Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா கோரிக்கை: சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு

Featured Replies

 
 
 
 
Tamil_News_large_1711290_318_219.jpg
 

சென்னை : சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.

 

வாய்மொழியாக...:

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர்.

 

நிராகரிப்பு:

ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711290

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சசிகலா கோரிக்கை நிராகரிப்பு! உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

Supreme court

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா உள்பட மூன்று பேர், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. உடனடியாக சரணடைய வேண்டும் என அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியது. மேலும், மூன்று பேரும் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வாரம் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா உள்பட மூன்று பேர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உடல் நிலையை கருத்தில் கொண்டு அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறியதோடு, உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/80869-court-rejects-sasikalas-plea.html

  • தொடங்கியவர்

அரஸ்ட் வாரன்ட் வேண்டாம்... மாலைக்குள் சரணடைவார்: கோர்ட்டில் சசி வக்கீல் வேண்டுகோள்

 

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, பெங்களூரு கோர்ட்டில் ஆஜரான சசிகலா வழக்கறிஞர், சசிகலாவுக்கு எதிராக அரஸ்ட் வாரன்ட் வேண்டாம். அவர் இன்று மாலைக்குள் சரணடைவார் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைவது உறுதியாகியுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711293

ஜெ. நினைவிடத்தில் சபதம் எடுத்தார் சசிகலா
 
sa21111qqqq.jpg
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுபடி பெங்களுரு நீதிமன்றத்தில் சரண் அடைய இன்று காலை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார் சசிகலா. சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா. விழுந்து வணங்கினார். அப்போது ஜெயலலிதா நினைவிடத்தில் தரையில் கையை அடித்து ஏதோ கூறிக்கொண்டே சபதம் எடுத்தார். 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184455

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.