Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை: தேர்தல் ஆணையம்

Featured Replies

சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை: தேர்தல் ஆணையம்

 

புதுடில்லி: அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.இந்நிலையில், இடைக்கால பொது செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை.

சட்ட விதிகளை மாற்றினால், மட்டுமே பொது செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியுள்ளது. இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1706953

  • தொடங்கியவர்

இடைக்கால பொதுச் செயலரை நியமிக்க அதிமுக சட்ட விதியில் வழியில்லை: தேர்தல் ஆணையம்

 

 
sasikala


சென்னை: இடைக்கால பொதுச் செயலரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் அதிமுகவுக்கு விரைவில் அனுப்பப்பட இருப்பதாகவும் செய்தித் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை எதிர்த்து கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து ஆராய்ந்த தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மேலும், அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச செயலாளரை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலராக பதவியேற்க முடியும் என்ற விதியை நீக்கித்தான், சசிகலா இடைக்கால பொதுச் செயலராக பதவியேற்றார்.

ஆனால், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச செயலராக யாரும் பதவியேற்க வழி செய்யும் வகையில் விதி இல்லாததால், சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக சசிகலா பதவியேற்பதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamani.com/tamilnadu/2017/feb/08/இடைக்கால-பொதுச்-செயலரை-நியமிக்க-அதிமுக-சட்ட-விதியில்-வழியில்லை-தேர்தல்-ஆணையம்-2645991.html

17 minutes ago, நவீனன் said:

ஏற்கனவே, தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலராக பதவியேற்க முடியும் என்ற விதியை நீக்கித்தான், சசிகலா இடைக்கால பொதுச் செயலராக பதவியேற்றார்.

அப்படின்னா நம்ம சசி அக்கா ஐந்து வருடமாவது உறுப்பினரா இல்லையா?

confused face smiley

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

அப்படின்னா நம்ம சசி அக்கா ஐந்து வருடமாவது உறுப்பினரா இல்லையா?

வடிவா செய்தியை படியுங்கோ சார்..!

'அக்கா(?)' தொடர்ச்சியாக ஐந்து வருடம் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டுமென அதிமுக சட்ட விதி சொல்கிறது..

'அக்கா' இடையில் வெளியேறி பின்னர் சேர்ந்த பின் அவரின் முன்னாள் காலக்கணக்கு, கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டது..

'அக்கா'வை 'அம்மா' சிலகாலம் விலத்தி வைத்திருந்தது தெரிந்திருக்கும்தானே?

17 minutes ago, ராசவன்னியன் said:

'அக்கா' இடையில் வெளியேறி பின்னர் சேர்ந்த பின் அவரின் முன்னாள் காலக்கணக்கு, கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டது..

பாவம் அக்கா 
கொஞ்சநாள் விடுமுறை எடுத்திற்று எங்காவது சுத்தியிருக்கலாம் - அதுக்காக இப்படியா பண்ணுவாங்க?

crying smiley face emoticon

 

  • தொடங்கியவர்
தற்காலிக பொ.செ., சசிகலாவுக்கு
பன்னீரை நீக்க அதிகாரம் உள்ளதா
 
 
 

'பொதுச்செயலர் ஜெயலலிதாவால் நியமிக்கப் பட்ட பன்னீர்செல்வத்தை, பொருளாளர் பதவி யில் இருந்து நீக்க, தற்காலிக பொதுச்செயலர் சசிகலாவுக்கு அதிகாரமில்லை' என, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tamil_News_large_170709520170209001143_318_219.jpg

அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர், தமிழக முதல் வர் என, இரண்டு பதவிகளையும், ஜெயலலிதா வகித்து வந்தார். அவரது மறைவுக்கு பின், கட்சியின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார்.

அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்; இந்த விதியை மட்டும், மாற்றவோ, திருத்தவோ முடியாது எனவும், தெளிவாக கூறப்பட்டுள்ளது. பொதுச் செயலர் பதவி காலியானால், புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுக்கும் வரை, முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படலாம். பொதுச்செயலர்

இல்லாத பட்சத்தில், அவரது பணிகளை, அவரால் நியமிக்கப்பட்ட துணை பொதுச்செயலர்கள் மேற் கொள்ளலாம். பொருளாளரை நியமிப்பதும், பொதுச் செயலர் தான்.

பொருளாளர் பதவி வகித்து வந்த, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளார்; அந்தப் பதவி யில்,திண்டுக்கல் சீனிவாசன் நியமிக் கப்பட்டுள் ளார். இதற்கான அறிவிப்பை, சசிகலா வெளியிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலரான ஜெய லலி தாவால், பொருளாளர் பதவியில் நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வத்தை, தற்காலிக பொறுப்பு வகிக்கும் சசிகலாவால், நீக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்காலிக பொதுச்செயலர் பொறுப்பு குறித்து, அ.தி.மு.க.,வின் சட்ட விதிகளில் எங்கும் குறிப் பிடப்படவில்லை. சசிகலாவின் நியமனம் குறித்து, தேர்தல் கமிஷனிடம், சசிகலா புஷ்பா எம்.பி., புகார் அளித்துள்ளார். அந்தப் புகார், தேர்தல் கமிஷனின் பரிசீலனையில் உள்ளது.எனவே, 'சசிகலாவின் நியமனமே கேள்விக்குறியாகி இருக்கும் போது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பன்னீர் செல்வத்தை, பொருளாளர் பதவியில் இருந்து விடு விக்க முடியாது' என, கட்சியின் மூத்த உறுப்பினர் கள் தெரிவிக்கின்றனர்.

கட்சி நிர்வாகிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், அதற்கென விதிமுறைகளும் இருக்கின்றன. கட்சியின் உறுப்பினர், நிர்வாகிகளை

 

நீக்கவோ, 'சஸ்பெண்ட்' செய்யவோ, கட்சியின் பொதுச் செயலருக்கு முழு அதிகாரம் உள்ளது. நட வடிக்கையை கைவிடவும், அவருக்கு அதிகா ரம் உள்ளது. இதில், பொதுச்செயலரின் முடிவே இறுதியானது.

பொருளாளர் பதவியில் இருந்து, பன்னீர் செல்வத்தை நீக்கியதில், கட்சியின் விதி முறை கள் பின்பற்றப்பட்டதா என்பதும் கேள்வி குறி யாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

தையடுத்து, இரண்டு மணி நேரத்துக்குள், பொருளாளர் பதவியில் இருந்து விடுவிக்கப் பட்டு விட்டார். எனவே, பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது குறித்து, வழக்கு தொடர்வது குறித்த ஆலோசனையிலும், பன்னீர்செல்வத் தின் ஆதரவாளர்கள் இறங்கி உள்ளனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707095

  • தொடங்கியவர்
சசிகலா உத்தரவுகள் சட்டப்படி செல்லாது!
 
 
 
Tamil_News_large_1708004_318_219.jpg
 



சென்னை: அ.தி.மு.க.,வில் சசிகலா முறைப்படி கட்சி உறுப்பினர்களின் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தேடுக்கப்படாததால் பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலாவின் உத்தரவுகள் சட்டப்படி செல்லாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., கட்சி விதிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் கூறியதாவது:அ.தி.மு.க.,வின் கொள்கை மற்றும் சட்ட விதி, 20ன் கீழ், அ.தி.மு.க., பொதுச்செயலரை, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளில் செயல்படும், அ.தி.மு.க.,வின் அனைத்து பிரிவு உறுப்பினர்களின் ஓட்டுகள் மூலம் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
 

 

 

முடிவு எடுக்க முடியாது:



அந்த விதிகளில், பொதுச்செயலரை தேர்தல் இன்றி தற்காலிகமாக நியமிக்கும் அம்சம் இல்லை. எனவே, தற்போது பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா பிறப்பிக்கும் உத்தரவுகள், சட்டப்படி செல்லாது. அவர் கட்சியின் உறுப்பினராக இருந்தால், அது மட்டுமே செல்லும். மாறாக, பொதுச்செயலர் அந்தஸ்தில், எந்த முடிவையும் எடுக்க முடியாது. யாரையும் நீக்கவோ, சேர்க்கவோ முடியாது. அதேபோல், அவரது அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும், கட்சியினரை, கட்சி நிர்வாகத்தை கட்டுப்படுத்தாது. இதுகுறித்து, சட்டரீதியாக அணுகினால், நியமன பொதுச்செயலரின் உத்தரவுகள் செல்லாது என, தீர்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708004

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

பொதுச்செயலாளர் பதவி! சசிகலாவுக்கு எதிராகக் களம் இறங்கிய மதுசூதனன்

madhusuthan_1_13369.jpg

அ.தி.மு.க. தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவர் மட்டுமே கட்சியின் பொதுச் செயலாளராக முடியும் என்றும், சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வானதை ஏற்கக்கூடாது என்றும் தேர்தல் ஆணைத்துக்கு மனு அளித்துள்ளார் அவைத் தலைவர் மதுசூதனன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்தது கட்சியின் பொதுக்குழு. இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்ததாக பன்னீர்செல்வம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பன்னீர்செல்வத்துக்கு ஐந்து எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என ஆதரவு பெருகியது. இந்தச் சூழ்நிலையில் அவைத் தலைவர் மதுசூதனன் நேற்று பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவைத் தலைவர் மதுசூதனன், தொண்டர்களால் தேர்வு செய்யப்படுவர் மட்டுமே பொதுச் செயலாளராக முடியும். தற்காலிக  பொதுச் செயலாளரைத் தேர்வு செய்ய அ.தி.மு.க சட்டவிதியில் இடமில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதை ஏற்கக்கூடாது' எனக் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80358-madhusudhanan-files-complaint-against-sasikala-in-election-commission.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.