Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் முறுகல் நிலை

Featured Replies


முல்லைத்தீவில் முறுகல் நிலை
 
 

article_1492490802-2.jpg

-எஸ்.நிதர்ஷன்

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

article_1492490913-3.jpg

article_1492490924-4.jpg

- See more at: http://www.tamilmirror.lk/194949/ம-ல-ல-த-த-வ-ல-ம-ற-கல-ந-ல-#sthash.c5hy7KFj.dpuf
  • தொடங்கியவர்

கொக்­கிளாய் முகத்­து­வாரம் பகு­தியில் இரு மீனவ குழுக்­க­ளுக்­கி­டையில் சர்ச்சை

p12-6ae565772545c76955a50f170e2ac50b81daa835.jpg

 

பிர­தேச செய­லக உத்­தி­யோ­கத்­தர்கள் வெளி­ந­டப்பு 
(கே.குமணன்)

முல்­லைத்­தீவு கொக்­கிளாய் பகு­தியில் பெரும்­பான்­மை­யின மீன­வர்­க­ளுக்கும் தமிழ் மீன­வர்­க­ளுக்கும் இடையில் நேற்றுக் காலை முறுகல் நிலை ஏற்­பட்­டது.

முகத்­து­வாரம் பகு­தியை அண்­டிய கடலில் மீன்­பி­டிப்­ப­தற்­கான கரை­வ­லைப்­பாடு தொடர்­

பி­லான அள­வீட்டின் போதே, இந்த அமை­தி­யின்மை நிலை ஏற்­பட்­டது.

கடந்­த­கால யுத்­தத்­தினால் கொக்­குளாய் பகு­தியில் பாரம்­ப­ரிய மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்­டு­வந்த தமிழ் மீன­வர்கள் இடம்­பெ­யர்­நத நிலையில், தமி­ழர்­களின் கரை­வ­லைப்­பா­டு­களை நீர்­கொ­ழும்பு, சிலாபம் உள்­ளிட்ட பகு­தி­களில் இருந்­து­வந்­த­பெ­ரும்­பான்மை மீன­வர்கள், ஆக்­கி­ர­மித்து மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இதனால் இப்­ப­கு­தியில் அடிக்­கடி இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் முறுகல் நிலைமை தோன்­று­வது வழக்கம்.

மீள்­கு­டி­யேற்­றத்தின் பின்னர் தமக்­கான கரை­வ­லைப்­பாடு உரி­மையைப் பெற்றுத் தரு­மாறு கோரி, தமிழ் மீன­வர்கள் முன்­வைத்த கோரிக்­கைக்கு அதி­கா­ரிகள் மட்­டத்தில் தீர்­வுகள் வழங்­கப்­ப­டாத நிலையில், இது­தொ­டர்­பான விடயம் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இதன்­படி முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தின் உத்­த­ர­விற்கு அமைய கரை­வ­லைப்­பாட்டை அள­விடும் பணிகள் நேற்று மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இந்த அள­வீட்டுப் பணி­களில் கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லக காணி பகுதி அதி­கா­ரிகள், முல்­லைத்­தீவு நீரி­யல்­வளத் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் மற்றும் கொழும்பில் இருந்து வந்த நீரி­யல்­வளத் திணைக்­கள அதி­கா­ரிகள், நில அளவைத் திணைக்­கள அதி­கா­ரிகள் ஆகியோர் பங்­கேற்­றனர்.

இதன்­போது, கொழும்பில் இருந்து வந்த நீரி­ய­வளத் திணைக்­கள அதி­கா­ரிகள், பெரும்­பான்­மை­யின மீன­வர்­களின் ஆக்­கி­ர­மிப்பில் உள்ள முகத்­து­வாரம் அமைந்­துள்ள தலைப்­பாடு என்ற பகு­தியில் இருந்து 300 மீற்­ற­ருக்கு அப்பால் இருந்தே அள­வீட்டுப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும் எனத் தெரி­வித்து அள­வீட்டு பணி­களை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இதன் கார­ண­மாக அள­வீடு இடம்­பெறும் பகு­தியில் கட­மைக்­காக பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த கரை­து­றைப்­பற்று காணிப்­ப­குதி அதி­கா­ரிகள் கடற்­தொழில் நீரியல் வள திணைக்­கள அதி­கா­ரிகள் பக்­கச்­சார்­பான வகையில் முகத்­து­வாரம் அமைந்­துள்ள தலைப்­பாடு பகு­தியை விட்டு அதி­லி­ருந்து 300 மீற்­ற­ருக்கு அப்பால் அள­வீட்டை ஆரம்­பிப்­ப­தா­னது நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு முர­ணா­னது என தெரி­வித்து வெளி­ந­டப்பு செய்த்­தி­ருந்­தனர்.

ஏற்­க­னவே, தமது வச­முள்ள தலைப்­பாடு என்ற பகு­தியில் இருந்து கரை­வ­லைப்­பாட்­டுக்­கான அள­வீட்டுப் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு பெரும்­பான்­மை­யின மீன­வர்கள் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டனர். எனினும், தமிழ் மீன­வர்கள் தலைப்­பாடு என்ற பகு­தியில் இருந்தே அளவீடு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே நிலஅளவைத் திணைக்களம் அளவீடு செய்து சரியான இடத்தை தமக்கு கொடுத்ததாக தமிழ் மீனவர்கள் கூறியுள்ள நிலையிலேயே நேற்று அளவீடு செய்யும் போது, சிங்கள தமிழ் மீனவர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-19#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள் அரசு விதைத்ததை அறுவடை செய்ய தொடங்குத போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிங்கள் அரசு விதைத்ததை அறுவடை செய்ய தொடங்குத போல.

கேட்க பார்க்க ஆளில்லாவிட்டால் இதுதான் இனிவரும் காலங்களில் வரப்போகும் நிலமை.

அதுகளும் அதுகளின்ரை வாலுகளும் கொழும்பிலையிருந்து சம்பளம் எடுக்கத்தான் லாயக்கு 

உன்னை அம்பாந்தோட்டைக்கு அனுப்புவன்? மிரட்டும் சிங்கள மீனவர்கள்(காணொளி)

 

 

http://www.tamilkingdom.com/2017/04/456_76.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.