கிறீங்களே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.