Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’

Featured Replies


‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’
 

article_1492958873-sitthrthan.jpg-எஸ்.நிதர்ஷன்   
“ஈழத் தமிழ் அரசியலில் எத்தகைய முரண்பாடுகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும் அரசியலமைப்பு முயற்சிகள் முடிவுறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தலைவர் சம்பந்தனையும் விட்டு விலகமாட்டோம்.அதுவரை அவர் செல்லும் பாதையில் கண்களை முடிக்கொண்டு செல்வோம்” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.  

“தடுமாறும் தமிழ்த் தலைவர்களால் தளர்வடைகின்றார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” என்ற தலைப்பில், கருத்தாய்வு நிலை கருத்துப் பகிர்வு, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், வவுனியா விருந்தினர் விடுதியில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.   

இதன் போது உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித் சித்தார்த்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ கூட்டமைப்பு தொடர்பில் என்னால், முடிவெடுக்க முடியாது என்றும் என்னுடைய கட்சி சம்பந்தமாகவே முடிவெடுக்க முடிமென்றும் இங்கு உரையாற்றிய ஒருவர் குறிப்பிட்டதில் உண்மை இருக்கின்றது.

இன்றிருக்கின்ற சூழ்நிலையில் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்ற கட்சிகள் முடிவெடுக்கின்ற எல்லா விடயங்களிலும் பங்காளிகள் இருக்கவில்லை. அவ்வாறு பங்காளிகளாக, நாங்கள் பங்குபற்றவில்லை.

இருந்தாலும் எங்களுக்கு கூட்டுப் பொறுப்பு இருக்கின்றது.  இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தவறுகள் இடம்பெற்றுகொண்டிருக்கிறன. ஏன் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அல்லது எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்” என்றார்.   

- See more at: http://www.tamilmirror.lk/195285/-சம-பந-தன-ச-ல-ல-ம-ப-த-ய-ல-கண-கள-ம-ட-க-க-ண-ட-ச-ல-வ-ம-#sthash.5KS3TiYS.dpuf
  • தொடங்கியவர்

தற்போதைய தலைமை தவறான பாதையில் சென்றால் மாற்று தலைமை அவசியமாகும்

p13-5a9b0b54e7b397eb5e45617caffe917bf43f57ae.jpg

 

வவுனியா கருத்தரங்கில் தமிழ் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
(ஓமந்தை நிருபர் )

தற்­போ­தைய அர­சியல் சூழலில் அடுத்து என்ன என்­பது தொடர்பில் சிந்­திக்க வேண்­டி­ய­வர்­க­ளாக நாம் இருக்­கின்றோம். தற்­போ­தைய தலைமை தவ­றான பாதையில் தொடர்ந்து செல்­லு­மானால் மாற்று தலைமை என்­பது தேவை­யாகும் என்று தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்கள் கலந்­து­கொண்ட நிகழ்வில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மன்னார் அமைப்­புக்­களின் ஒன்றி­யத்தின் ஏற்­பாட்டில் தடு­மாறும் தலை­மைகளால் தளர்­வ­டை­கி­றார் களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன? எனும் தலைப்­பி­லான கருத்தாய்வு நிலை கருத்து பகிர்­வு­ற­வாடல் நிகழ்வு நேற்று முன்­தினம் வவு­னியா நகர விருந்­தினர் விடு­தியில் நடை­பெற்­றது. இங்கு உரை­யாற்­றிய பிர­மு­கர்கள்  இந்தக் கருத்தை முன்­வைத்­தனர். 

இதன்­போது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தரு­ம­லிங்கம் சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், வட­மா­காண சபை உறுப்­பினர் அனந்தி சசி­தரன், மற்றும் சட்­டத்­த­ரணி சுகாஸ் ஆகியோர் முன்­வைத்த கருத்­துக்கள் வரு­மாறு.

புளொட் தலைவர் சித்­தார்த்தன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பங்­கா­ளிக்­கட்­சி­யாக இருக்கும் எல்­லாக்­கட்­சி­க­ளுமே முடி­வெ­டுக்கும் விட­யத்தில் ஒரு பங்­கா­ளி­க­ளாக இருக்­க­வில்லை. இருந்­தாலும் எங்­க­ளுக்கு கூட்­டுப்­பொ­றுப்பு இருக்­கின்­றது. அந்த கட்­சியில் அங்­கத்­து­வ­மாக இருக்­கின்றோம். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்றோம். இருந்­தாலும் கட்­சியில் எப்­போ­தா­வது நடக்­கின்ற கூட்­டங்­களில் ஆனந்­தனும், பிரே­மச்­சந்­தி­ரனும் மிகத்­தௌி­வாக விட­யங்­களை கூறு­கின்­றார்கள். அதா­வது கூட்­டுப்­பொ­றுப்பு விலத்­திச்­செல்­வதை தௌிவாக கூறு­கின்­றனர்.

இவ்­வா­றான நிலையில் நீங்கள் ஏன் தொடர்ந்தும் இருக்­கின்­றீர்கள் என்ற கேள்வி வரு­கின்­றது. இந்த விட­யத்தில் என்­னைப்­பெ­றுத்­த­வ­ரை­யிலும் எங்கள் கட்­சி­யை­பொ­றுத்­த­வ­ரை­யிலும் ஒரு நிலைப்­பாட்டை எடுத்­துள்ளோம். அதா­வது இன்­றி­ருக்க கூடிய அர­சியல் சூழலில் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான வரை­வுகள் நடந்­து­கொண்­டி­ருக்­கும்­போது அர­சி­ய­ல­மைப்பு சரி­யாக வரும் என்று நான் கூறா­விட்­டாலும் அது முற்­றுப்­புள்­ளிக்கு சென்ற நிலை இருந்­தாலும் நாம் கலந்­து­ரை­யாடும் வௌிநாட்டு தூத­ர­கங்­க­ளாக இருக்­கலாம் அல்­லது மக்­க­ளாக இருக்­கலாம் எங்­க­ளுக்கு சொல்­வது நீங்கள் குழப்­பி­வி­டா­தீர்கள் என்­ப­தோகும்.

கூட்­ட­மைப்­புக்­குள்ளே ஒரு உடைவு வந்து அது சிதை­வ­டைந்து செல்லும் நிலை ஏற்­பட்டால் அது அர­சிற்கு சாத­க­மாக மாறி­விடும். அவர்கள் கூட்­ட­மைப்­புக்குள் ஒற்­று­மை­யில்லை அவர்­களே ஒன்­றையும் சீராக சொல்­கின்­றார்கள் இல்லை. நாங்கள் என்ன செய்­வது என்று சர்­வ­தே­சத்­திற்கு கூறி தம் பக்­கத்தை நியா­யப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும். இது எமக்கு அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்­கான வாய்ப்பை இல்­லாமல் பண்­ணி­விடும். இத­னா­லேயே எங்­க­ளுக்கு தொியாமல் நடக்கும் விட­யங்­களில் கூட நாம் மௌனி­யாக இருக்­கின்றோம் என்றார்.

சுரேஸ் பிரே­மச்­சந்­திரன்

2015ஆம் ஆண்­டுக்கு பிற்­பாடு தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்சி பத­வியை ஏற்­றுக்­கொண்­டதன் பிற்­பாடு இந்த அர­சாங்­கத்தால் பல்­வேறு விட­யங்­களை நிறை­வேற்­றலாம் என்று எமது தலை­வர்கள் வாக்­கு­ற­திகள் கொடுத்­தார்கள். அதன் அடிப்­ப­டையில் அவ் வாக்­கு­று­திகள் எவ்­வ­ளவு தூரம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது எனப் பர்க்க வேண்டும். அவ் வாக்­கு­ற­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை­யாயின் அதற்­கான கார­ணங்கள் என்ன என்ற அடிப்­ப­டையில் இருந்து கடந்த காலத்தை பார்க்­கின்­ற­போது நாம் அடுத்து என்ன செய்­வது என்ற கேள்வி எழு­கின்­றது.

யுத்­தத்­திற்கு பிற்­பாடு வடக்கு மாகா­ணத்தில் 15 டிவிசன் இரா­ணு­வத்­தினர் இருந்­தனர். அதில் 1 50, 000 இரா­ணுவம் இருந்­தது. என்னைப் பொறுத்­த­வ­ரையில் அதே­ய­ளவு இரா­ணுவம் இன்னும் இருக்­கின்­றது. முகாம்கள் மாற்­றப்­பட்­டி­ருக்­கலாம் ஆனால் 5 மாவட்­டங்­க­ளிலும் மாவட்­டத்­திற்கு 3 டிவிசன் என்ற வகையில் இன்னும் அதே­ய­ளவு இரா­ணுவம் இருக்­கின்­றது.

இதற்­கு­மப்பால் கடற்­படை, விமா­னப்­படை, விசேட அதி­ர­டிப்­படை, சிவில் பாது­காப்பு படை, பொலிஸ் என்­ப­னவும் உள்­ளது. வடக்கு மாகா­ணத்தில் இறு­தி­யாக எடுத்த தர­வு­களின் அடிப்­ப­டையில் பத்து இலட்சம் மக்கள் வாழ்­கின்­றார்கள். இத­ன­டிப்­ப­டையில் பார்க்­கின்­ற­போது மூன்று நான்கு தமி­ழர்­க­ளுக்கு ஒரு இரா­ணுவம் என்ற வகையில் உள்­ளதால் எந்­த­ளவு தூரம் நாம் இரா­ணுவ அடக்­கு­மு­றைக்குள் இருக்­கின்றோம்.

இரா­ணு­வத்­தி­னரை வீதியில் பார்க்க முடி­ய­வில்லை என்று சிலர் கூறுக்­கின்­றனர். ஆனால் எந்த சிறிய கூட்­டத்­தினை நடத்­தி­னாலும் அனைத்து புல­னாய்வு பிரி­வு­களும் உள்­ள­தா­கவே நிகழ்வை நடத்­த­வேண்­டி­யுள்­ளது. இவை யுத்­தத்­திற்கு பின்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரச்­ச­னைகள்.

மக்­களை மீளக்­கு­டி­யே­ற­வேண்டும். அதற்கு நிலங்கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். அதற்கு இரா­ணுவம் வௌியேற வேண்டும். எனவே வடக்கில் உள்ள இரா­ணு­வத்­தி­னரை 9 மாகா­ணங்­க­ளுக்கும் பிரிக்­க­வேண்டும். அவ்­வாறு செய்தால் வடக்கில் மக்­களை குடி­யற்­று­வ­தற்­கான நிலங்கள் வௌிப்­படும். எனினும் அவ்­வாறு செய்­யாமல் தொடர்ச்­சி­யாக வடக்கு கிழக்கை இரா­ணுவ கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பது என்­பதே நடை­பெ­று­கின்­றது.

இந்­நி­லையில் சம்­பந்தன், மைத்­திரி ஒரு இன­வாதி அல்ல அவரை நாம் நம்­பு­கின்றோம் என்­கின்றார். ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நம்­பு­கின்றோம் என்­கின்றார். இந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தான் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டங்­களை நடத்­த­வேண்டாம். எழுக தமிழ் நிகழ்வை நடாத்­த­வேண்டாம். அமை­தி­யாக இருங்கள் நீங்கள் நடத்தும் போராட்­டங்கள் குழப்­பங்­களை உரு­வாக்கும் என்று பேசி வந்­த­தெல்லாம் அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் தான்.

சுமந்­திரன் ஏன் பொய்­யான தக­வல்­களை செல்­ல­வேண்டும். எந்த வித எழுத்து மூல நிபந்­த­னையும் இன்றி கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்­தது. ஆனால் இன்று சுமந்­திரன் சொல்­கின்றார் காணி­களை விடு­விப்போம் என் மைத்­தி­ரி­பால சிறி­சேன எழுத்­து­மூலம் உத்­த­ர­வாதம் தந்­துள்­ள­தாக பொய் கூறு­கின்றார்.

அவ்­வாறு தந்­தி­ருந்தால் அந்த ஆவ­ணத்­தினை காட்­ட­வேண்டும். ஆனால் அவ்­வாறு எந்­த­வி­ட­யமும் நடை­பெ­ற­வில்லை என்­பதே உண்மை. இதனைப் பார்க்­கின்­ற­போது இவர்கள் தற்­போது தமிழ் மக்­க­ளிடம் பொய்­களை கூறத ்தொடங்­கி­யுள்­ளனர்.

அபி­வி­ருத்தி தொடர்­பான பக்­க­மாக இருக்­கலாம். இரா­ணு­வ­ம­ய­மாக்­கலில் இருந்து விடு­விக்­கப்­படும் விட­யங்­க­ளாக இருக்­கலாம் அல்­லது அர­சியல் ரீதி­யாக தமிழ் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்ளும் விட­யங்­க­ளாக இருக்­கலாம் நாங்கள் அனைத்­திலும் தோல்­வி­ய­டைந்­த­வர்­க­ளாக இருக்­கின்றோம்.

ஆகவே அடுத்­தது என்ன என்­பது தொடர்பில் சிந்­திக்­க­வேண்­டி­ய­வர்­களா நாம் இருக்­கின்றோம். தற்­போது இருக்­க­கூ­டிய தலைமை தவ­றான பாதையில் செல்­வ­தாக இருந்தால் மாற்­றுத்­த­லைமை என்­பது தேவை.

அந்த தலைமை தற்­போ­துள்ள தலைமை விட்ட தவ­று­களை மீண்டும் விடு­வ­தற்­காக அல்ல. புதிய யுக்­தி­களை, புதிய தந்­தி­ரோ­பா­யங்­களை வகுத்து எவ்­வாறு தமிழ் மக்­களின் அபி­லா­சை­களை முன்­னெ­டுத்து சென்று வெற்­றி­பெ­றலாம் என்ற அடிப்­ப­டையில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

உறுப்­பினர் அனந்தி சசி­தரன்

வடக்கில் இரா­ணுவம் குறைந்து சென்­ற­மைக்கு வட மாகா­ண­ச­பையே காணரம் என வட மாகாண கல்வி அமைச்சர் தொிவித்தார். ஆனால் இன்றும் பல பாட­சாலை நிகழ்­வு­களில் இரா­ணு­வத்­தினை அழைக்­கின்­ற­மையை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இது வட­மா­காண கல்வி அமைச்சர் வாக­னத்தில் செல்­லு­வ­தனால் தெரி­ய­வில்லை போல் உள்­ளது.

நாங்கள் நடத்­து­கின்ற அற­வழி போராட்­டங்கள் அனைத்­திலும் இரா­ணு­வத்­தி­ன­ரதும், இரா­ணுவ புல­னாய்­வா­ளர்­களின் கண்­கா­னிப்பும், அச்­சு­றுத்­தலும் தொடர்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றது. இந்த சுழல் மாறி­விட்­டது என்ற தோர­ணையை மக்­க­ளுக்கு சொல்லி விட முடி­யாது.

தடு­மாறும் தமிழ் தலை­வர்­களால் தளர்­வ­டை­கின்­றார்­களா தமிழ் மக்கள் என்­பது கேள்­வி­யாக இருக்­கத்­தே­வை­யில்லை அது விடை­யா­கவே போகலாம். ஏன் எனில் என்­னைப்­போன்ற பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் தளர்­வ­டைந்து விட்டோம் என்­ப­துதான் உண்­மை­யான செய்தி.

அண்­மையில் ஐ.நாவில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்­பாக 02 வருட கால நீடிப்பை வழங்­கி­தற்கு எதி­ராக பல நாடு­க­ளு­டனும், சில மனித உரிமை அமைப்­புக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி இருந்தோம். அப்­போது அவர்கள், அந்­நா­டுகள் கூறிய கருத்து நீங்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் கூட உங்­க­ளது கட்­சியின் தலைமை இரண்டு வருட கால அவ­கா­சத்தை கொடுக்­கச்­சொல்லி கூறு­கி­றார்கள். அதுவும் அவர்கள் எதிர்க்­கட்­சியில் இருக்­கி­றார்கள் மற்றும் இங்கே பேச­வல்­ல­வர்­க­ளா­கவும் இங்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

போர் முடிந்த பின்னர் 2015ம் ஆண்டு வழங்­கப்­பட்ட காலப்­ப­கு­திக்குள் கூட அமெ­ரிக்க அர­சாங்­கமும் இலங்கை அர­சாங்­கமும் கொண்டு வந்த 30.1 தீர்­மா­ணத்தில் எதையும் நிறை­வேற்­ற­வில்லை. ஆனால் மீண்டும் இரண்டு வருட காலங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. வழங்­கப்­பட்­ட­வர்­க­ளிற்கு இது எவ்­வாறு இருக்­குமோ தெரி­ய­வில்லை? ஆனால் என்­னைப்­போன்ற பாதிக்­கப்ட்­ட­வர்­க­ளிற்கு மிகவும் சோர்­வான தளர்­வான நிலையை உரு­வாக்­கி­யுள்­ளது.

என்­னதான் அர­சியல் தீர்வு கிடைக்கும் என எண்­ணி­னாலும் கூட நாங்கள் நினைக்­கின்ற, எதிர்­பார்க்­கின்ற ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வு எங்­க­ளிற்கு கிடைக்­காமல் போய்­விடும் என்ற வருத்தம் எங்­க­ளிற்கு இருக்­கின்­றது.

ஐ.நாவில் குறிப்­பிட்­டதை நிறை­வேற்­று­கின்றோம் என வாக்­கு­றுதி கொடுப்­பதும், அதே சம நேரம் இங்­கி­ருக்­கின்ற ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்­களும் இங்கே போர் குற்றம் எதுவும் நடை­பெ­ற­வில்லை என பேசு­வதும் தாங்­களே குற்­றங்­களை நடாத்தி விட்டு விசா­ரித்து நீதியை வழங்­கு­கின்றோம் என சொல்­வதும் நல்ல ஆரோக்­கி­ய­மான சுழ­லாக தெரி­ய­வில்லை என்றார்.

சட்­டத்­த­ரணி சுகாஸ்

அடுத்தது என்ன என்று நாம் சிந்திக்க தொடங்கியுள்ளோம். ஆனால் எங்களுடைய போராட்டம் எப்போது முடிவுக்கு வந்ததோ அன்றே சிங்கள ஏகாதிப்பத்தியமும் சர்வதேசமும் இணைந்து அடுத்தது என்ன என்பதை தீர்மானித்து விட்டார்கள். இதற்கு எதிராக நாம் எவ்வாறு செயற்படபோகின்றோம்.

உப்புச்சப்பற்ற தீர்வு வழங்கப்படவுள்ளது. அது வழங்கப்படவுள்ளபோது எம்மவர்கள் பெறத்தான் பொகின்றார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களாகிய நாம் வீதிக்கு இறங்க வேண்டும். இதுவே நாம் செய்யவேண்டிய அடுத்த கட்டம்.

இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு அகிம்சை வழியில் ஜனநாயகத்தின் உச்சம் வரை நாங்கள் போராடுகின்றோம். இந்த மக்கள் போராட்டத்திற்கு தலைமைதாங்கப்போவது யார்.

ஆகவே சரியான தலைமையை இனம் காணுவோம். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். தமிழ்தேசியக்கூட்டமைப்பின் துரோகத்தனத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு புதிய அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு கூட நாம் தயாராக இருக்கவேண்டும். தாயகம், சுயநிர்ணயம், தேசியம் இல்லாத எந்த தீர்வையும் ஏற்பதற்கு நாம் தயாராக கூடாது.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-24#page-1

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:



‘சம்பந்தன் செல்லும் பாதையில் கண்களை மூடிக்கொண்டு செல்வோம்’
 

article_1492958873-sitthrthan.jpg

தெரிந்தது தான்...

தாங்கள் செய்து வந்த காரியங்கள்  தற்பொழுது 

எந்தவித  பிரச்சினையுமில்லாமல்

தடங்கலில்லாமல்

ஐனநாயகம் என்ற போர்வையோடு  நடக்கின்றன

உங்களுக்கு கசக்குமா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.