Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசிய சதித்திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா?

கடந்த 7ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இக்கேள்வியை எழுப்பியிருந்தார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார்.

காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் 50 நாட்களுக்கு மேலாக கிளிநொச்சி, வவுனியாவில் கொதிக்கும் வெயிலுக்கு மத்தியிலும் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் அதற்குச் சமாந்தரமாக முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலையிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையிலும் அரசாங்கம் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.

கேப்பாப்புலவிலும், முள்ளிக்குளத்திலும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தும் மக்களின் பிரச்சினைகளையும் அரசாங்கம் தீர்த்து வைக்கவில்லை.

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரக் கோரி நடத்தும் போராட்டங்களுக்கும் உரிய தீர்வு இல்லை.

இவ்வாறாகப் போராட்டம் நடத்தும் மக்கள் வீதியிலும் காணிகளிலும் இரவு பகலாகத் தங்கியிருக்கின்ற நிலையிலும் அரசாங்கம் கண்டும் காணாமல் இருக்கிறது. போராட்டம் நடத்தும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் விரோதிகளாகத்தான் பார்க்க முனைகிறார்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற கூட்டமைப்பு தமது பிரச்சினைகளைத் தீர்க்க முனையவில்லை. அதற்கு அக்கறை காட்டவில்லை என்றே நினைக்கிறார்கள்.

இதனால் மக்களிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்நியப்படுத்தப்பட்டு வருகிறது என்பதே சிவசக்தி ஆனந்தன் போன்ற கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதங்கமாக உள்ளது.

அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குகின்ற போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களால் முடியாதிருக்கிறது. இந்த விடயத்தில் பல முட்டுக்கட்டைகள் இருப்பது போல அரசாங்கம் காட்டிக்கொள்கிறது.

மகிந்த ராஜபக்ச அணியினரையும் இராணுவத்தையும் பொருளாதார நெருக்கடிகளையும் காரணம் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இருந்து தப்பித்து வந்திருக்கிறது.

எந்தவொரு அரசாங்கத்துக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும், பிரச்சினைகள் இல்லாத அரசாங்கம் ஒன்று இருந்தால் அங்கு அரசாங்கத்துக்கு வேலையே இருக்காது. ஏனென்றால் மக்கள் தம்மைத்தாமே பார்த்துக் கொள்வார்கள். அப்படியொரு கட்டத்தில் அரசாங்கத்தையே மக்கள் மறந்து போவார்கள். அவ்வாறு மறந்து போனால் அரசாங்கத்தின் தேவையோ அவசியமோ அவர்களுக்குத் தெரியாமல் போகும்.

எனவே ஒரு அரசாங்கம் தன்னைச்சுற்றி பிரச்சினைகள் இருப்பதையே விரும்பும். இலங்கை மைத்திரி, ரணில் கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்து காலத்திலிருந்து பிரச்சினைக்குள் தான் இருக்கிறது.

ஆரம்பத்தில் 100 நாள் செயற்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அது மகிந்த ஆட்சியில் படுகுழில் தள்ளப்பட்டிருந்த நாட்டை மீட்கும் காலப்பகுதி என்றும் அந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமான பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளை சீரமைக்கவே பயன்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் தமிழ் மக்கிளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் இந்தக் காலத்தில் நடக்காது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே அந்தக் காலகட்டம் இழுத்தடிக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் புதிய பாராளுமன்றம் தெரிவாகப் புதிய கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்தது. அதன் பின்னரும் அதே பிரச்சினைகளும் அவற்றைத் தீரக்கும் நடவடிக்கைகளும் தான் தொடர்கின்றனவே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவேயில்லை.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிந்தவைக் காட்டியோ இராணுவத்தைக் காட்டியோ அல்லது பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டியோ தமிழ் மக்கிளின் பிரச்சினையை இழுத்தடித்து வந்திருக்கிறது அரசாங்கம்.

ஆக பல தசாப்தங்களாக இழுத்தடிக்கப்படுகின்ற தமிழ் மக்கிளின் பிரச்சினைகள் அரசாங்கத்துக்கு பெரிய விடயமாகவே தெரியவில்லை. அதனைவிட சுலபமாகத் தீர்த்துவிடக் கூடிய குறுகிய காலப் பிரச்சனைகளைத் தான் முக்கியமானதாகப் பார்க்கிறது.

இது அரசாங்கத்தின் அலட்சியப் போக்கின் அவளிப்பாடு. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகளை இழுத்தடிப்பதிலிருந்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்காமல் விடுவதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டு தான் இருக்கிறது எனலாம்.

அண்மையில் வடக்கில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாபராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காமல் விடுவது இழுத்தடிப்பது பற்றிய சிந்தனைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ6ிடமும் பிரதமர்ஹ ரணில் விகரமசிங்கவலிடமும் கூட இருப்பதாக அவர் கூறியிருந்ஹதமார்.

அரசாதங்கத்துடன் இணஷக்கப் போக்குடன் செயற்படுவர் என்று கூட்மைப்பின் ஒரு தரப்பினரால்ஹ குற்றம் சாட்டப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் இதனைக் கூறியிருக்கிறார் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.

அதைவிட அரசாங்கத்துடன் பேச்சுக்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருபவர் என்ற வகையில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்படவில்லை என்ற அவரது இந்தக் கருத்து முக்கியமானது.

இத்தகைய நிலையிலிருந்து பார்க்கும் போது நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தமிழ் மக்களிடமிஜருந்து அந்நியப்படுத்தும் நிகழ்ச்சி நிரல் ஒன்றைச் செயற்படுத்துகிறதா என்ற சந்தேகம் எவருக்கேனும் வருவது இயல்புதான்.

விடுதலைப் புலிகளின் காலகட்டத்திலும் சரி அதற்குப் பின்னரும் சரி தமிழ் மக்களின் ஒருமித்த செல்வாக்குப் பெற்ற தரப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருந்து வருகிறது. ஜனநாயக தேர்தலின் மூலம் கூட்டமைப்பு தனது நிலையை அரசாங்கத்துக்கும் சர்வதேச சமூகத்துக்கும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

தமிழ் மக்களுக்கு இவ்வாறானதொரு பலமான தலைமைத்துவ சக்தி இருப்பதை எந்தவொரு அரசாங்கமும் விரும்பாது. தமிழ் மக்களுடைய அதிகாரங்களையோ உரிமைகளையோ பகிர்ந்து கொள்ள விரும்பாத அரசாங்கம் தமிழ் மக்களுக்குப்ஹ பலம் வாய்ந்த தலைமைத்துவம் இருப்பதை சாதகமான விடயமாக ஒருபோதும் பார்க்காது.

அத்தகைய நிலையிலிருந்து பார்த்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கின்ற சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்யும்.

அண்மைக்காலமாக வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் நடக்கின்ற இடங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களால் செல்ல முடியாத நிலையே சில கட்டங்களில் இருந்தது. காரணம் மக்கள் அவர்களின் மீதும் கொந்தளித்துக் கொண்டிருந்தனர்.

அடுத்த தேர்தலுக்கு எப்படி வருவீர்கள் எப்படி வாக்கு கேட்பீர்கள் என்றெல்லாம் கூட போராடும் மக்கள் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் தெளிவானதொரு இடைவெளியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தின் இறுக்கமான போக்கு காரணமாகியிருக்கிறது.

இந்தக் கட்டத்தின் ஒன்றில் அரசாங்கம் தனது நிலையை மாற்றிக் கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் அல்லது அரசாங்கத்துடன் இணக்கப் போக்குடன் செயற்படும் நிலைப்பாட்டில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலக வேண்டும். இந்த இரண்டுமே நடப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையற்றிருக்கிறது. அதற்காக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடக் கூடாது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வரலாற்று வாய்ப்பை கூட்டமைப்பு நாசப்படுத்தி விட்டது என்ற பழிச்சொல் தம்மீது வந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையும் அரசாங்கத்துடன் முரண் அரசியல் நடத்த தயாராக இல்லை. இந்த நிலையானது

http://www.tamilwin.com/politics/01/142799?ref=view-latest

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு... தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்  பட்டு வெகுகாலமாகி விட்டது.
சுமந்திரன், சரவணபவன் போன்றோர் அண்மையில் மக்கள் முன் தோன்றிய போது...
அவர்களுக்கு மக்களிடமிருந்து,  நேரடியாக  வாங்கிக் கட்டிய..... வசைச்  சொற்களே போதுமானது.
இனி இவர்களின்... அரசியல் சுத்துமாத்துகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.