Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்க நீண்ட நேரம் செல்லாது

Featured Replies

சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்க நீண்ட நேரம் செல்லாது

நாட்டுக்கு மிகவும் முக்கியமான தீர்மானமொன்றை நாளை சனிக்கிழமை அறிவிக்கப் போவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்ரப அமில தேர் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய வேண்டுமென கொழும்பு விகாரமாதேவிப் பூங்காவில் தொடர்ச்சியான சுழற்சிமுறையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்திவரும் தேசிய பிக்குகள் முன்னணி, நாளை தலதாமாளிகையில் விசேட பூஜையொன்றை நடத்தவுள்ளது.

விசேட பூஜையின் பின்னர் நாட்டுக்கு முக்கியமானதும், கடுமையானதுமான தீர்மானமொன்றை அறிவிக்க இருப்பதாகவும், இந்தத் தீர்மானது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தாம் எடுத்த முடிவாக அமையுமெனவும் தேசியபிக்குகள் முன்னணியின் தலைவர் குறிப்பிட்டார்.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னர் விடுதலைப் புலிகள் என்ற அமைப்புப் பற்றியோ அல்லது அவர்கள் நடத்திவரும் தனிநிர்வாகமோ அல்லது கட்டுப்பாடற்ற பகுதி போன்ற விடயங்கள் பற்றியோ சர்வதேச நாடுகளுக்குத் தெரியாதிருந்தது எனச் சுட்டிக்காட்டிய தம்பர அமில தேரர், போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மற்றும் அவர்களின் நிர்வாகம் குறித்து அறிந்துகொண்ட சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

“இவ்வாறான விடயங்களை ஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு நீண்ட நேரம் செல்லாது” என்றார் அவர்.

இதனால் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 5 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள 5 ஆண்டுகள் பூர்த்தியடைந்தவுடன் ஒரு நிமிடமும் தாமதிக்காமல் போர்நிறுத்த உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டும்; எனவும் அவர் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

அத்துடன், போர்நிறுத்த உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டுமெனக் கோரி நடத்தப்பட்டுவரும் சுழற்சிமுறையான உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாகவும் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

நாள் நெருங்க நெருங்க நெஞ்சிடியாய் தான் கிடக்கு பாவம் உதத்தான் சொல்லுறது துப்பவும் ஏலாது விழுங்கவும் ஏலாது என்று முந்தி என்றால் கண்டி போய் கிழிச்சிருப்பினம்

இப்ப சர்வ தேசத்தின் முன்னால கிழிக்கவும் ஏலாது கிழிச்சா அம்போ தான் . . . . .

ஆனாலும் ஓண்டைக்கிழிக்கலாம் நோர்வே அமெரிக்கா தூதரத்திற்கு முன்னால போய் உவையின்ர கோமணம் மகிந்தவின்ர பெண்டிலிண்ட எல்லாத்தையும் எவரும் எதுவும் கேட்க மாட்pனம் விருப்பிபாப்பினம்

போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியக்கோரும் பௌத்த பிக்குகள் இன்று முக்கிய முடிவை அறிவிப்பர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களை நிறைவுசெய்யும் முன்பாக அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டும் எனக்கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேசிய பிக்குகள் முன்னணியினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவது தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்றை இன்று எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு கண்டி தலதா மாளிகையில் இடம்பெறும் விசேட சமய வழிபாட்டை அடுத்து இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும் என்று தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பர அமில தேரர் நேற்று தமிழ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ள பல சரத்துக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகள் அங்கீகரிப்பனவாகவே அமைந்துள்ளன.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அவர்களின் தனி நிர்வாகம், அரசியல் அலுவலகங்கள் போன்றவை புலிகளுக் கென்று தனியாகவே உள்ளன.

யுத்த நிறுத்த ஒப்பந்தமே புலிகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. சர்வதேச நாடுகள் இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. இவற்றையெல்லாம் எற்றுக் கொண்ட சர்வதேச நாடுகள் புலிகளுக்கு தனிநாடு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசுக்கு நிச்சயம் அழுத்தம் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதன் காரணமாகவே இந்த ஒப்பந்தத்தை ஐந்து வருடங்கள் நிறைவடைய விடாமல் அரசு கிழித்தெறிய வேண்டும் எனக் கோரி வருகிறோம்.

இதனை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் ஈடுபட்டு வருகிறோம். அதனால், அரசு இந்தப் போராட்டத்திற்கு எந்தவித பதிலையும் இன்னமும் தரவில்லை.

இதன் காரணமாக இன்று காலை 10 மணிக்கு கண்டி தலதா மாளிகையில் வைத்து எமது முக்கிய தீர்மானம் ஒன்றை வெளியிடவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-Sankathi-

  • தொடங்கியவர்

ஒன்றையும் நடக்கவிடக்கூடாது தமிழருக்கு எதுவும் கிட்டவிடக்கூடாது என்பதெல்லாம்

இறைவனிடம் கேட்பவர்கள் பௌத்தத் துறவிகளா? இவர்கள் சரியான சூனியகாரர்கள்.

அரசாங்கம் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை உத்தியோக பூர்வமாக கைவிட வேண்டுமென்று நாங்களும் பிரார்த்தனை செய்வோம்.

தூதரத்திற்கு முன்னால போய் உவையின்ர கோமணம் மகிந்தவின்ர பெண்டிலிண்ட எல்லாத்தையும் எவரும் எதுவும் கேட்க மாட்pனம் விருப்பிபாப்பினம்

ஓமோம்..இவற்றையும் அவற்றை பொண்டிலின்ரையும் ஏலம் விட்டா..உலக சந்தையில் நல்ல விலை போகும்

அதை வைச்சு நாடு பட்ட கடனை அடைக்க முடியும்...யாரும் முடிஞ்சா இதை

ரம்பக்கெல்லவிடம் கூறி விடவும்...

நம்பாதீங்கோ உந்த ரம்புக்கலவ..அம்மணியின் ஆட்சியில் இருந்த

சரத்முனசிங்கா...தான் யாவற்றையும் விட்டு விலத்திய போது

என்ன சொன்னவர் எண்டு தெரியும் தானே...?

.அது பற்றி ஒரு புத்தகமம் வெளியிட்டு இருந்தார்

யாராவது அதை கண்டெடுத்த இங்க கொண்டு வந்து இணையுங்கே..h.

இப்போ கச்சைகளை ஏலம் விடுஙN;க...h

புசாரிகள் ஆட்சி பிடம் வந்த உப்படித்தான்..பாவம் புத்தர்...

அட நான் நினைச்சன் எவனோ ஒரு பெரிய மனிதன் சொல்லுறான் அதை ஒருக்கா வாசிப்போம் எண்டா இதுகள் மொட்டைகளிட செய்தி. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது 1984 ஆரம்ம மாதங்களில் ஒரு பிக்கு அமலதாஸ் என்ற ஒரு கிட்டுவின் போராளியினை கைதுசெய்ய இரானுவம் குருநகருக்குள் புகுந்துவிட ஒரு பிக்கு ஆமா தமிழரில அப்படி விருப்பம் தன் வீட்டில் வைத்திருந்து காப்பாற்றினார். அப்படி காப்பாற்றப்பட்ட அமலதாஸ் பின்பு ஒரு தடவை கச்சேரி ஓல்ட் பார்க் ரோட்டில வைத்து ஒரு பெரும் போராளியோடு சயனைட்டு உண்டு சயந்தன்( பரியோவான் கல்லூரி மானவன் கராட்டி சம்பியன், இயக்க இராணுவ பயிற்சியாளர்)ஒன் த ஸ்பொட்டில் இறந்துபோக அமலதாஸ் அர உயிருடன் மாட்டுப்பட்டார் பின்பு அவர் குருநகர், கோட்டை முகாம் இரானுவத்தினரால் இருதயதில் 2 அங்குள சூடாக்கப்பட்ட இரும்பினால் குத்தி படுகொலை செய்யப்பட்டார் ஏன் அவர் கிட்டுவின் உயிர் தோழன் என்பதால். :icon_idea:

ஓமோம் அவன் ஐரோப்பிய ஒன்றியம் சொல்லுச்சுது, யப்பான் சொல்லுச்சுது, பின்பு அமெரிக்கா சொல்லுச்சுது. அவங்க காசு காரங்க எதோ பிடற்ருவாங்க ஆனா நீங்க பரம ஏழை அப்படி சொல்லலாமுங்கோ? புலிகள் எனி சண்டையே பிடிக்கிறதில்லை எண்டு நினக்கேக்க நீங்க கட்டாயம் எடுக்கோணும் முடிபை. உந்த ஒப்பந்தத்தை கிளிக்கோணும் எண்டு. இருந்தா புலிகள் தமிழீழம் பெற்றுவிடுவார்கள் மொட்டைகளோ.. :icon_idea:

தமிழ்நாட்டுக்கோரிக்கை ஒன்றும் புலிகளினுடயது மட்டுமல்ல! தமிழ் மக்களால் ஏகோபித்து வழிமொழியப்பட்டது.

good! good! வெரி குட்! :icon_idea::lol::lol:

கன நேரம் இல்லை இன்னமும் 100 மணத்தியாலங்கள் மட்டிலான் இருக்கு.

உங்கள் அபிமான தொலைக்காட்சி, வானொலி, இணையத் தளங்களோடு இணைத்திருக்கவும்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று 2500 வருடங்களிற்கு முன்பே ஞானக்கண்ணால் தீர்க்கதரிசனமாய் தெரிந்ததால் தான் புத்த பகவான் நிர்வாணமாக இருந்து தியானம் செய்கின்றார்! :icon_idea::lol::lol:

  • தொடங்கியவர்

போர்நிறுத்தத்தை விட்டு விலகவேண்டி விசேட ஆராதனைப் போராட்டம்

கண்டி தலதாமாளிகையில் சிறீலங்கா அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 22ம் திகதிக்கு முன் அதாவது போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதற்கு முன் அதனைகைவிட வேண்டும் எனகோரி பெருமளவிலான பௌத்த பிக்குமார் இணைந்து ஆராதனை போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள்.

தேசிய பிக்குகள் முன்னணி இவ்விசேட ஆராதனையை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை என்.ஐ.யு, ஜே.வி.பி ஆகியன இணைந்து எதிர்வரும் 22ம் திகதி போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடன் கைவிடவேண்டி கொழும்பு கைட்பாக் பகுதியில் பொதுகூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்

கன நேரம் இல்லை இன்னமும் 100 மணத்தியாலங்கள் மட்டிலான் இருக்கு.

உங்கள் அபிமான தொலைக்காட்சி, வானொலி, இணையத் தளங்களோடு இணைத்திருக்கவும்.

எதிர்பார்ப்புகளையும் ஊகங்களையும் கைவிடுங்கள். நம்பிக்கை வேண்டும்.

எதிர்பார்த்த இடத்தில் எதிர்பார்க்காத நேரத்தில் எதுவும்நடக்கும்.

தீர்மானிப்பவர்கள் புலிகள்தான். புலிகள் மட்டும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.