Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

Featured Replies

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

election

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, இந்தத் தொகுதி காலியென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மார்ச் 23-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/83140-rknagar-byelection-to-be-held-on-12th-april.html

  • தொடங்கியவர்

ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டி: தீபா அறிவிப்பு

 

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா இறந்ததால் காலியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்குமென தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, தான் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

சசிகலாவுடன் ஒருபோதும் இணைந்து செயல்படப்போவதில்லை என்றும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அளித்த ஆதரவு மரியாதை நிமித்தமானது என்றும் தீபா தெரிவித்தார்.

தி.மு.கவைத் தவிர, வேறு யார் ஆதரவளித்தாலும் ஏற்கப்போவதாக தெரிவித்த தீபா, பன்னீர்செல்வம் அணியினர் வேட்பாளரை நிறுத்தினாலும் தான் பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார்.

திமுக தயாராகிறது

இதற்கிடையில் தி.மு.கவின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தி.மு.க. அறிவித்துள்ளது. வேட்பாளர்களுக்கான நேர்காணல் 13-ஆம் தேதி நடக்குமென்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/india-39220864

  • கருத்துக்கள உறவுகள்

நாம்   தமிழர் கட்சியின்  கூர் பார்க்க நல்லதொரு வேளை.

  • தொடங்கியவர்
 
 
gallerye_234022538_1727011.jpg

 

  • gallerye_225049275_1727011.jpg

 

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் சசி மற்றும் பன்னீர் அணிகள் இடையே, பதைபதைப்பு ஆரம்பமாகி உள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதும் சர்ச்சையாகி உள்ளது. இதற்கிடையில், பொதுச் செயலர் நியமனம் தொடர்பாக, சசிகலாவுக்கு தேர்தல் கமிஷன் விதித்த கெடு, இன்று முடிகிறது.

 

Tamil_News_large_1727011_318_219.jpg

கடந்த சட்டசபை தேர்தலில், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதா வெற்றி பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பாம லேயே, டிச., 5ல் இறந்தார்.

அவரது மறைவு காரணமாக, ஆர்.கே.நகர் தொகுதி, எம்.எல்.ஏ., பதவி காலியானது. அவர் மறைந்ததும், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முதல்வராக முயற்சித்த போது, சொத்து குவிப்பு வழக்கில்,

உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால் சிறை சென்றார். சிறைக்குசெல்வதற்கு முன், தன் அக்காள் மகன் தினகரனை, துணை பொதுச்செயலராக நியமித்தார். சசிகலா மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார்.

சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வம் பின்னால் திரண்டனர். இதன் காரணமாக, கட்சி இரு பிரிவாக பிளவுபட்டுள் ளது. அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான், தேர்வு செய்யப்பட வேண்டும்; அவ்வாறு சசிகலா தேர்வு செய்யப்படவில்லை.

மேலும், பொதுச்செயலராவதற்கு, கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். சசிகலா, கட்சியில் சேர்க்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பூர்த்தி யாகவில்லை. எனவே, அவர் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி, சிறையில் உள்ள சசிகலாவுக்கு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பியது. அதற்கு, சசிகலா பதில் அளிக்காமல், தினகரன் பதில் அனுப்பினார்.

 

அதை ஏற்க மறுத்த தேர்தல் கமிஷன், மார்ச், 10க்குள் சசிகலா பதில்அளிக்க வேண்டும் என, கெடு விதித்தது. அதன்படி, இன்று மாலைக்குள், சசிகலா சார்பில் பதில் அளிக்கப்பட உள்ளது. இவ்விவகாரத்தில், சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்தால், அவரால்,அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும் செல்லாததாகி விடும். பொதுச்செயலர் இல்லாத நிலையில், அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் எடுத்த முடிவு செல்லுபடியாகும்.

அப்போது, அவர்கள் கட்சிக்கு உரிமை கோருவர். ஆர்.கே.நகர் தேர்தலில், தங்கள் வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கும்படி வலியுறுத்துவர். அதேநேரத்தில், சசிகலா தரப்பினரிடம், ஆட்சி அதிகாரம் உள்ளதால், அவர்களும் இரட்டை இலை சின்னத்தை கோருவர். யாருக்கு சின்னம் ஒதுக்குவது என்ற சர்ச்சை வெடிக்கும்.

இந்த விவகாரங்களில் கிடைக்கும் வெற்றி தான், உண்மையான அ.தி.மு.க., யார் என்பதை தீர்மானிக்கும் என்பதால், இரு தரப்பினரும் பதைபதைப்புடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆலோசித்து வருகின்றனர்.
 

நடத்தை விதிகள் அமல்


இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், தேர்தல் நடத்தை விதிகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன.ஆர்.கே.நகர் தொகுதி யில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அமலில் இருக்கும் திட்டங்கள் தடை செய்யப் படாது. பொது வினியோகத் திட்டம் போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

வரும், 16ம் தேதி, தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், அரசின் பொதுவான புதிய திட்டங்களை அறிவிப்பதில் தவறு இல்லை. ஆனால், ஆர்.கே.நகருக்கென புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அந்தத் தொகுதி அமைந்துள்ள, சென்னை மாவட்டம் முழுவதுக்கும் பொருந்தாது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1727011

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

நாம்   தமிழர் கட்சியின்  கூர் பார்க்க நல்லதொரு வேளை.

ஹஹ்ஹஹ்ஹா!??

துருப்பிடித்து மழுங்கின கத்தியை இன்னும் வீசாமல் இடுப்பில சொருகிக்கொண்டு திரியிறார்கள் சிலபேர். இக்கணம் குனிய நிமிரேக்க படாத இடத்தில பட்டு ஏற்பாக்கப் போகுது?

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ஹஹ்ஹஹ்ஹா!??

துருப்பிடித்து மழுங்கின கத்தியை இன்னும் வீசாமல் இடுப்பில சொருகிக்கொண்டு திரியிறார்கள் சிலபேர். இக்கணம் குனிய நிமிரேக்க படாத இடத்தில பட்டு ஏற்பாக்கப் போகுது?

 

தேர்தலின் பின்னர் பேசலாம்....

  • தொடங்கியவர்
4 minutes ago, கிருபன் said:

ஹஹ்ஹஹ்ஹா!??

துருப்பிடித்து மழுங்கின கத்தியை இன்னும் வீசாமல் இடுப்பில சொருகிக்கொண்டு திரியிறார்கள் சிலபேர். இக்கணம் குனிய நிமிரேக்க படாத இடத்தில பட்டு ஏற்பாக்கப் போகுது?

 

 

அதேநேரம், தீபாவுக்கு இருக்கும் குறைந்தபட்ச ஆதரவுகூட தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. சசிகலா, டி.டி.வி.தினகரனையும் இளைஞர்கள் முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்.

8p10.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

 

 

அதேநேரம், தீபாவுக்கு இருக்கும் குறைந்தபட்ச ஆதரவுகூட தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. சசிகலா, டி.டி.வி.தினகரனையும் இளைஞர்கள் முழுவதுமாகப் புறக்கணிக்கிறார்கள்.

8p10.jpg

 

இந்தக்கணிப்பின் படியே  பார்த்தாலும்

பல தலைவர்களை  பின்னுக்கு தள்ளி

சீமான்வளர்ந்து இருப்பது தெரியும்

அத்துடன் எல்லோர்  மீதும்காரசாரமான விரக்திகளை  வைத்த இளையவர்கள்  சீமான் வைத்த விமர்சனரஇ இன்றும்   நிரூபிக்கணும் என்பதே...

 

சீமான் குறித்தும் இதேபோன்ற கருத்தைத்தான் இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். “சீமான் பல நேரங்களில் உணர்ச்சிவசப்படும் தலைவராக மட்டுமே இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. மக்கள் நலன்சார்ந்த விஷயங்களில் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டுத் தன்னை நிரூபிக்க வேண்டும்” என்கிறார் சேலம் சுந்தர்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 விசுகு ஐயா, சக்கடத்தார் எத்தினை தரம் குதிரையில ஏறினாலும் சறுக்கித்தான் விழுவார் கண்டியளோ!?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

 விசுகு ஐயா, சக்கடத்தார் எத்தினை தரம் குதிரையில ஏறினாலும் சறுக்கித்தான் விழுவார் கண்டியளோ!?

இவருக்கு கருணாநிதியளும் ஜெயலலிதாக்களும் தான் வேணும் போலை!

  • தொடங்கியவர்

மும்முனைப்போட்டியில் ஆர்.கே.நகர் தொகுதி! - களநிலவரம் இதுதான்!

ஆர்.கே.நகர் தொகுதி

2016- ஏப்ரல் 29-ம் தேதி நிலவரப்படி ஆர்.கே.நகரில் உள்ள வாக்காளர்கள் விவரம்: ஆர்.கே.நகரில் தற்போது 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 ஆண்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பெண்கள், திருநங்கைகள் 88 பேர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் : 1,24,505, பெண்: 1,29,889, மூன்றாம் பாலினத்தவர் : 103, மொத்த வாக்காளர்கள் : 2,54,497

தி.மு.க. வேட்பாளரான சிம்லா முத்துச்சோழன், 2016-ல் இங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 57,673 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா அப்போது, 97,218, வாக்குகள் பெற்று (39,537 வாக்கு வித்தியாசம்) வெற்றி பெற்றிருந்தார்.

அதே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் (2015) 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகளை ஜெயலலிதா பெற்றிருந்தார். அப்போது, சி.பி.ஐ. வேட்பாளர் மகேந்திரன் 9,710 வாக்குகள்  மட்டுமே பெற்றார்.  ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தொகுதியில் டெபாசிட் தொகையை இழந்தனர்.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது இடைத்தேர்தலை எதிர்கொண்டு பெற்றது 1,60,432 வாக்குகள், அதுவே பொதுத்தேர்தலை ஜெயலலிதா சந்தித்த போது, 97,218, என்று வாக்குகள் சுருங்கியது. ம.ந.கூட்டணியின் பொதுவேட்பாளர் டாக்டர் வசந்திதேவி 4,195 வாக்குகள் பெற்றிருந்தார். ஆர்.கே.நகர் மக்களோ, "சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியும் அ.தி.மு.க. பெயரையும், இரட்டை இலையையும் முன்னிறுத்திதான் இங்கு பிரசாரம் செய்யும்.  

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், இங்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால்  அ.தி.மு.க.வுக்குள்  மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. கடைசி நேரத்தில் இரட்டை இலை சின்னம், கொடிகளை எந்தத் தரப்பினர் பயன்படுத்தலாம் என்ற பிரச்னையும் அடுத்தகட்டமாக  விஸ்வரூபமெடுக்கும். அது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும்" என்கிறார்கள் தொகுதி மக்கள்.

http://www.vikatan.com/news/politics/83223-scenario-three-sided-contest-rknagar-constituency-this-is-reality.html

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

 விசுகு ஐயா, சக்கடத்தார் எத்தினை தரம் குதிரையில ஏறினாலும் சறுக்கித்தான் விழுவார் கண்டியளோ!?

கருணாநிதியளும் ஜெயலலிதாக்களும் குதிரை  ஓடிய இடம்  தான் கண்டியளோ....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

கருணாநிதியளும் ஜெயலலிதாக்களும் குதிரை  ஓடிய இடம்  தான் கண்டியளோ....

அவை மாறி மாறி வென்ற ரேஸில், சீமான் பொய்க்கால் குதிரையோட்டம் செய்யத்தான் லாயக்கு!

"கெடுகிறன் பந்தயம் பிடி" என்று சொல்லுறவைக்கு இதுக்கு மேல என்னத்தைச் சொல்லேலும்?

  • தொடங்கியவர்
ஆர்.கே.நகரில் களமிறங்குகிறது பன்னீர் அணி
வேட்பாளர் தேர்வு குறித்து தீவிர ஆலோசனை
 
 
 

சசிகலா குடும்பத்தினரை, அ.தி.மு.க.,வை விட்டு ஒதுக்குவதற்கு கிடைத்த வாய்ப்பாக, ஆர்.கே.நகர் தேர்தலை பயன்படுத்த, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.

 

Tamil_News_large_172766620170310233303_318_219.jpg

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், அ.தி.மு.க., வில் இருப்பதை, அக்கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பவில்லை. எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் போன்றோர் தான்,

தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதற் காக, சசி தரப்பை ஆதரிக்கின்றனர். அவர்களும், இரட்லை இலை சின்னம் பன்னீர்செல்வம் அணியினருக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட் டால், அந்த பக்கம் தாவ தயார் நிலையில் உள்ளனர். ஜெ., மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட

வேண்டும் என, பன்னீர் அணியினர் வலியுறுத்தி வருவதற்கு, கட்சியினரிடமும், மக்களிடமும் வரவேற்பு கிடைத்து உள்ளது.இக்கோரிக்கையை வலியுறுத்தி, பன்னீர் அணியினர் நடத்திய உண்ணாவிரதத்தில், கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்றனர். இது, அவர்களுக்கு உற்சாகத்தையும், சசிகலா தரப்பினருக்கு, கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிக்க, இரு அணியினருக் கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரு அணியினரும் களமிறங்க உள்ளனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 'நாங்கள் தான் உண்மையான, அ.தி.மு.க.,' என நிரூபிக்க, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

எனவே, வேட்பாளர் தேர்வில், தீவிரம் காட்டி வருகின்றனர். அவை தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன், அந்த தொகுதியைச் சேர்ந்தவர். அதனால், அவரை நிறுத்தலாமா அல்லது அப்பகுதி யைச்சேர்ந்த, ஜெ., பேரவை செயலர் ராஜேஷை களமிறக்கலாமா என்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.தேர்தல் பணிக்குழு மற்றும் களப்பணி வியூகம் குறித்து, பன்னீர்செல்வம் தலைமையில், நேற்று, அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

 

 

தினகரன் தயக்கமா? :


ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், சசிகலா அணி சார்பில், கட்சி யின் துணை பொதுச் செயலர் தினகரன் போட்டியிடு வார் என, தகவல் வெளியானது. ஆனால், தற்போது, பொதுமக்களிடம் சசிகலா குடும்பத் திற்கு, கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பன்னீர் செல்வம் அணி, தீபா பேரவை என, ஓட்டுகள் பிரியும் நிலை காணப்படுகிறது.

அ.தி.மு.க., ஆதரவு ஓட்டுகள் மூன்றாக பிரியும் நிலையில், பொதுமக்கள் ஆதரவு இல்லாமல், வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம், தினகரன் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தினகரன் களமிறங்க தயங்குவதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1727666

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.