Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் திருமணம் செய்வதாக கூறி தமிழ் யுவதியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ அதிகாரி

Featured Replies

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் தாயுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 2.00 மணியளவில் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

கடந்த வருடம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதிக்கு இராணுவச் சிவில் அதிகாரியாக இருந்த லெப்டினன் சுரங்க என்னும் இராணுவ அதிகாரி அப்பகுதி மக்கள் வீடுகளுக்குச் சென்று மக்கள் தொடர்பான குடும்ப விபரங்களைப் பெற்றுள்ளார்.

அவ்வேளை பாதிக்கப்பட்ட மேற்படி யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசிப்பதைத் தெரிந்து அந்த யுவதிக்கு தாம் உதவுவதாக நாடகமாடி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

அத்துடன் அவ் யுவதியைத் திருமணம் செய்வதாகக் கூறி, மிரட்டித் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ;்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இதை அறிந்த அப்பகுதிக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் அந்த இராணுவ அதிகாரியிடம் கேட்ட வேளை, தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும் அவரையே தான் திருமணம் செய்யப் போவதாகவும்,

இவ்விடயத்தில் நீங்கள் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அதை விட்டு எங்கள் விடயத்தில் தலையிட்டால் நடப்பது வேறு எனவும் மிரட்டும் பாணியில் கூறியுள்ளார்.

தற்போது கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள போதும் அந்த இராணுவ அதிகாரி ஊற்றுப்புலத்திலுள்ள மேற்படி யுவதியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து இரவில் தங்கி நின்று விட்டுச் செல்வதை அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அவதானித்துள்ளனர்.

மேலும் இவர் பற்றிய விபரங்களை, அறிந்த போது அவர் ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் திருகோணமலை புளுக்குணாவ என்னுமிடத்தில் அவரது குடும்பம் வசிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மேற்படி இராணுவ அதிகாரி நேற்றைய தினம் இரவு ஊற்றுப்புலத்திலுள்ள யுவதியின் வீட்டில் தங்கி நின்றதை அறிந்த அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உடனடியாகவே இராணுவப் பொலிஸாருக்கு (சீ.சீ.எம்.பி) தகவல் வழங்கி முறையிட்டு விட்டு அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

நேற்றிரவு 2.00 மணியளவில் அங்கு சென்ற இராணுவப் பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட யுவதியை இன்றைய தினம் காலை அக்கராயன் இராணுவ முகாமுக்கு இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட யுவதியிடம் அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இவ்விடயம் பற்றி கேட்ட போது, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி அந்த இராணுவ அதிகாரி தன்னை வற்புறுத்தி மிரட்டியதாகவும் இது பற்றி தான் தனியே வாழ்வதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்ததாகவும் தன்னை இராணுவம் மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் மேற்படி யுவதி பலதடவைகள் அச்சுறுத்தப்பட்டவர் போல மிகவும் பயந்த நிலையில் காணப்படுகின்றார்.

தமிழ் மக்கள் வாழ்விடங்களை இராணுவத்தினர் அபகரித்து மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இராணுவப் படை முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளமையால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.

இராணுவத்தினர் மக்கள் மத்தியில் தங்கியிருப்பதால் இப்படியான சம்பங்கள் பல இடம்பெற்றுள்ளன.

இதனால்தான் தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு இராணுவம் வெளியேறி, தமிழ் மக்கள் வாழ்வியலின் மீது இராணுவம் தலையிடுவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைத் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நீண்ட காலமாகக் கோரி வருகின்றார்கள்.

http://www.tamilwin.com/community/01/135026?ref=morenews

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் யுவதியுடன் உல்லாசமாக இருந்த இராணுவ அதிகாரி மடக்கி பிடிக்கப்பட்டார் : நேற்றிரவு சம்பவம்

கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தில் தாய் தந்தையுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 10 மணியளவில் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.Ari-lanka-army-sexual-abuse.jpg

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யுவதி  ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை ஜந்து மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாயை, நேற்று  இரவு  பத்து மணியளவில் இருவரும் ஒன்றாக இருந்த போது கிராமமக்கள் வழங்கிய தவலுக்கு அமைவாக  இராணுவ  அதிகாரிகள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு கிராமங்களையும் கண்காணிக்க இராணுவத்தினர் நியமிக்கபட்டிருந்தனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் கிராமங்களில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் தங்களின் இராணுவ உயரதிகாரிகளுக்கு வழங்கி வருவதனை  பணியாக கொண்டிருந்தனர்.  

இவ்வாறு கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில்  அக்கராயன்  652 பிரிகேட் எஸ் .எல் ,என் .யி  படைத் தலைமையகத்தில் இருந்து  நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

 பொலன்னறுவை தியபெதும பகுதியில் வசித்துவரும்  நான்கு பிள்ளைகளின் தந்தையான கே .எஸ் .பி   சந்ரசேகர  என்ற  இராணுவ அதிகாரி ஊற்றுப்புல கிராமத்தைச் சேர்ந்த  யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது ஜந்து மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர், பாதிக்கப்பட்ட யுவதியின் வீட்டுக்கு  அடிக்கடி சென்று இரவில் தங்கி நிற்பதனை வழக்கமாக கொண்டுள்ளார்.

  இராணுவ சிப்பாயின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத பிரதேச மக்கள் பல தடவைகள் எச்சரித்தும் குறித்த இராணுவ அதிகாரி கேட்கவில்லை. மேலும் கிராம மக்களை இராணுவ அதிகாரி மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிராம மக்கள் நேற்று இரவு எட்டு மணியளவில்  குறித்த வீட்டை முற்றுகை செய்துள்ளனர்.

பலமணிநேரங்கள் ஆகியும் குறித்த சிப்பாய்  வெளியில் வராததினால்  பிரதேச வாசிகள்    பிரதேசத்தின் இராணுவ உயரதிகாரிகளின் கவனத்திற்கு தகவலை கொண்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த இராணுவ அதிகாரிகளால்   படைச் சிப்பாய் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டார்.

இன்று குறித்த இராணுவ சிப்பாய்  விசாரணைகளுக்காக  இராணுவ பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

 இராணுவத்தினர்  விடுமுறையில் செல்வதென்றால் விடுமுறை என்ற பெயரில்  ஏழு நாட்களும்  அல்லது  பாஸ்  என்றபெயரில்  மூன்று நாட்களும்  விடுமுறை எடுக்கலாம்.

  குறித்த  இராணுவச் சிப்பாய்  நேற்றைய தினம் பாஸ்  என்ற பெயரில் மூன்று  நாட்கள்  விடுமுறை  எடுத்துக் கொண்டே  முகாமினை விட்டு வெளியேறி உள்ளார். 

குறித்த யுவதியின் தாயும் தந்தையும் ஏனைய பெற்றோர்கள் போன்று விவேகமானவர்கள் அல்ல என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.  

http://www.virakesari.lk/article/16480

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.