Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கையில் தகவல்

Featured Replies

சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கையில் தகவல்

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 
சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கையில் தகவல்
 
சென்னை:

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரிகள், காவல்துறை அளித்த தகவலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில், அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அதனால், விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்களாக, அல்லது சுய விருப்பத்தின் பேரில் தங்கியுள்ளார்களாக என்பது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/10215734/1067550/We-can-not-call-sasikala-to-form-government-now-Governor.vpf

  • தொடங்கியவர்

கை விரித்த ஆளுநர்.. அதிர்ச்சியில் சசிகலா.. என்ன செய்யப் போகிறது அதிமுக?

ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று தற்காலிக ஆளுநர் கூறி விட்டதால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் சசிகலா தள்ளப்பட்டுள்ளார்.

 

சென்னை: பதவியேற்க அழைக்க முடியாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் அறிவித்து விட்டதால் சசிகலா தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. அடுத்தகட்டமாக சசிகலா தலைமையிலான அதிமுக என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறிய புகாரின் அடிப்படையிலும், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளதைக் காரணம் காட்டியும் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் கூறி விட்டார்.

 

 
What Sasikala will do next?
 

 

 

இது சசிகலா தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை சசிகலாவால் முதல்வராக முடியாது என்பதும் உறுதியாகி விட்டது. இந்த நிலையில் சசிகலா தரப்பு அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

தனது எம்.பிக்கள் மூலமாக மத்திய அரசுடன் நாடாளுமன்றத்தில் அது கடுமையான மோதலில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை சென்னையில் எம்.பிக்கள் கூட்டத்தை அதிமுக நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. நமக்கு சாதகமாக ஆளுநர் நடந்து கொள்ளாவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கலாம் என்று அக்கூட்டத்தில் எம்.பிக்களுக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால் இது எந்த அளவுக்கு அக்கட்சிக்கு பலன் தரும் என்று தெரியவில்லை. அல்லது தன் வசம் உள்ள எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு டெல்லியில் குடியரசுத் தலைவரை சசிகலா முயற்சிக்கலாம் (என்.டி.ஆர். முன்பு செய்தது போல). ஆனால் அவருக்கு ஆதரவாக எத்தனை பேர் உள்ளனர் என்பது அவர்களுக்கே குழப்பமாக உள்ளதால் அந்த முடிவுக்கு அவர்கள் வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதைத் தவிர சசிகலா தரப்புக்கு வேறு வழியில்லை என்பதே இப்போதைய நிலைமையாக உள்ளது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/what-sasikala-will-do-next-273813.html

  • கருத்துக்கள உறவுகள்

பன்னீர் தற்போதைய  முதல்வராக தொடர்கிறார்!

  • தொடங்கியவர்

தமிழக அரசியல் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை

தமிழக அரசியல் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தகவல்

 
 
தமிழக அரசியல் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை
 
சென்னை:

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை ஏதும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழக நிலைமை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.

அந்த அறிக்கையில், சசிகலாவை தற்போதைக்கு ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளாதாக கூறப்பட்டது.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் உள்ளதை தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி கொஞ்சம் பொறுத்திருக்கலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஆளுநர் எந்தவித தகவலையும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/10230417/1067554/Raj-Bhavan-expelled-that-any-notifications-sent-to.vpf

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு வருவதற்கு முன்னர் முதல்வராக சின்னம்மா நினைத்திருப்பார்.. ஆனால் இன்னொரு அதிகார மையம் எழுவதற்கு டில்லியில் உள்ளவர்களுக்கு விருப்பம் இருந்திருக்காது.. அதனால் சின்னம்மாவுக்கு வெறும் களிதான் என்பதை முடிவு பண்ணிவிட்டார்கள். :D:

  • தொடங்கியவர்
 
 
Tamil_News_large_1708335_318_219.jpg
 

ஆட்சி அமைக்கும்படி சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க...முடியாது? மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக பரபரப்பு

 

'தற்போதுள்ள சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்கும்படி அழைக்க முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக, நேற்றிரவு பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், 'அப்படிப்பட்ட அறிக்கை எதையும் அனுப்பவில்லை' என, கவர்னர் அலுவலகம் மறுத்துள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாக, சசிகலா மீது குற்றம் சாட்டி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, நேற்று முன்தினம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

அதேநேரம் பெரும்பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், சட்டசபை கட்சி தலைவராக, தேர்வு செய்யப்பட்டுள்ள தன்னையே, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என, சசிகலாவும் கவர்னரிடம் கோரிக்கை வைத்தார்.

இரு தரப்பினரிடமும் பேசியதுடன், நேற்று அரசு அதிகாரிகளையும் அழைத்து, கவர்னர் ஆலோசித்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், கவர்னரை சந்தித்தார். அனைவரும் அளித்த தகவல் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், மூன்று பக்க அறிக்கை அனுப்பியுள்ளதாக, நேற்றிரவு பரபரப்பு தகவல் வெளியானது.அதேபோல, அந்த அறிக்கையில், கவர்னர் கூறியுள்ளதாக, சில தகவல்களும் வெளியாகின.

அதன் விபரம்:

அ.தி.மு.க.,வில் நிலவும் பிரச்னை, உட்கட்சி பிரச்னை தான். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து, தமிழக அரசு தலைமை செயலர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை அழைத்து விசாரித்தேன்.

அவர்கள் தெரிவித்த தகவலின்படி, சட்டம் - ஒழுங்கு பிரச்னை எதுவும் இல்லை. ஆட்சி அமைக்க, சசிகலா உரிமை கோரி உள்ளார். அவர், தற்போது சட்டசபை உறுப்பினராக இல்லை. அதனால், அரசியல் சட்டப் பிரிவு, 164 - 1ன் படி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் படி, அவருக்கு அழைப்பு விடுக்க இயலாது.

அதேபோல், 18 ஆண்டுகளாக நடந்து வரும், சொத்து குவிப்பு வழக்கில், வரும் வாரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது. கர்நாடக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் கேட்டபோது, ஒரு வாரம் காத்திருக்கும்படி, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, சட்டசபையில் உறுப்பினராக இல்லாத ஒருவரை, ஆட்சி அமைக்க அழைத்தால், அரசியல் சட்டப்படி, ஆறு மாதங்களுக்குள், தேர்தலை சந்திக்க வேண்டும். அதில் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினராக வர வேண்டும். ஆறு மாதங்களுக்குள் தேர்தலை சந்திக்கா விட்டால், அரசியல் சட்டப் பிரிவு, 164 -4ன் படி தகுதியிழக்க நேரிடும்.

சசிகலா விஷயத்தில், நிலுவையில் உள்ள தீர்ப்பு காரணமாக, அவர் சட்டசபை உறுப்பினராவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. காரணம், சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், அவர், எம்.எல்.ஏ.,வாக ஆக முடியாது. இந்த சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது.

மேலும், முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த உடன், மாற்று அரசு அமையும் வரை, அவரே பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முதல்வரை உடனடியாக தேர்வு செய்வதற்கான அவசியமோ, வெற்றிடமோ இல்லை.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சிறை வைக்கப்பட்டு உள்ளதாக வந்துள்ள புகார் குறித்து விசாரிக்கும்படி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மிக விரைவில், தெளிவான சூழ்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது.

இது, அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியதும், கவர்னர் மாளிகையில் இருந்து, உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியானது. கவர்னரின் முதன்மைய செயலர் வெளியிட்ட அந்த அறிக்கையில், 'கவர்னர் சார்பில், எந்த அறிக்கையும் அனுப்பப்படவில்லை' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1708335

  • கருத்துக்கள உறவுகள்

16649343_269120460184626_290480783293303

:D:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

16508752_1602764693074256_34187670948373

tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

தீர்ப்பு வருவதற்கு முன்னர் முதல்வராக சின்னம்மா நினைத்திருப்பார்.. ஆனால் இன்னொரு அதிகார மையம் எழுவதற்கு டில்லியில் உள்ளவர்களுக்கு விருப்பம் இருந்திருக்காது.. அதனால் சின்னம்மாவுக்கு வெறும் களிதான் என்பதை முடிவு பண்ணிவிட்டார்கள். :D:

எதிர் பார்த்த முடிவுதான். இசை.
பன்னீர் செல்வம், டெல்லி.... மத்திய அரசின் செல்லப் பிள்ளை. 
அவரை... நடுத் தெருவில் விட,  மத்திய அரசு விரும்பாது.

சசிகலா...  முதல்வராக ஆசைப்பட்ட  அவசரம் தான், 
அவரை... பருத்தித்துறை,  "பவளக்  கொடியின்"  நிலைமைக்கு ஆளாக்கி  விட்டது. :grin:

 "பவளக்  கொடியின்"  மேலதிக  தகவல்களுக்கு.... 
கீழே.... உள்ள, இணைப்பை  அழுத்தவும். :D:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.