Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுய பரிசோதனைக்கு கூட்டமைப்பு தயாரா?

Featured Replies

சுய பரிசோதனைக்கு கூட்டமைப்பு தயாரா?

Page-01-image-dcaadd3063374f5aa8d5f7ec6a6221be94f564db.jpg

 

இலங்­கைக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பொதுச்­செ­யலர் சலில் ஷெட்டி கடந்த புதன்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பின் போது, இலங்கை அர­சாங்­கத்­துக்கு காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று கூறி­யி­ருந்தார்.

போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக, சர்­வ­தேச சமூ­கத்­திடம் இலங்கை அர­சாங்கம் கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கே காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

காலம் கடந்து கொண்­டி­ருக்­கி­றது என்ற இந்தக் கூற்று, இலங்கை அர­சாங்­கத்­துக்கு மாத்­திரம் பொருத்­த­மா­ன­தல்ல. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் கூட பொருத்­த­மா­னது தான்.

இலங்கை அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக் கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளது போலவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், தமிழ் மக்­க­ளிடம் வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருக்­கி­றது.

தமிழ்­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக - தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­திகள் இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதற்­குள்­ளா­கவே பாரா­ளு­மன்றத் தேர்தல் முடிந்து இரண்டு ஆண்­டுகள் ஆகிக் கொண்­டி­ருக்­கின்­றன.

அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல் இன் னும் நான்கு ஆண்­டு­களில் வரப் போகி­றது. அதற்கு முன்­ன­தாக, உள்­ளூ­ராட்சித் தேர்தல் இந்த ஆண்டில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. கிழக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்­தலும், வரும் செப்­டெம்­ப­ருக்குள் நடத்­தப்­பட வேண்டும். அதற்குப் பின்னர், வடக்கு மாகா­ண­ச­பைக்­கான தேர்தல் அடுத்த ஆண்டு செப்­டெம்பர் மாதத்­துக்குள் நடத்­தப்­படும்.

இவ்­வா­றாக அடுத்த ஆண்­டுக்குள் மூன்று தேர்­தல்­களை எதிர்­கொள்ள வேண்­ டிய நிலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு இந்தத் தடை­களைத் தாண்டிப் பயணம் செய்­வது ஒன்றும் சுல­ப­மான காரி­ய­மாக இருக்கப் போவ­தில்லை.

ஏனென்றால், ஏற்­க­னவே தமிழ் மக்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களின் நிலை என்ன என்­பது இந்த தேர்­தல்­களில் முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்கப் போகி­றது. அதனால் தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் மேற்­கூ­றிய கூற்று பொருத்­த­மா­னது என்று குறிப்­பி­டப்­பட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வெறு­மனே ஓர் அர­சியல் கட்­சி­யாக இருந் தால், கடந்த தேர்­தலின் போது அளித்­தி ­ருந்த வாக்­கு­று­தி­யை­யிட்டு கவலை கொள்ள வேண்­டிய தேவை இருக்­காது. ஏனென்றால் பெரும்­பா­லான அர­சியல் கட்­சிகள், தேர்­தல்­களின் போது அளிக்கும் வாக்­கு­று­தி­களை அப்­போதே மறந்து விடு­ வது தான் வழக்கம்.

அடுத்த தேர்­தலின் போது தான், அவர்­க­ளுக்கே அந்த வாக்­கு­று­திகள் நினை­வுக்கு வரும். அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் எடுக்க முடி­யாது. ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலாப நோக்­கிற்­காக செயற்­ப­டு­கின்ற – மக்­களின் நலன்­களை மறந்து விட்டுச் செல்­லக்­கூ­டிய ஓர் அர­சியல் கட்சி அல்ல.

இது தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­க­ளையும், உரி­மை­க­ளையும் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு கூட்­ட­மைப்பு. அதனால் தான், கூட்­ட­மைப்­பினால் மக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை மறந்து விட்டுச் செல்­லவோ கடந்து கொண்டு செல்­லவோ முடி­யாது.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த தேர்­தலின் போது அளித்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை எந்­த­ள­வுக்கு நிறை­வேற்­றி­யுள்­ளது என்­பது குறித்து தமிழ் மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்க வேண்­டிய கடப்­பாடு அடுத்து வரும் தேர்­தல்­களின் போது, ஏற்­படும்.

அடுத்து வரப் போகின்ற தேர்­தல்­களை எதிர்­கொள்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­ள­வுக்குத் தயார்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்­கின்­றது என்ற கேள்­விகள் நிறை­யவே இருக்­கின்­றன.

இன்னும் நான்கு ஆண்­டு­களில் வரப் போகின்ற ஜனா­தி­பதி தேர்தல் பற்றி இப் ­போதே ஐ.தே.க.வும், ஸ்ரீலங்கா சுதந்­தி ரக் கட்­சியும், ஜே.வி.பியும் யோசிக்கத் தொடங்கி விட்­டன.

இந்­தி­யாவில் இன்னும் இரண்டு ஆண்­டு­களில் வரப் போகின்ற பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­காக பா.ஜ.க. கடந்த ஆண்­டி­லேயே வியூகம் வகுத்துச் செயற்­படத் தொடங்கி விட்­டது.

இவ்­வா­றான நிலை­மை­க­ளுடன் ஒப்­பிடும் போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மை ப்பு, அடுத்த தேர்­தல்­களை எதிர்­கொள் ளும் விட­யத்தில் அப்­ப­டி­யொன்றும் தீர்க்க தரி­ச­னத்­துடன் முடி­வு­களை எடுத்­தி­ருப்­ப­தா­கவோ வியூங்­களை வகுத்­தி­ருப்­ப­தா­கவோ தெரி­ய­வில்லை.

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை அடை­வ­தற்­கான குறைந்­த­பட்ச நிகழ்ச்சி நிரல் ஒன்று கூட கூட்­ட­மைப்­பி டம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் நிறைந்­தி­ருப்­ப­தெல்லாம், உள்­ளக முரண்­பா­டு­களும், குத்­து­வெட்­டு­களும் தான்.

இந்த நெருக்­க­டியைக் கடந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வாறு நகரப் போகி­றது என்ற கேள்­விகள் தமிழ் அர­சியல் பரப்பில் எழுந்­தி­ருக்­கின்­றன.

ஒரு பக்­கத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டே, அதன் தலை­மைக்கு எதி­ராக குரல்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. இன்­னொரு பக்­கத்தில் வெளியில் இருந்து கொண்டு கூட்­ட­மைப்பை உடைக்கும் முயற்­சிகள் நடக்­கின்­றன.

இவை எல்­லா­வற்­றுக்கும் அப்பால் வடக்­கிலும் கிழக்­கிலும் காலூன்­று­வ­தற்கு பேரி­ன­வாத தேசியக் கட்­சிகள் பெரும் முனைப்பில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றன.

மூன்று வித­மான இந்த நெருக்­க­டி­க­ளுக்கு அப்பால், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான அணு­கு­மு­றை­க­ளையும், அதற்­கான வழி­மு­றை­க­ளையும் கையாள வேண்­டிய நிலையும் கூட்­ட­மைப்­புக்கு இருக்­கி­றது.

அண்­மையில் ஜெனீவா தொடர்­பாக ஏற்­பட்ட நெருக்­க­டியை கூட்­ட­மைப்பு ஒரு­வாறு சமா­ளித்து விட்­டது. ஆனால் இது நிரந்­த­ர­மான தீர்வு அல்ல. ஜெனீவா கால­அ­வ­காசம் தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நிலை­யா­ன­தொரு தீர்­மா­னத்தை எடுக்­க­வில்லை.

முதலில் கால­அ­வ­காசம் வழங்­கப்­ப­டு­வதை ஆத­ரிப்­ப­தாக கூறி­யது, பின்னர் கால­அ­வ­கா­சத்தை ஆத­ரிப்­ப­தாக கூற­வில்லை என்­றது, கடை­சி­யாக ஜெனீ­வாவில் தீர்­மானம் நிறை­வே­றி­யதும், கால­அ­வ­காசம் அளிக்­கப்­பட்­டதை வர­வேற்று அறிக்கை வெளி­யிட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதற்­காக இவ்­வாறு குட்­டையைக் குழப்பி மீன்­பி­டிக்க முனை­கி­றது என்ற கேள்வி தமிழ் மக்­க­ளி­டத்தில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

ஜெனீவா விட­யத்தில் அர­சாங்­கமும், மேற்­கு­ல­கமும் போட்ட வரைவு ஒன்றின் கீழ்தான் எல்­லாமே நடந்­தன. ஜெனீ­வாவில் கால­அ­வ­காசம் அளிப்­பதை விட சர்­வ­தேச சமூ­கத்­துக்கு இன்­னொரு தெரிவு இருக்­க­வில்லை. இது தான் உண்மை நிலை.

அதற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கால­அ­வ­காசம் வழங்­கு­வ­தற்கோ, வழங்­கப்­பட்­ட­தற்கோ ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்க வேண்­டுமா என்­பது தான் தமிழ் மக்­களின் கேள்வி.

ஜெனீவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அரசு இணங்­கி­யதை வர­வேற்­றி­ருக்­கலாம். அவ்­வாறு வர­வேற்­ப­தற்கும், கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்­டதை வர­வேற்­ற­தற்கும் இடையில் வேறு­பா­டுகள் உள்­ளன.

ஜெனீவா விவ­கா­ரத்தில் எதையும் செய்ய முடி­யாது என்­பதைத் தெரிந்து கொண்ட தமிழ்த் தேசி­ய­வாத தரப்­புகள், அதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான விட­ய­மாக திசை திருப்பி விட்­டன.

தமிழ் மக்­களின் கையறு நிலை மறைக்­கப்­பட்டு அதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கையா­லா­காத்­த­ன­மாக காட்­டு­வதில் சில தரப்­புகள் வெற்­றியைப் பெற்­றி­ருக்­கின்­றன.

இப்­ப­டி­யொரு நிலை ஏற்­பட்­ட­மைக்கு கூட்­ட­மைப்­புக்குள் நில­வு­கின்ற உள்­ளக முரண்­பா­டுகள் பெரிதும் வலுச் சேர்த்­தி­ருந்­தன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு அள­வுக்கு அதி­க­மா­கவே முண்டு கொடுக்­கி­றது என்ற அதி­ருப்தி தமிழ்­மக்­க­ளிடம் ஏற்­பட்­டுள்­ளது என்றால், அதற்குக் காரணம் கூட்­ட­மைப்பின் அணு­கு­முறை தான்.

இந்த அதி­ருப்தி நிலை நீடிக்­கு­மானால், அது தமிழ் மக்­களின் கடு­மை­யான எதிர்­வி­னை­க­ளுக்கே வழி­வ­குக்கக் கூடும்.

கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­காக கடு­மை­யாக உழைத்­த­வர்கள், தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின்னர் சலித்துக் கொண்டு இப்­படித் தான் கூறி­னார்கள் “கூட்­ட­மைப்பு தும்­புத்­த­டியை வேட்­பா­ள­ராக நிறுத்­தி­னாலும் தமிழ் மக்கள் வீட்­டுக்குத் தான் வாக்குப் போடு­வார்கள்”.

ஆனால் தமிழ் மக்கள் அர­சி­யலின் ஆழத்தைப் புரிந்து கொள்­ளா­த­வர்­களோ, அதன் போக்­கு­களை உணர்ந்து கொள்­ளா­த­வர்­களோ அல்லர். தேவைக்­கேற்ப அவர்கள் சரி­யான முடி­வு­க­ளையே எடுத்து வந்­தி­ருக்­கி­றார்கள். தொடர்ந்தும் அவ்­வாறே முடி­வு­களை எடுப்­பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு விட­யத்தில் தாம் தவறு செய்து விட்டோம் என்று அவர்கள் கரு­து­கின்ற ஒரு நிலையை கூட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்திக் கொள்­ளு­மே­யானால், அடுத்த தேர்­தலில் அவர்கள் வேட்­பா­ளர்­களின் ஒவ்­வொரு அங்­கு­லத்­தையும் ஆரா­யவே முனை­வார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­க­ளையும், உரி­மை­க­ளையும் வெற்றி கொள்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒன்று என்ற கடப்­பாட்டை மறந்து போனால், தமிழ் மக்­களும் கூட்­ட­மைப்பை மறந்து போகும் நிலைக்கு வந்து விடு­வார்கள்.

தாம் தெரிவு செய்த பிர­தி­நி­திகள், தமது பிரச்சினைகளில் தம்முடன் இருக்க வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். தமக்காக போராட வேண்டும், வாதாட வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அண்மையில், வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளால் அந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது. இதுபோன்ற இடைவெளிகள் திட்டமிட்டு உருவாக்கும் முனைப்புள் நடந்து கொண்டிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுக்காது செயற்படுவது தான் சாதுரியமான அரசியல்.

மக்களுக்கான அரசியல் என்பது சாணக்கியத்தை மட்டும் மட்டுப்படுத்தியது அல்ல. அதற்கும் அப்பால் அர்ப்பணிப்பு முக்கியமானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தகைய அர்ப்பணிப்பு அரசியலை எந்தளவுக்கு முன்னெடுக்கிறது என்பதை இப்போதைய கட்டத்திலாவது சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் தமிழ்த் தேசிய அரசியலில் கூட்டமைப்பின் இருப்பு என்பது மிக முக்கியமானது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-1

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வயசு போன நேரத்திலும் சுய இன்னபத்தில் உள்ளவங்க சுய பரிசோதனைக்கு ஒத்துக்குவாங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.