Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபையில் அடுத்து என்ன நடக்கும்?

Featured Replies

சட்டசபையில் அடுத்து என்ன நடக்கும்?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இரண்டு விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TN assembly

நிகழ்வு1: சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகர், வாக்கெடுப்பை வெற்றி என்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி அறிவிக்க முடிவு செய்திருக்கிறார்.

அப்படி அறிவித்தால் தி.மு.க., பன்னீர்செல்வம், காங்கிரஸ், எம்.எல்.ஏ.கள் (110) உள்ளிருப்பு போராட்டம் நடத்த காத்திருக்கிறார்கள். இதன் நோக்கம் சட்டசபையை முடக்கி, கவர்னர் ஆட்சி கொண்டு வந்து, இந்த ஆண்டுக்குள் பொதுத்தேர்தல் கொண்டு வருவது.

நிகழ்வு 2 : சபையை நடத்தமுடியாமல், சபாநாயகர் மீண்டும் அவையை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/81236-what-will-happen-next-in-tamilnadu-assembly.html

  • தொடங்கியவர்

தி.மு.க. வெளியேற்றத்தால் அடுத்து என்ன நடக்கும்?

 

 தமிழக சட்டசபையிலிருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன்பிறகு நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிதில் மெஜாரிட்டியை நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கையில் சசிகலா தரப்பு உள்ளது.

தமிழக சட்டசபை

 ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவின்பேரில் இன்று தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சபை கூடியது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முன்மொழிந்தார். இதற்கு தி.மு.க., காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் தனபால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பேசினர். அப்போது பன்னீர்செல்வத்தை 'துரோகி' என்று சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதனால் மீண்டும் சபையில் அமளி ஏற்பட்டது. இருப்பினும் சபையை நடத்த சபாநாயகர் முயன்றார். அப்போது தி.மு.க.வினரும், பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் மேஜையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால் சபை, போர்களமானது. 


 சபையிலிருந்த சேர்கள், சபாநாயகரின் மைக், மேஜைகள் உடைக்கப்பட்டன. இதனால் சபாநாயகர் தனபால் அவையை ஒத்தி வைத்தார். அப்போது சபாநாயகரின் இருக்கையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்தனர். பிறகு சபையிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறினர். இந்த சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
 இதையடுத்து ஒரு மணியளவில் மீண்டும் சபை கூடியது. அப்போது, சபாநாயகர் தனபால், அவையின் மரபை மீறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்டனர். அதோடு 'எனக்கு நேர்ந்த கொடுமையை நான் எங்கு சென்று முறையிடுவேன்' என்று தெரிவித்தார். அடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீண்டும் சபையை பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் தனபால். ஆனாலும் சபையிலிருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளியேறவில்லை.  தமிழக சட்டசபையில் நிகழ்ந்த அசம்பாவித சம்பவங்களைக் கருத்தில் கொண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தலைமை செயலக வளாகத்தில் போடப்பட்டுள்ளது. அதோடு அந்த பகுதியில் போக்குவரத்தையும் துண்டித்துள்ளது போலீஸ். பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது.தற்போது திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதுகுறித்து அ.தி.மு.க.வின் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "சட்டசபையில் அவை மரபை மீறி தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது எளிதாக நாங்கள் மெஜாரிட்டியை நிரூபித்து விடுவோம்"என்றனர். 
 
சட்ட வல்லுநர் ஒருவர் கூறுகையில், "சட்டசபையில் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது. தி.மு.க.வினர் கடும் ரகளையில் ஈடுபடும் வீடியோ பதிவு ஆதாரம் அ.தி.மு.க.வினருக்கு வலுவாக உள்ளது. மேலும் சபையின் மரபை மீறியதால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். தி.மு.க.வினர் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிதில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும். அதற்கான வழிவகையை எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க.வே செய்துள்ளது. காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்களால் தற்போதைய சூழ்நிலையில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதும் தெரியவில்லை" என்றார். 
 

http://www.vikatan.com/news/tamilnadu/81242-what-will-happen-after-expelling-dmk-mlas-from-assembly.html

  • தொடங்கியவர்

தி.மு.கவினர் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபித்தால் செல்லுமா....? - என்ன சொல்கிறது சட்டம்!

சட்டப்பேரவை

மிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியிடம், தன் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் இன்று (18-2-17) காலை 11 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பித்த முதலே திமுக உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராக முழக்கமிட்டதால் கூச்சலும் குழப்பமுமாக சென்ற அவையைக் கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் தனபால் திணறினார். 

இதனைத்தொடர்ந்து தி.மு.க.-வினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையை 1 மணிவரை ஒத்திவைத்தார். பின்னர் கூடிய வாக்கெடுப்பிலும் அவர்கள் அமளியில் ஈடுபட்டதால்... மீண்டும் 3 மணிவரை ஒத்திவைத்தார் சபாநாயகர். மிகப் பதற்றமான நிலை இருந்ததால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 20 பேர் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க.-வினர் சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதைத் தொடர்ந்து, அவைக் காவலர்களால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், மீண்டும் கூடிய அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122  எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால்... அவர் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், ''தி.மு.க உறுப்பினர்கள் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அவை செல்லுபடியாகுமா'' என்று மூத்த வழக்கறிஞர் சிராஜிதீனிடம் கேட்டோம். "தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு 110 உறுப்பினர்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தால்... அது, கேள்விக்குறிதான். சட்டசபை பொதுவாக அமைதியாக நடத்தப்பட வேண்டும். ஆனால், அவர்களுக்கு மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பதால் அவையை நடக்கவிடாமல் செய்வது தவறு. அப்போது அவர்களை வெளியேற்றிவிட்டு அவை நடத்துவதற்கான உரிமை தனபாலுக்கு உள்ளது. அதேநேரத்தில் தனபால் ஒரு சார்பாக மட்டுமே நடக்கிறார் என்ற புகாரை தி.மு.க உறுப்பினர்கள் கொண்டுவந்து சபாநாயகரை மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அவையை நடத்தவிடாமல் முடக்கும் வேலையைச் செய்யும்போது நடத்தப்படும் வாக்கெடுப்பு செல்லும். இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் அவை ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81266-is-it-constitutional-to-decide-on-majority-with-expulsion-of-dmk-what-does-law-say.html

  • தொடங்கியவர்

எடப்பாடி வென்றதாக அறிவித்தாலும் இறுதி முடிவு ஆளுநரிடம்தான்- மீண்டும் வாக்கெடுப்புக்கு உத்தரவிடலாம்!

 

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக அறிவித்தாலும் இறுதி முடிவு ஆளுநரிடம்தான் உள்ளது. அவருக்கு திருப்தி இல்லையெனில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிடலாம்.

 

 சென்னை: சட்டசபையில் பெரும் அமளி மற்றும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். இருந்தபோதும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறை மீது திருப்தி ஏற்படாவிட்டால் மீண்டும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட முடியும். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார். இதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

ஆளுநரிடம் புகார்

 

ஆளுநரிடம் புகார்

தற்போதைய நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடத்தவில்லை என்ற புகாரும் ஆளுநர் முன் வைக்கப்பட்டுள்ளது.

 

சபாநாயகரிடம் விசாரணை

இதனால் சட்டசபை நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆளுநர் கேட்டு பார்வையிடலாம். அதேபோல் சபாநாயகர் தனபாலை நேரில் அழைத்து சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்கவும் முடியும்.

மீண்டும் வாக்கெடுப்பு

இதில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை என ஆளுநர் கருதினால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படும். அத்துடன் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதை கண்காணிக்க 2 பார்வையாளர்களையும் சட்டசபைக்கு ஆளுநர் அனுப்பி வைக்கலாம்.


ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே

அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாகத்தான் இருக்கும். வாக்குச் சீட்டுகளில் எம்.எல்.ஏக்கள் ஆதரவு விவரம் தெரிவிக்கப்பட்டு அது நேரடியாக ஆளுநர் அனுப்பி வைத்த பார்வையாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அந்த முடிவுகள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முன்னுதாரணம் இருக்கே..

கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போது இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு முதல்நாள் இரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டு மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எடியூரப்பா வென்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு போனது. அப்போது ஆளுநராக இருந்த எச்.ஆர். பரத்வாஜ், மற்றொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். அந்த நம்பிக்கை வாக்கெடுப்பான ஆளுநர் அனுப்பிய பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இருப்பினும் எடியூரப்பா அந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/if-governor-feels-trust-vote-was-unfair-he-can-another-one-274533.html

  • கருத்துக்கள உறவுகள்

16830660_391131704605740_783397176325649

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.