Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தலைகுனிய வைக்கும் பண விநியோகம்

Featured Replies

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தலைகுனிய வைக்கும் பண விநியோகம்

07-1491542848-money-11-600-9627402fccb124536c52312e7ee5ae18d08d72f6.jpg

 

சென்னை ஆர்.கே.நகர் (ராதா கிருஷ்ணன் நகர்) சட்­டப்­பே­ரவைத் தொகு­திக்­கான இடைத்­தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு இன்னும் மூன்று தினங்­களே உள்­ளன. இத­னை­யொட்டி இறு­திக்­கட்ட தேர்தல் பிர­சா­ரங்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தொகு­தியைக் கைப்­பற்ற பல்­வேறு கட்­சி­களும், சுயேச்சை உறுப்­பி­னர்­களும் தீவிர பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

முன்னாள் முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா ஆர்.கே. நகர் சட்­டப்­பே­ரவைத் தொகுதி உறுப்­பி­ன­ராக இருந்தார். அவர் கால­மா­னதன் பின்னர் ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்­கா­கவே எதிர்­வரும் 12 ஆம் திகதி புத­னன்று இடைத்­தேர்தல் நடை­பெ­று­கின்­றது. தேர்தல் முடி­வுகள் எதிர்­வரும் 15 ஆம் திகதி சனிக்­கி­ழமை வெ ளிவர­வுள்­ளன.

இந்த இடைத்­தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தற்­காக வாக்­கா­ளர்­க­ளுக்கு பெருந்­தொ­கை­யான பணம் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக பர­வ­லாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்­ளன. இத­னை­ய­டுத்து, தேர்தல் ஆணை­யத்­தினால் வாக்­க­ளிப்பு பின்­போ­டப்­ப­டலாம் என்று கூறப்­பட்­டது.

இடைத்­தேர்தல் சில கட்­சி­க­ளுக்கு வாழ்வா அல்­லது சாவா? என்­பதை நிர்­ண­யிக்கும் சோத­னைக்­க­ள­மாக மாறி­யுள்­ளது. ஜெய­ல­லி­தாவின் மறைவின் பின்னர் அ.தி.மு.க.பிள­வ­டைந்­தது. சசி­கலா அணி, ஓ.பன்­னீர்­செல்வம் அணி என இரண்­டாக பிள­வ­டைந்­தது.

இதே­வேளை, அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்­சின்னம் மற்றும் கொடி என்­ப­ன­வற்றை இரண்டு தரப்­பி­னரும் பயன்­ப­டுத்த முடி­யாத வரையில் தேர்தல் ஆணையம் முடக்­கி­வைத்­துள்­ளது. இதனால் இரு­த­ரப்பின் இரட்டை இலைச்­சின்­னத்­தையும், கொடி­யையும் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதன் மூலம் இரட்டை இலைச்­சின்­னத்­துக்கு வாக்­க­ளித்து பழக்­கப்­பட்டு வந்த வாக்­கா­ளர்கள் மற்றும் அ.தி.மு.க. அடி­மட்டத் தொண்­டர்­க­ளிடம் ஒரு குழப்­ப­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது ஒரு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­மென்­பதை மறுக்க முடி­யாது.

எவ்­வா­றெ­னினும், இந்தத் தேர்­தலில் போட்­டி­யிட்டு, எப்­ப­டி­யா­வது வெற்றி பெற­வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு அணி­க­ளுமே தீவிரம் காட்டி வரு­கின்­றன. சசி­கலா அணி சார்பில் அவ­ரது அக்கா மகனும், அ.தி.மு.க.வின் துணைப்­பொதுச் செய­லா­ள­ரு­மான டி.டி.வி.தின­கரன் களத்தில் குதித்­துள்ளார்.

ஓ.பி.எஸ். என்ற ஓ.பன்­னீர்­செல்வம் அணியின் சார்பில் அ.தி.மு.க. முன்னாள் அவைத் தலைவர் மது­சூ­தனன் போட்­டி­யி­டு­கின்றார். இந்த இடைத்­தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­ப­வரே சில­வேளை அ.தி.மு.க.வின் உண்­மை­யான தலைவர் என்ற மக்கள் அங்­கீ­கா­ரத்தைப் பெறக்­கூ­டி­ய­வ­ராக இருப்பார். தவிர, கட்சி அவ­ரு­டைய கட்­டுப்­பாட்டின் கீழ் எதிர்­கா­லத்தில் வரக்­கூ­டி­ய­தாக இருக்கும். இது மட்­டு­மல்ல, இதில் பல்­வேறு விட­யங்கள் உள்­ள­டங்­கி­யுள்­ளன.

இத­ன­டிப்­ப­டையில் இந்தத் தேர்­தலில் வெற்றி பெற­வேண்­டிய கட்­டாயம் டி.டி.வி.தின­க­ர­னுக்கும், மது­சூ­த­ன­னுக்கும் இருக்­கி­றது. ஆனால், ஜெய­ல­லி­தாவின் மறைவின் பின்னர் அ.தி.மு.க.வை கைப்­பற்­று­வ­தற்கும், ஆட்­சியைப் பிடிப்­ப­தற்கும் பத­வி­களைப் பெறு­வ­தற்கும், அரசில் இடம்­பெற்ற நிர்­வாக சீர்­கே­டுகள், ஊழல் போன்ற­வற்­றுக்கும் அ.தி.மு.க.வின் அனைத்துத் தரப்­பி­ன­ருமே கார­ண­மாக இருந்­துள்­ளனர் என்ற அபிப்­பி­ராயம் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இந்த தலை­வர்கள் மீது மக்கள் நம்­பிக்கை இழந்­துள்­ளனர்.

இந்த நிலையில் இவ்­வா­றான தலை­வர்­க­ளுக்கு வாக்­க­ளித்து மீண்டும் வெற்­றி­பெறச் செய்­ய­வேண்­டுமா என்ற கேள்வி மக்­க­ளிடம் எழுந்­துள்­ளது. தங்­க­ளது சுய­ரூ­பங்­களைப் பற்றி நன்கு அறிந்து வைத்­துள்ள ஆர்.கே.நகர் மக்­க­ளிடம் நேர்­மை­யாக வாக்­கு­களைக் கேட்க முடி­யாது என்ற உண்­மையை இந்த வேட்­பா­ளர்கள் நன்கு தெரிந்­து­கொண்­டுள்­ளனர். எனவே, குறுக்கு வழியில் மக்­க­ளிடம் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான தந்­தி­ரங்­களைச் செய்து வரு­கின்­றனர்.

வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் விநி­யோ­கித்தல் மற்றும் இல­வசப் பொருட்­களை வழங்­குதல் போன்­ற­வற்றை ஆர்.கே.நகர் வேட்­பா­ளர்கள் செய்து வரு­கின்­றனர். ஒரு வாக்­குக்கு 2000 முதல் 5000 ரூபா வரை விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆர்.கே.நகர் சட்­டப்­பே­ரவைத் தொகு­தியில் சுமார் 3 இலட்சம் வாக்­கா­ளர்­களே பதி­வா­கி­யுள்­ளனர். இவர்­க­ளது வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே வாக்­கா­ளர்­க­ளுக்கு பணம் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு தொடர்ந்து முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. டில்­லி­யி­லுள்ள தலைமை தேர்தல் ஆணை­யத்தில் பல்­வேறு கட்­சி­களும் முறைப்­பாடு தெரி­வித்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து, தேர்தல் ஆணையம் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரு­கி­றது. எனினும், பணம் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வதை தடுக்­க­மு­டி­ய­வில்லை. இதற்கு தமி­ழக அரசு அதி­கா­ரமும் தவ­றாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­துள்­ளன. இந்தக் குற்­றச்­சாட்­டு­களின் அடிப்­ப­டையில் இந்த இடைத் தேர்­தலை இரத்துச் செய்யும் நோக்கம் தேர்தல் ஆணை­யத்­துக்கு இருப்­ப­தாக தகவல் வெளி­யா­னது.

ஏற்­க­னவே கடந்­த­வ­ருடம் சட்­டப்­பே­ர­வைக்­கான பொதுத் தேர்தல் நடை­பெற்­ற­போது அற­வக்­கு­றிச்சி மற்றும் தஞ்­சாவூர் ஆகிய தொகு­தி­க­ளுக்­கான தேர்தல் இரத்துச் செய்­யப்­பட்டு, சில மாதங்­களின் பின்னர் மீண்டும் தேர்தல் நடத்­தப்­பட்­டமை கவ­னிக்­கத்­தக்­கது. இதே­போன்று, ஆர்.கே.நகர் தொகு­தி­யிலும் அதி­க­ளவு பணம் வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­வதால் இந்த இடைத் தேர்­தலும் இரத்துச் செய்­யப்­ப­டலாம் என்று கருத்து பர­வ­லாக நில­வி­வ­ரு­கி­றது.

இந்த நிலையில் அ.தி.மு.க. முக்­கி­யஸ்­தரும், பாரா­ளு­மன்ற துணை சபா­நா­ய­க­ரு­மான தம்­பித்­துரை கடந்த 2 ஆம் திகதி டில்­லியில் உள்ள தேர்தல் ஆணை­ய­கத்­திற்குச் சென்று தேர்தல் ஆணை­யா­ளர்­களை சந்­தித்துப் பேசி­யுள்­ள­துடன், அவர்­க­ளிடம், எக்­கா­ரணம் கொண்டும் ஆர்.கே. நகர் இடைத்­தேர்­தலை இரத்துச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்­ட­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

சசி­கலா அணியைச் சேர்ந்­தவர் தம்­பித்­துரை. அவர் சார்ந்த அணியின் துணைப்­பொதுச் செய­லா­ள­ராக இருக்கும் டி.டி.வி.தின­க­ரனை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்­டிய பொறுப்பு தம்­பித்­துரை உட்­பட அனை­வ­ருக்கும் இருக்­கி­றது. அந்த வகையில் டி.டி.வி. தின­க­ரனின் அர­சியல் எதிர்­கா­லமே இந்தத் தேர்­தலில் வெற்­றி­பெ­று­வ­தில்தான் இருக்­கின்­றது.

இதே­வேளை, தின­கரன் மீதான வழக்கு விசா­ர­ணையும் வேக­மாக இடம்­பெற்று வரு­கி­றது. விரைவில் தீர்ப்பு வழங்­கப்­ப­டு­மென்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதற்கு முன்னர் எம்.எல்.ஏ ஆகி­வி­டலாம் என்று தின­கரன் எதிர்­பார்ப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. தீர்ப்­புக்கு முன்னால் எம்.எல்.ஏ. ஆகி­விட்டால் தனக்கு ஓர­ளவு பாது­காப்பு கிடைக்கும் என்று தின­கரன் நம்­பு­கிறார்.

இது­போன்­ற­தொரு நட­வ­டிக்­கை­யில்தான் சசி­க­லாவும் ஈடு­பட்டார். ஜெய­ல­லிதா மறைவின் பின்னர் ஓ.பன்­னீர்­செல்வம் முத­ல­மைச்­ச­ராக்­கப்­பட்டார். அந்த சந்­தர்ப்­பத்தில் சொத்­துக்­கு­விப்பு வழக்கில் சசி­கலா, இள­வ­ரசி, சுதா­கரன் ஆகி­யோ­ருக்கு தீர்ப்பு வழங்­கு­வ­தற்­கான நேரமும் நெருங்கிக் கொண்­டி­ருந்­தது.

வழக்கில் தமக்கு எதி­ரான தீர்ப்பு அதா­வது சிறைத்­தண்­டனை கிடைக்கும் என்­பதை சசி­கலா நன்கு உணர்த்­தி­ருந்தார்.

 எனவே, ஒரு அர­சியல் தலைவர் என்ற முறையில் அதா­வது "தமி­ழக முத­ல­மைச்சர்" என்ற ரீதியில் சிறை சென்றால் சலு­கை­களும், சொகுசு அறை, பிற­வ­ச­திகள் அனைத்தும் கிடைக்­கு­மென்று எதிர்­பார்த்தார். எனவே, அவ­சர அவ­ச­ர­மாக அ.தி.மு.க.பொதுச் செய­லா­ள­ராக பத­வி­யேற்­ற­துடன், ஓ.பன்­னீர்­செல்­வத்தை முத­ல­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து விலகச் செய்து தான் முத­ல­மைச்­ச­ராகும் முயற்­சி­யிலும் ஈடு­பட்டார். ஆனால் அவர் எதிர்­பார்த்­தது நடக்­க­வில்லை. முத­ல­மைச்­ச­ரா­வ­தற்கு முற்­பட்ட நேரத்தில் பல அர­சியல் குறுக்­கீ­டுகள் ஏற்­பட்­டன.  

எவ்­வா­றெ­னினும் முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்த நேரத்தில் சொத்­துக்­கு­விப்பு வழக்கு தீர்ப்பு வெளி­யாகி சிறை செல்ல நேரிட்­டது. இதனால், சசி­க­லாவின் எதிர்­பார்ப்பு, ஆசை, திட்டம், அனைத்தும் தவி­டு­பொ­டி­யா­னது. தற்­போது சாதா­ரண சிறைக் கைதி­க­ளுக்கு வழங்­கப்­படும் அறையும், வச­தி­க­ளுமே வழங்­கப்­பட்­டுள்­ளன. விஷேட உணவோ, வீட்டு சாப்­பாடோ, பஞ்சு மெத்­தையோ எதுவும் கிடை­யாது.

இது­போன்­ற­தொரு நிலைமை தனக்கும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்று டி.டி.வி.தின­கரன் எதிர்­பார்க்­கின்றார். அதற்­கான காய்­க­ளையே அவர் நகர்த்திக் கொண்­டி­ருக்­கிறார். முதலில் ஆர்.கே.நகர் தொகு­தி­யி­லி­ருந்து எம்.எல்.ஏ.ஆவது, கையோடு எடப்­பாடி பழ­னிச்­சா­மியை முத­ல­மைச்சர் பத­வி­க­ளி­லி­ருந்து விலகச் சொல்லி, முதல்வர் பதவி ஏற்­பது என்­பதே அந்தத் திட்­ட­மாகும். தனது திட்டம் நிறை­வே­றினால் சசி­க­லாவைப் போன்று அல்­லாமல் சிறையில் சகல வச­தி­களும் கிடைக்­கு­மென்­பது தின­க­ரனின் எதிர்­பார்ப்­பாகும்.

தின­க­ரனின் இந்த எதிர்­பார்ப்­புக்கு உயி­ரூட்ட சசி­கலா அணி­யி­லுள்ள தம்­பித்­துரை போன்ற தலை­வர்கள் பாடு­பட்டு வரு­கின்­றனர். இந்த எதிர்­பார்ப்பு நிறை­வே­றுமா என்­பதை காலந்தான் தீர்­மா­னிக்க வேண்டும்.

மறு­பு­றத்தில், தின­க­ரனின் திட்­டத்­தினை முறி­ய­டிப்­ப­தற்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அதா­வது, தின­கரன் எம்.எல்.ஏ.ஆவதை தடுத்து நிறுத்­து­வதே அதற்கு ஒரே வழி என்­பது தின­கரன் எதிர்ப்­பா­ளர்­களின் திட்­ட­மாகும். எனவே, தேர்தல் நடத்­து­வதை நிறுத்­த­வேண்டும், அல்­லது தின­கரன் வெற்­றி­பெ­று­வதை தடுக்க வேண்டும் என்­பதே எதிர்ப்­பா­ளர்­களின் திட்­ட­மாகும்.

ஆனால், தொகு­தியில் வாக்­கா­ளர்­க­ளுக்கு அதி­க­ளவில் பணம் விநி­யோகம் செய்­து­வ­ரு­வ­தாக தின­கரன் மீது ஏனைய கட்­சிகள் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றன. கட்­சி­களின் இந்தக் குற்­றச்­சாட்டே டெல்லி தேர்தல் தலைமை அலு­வ­லகம் வரை கொண்டு செல்­லப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இந்த குற்­றச்­சாட்டை ஏற்று, தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்­தேர்­தலை இரத்துச் செய்­யுமா? என்­பது உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த நிலையில் தேர்தல் பிற்­போ­டப்­ப­டலாம் என்ற தகவல் சசி­கலா அணி­யி­னரை அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது. எனவே தேர்தல் பின்­போ­டக்­கூ­டாது என்­ப­தற்­காக அந்த அணியைச் சேர்ந்த தலை­வர்கள் டெல்லி உயர் மட்­டத்­தி­னரை வேண்டிக் கொண்­டுள்­ள­துடன் தேர்தல் ஆணை­யத்­தி­டமும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கடந்த வாரங்­களில் ஆர்.கே. நகரில் எந்தக் கட்சி வெற்­றி­பெறும் என்­பது தொடர்­பாக சில பத்­தி­ரி­கைகள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டிருந்தன. அதற்கமைய எதிர்க்கட்சியான தி.மு.க.வெற்றி பெரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இரண்டாவது இடத்தில் ஓ.பி.எஸ்.அணி இருப்பது தெரியவந்துள்ளது.

உளவுத்துறை அறிக்கையும் இதனையே தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் முயற்சிகளை மேற்கொண்டு வருவதையே அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆர்.கே. நகரைப் பொறுத்தவரையில் இந்த இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்கின்றனர். இங்கே ஜனநாயகப் பண்புகள், விழுமியங்கள் அனைத்தும் பணத்துக்காக விலைபோய்க்கொண்டிருக்கின்றன.

இந்திய மாநிலங்களிலேயே வாக்காளர்களுக்கு அதிகளவில் பணமும், இலவசப் பொருட்களையும் வழங்கும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தேர்தலும் அதை உறுதிப்படுத்துகின்றது. இதில் பணம் கொடுப்பவர்கள் மட்டுமன்றி அதை வாங்குபவர்களும் குற்றவாளிகள் தான். குற்ற உணர்ச்சியற்ற இந்த குற்றவாளிகள் செய்யும் குற்றங்கள் ஜனநாயகத்தை தலைகுனிய வைக்கின்றது என்பது வேதனைக் குரியது மட்டுமல்ல வெட்கப்படவும் கூடியதுமாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-2

  • கருத்துக்கள உறவுகள்

next.jpg

 

நன்றி : news18tamilnadu

 

அடுத்த தீபாவளி எப்பொ ..? கொடுத்து வைத்த மக்கள் அர்.கே .நகர் மக்கள் !!!  :cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.