Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயாவின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்

Featured Replies

நீதி

02-bd9b14e0e775b8a9df75ed04d39a357e712a1a1c.jpg

 

ஜெயா­வின் சொத்­துக்கள் அர­சு­ட­மை­யாக்­கப்­பட வேண்டும்  

 

  •  ஆர்.கே.நகர் தேர்தல் இரத்து செய்­யப்­பட வேண்டும் 
  •  உயில் இல்­லாத ஜெயா வின் சொத்­துக்­களை எவரும் அனு­ப­விக்க முடி­யாது.

 

உல­கி­லேயே இந்­தியா மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடு. அங்கு நீதித்­துறை சுயா­தீ­ன­மாக இயங்­கு­கின்­றது. இதனை இந்­தியா மட்­டு­மல்ல முழு உல­கமே அறியும். மக்­க­ளுக்கு ஏதும் பிரச்­சினை வந்தால் அல்­லது அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னைகள் தலை­தூக்­கினால் அதற்கு தீர்­வு­காண நீதி­மன்­றத்­தையே நாடு­கின்­றனர். அண்­மையில் நெடுஞ்­சா­லைகள் அரு­கி­லுள்ள டாஸ்மார்க் சாராயக் கடை­களை அகற்ற நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. நீதி­மன்றம் அக்­க­டை­களை அகற்ற தீர்ப்பு கொடுத்­தது. தமிழ்­நாட்டு அரசின் கால அவ­காசம் கோரிக்­கை­யையும் நிரா­க­ரித்­தது.

இதே­போன்று டில்­லியில் 24 நாட்­க­ளுக்கு மேலாக வரட்சி நிவா­ரணம் கோரி போராடும் விவ­சா­யிகள் சார்பில் அய்யாக்­கண்ணு நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசா­ரித்த நீதி­மன்றம் விவ­சா­யி­களின் கூட்­டு­றவு சங்கக் கடன்கள் இரத்து செய்­யப்­பட வேண்­டு­மென தீர்ப்பு வழங்­கியது.  

இது இந்­திய நீதி­மன்­றத்தின் அண்­மைக்­கால மக்­க­ளுக்­கான இரண்டு தீர்ப்­பு­க­ளாகும். இவ்­வா­றா­ன­தொரு நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் சொத்­துக்­களை என்ன செய்­வது அவர் வரு­மா­னத்தை விட சொத்து சேர்த்­துள்ளார். இதற்கு தீர்வு என்ன என்­பதை இது­வரை நீதி­மன்றம் தெளி­வு­ப­டுத்­த­வில்லை.  

கர்­நா­டக நீதி­மன்­றத்தின் தீர்ப்பில் ஜெய­ல­லிதா குற்­ற­வா­ளி­யாக்­கப்­பட்டார். ஆனால் அவர் இறந்­தி­ருப்­பதால் விலக்­க­ளிக்­கப்­பட்­டது. ஆனால் அவ­ருக்கு விதிக்­கப்­பட்ட 100 கோடி அப­ராதம் தீர்ப்பு அப்­ப­டியே உள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் கர்­நா­டகா அரசு ஜெயாவின் சொத்­துக்­களை முடக்­கு­வது தொடர்பில் சீராய்வு மனு­வொன்றை நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தது.  

ஆனால், அம்­மனு நீதி­மன்­றத்தால் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது. இந்­நி­லையில் ஜெயாவின் சொத்­துக்­களை என்ன செய்­வது என்­பது தொடர்பில் சிக்கல் தோன்­றி­யுள்­ளது. கர்­நா­டக அரசு இது தொடர்­பாக அந்­நாட்டு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் ஆலோ­ச­னை­களை பெற்று மீண்டும் வழக்கு தொடர்­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­கி­றது.  

வரு­மா­னத்­தை­விட சொத்து சேர்த்த ஜெயாவை போல் இன்று பலர் சொத்­து­களை சேர்க்­கின்­றனர். பேராசை பெரும் நஷ்டம். விநாசகாலய விப­ரீத புத்தி என்­பார்கள். அதே நிலை ஜெயாவின் சொத்­து­க­ளுக்கு இன்று இக்­கட்­டான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு மனிதன் அழியப் போகும் போது அவன் அள­வுக்கு அதி­க­மாக சொத்து சேர்ப்பான் என்­பது ஜெயாவின் வாழ்க்கை புரி­ய­வைத்­துள்­ளது.  

ஜெயா தனக்கு பிறகு சொத்­துக்கள் யாருக்கு சொந்­த­மாக வேண்டும் என்று உயில் எழு­தியும் வைக்­க­வில்லை. அவர் சேர்த்த சொத்­துக்­களின் விபரம் 113 கோடி­யாகும். இது நீதி­மன்றத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் ஆகும்.

அத்­தோடு ஜெயாவின் இரத்த உற­வுகள் என அவ­ரது அண்ணன் மக­ளான தீபா­வையும் தீபக்­கை­யுமே குறிப்­பி­டலாம். ஆனால் அவர்­களும் ஜெயாவின் இரத்த உற­வுகள் ‘தாமே’, எமக்கு தான் அவ­ரது போயஸ் கார்டன், வேதா இல்லம் உட்­பட சொத்­துக்கள் சொந்­த­மாகும் என நீதி­மன்­றத்தில் கூற­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு புறச் சூழலில் ஜெயாவின் சொத்­துக்­களை ‘யார் யாரோ’, அனு­ப­விக்­கின்­றனர். ‘எனவே, சட்டம் இதனை தட்டிக் கேட்க வேண்டும். ஜெயாவின் சொத்­து­களை யாரும் அனு­ப­விக்­காமல் முடக்க வேண்டும். இது இந்­திய நீதித்­து­றையின் கடப்­பா­டாகும்.  

அதே­வேளை, இந்­திய சட்டம் சொல்­கிறது. ஒரு மனிதன் வாரி­சில்­லாமல் இறந்து போனால் அவ­னது சொத்­துக்கள் அனைத்தும் அர­சு­ட­மை­யாகும். இது இயற்­கை­யா­கவே சம்­ப­விக்கும் என்­பதே சட்டம். எனவே, ஜெயாவின் போயஸ் கார்டன், வேதா இல்லாம் மற்றும் தேயிலைத் தோட்­டங்கள், ஹோட்­டல்கள், ஆடம்­பர வீடுகள் அனைத்­தையும் அர­சு­ட­மை­யாக்க வேண்டும்.  

ஜெயாவின் சொத்­துக்கள் மூலம் கிடைக்கும் பணத்தை மக்­க­ளுக்கு செல­வ­ழிக்க வேண்டும். ஏனென்றால் ஜெயா சேர்த்த சொத்­துக்கள் அனைத்தும் மக்­களின் பண­மாகும்.

ஜெயாவின் சொத்­துக்கள் முடக்­கப்­பட வேண்டும். அர­சு­ட­மை­யாக்­கப்­பட வேண்டும். அப்­பணம் மக்­க­ளுக்கு செல­வ­ழிக்­கப்­பட வேண்டும். இவ்­வி­ட­யத்தில் இந்­திய நீதித்­துறை எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது என்­பதை உலகில் வாழும் தமி­ழர்கள் அனை­வரும் உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கின்­றனர்.

வரு­மா­னத்­தை­விட சொத்து சேர்க்கும் ஜெயாவின் வாழ்க்கை மட்­டு­மல்ல ஒவ்­வொரு மனி­தனும் வரு­வாய்க்கு விட அதிக பணம் சேர்த்தால் அச் சொத்­துக்­க­ளுக்கு இதே நிலைதான் ஏற்­படும். மனை­விக்கும் கிடைக்­காது; பிள்­ளை­க­ளுக்கும் கிடைக்­காது; அர­சு­ட­மை­யாகும்.

“கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமான். கழுத்­து­வ­ரையில் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமான்” என்­பது பணத்தின் உச்­சக்­கட்டம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் அழ­கிய பாடல் வரி­க­ளாகும்.

எனவே ஜெய­ல­லிதா நீதி­மன்­றத்தால் குற்­றா­வ­ளி­யாக்­கப்­பட்­டவர். 100 கோடி ரூபா அபா­ராதம் விதிக்­கப்­பட்­டவர். இத் தீர்ப்பை மாற்ற முடி­யாது. எனவே ஜெயா குற்­ற­வாளிப் பட்­டி­யலில் அடக்­கப்­பட்­டுள்ளார். அவ்­வா­றான ஒரு­வரின் சொத்­துக்­களை எவரும் அனு­ப­விக்க முடி­யாது. அதனை இந்­திய நீதித்­துறை முடக்க வேண்டும். 

ஜெயாவின் சொத்­துக்­களை இன்னார் தான் அனு­ப­விக்க வேண்டும் என உயில் எழுதி வைக்­கப்­ப­ட­வில்லை. எனவே, உயில் எழு­தப்­ப­டாத போயஸ் கார்டன், வேதா இல்லம் உட்­பட எத­னையும் எவ­ராலும் அனு­ப­விக்க முடி­யாது.

சுதந்­தி­ர­மா­கவும் சுயா­தீ­ன­மா­கவும் இயங்கும் இந்­தி­யாவின் நீதித்­துறை ஜெயாவின் சொத்­துக்கள் தொடர்பில் ஏன் அதி­ரடி தீர்­மா­னங்­களை எடுப்­ப­தில்லை.

ஜெயாவின் சொத்து விட­யத்தில் இந்­திய நீதித்­துறை ஏன் மெத்­த­ன­மாக செயற்­ப­டு­கி­றது என மக்கள் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளனர். இவ்­வி­ட­யத்தில் அர­சி­யலை சேர்த்துப் பார்க்கக் கூடாது. ஜெயாவை இந்­திய பிர­ஜை­யா­கவே நோக்க வேண்டும்.

இந்­திய நீதித்­து­றையின் செயற்­ப­ாடுகள் சுதந்­தி­ர­மாக அமைய வேண்டும். ஜெயாவின் சொத்து விட­யத்தில் இந்­திய நீதித்­துறை தனது கட­மையை சரி­யாகச் செய்யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  

ஆர்.கே.நகர் தேர்தல்

1977 ஆம் ஆண்டில் இந்­திய உயர் நீதி­மன்றம் தீர்ப்­பொன்றை வழங்­கி­யது. அத் தீர்ப்பில் ஒரு­வ­ருக்­கேனும் பணம் கொடுத்து வாக்கு கேட்டால் அவ்­வா­றான ஒரு தேர்தல் இரத்து செய்­யப்­பட வேண்டும் என்­பதே அத் தீர்ப்­பாகும்.  

ஆனால், இன்று ஆர்.கே. நகரில் ஒரு­வ­ருக்கா பணம் கொடுக்­கப்­ப­டு­கி­றது?
ஆர்.கே. நகரில் பெரும்­பா­லான மக்­க­ளுக்கு ரூபா 4000 வீதம் பணம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. இது அப்­பட்­ட­மான ஜன­நா­யக மீற­லாகும். பணத்தை கொடுத்து வாக்கு பெறும் படலம் ஆர்.கே.நகரில் தொடர்­கிறது. 18 கோடி பணத்தை தேர்தல் அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். ஒரு வீட்­டி­லி­ருந்து ரூபா 9 இலட்சம் பணம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ளது.  

பல கட்­சிகள் தமது கறுப்பு பணத்தை மக்­க­ளுக்கு விநி­யோ­கித்து வரு­கி­ன்றன. எனவே, பணத்தை வாங்­கி­ய­வர்கள் நன்­றிக்­க­ட­னுக்­காக பணம் கொடுத்­த­வ­ருக்கே வாக்­க­ளிப்­பார்கள். எனவே, ஆர்.கே. நகரில் ஜன­நா­யக தேர்­தலை எதிர்­பார்க்க முடி­யாது. ஆர்.கே. நகரில் பண­நா­யகத் தேர்­தலே இடம்­பெறும். எனவே, இத்­தேர்­தலை நடத்­தாது இரத்து செய்­வதே ஜன­நா­ய­க­மாகும்.  

இல்­லா­விட்டால் ஆர்.கே.நகரில் பண ­நாயகம் வெற்­றி­பெறும். அங்கு எது­வி­த­மான அபி­வி­ருத்­தி­களும் நடக்க போவ­தில்லை. இன்று ஆர்.கே.நகரில் இடம்­பெ­று­வது மக்­க­ளுக்­கான தேர்தல் அல்ல. தத்­த­மது அர­சியல் அதி­கா­ரங்­களை பாது­காத்துக் கொள்ளும் கௌரவத் தேர்­த­லாகும்.

எனவே, இத்­தேர்தல் தேவையா என்­பது ‘இந்­தியா’ சிந்­திக்க வேண்டும். தமிழ்­நாட்டில் ஜன­நா­யகம் பாது­காக்­கப்­பட வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்­தேர்தல் சிந்­தனை மாற்­றத்­திற்­கான தேர்­த­லாக அமைய வேண்டும். அதனை விடுத்து சிரிப்பு தேர்தலாக அமைந்துவிடக்கூடாது.  

மக்களுக்காவே தேர்தல், தேர்தலுக்காக மக்கள் அல்ல. பணம் பாதாளம் வரை பாயும். இன்று பணம் தேர்தலை மாற்றவும் வாக்களிப்பதற்கும் பயன்படுகிறது. இது வேதனைக்குறிய விடயமாகும். பணத்துக்காக வாக்கை விற்கும் கலாசாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும்.

இவ்விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தேவையானதாகும். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் அதில் வெற்றி கண்டனர். தமிழரின் மரபுரிமையை பாதுகாத்தனர்.  அதேபோன்று, ஆர்.கே. நகரில் இளை ஞர்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்று பணத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற செய்தியை சொல்ல வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளைஞர்களால் இதனை செய்ய முடியும்.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-08#page-4

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

உல­கி­லேயே இந்­தியா மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடு. அங்கு நீதித்­துறை சுயா­தீ­ன­மாக இயங்­கு­கின்­றது.

அய்யோ...அய்யோ எனக்கு கிறுதி வாறமாதிரிக்கிடக்கு......

ஆரெண்டாலும் ஒரு சொம்புதண்ணியோடை ஓடிவாங்கோ..smiley_mad.gif

  • தொடங்கியவர்

ஐயோ என்னாலதான் கிறுதி வந்தது என்று சொல்லிபோடாதையுங்கோ...:grin:

செம்பும் தண்ணியையும் விட்டுபோட்டு Notarzt க்கு தொலைபேசிங்கோ..tw_blush:

3 minutes ago, குமாரசாமி said:

அய்யோ...அய்யோ எனக்கு கிறுதி வாறமாதிரிக்கிடக்கு......

ஆரெண்டாலும் ஒரு சொம்புதண்ணியோடை ஓடிவாங்கோ..smiley_mad.gif

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.