Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுக கதை முடிந்தது.. இனி அழிவுதான்.. கட்ஜூ ஆவேசம்

Featured Replies

அதிமுக கதை முடிந்தது.. இனி அழிவுதான்.. கட்ஜூ ஆவேசம்

 

சென்னை: எப்போது சசிகலாவின் கைப்பாவையை முதல்வராக நியமிக்க அதிமுக முடிவு செய்ததோ அப்போதே அந்தக் கட்சியின் கதை முடிந்தது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோபாவேசமாக கூறியுள்ளார்.

Markandeya Katju sees the end of ADMk soon

 இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சசிகலாவின் கைப்பாவையை சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம் அதிமுக தனது மரணத்திற்கு அதுவே குழி தோண்டி விட்டது.

தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் சந்தேகமே இல்லாமல் திமுகதான் பெரும் வெற்றி பெறும். அதிமுக மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தே போகும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் கட்ஜு.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/markandeya-katju-sees-the-end-admk-soon-274309.html

  • தொடங்கியவர்

சிறையிலிருந்து நடக்கப் போகும் ஆட்சி.. வாழ்த்துகள் தமிழர்களே.. கட்ஜு சாட்டையடி!

 

சென்னை: உலகத் தமிழர்களைப் போலவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கும் கூட சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை சகித்துக் கொள்ள முடியவில்லை போலும். அடுத்தடுத்து இந்த அமைச்சரவையை விமர்சித்துப் பதிவு போட்டுள்ளார்.

 

கட்ஜு போட்டுள்ள இன்னொரு முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிறையிலிருந்து நடக்கப் போகும் அரசு அமைந்துள்ளது தமிழகத்தில். சிறைக்குப் போகும் முன்பு சசிகலா தனது உறவினர் தினகரனை, அவர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர், பொறுப்பில் நியமித்து விட்டுப் போயுள்ளார். அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். அவரே பொதுச் செயலாளராகவும் நீடிக்கிறார். இப்போது அவர்களது கைப்பாவை பழனிச்சாமி அடுத்த முதல்வராகியுள்ளார்.

Katju congratulates Tamilians for having pro Sasikala Govt

எனவே தமிழர்களே, வாழ்த்துகள்!. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மிகப் பெரிய ஊழல்செய்து தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைக் கம்பிகளுக்கு பின்னாலிருந்து உங்களை ஆட்சி செய்யப் போகிறார்.

சிறையிலிருந்து வரும் உத்தரவுகளை பழனிச்சாமி அப்படியே செயல்படுத்துவார். ஆனால் கவலைப்படாதீர்கள் தமிழர்களே. உங்களுக்கு முன்பு ஒரு மாநிலத்தில் இதுபோல நடந்த முன்னுதாரணம் இருக்கிறது.

நீங்கள் தாமதம்தான் என்று கூறியுள்ளார் கட்ஜு. கட்ஜு சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது.. இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாம்தானே.. தலை நிமிர்ந்தா நிற்க முடியும்!



Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/katju-congratulates-tamilians-having-pro-sasikala-govt-274316.html

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் வேலைக்காகார். இப்ப மட்டும் கட்டுமரம் ஆக்டிவாக இருந்திருந்தால், 30 அதிமுக காரர்களை மடக்கி, அரசு அமைக்க கோரிக்கை விடுத்திருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

ஸ்டாலின் வேலைக்காகார். இப்ப மட்டும் கட்டுமரம் ஆக்டிவாக இருந்திருந்தால், 30 அதிமுக காரர்களை மடக்கி, அரசு அமைக்க கோரிக்கை விடுத்திருப்பார்.

கட்டுமரம் ஆக்டிவாய் இருந்திருந்தால் இண்டைக்கு  அ....தி.....மு.....க......எண்டு நாலாய் சிதறி சிதைஞ்சிருக்கும் tw_dissapointed_relieved:

5 hours ago, Nathamuni said:

ஸ்டாலின் வேலைக்காகார். இப்ப மட்டும் கட்டுமரம் ஆக்டிவாக இருந்திருந்தால், 30 அதிமுக காரர்களை மடக்கி, அரசு அமைக்க கோரிக்கை விடுத்திருப்பார்.

இந்த நேரத்தில் அவசரபட்டு மல்லுக்கு நிக்காமல் ADMK குழம்பி பல துண்டுகளாக உடைந்தபின்  வேறு வழியில்லை திமுகா தான் இனி தஞ்சம் என்ற சந்தர்ப்பத்துக்கு  என்று கொக்கு போல் நிக்கிறார்ஆக்கும் ஜல்லிகட்டு மூலம் நடந்த  அரசியல் சமூக விழிப்புணர்வு தூங்கும் எரிமலையாக இருபதுவும் இவர் அவசரபட்டு முடிவு எடுக்காததுக்கு காரணம் ஆக இருக்கலாம் விரலை சுழட்டி கதைபேசும் ரஜனியையே தூக்கி எறிந்துவிட்டு இருக்குதுகள் சும்மா பேச்சுக்கு முகநூலில் ரஜனியை சப்போர்ட் பண்ணி ஒரு வாழ்த்து போடுங்கள் வசைபாடி  எதிர்வினை வரும் தமிழ்நாட்டு ஜனம்களிடம் இருந்து அவ்வளவுக்கு அரசியல் சமூக விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் முலம் நொடிக்கு நொடி பரவுது சென்னையில் டிராபிக் கான்ஸ்டபிள்  50 ரூபா கேட்டுவிட்டார் எனும் ஒலிநாடா காட்சி கோவையில் உள்ளவர் சில நொடிகளில் தெரிந்து அடுத்த நொடி தமிழ்நாடு தேசம் எங்கும் வியாபிக்கிறது .

 

 

ஊடங்களை கட்டுபாட்டில் வைத்திருந்தால் கட்சிக்கு நல்லது என்று பெரும் ஊடகங்களில் சகட்டு மேனிக்கு செய்த முதலீடுகள் பல்லிளிக்குது இந்த சமூக ஊடகங்களால். AVயில் 50வீதத்துக்கு மேல் முதலிடு செய்து இருக்கும் DMK ஆரம்பத்தில் அப்படி இப்படி DMK ஆதரவாய் முழங்கப்போய் சமூகஊடகங்களில் வேண்டிகட்டி செர்குலேசன் வீழ்ச்சிக்கு போக வேறு வழியில்லாமல் நடுவால் வண்டி ஓடுகினம்.

Edited by TNT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.