Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 விடுதலைப்புலிகளை விரட்டிப்பிடித்த இந்திய கடலோர காவல் படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு

தகவல் உதவி தினமலர்...

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கெடுத்தாலும் விடுதலைப்புலிகள் மீது குறை சொல்லும் தினமலரும், ஜெயா தொலைக்காட்சியும் இச்செய்தியினை முக்கிய செய்திகளாக வெளியிட்டுள்ளார்கள். இதனைப்பார்த்து இன்று இலங்கை அரசாங்கப் பத்திரிகைகளும் சிங்கள ஊடகங்களும் முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளார்கள்.

ஜெயா தொலைக்காட்சியின் நேற்றைய செய்தியில் தலைப்புச் செய்தியாக விடுதலைப்புலிகள் 5 பேர் கைது என செய்தி வாசித்தார்கள். ஆனால் இன்றைய தினத்தந்தி பத்திரிகையில் 5பேரில் 3 பேர் மட்டுமே இலங்கைத்தமிழர்கள் என்றும், இருவர் இந்தியர்கள் என்றும் செய்தி வெளியிட்டது. கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் கடலூரில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கவே கொண்டுவந்ததாகப் பிடிபட்டவர்கள் சொன்னதாக செய்தி வெளியிட்ட தினத்தந்தி, விடுதலைப்புலிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை என்றும் செய்தியினை வெளியிட்டார்கள்.

அண்மைக் காலங்களில் தமிழகத்தில் ஈழ ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இதனை விரும்பாத சக்திகளினாலும் கடத்தல் நாடகம் மேற்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. முன்பும் வேறு இயக்கங்கள் தமிழகத்தில் செய்யும் சில தீய நடவடிக்கைகளினை, தமிழக ஊடகங்களில் சில, புலிகள் மீது பழி போட்டும் வருவது தெரிந்ததே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடிபட்ட பொருட்கள், ஒரு ஏ கே 56, 5 கைக்குண்டுகள், சில கலன் எரி பொருடகள் அவ்வளவே..... இதை கடத்துவதற்க்கா மினக் கெட்டு கடலுக்கு போவார்கள்? எதோ இடிக்குது

வடக்கிலே தொடங்க முதல் உவர் இந்தியாவின் கடற்படையின் பிரசன்னத்தை பலபடுத்த அன்னிய சக்திகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு சதி வலைப்பின்னலின் ஒரு பகுதியினைத்தான் நாம் இன்று பார்க்கின்றோம். என்ன தான் இந்தியா தமிழ்நாட்டு சனத்திற்காக ஏதோ இலங்கைத்தமிழர்களுக்கு உதவுவது போல நடித்தாலும் உள்ளாள எங்களை ஒரு புடி புடிக்கத்தான் நிக்கிறான். அதுக்கு எனி ஒரு சாட்டு வேணும் அதுதான் இப்படி சோடிக்கிறார்கள். நம்மளுக்குத்தான் அதிஸ்டம் என்ற காற்று துப்பரவாக கிடைக்குது இல்லை. நம்ம எம்.ஜி.ஆர் போல யாரய்யா எனி எமக்கு வரபோறார்.

அதுதான் அவர் உப்பிடி பாடினாரோ.

உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காது நீ வாழலாம்.

அதுக்காகவாவது நாம் ஒற்றுமையாய் இருந்து எம்மட சக்தியாலேயே எம்தலை விதியை வெல்ல முடியாதா.?? :rolleyes:

உந்த ஜெயா ரிவியின் கபடத்தை உங்க கனபேர் சி.ஜ்.ரிவி வரவேணும் ஜெயா ரிவி பார்க்க வெணும் எண்டு சொல்கிற உந்த புலம் பெயர் யென்மங்களுக்கு சொல்லுங்கள்.

திருந்தாத ஜென்மங்கள்

பிடிபட்ட பொருட்கள், ஒரு ஏ கே 56, 5 கைக்குண்டுகள், சில கலன் எரி பொருடகள் அவ்வளவே..... இதை கடத்துவதற்க்கா மினக் கெட்டு கடலுக்கு போவார்கள்? எதோ இடிக்குது

ஒரு ஏகே கடத்தும் காலம் மலையேறிவிட்டது இது பாதள உலக கும்பலின் வேலையாக இருக்கும்

ஒரு ஏகே கடத்தும் காலம் மலையேறிவிட்டது இது பாதள உலக கும்பலின் வேலையாக இருக்கும்

இடிக்காம என்ன செய்யும்?

எவளவு தான் அனு ஆயுதங்கள் கண்டு பிடிச்சாலும் இன்றும் இந்திய இரானுவத்திடம் எஸ் எல் ஆர் தானே கூடுதலாக வைச்சு இருக்கார்கள்?

அதோடு பொலிஸ் வைச்சு இருக்கும் துவக்கு பற்றி சொல்ல தேவை இல்லை

அதலா லோட் பன்னி குறி பாத்து சுடுவதுக்கு முன் திருடன் 10 கிலோ மீற்றர் தூரத்தில் நிண்டு சோட குடிப்பான் இந்தியாவில் குண்டு வைக்க வந்த பாகிஸ்தான்காரன் பாகிஸ்தானில் போய் நிண்டு இந்திய பெண்கள் எவளவு அழகானவர்கள் என்று சொல்லுவான்.

ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டினை இல்லாதொழிக்கவும்: தமிழ்நாட்டு அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவும் இவ்வாறான செயற்பாடுகள் திரைமறைவில் நடத்தப்படுவது ஒன்றும் இரகசிறமல்லவே. எதிர் காலத்தில் இவை போன்று இன்னும் அதிகமாகவே கேள்விப்பட நேரும்.

யாருக்கு குறியா? :rolleyes: அட மொக்கனா சுந்தரமன்களே, தமிழீழ தமிழன் அவ்வளவு இழிச்சவாயன் எண்டே நினக்கிறீயல்? நாங்க வீர பாண்டிய கட்டப்பொம்மன் பிறந்த தேசத்தில பிறக்கல ஆனா ஒவ்வொண்டும் 10- 100 மன சைசில அவரிடை பாணியில தான் பிறந்திருக்கிறம். அட குறி வைக்க வேண்டும்மென்பதா எமது பிரச்சனை நீர் உதுகள் ரெலோவுக்கு முன்னால் அம்மையார் கெலிகொப்ரலில வந்து பார்க்கேக்க எப்படி சலூட் அடிக்கோணும்,

எப்படி லெப்ட், ரைட் சரியா போட்டு அணிவகுப்பு செய்முறை வகுப்புகள் எடுக்கேக்க தவறுதலா ரஸ்ஸிய கொப்பி பண்ணிய இந்திய தயாரிப்பா மாறின சுட்டா கையில சுழிப்பெடுக்கிற அவ்வளவு ஏகே47 ஆயுதத்த தந்து எங்களை உன் சுய நலம் கலந்த ( எங்களுக்கு எப்பவோ தெரிந்த ஆனா நடிச்ச, சிவாஜி தோக்கிறமாதிரி கி கி கி) பாதையில கொண்டு போகேக்க விழிச்சவங்கடா என்னும் தூங்கேல்ல. நம்ம பிரதேர்ஸ், சிஸ்ரேர்ஸ் உன்னோட இருக்கிறதால உன்னை நாமும் மதிக்கிறோமுங்க. பின்ன நீ வந்து இங்க எங்கட ஒரு பூனையிட மயிரையும் புடுங்க ஏலேது. நீ எல்லாம் எங்கள வழி மறிக்கிற நாங்க உங்களிட்ட ஆயுதமும் தந்து 5 குஞ்சானுகளையும் தந்து சரண் அடைகிறோமோ..என்ன வேடிக்கையான கடற்படை ஐயா. சத்தியமா சொல்லுரன் இது சாறி பிஸினஸ் செய்யிற கூட்டமுங்கோ. கஸ்டம்ஸ் வந்திட்டுது எண்டு சாறிகளை கடலில உப்பில கட்டி எறிந்து போட்டு உங்களை சாத்தாம , ஏற விட்ட கூட்டமுங்கோ...இலாட்டி கண்ணா நீ இருந்திருக்கவே மாட்டாய். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ஜெயா.ரிவியில தர்மபுரி மாவட்டம் நாமக்கல் அருகே 2000ம் ஆண்டு 3மாணவிகளை பேருந்துக்குள் வைத்து எரித்த படுகொலை செய்த ஆ.இ.ஆ.தி.மு.கா நாய் சா தொண்டர்களை, அவர்கள் தான் குற்றவாளிகள் என நீதிமன்றம் குற்றவாழிகள் என தீர்ப்பு வழங்கியதே அதைப்பற்றி ஏதாவது சொன்னாங்களா?? :angry:

யாருக்கு குறியா? :rolleyes: அட மொக்கனா சுந்தரமன்களே, தமிழீழ தமிழன் அவ்வளவு இழிச்சவாயன் எண்டே நினக்கிறீயல்? ...

நினைத்ததை முடிப்பவன் 007,

இந்தியா என்னதான் எமக்கு எதிராகச் செயல்பட்டாலும் நாம் இந்த விடயத்தில் பொறுமையாக இருப்பதே மேல். நாம் கார் செய்யும் அளவிற்கு முன்னேறி இருந்தாலும் இந்தியாவைப் பகைத்துக்கொண்டு தமிழீழம் அமைக்க முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்ப இங்க அவுஸ்த்திரேலியால ஜெயா டிவி தானே காட்டினம்...

புலிகளென்ற சந்தேகத்தில் இந்திய காவற் படையினரால் 5 பேர் கைது

-ராய்ட்டர் செய்திச்சேவை-

விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்களென சந்தேகிக்கப்படும் 5 பேரை இந்திய எல்லைக் காவற் படையினர் கைது செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டு கரையோர பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், செய்மதி தொலைபேசிகள், துப்பாக்கி ரவைகள், கைக்குண்டுகள் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமையான ரோந்து நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கு இடமான படகொன்றை சுற்றி வளைத்ததாக ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ள எல்லைக் காவற்படையின் பேச்சாளர் வி.கே.போல் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது. விசாரணைகள் இடம்பெறுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெடிமருந்துகளை சென்னையிலிருந்து 155 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கூடலூரில் ஒப்படைக்குமாறு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததும் விசாரணைகளில் அவை சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.thinakkural.com/news/2007/2/15/...s_page21383.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டையும் இந்திய உளவுப்படை நின்மதியாக வாழ விடப்போவதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.