Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?

Featured Replies

இன்னொரு விதத்தில் சொல்வதானால், புலிகளின் பெரிய தாக்குதலை விரைவுபடுத்தச் செய்வது சிங்களத் தரப்பேதான்.

புலிகள் தாக்க வேண்டிய அவசியத்தை இல்லாது செய்து கொண்டு இருக்கிறது அரசு....

உங்களின் பலர் ஆதரவுடன் பலமானவர்கள் சுற்றி நிண்டு தாக்குதல் செய்கினம் , அதுக்கு நீங்கள் வேண்டிய ஆயுதங்களையும் கொடுக்கிறீர்கள்... அப்போதும் ஒருவன் அசையாது திடமாக இருக்கிறான், அவர்கலை எதிர்க்கிறான் எண்றால், நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்...???

இந்த நிலை தொடர்ந்தால் வருமானமே வராது எனும் ஒரு பிரதேசத்துக்காக உங்கள் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு தொடர்ந்து சண்டை போடுவீர்களா...??? இல்லை சமரசம் செய்வீர்களா..???

Edited by Thala

காயப்பட்டவையை நிவர்த்தி செய்ய புதிதாக இராணுவத்துக்கு சேர்த்தால் அதிலையும் பயிற்சி சீருடை சம்பளம் என்று ஏகப்பட்ட செலவுகள். நாங்கள் மரத்தில காசு புடுங்கி போராட்டம் நடத்திறம் ஆனா சிறீலங்கா கடன்பட்டு நடத்துது. ஆனபடியா சிறீலங்காவாலை தாக்குப்பிடிக்க முடியாது நீண்ட காலத்துக்கு.

சிங்களத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்த்தான் பன்னாடை எண்டு திட்டுறனீரோ...???

புலிகள் அமைப்பு என்பதும். தமிழர்கள் என்பதுவும் வித்தியாசமானது கிடையாது. இது மக்கள் மயமாக்கப்பட்டு பலகாலமாகியாச்சு... சிங்களம் போல சம்பளத்துக்கு மாரடிக்கும் கூட்டம் போல தமிழர்களை சித்தரிக்கிறதை நிப்பாட்டும்...

முதலிலை உமக்கு சரக்கு இருந்தால் சிங்களவர் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு தமிழர்களுக்கு எதிராய் திருப்ப பட்டு இருக்கிறது என்பதை நிரூபியும் பார்க்கலாம்....!

Edited by Thala

இது நியாயமான கேள்வி...

ஆனால் இது,....

லண்டன் என்ன நிறம் நாரதர் அங்கிள்?

நான் சொன்னதற்கான காரணம்,நாம் பிறக்கும் போது, எமது பெற்றொர்கள் நினைத்தார்களாம்,நாம் வளர்வதற்க்குள் இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் என்டு..ஆனால், என்னை தூக்கி வளர்த்த என் சகோதரன் துயிலும் இல்லம் தூங்க போய் பத்து வருடங்கள் ஆகிறது, எம் கண்ணீரும் முடிவில்லாமல் போய்விட்டது..அது தான் சொன்னேன்..நாம சாகிறத்துகுள்ளையாவது தமிழீழத்தை பார்த்துவிடுவோம் என்டு..

நான் புலத்தில் இல்லைங்கோ..என் அண்ணன் விதையான இடத்தில் தான் நான் வாழ்வேன்! :lol:

வணக்கம் சகோதரி,

முதலில் நீங்கள் லண்டனில் இருந்து எழுதுவதாக எண்ணியதற்கு மன்னிக்கவும்.

தமிழ் ஈழம் வேறு எவராலும் உருவாக்கப் பட முடியாதது, அதனை நாங்கள் தான் உருவாக்க வேண்டும்.எங்கள் ஒவ்வொருவரின் உழைப்பாலும் தான் அது முடியும்.இங்கே புலிகள் வேறு நாங்கள் வேறு அல்ல,எப்போது எமக்கு புலிகள் தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தருவார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் அதனைப் பெற்று விட முடியாது.புலிகள் நாங்கள் தான்.புலிகளாவது,புலிகளைப் பலப் படுத்துவது எல்லாம் நாங்கள் தான்.எமக்கு ஆயுதம் தரவோ ,காசு தரவோ, எமக்காகப் போராடவோ பேசவோ வேறு எவரும் இல்லை.

தமிழ் ஈழம் என்னும் தேசம் ஏற்கனவே வன்னித் தளப் பிராந்தியத்தில் கருக்கட்டி விட்டது.சிறிலங்கா இராணுவத்தால் அதனை அழிக்கமுடியும் என்றால் இப்போதே அதனைச் செய்து இருப்பார்கள்.சர்வதேசமும் அதனை வர வேற்று இருக்கும்.உங்கள் அண்ணன் போன்றோரின் ஈகையால் தான் இது சாத்தியமானது.இருக்கும் தளப் பிராந்தியத்தை விரிவாக்குவது, ஒரு தேசத்திற்கான தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது,அதற்கு ஏதுவான கேந்திர நிலைகளைக் கைப் பற்றுவது.இவை தான் எம்முன்னால் இருக்கும் சவால்கள்.இவற்றை நாம் எப்படி எதிர் கொள்ள முடியும்? எமது ஒற்றுமையால் ,எமது ஒன்று பட்ட உழைப்பால்.

இந்த ஒற்றுமையை ,உழைப்பைக் குலைக்கும் ஊசலாட்டங்கள் தான் உங்கள் மனதில் எழும் கேள்விகள்.எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் தன் நம்பிக்கையும் மனத்திடமும் அவசியம்.இதனைக் குறி வைத்தே எமது போராட்டம் மீதான அதன் இலக்கு மீதான ஊசலாட்டத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரங்கள் நடாத்தப்படுகின்றன.இதன் நோக்கம் எமது ஒன்று பட்ட சக்தியை உடைப்பதே.இதன் மூலம் தான் எமது எதிரி எம்மை வெற்றி கொள்ள முடியும். அப்படி நடந்தால் உங்கள் அண்ணனின் தியாகத்திற்கு அர்த்தமே இல்லாது போகும்.அவனின் கல்லறையை இல்லாது செய்து விடுவார்கள்.இது தானா உங்களுக்கு வேண்டும் சகோதரி? இதற்காகவோ உங்கள் அண்ணன் அவன் உயிரைத் தியாகம் செய்தான்?

எமக்கு எமது தலமையின் மீது நம்பிக்கை வேண்டும்.எந்த தருணத்தில் எதைச் செய்வது என்பதைத் தீர்மனிக்கத் தான் தலமை இருக்கிறது.எமது பலம் எமது எதிரியின் பலம் சர்வதேச நிலமைகள் என்று போராட்டத்தின் எல்லாப் பரிமாணங்களையும் கவனத்தில் எடுத்துத்தான் ,தலமை முடிவுகளை எடுக்க முடியும்.இது பல்லாயிரம் உயிர்கள் சம்பந்தமான முடிவுகள்.எமக்கு படம் காட்டுவதற்காகவோ, குறுகிய அரசியல் ஆதயத்திற்காகவோ பல ஆயிரம் உயிர்களை பலியிட முடியாது.இது விடுதலைப் போராட்டம்,

எமது இலக்கை அடைவதற்கான போராட்டம்.இறுதி இலக்கை அடைவதே எமது வெற்றியைத் தீர்மானிப்பது.

ஆகவே பொறுத்திருங்கள், மனம் தளராமல்,உங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.எம் எல்லாருடைய உழைப்பே எமக்கான விடுதலையை விரைவு படுத்தும்.ஒற்றுமையாக இருந்து எல்லாச் சதிகளையும் முறையடிப்போம்.

உங்கள் கேள்விக்கான பதில் தமிழ் ஈழம் ஏற்கனவே கருக்கட்டி விட்டது, இனி அது வளர்ந்து உலகில் அங்கீகாரம் பெற வேண்டும்,சொந்தக் காலில் நடக்க வேணும்.அதற்கு நாம் தான் உழைக்க வேணும், ஒன்று பட்டுப் போராட வேணும்.

வணக்கம் சகோதரி,

முதலில் நீங்கள் லண்டனில் இருந்து எழுதுவதாக எண்ணியதற்கு மன்னிக்கவும்.

தமிழ் ஈழம் வேறு எவராலும் உருவாக்கப் பட முடியாதது, அதனை நாங்கள் தான் உருவாக்க வேண்டும்.எங்கள் ஒவ்வொருவரின் உழைப்பாலும் தான் அது முடியும்.இங்கே புலிகள் வேறு நாங்கள் வேறு அல்ல,எப்போது எமக்கு புலிகள் தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தருவார்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தால், நாங்கள் அதனைப் பெற்று விட முடியாது.புலிகள் நாங்கள் தான்.புலிகளாவது,புலிகளைப் பலப் படுத்துவது எல்லாம் நாங்கள் தான்.எமக்கு ஆயுதம் தரவோ ,காசு தரவோ, எமக்காகப் போராடவோ பேசவோ வேறு எவரும் இல்லை.

தமிழ் ஈழம் என்னும் தேசம் ஏற்கனவே வன்னித் தளப் பிராந்தியத்தில் கருக்கட்டி விட்டது.சிறிலங்கா இராணுவத்தால் அதனை அழிக்கமுடியும் என்றால் இப்போதே அதனைச் செய்து இருப்பார்கள்.சர்வதேசமும் அதனை வர வேற்று இருக்கும்.உங்கள் அண்ணன் போன்றோரின் ஈகையால் தான் இது சாத்தியமானது.இருக்கும் தளப் பிராந்தியத்தை விரிவாக்குவது, ஒரு தேசத்திற்கான தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவது,அதற்கு ஏதுவான கேந்திர நிலைகளைக் கைப் பற்றுவது.இவை தான் எம்முன்னால் இருக்கும் சவால்கள்.இவற்றை நாம் எப்படி எதிர் கொள்ள முடியும்? எமது ஒற்றுமையால் ,எமது ஒன்று பட்ட உழைப்பால்.

இந்த ஒற்றுமையை ,உழைப்பைக் குலைக்கும் ஊசலாட்டங்கள் தான் உங்கள் மனதில் எழும் கேள்விகள்.எந்த விடயத்திலும் வெற்றி பெற முதலில் தன் நம்பிக்கையும் மனத்திடமும் அவசியம்.இதனைக் குறி வைத்தே எமது போராட்டம் மீதான அதன் இலக்கு மீதான ஊசலாட்டத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரங்கள் நடாத்தப்படுகின்றன.இதன் நோக்கம் எமது ஒன்று பட்ட சக்தியை உடைப்பதே.இதன் மூலம் தான் எமது எதிரி எம்மை வெற்றி கொள்ள முடியும். அப்படி நடந்தால் உங்கள் அண்ணனின் தியாகத்திற்கு அர்த்தமே இல்லாது போகும்.அவனின் கல்லறையை இல்லாது செய்து விடுவார்கள்.இது தானா உங்களுக்கு வேண்டும் சகோதரி? இதற்காகவோ உங்கள் அண்ணன் அவன் உயிரைத் தியாகம் செய்தான்?

எமக்கு எமது தலமையின் மீது நம்பிக்கை வேண்டும்.எந்த தருணத்தில் எதைச் செய்வது என்பதைத் தீர்மனிக்கத் தான் தலமை இருக்கிறது.எமது பலம் எமது எதிரியின் பலம் சர்வதேச நிலமைகள் என்று போராட்டத்தின் எல்லாப் பரிமாணங்களையும் கவனத்தில் எடுத்துத்தான் ,தலமை முடிவுகளை எடுக்க முடியும்.இது பல்லாயிரம் உயிர்கள் சம்பந்தமான முடிவுகள்.எமக்கு படம் காட்டுவதற்காகவோ, குறுகிய அரசியல் ஆதயத்திற்காகவோ பல ஆயிரம் உயிர்களை பலியிட முடியாது.இது விடுதலைப் போராட்டம்,

எமது இலக்கை அடைவதற்கான போராட்டம்.இறுதி இலக்கை அடைவதே எமது வெற்றியைத் தீர்மானிப்பது.

ஆகவே பொறுத்திருங்கள், மனம் தளராமல்,உங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.எம் எல்லாருடைய உழைப்பே எமக்கான விடுதலையை விரைவு படுத்தும்.ஒற்றுமையாக இருந்து எல்லாச் சதிகளையும் முறையடிப்போம்.

உங்கள் கேள்விக்கான பதில் தமிழ் ஈழம் ஏற்கனவே கருக்கட்டி விட்டது, இனி அது வளர்ந்து உலகில் அங்கீகாரம் பெற வேண்டும்,சொந்தக் காலில் நடக்க வேணும்.அதற்கு நாம் தான் உழைக்க வேணும், ஒன்று பட்டுப் போராட வேணும்.

நாம் எமது தலைமையில் எப்பவும் நம்பிக்கை வைத்துள்ளோம்..அவர்களை நாம் வேறு படுத்தி பார்க்கவில்லை..infact அவர்களும், எமது குடும்பமே..ஒரு சகோதரனை இழந்தாலும், எத்தனையோ பல அண்ணன்கள் எமக்கு கிடைத்திருகிறார்கள்...நாம் அங்கு போகும் போதெல்லாம், இது என் தங்கச்சி என்று உரிமையுடன் அவர்கள் சொல்லும் போது, எனது கவலையெல்லாம் மறந்துவிடும்..இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு களத்திலே நிற்கிறார்கள்..எனக்கு சண்டை தொடங்க போகுது என்ற செய்தியை பார்த்தாலே, என்னை பயமும், சோகமும் தொற்றிகொள்ளும்..யார் யாரின் வீரச்சாவு செய்தி கேக்கபோறமோ என்டு..எத்தனை குடும்பங்கள் நம்மை போல் நிலைகுலைய போகிறார்களோ என்று நினைக்கவே வாழ்க்கை வெறுக்கும்..என்னை பொறுத்தவரை, அந்த அற்புத பிறவிகள் நல்லா வாழவேண்டும்...எங்களுக்காக அவர்கள் பட்ட துன்பங்கள் போதும்.அவர்களை, அதை செய்,இதை செய் என்று கூறுபவர்களை நினைக்கும் போது,இவர்கள் மனிதர்கள் தானா என்று எண்ணத்தோன்றும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.