Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இணைவதா..? இல்லையா..?

Featured Replies

மீண்டும் இணைவதா..? இல்லையா..?

 

 

தேசிய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது. 

unp.jpg

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வரும் நிலையில் தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகளும் ஆலோசித்து வருகின்ற நிலையில் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/20777

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் பிரிந்தால் அதற்கிடையில் சீனா புகுந்துவிடும் என்ற பயம் இந்தியாவுக்கும், மேலைநாடுகளுக்கும் இருக்கும்வரை இவர்களால் பிரிய முடியாது. பிரியவும் விடமாட்டார்கள்.:shocked:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

இவர்கள் பிரிந்தால் அதற்கிடையில் சீனா புகுந்துவிடும் என்ற பயம் இந்தியாவுக்கும், மேலைநாடுகளுக்கும் இருக்கும்வரை இவர்களால் பிரிய முடியாது. பிரியவும் விடமாட்டார்கள்.:shocked:

தாலியை கட்டியாச்சு இனி என்ன கொண்டு இழுக்க வேணுமென்று சொல்லுறீயள்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தாலியை கட்டியாச்சு இனி என்ன கொண்டு இழுக்க வேணுமென்று சொல்லுறீயள்....

உதெல்லாம் பழைய கதை. புளிச்சுப் போச்சு. இதுதான் புதுக்கதை:103_point_down: 

தாலியை வாங்கி வேலிபோட்டு விட்டாள். இனி என்ன புலம்பிக் கொண்டு இழுக்கத்தான் வேணுமென்று சொல்லுறன்... Bildergebnis für கொடுமை

 

  • தொடங்கியவர்

இணை­வதா ? இல்­லையா ?

 

சு.க.,ஐ.தே.க பேச்சு
ஆர்.யசி

தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு ஆண்­டுகளுக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்தக் காலம் முடி­வுக்கு வரும் நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இணைந்த தேசிய அர­சாங்­கத்தை நீடிப்­பது தொடர்­பி­லான முக்­கிய பேச்­சு­வார்த்தை மாத இறு­திக்குள் இடம்­பெ­ற­வுள்­ளது. அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு தேசிய அர­சாங்­க­மாக செயற்­பட இரண்டு கட்­சி­களும் இணக்கம் தெரி­விக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு அவர்கள் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் இரண்டு ஆண்­டு­க­ளக்கு செய்­து­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்­துடன் நிறை­வுக்கு வரும் நிலையில் தேசிய அர­சாங்­கத்தை நீடிப்­பது தொடர்பில் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஆலோ­சித்து வரு­கின்­றன விரைவில் ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் முக்­கிய பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது .

குறிப்­பாக அடுத்த இரண்டு ஆண்டு காலத்­திற்கு இந்த உடன்­ப­டிக்கை நீடிக்­கப்­பட்டு தேசிய அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வதா அல்­லது தேசிய அர­சாங்­கத்தை நிறுத்­திக்­கொண்டு தனித்து செல்­வதா என்ற தீர்­மானம் இன்னும் எடுக்­கப்­ப­டாத நிலையில் இரண்டு கட்­சி­களும் இந்த விடயம் தொடர்பில் ஆராய தனித்­த­னியே குழு நிய­மித்து ஆராய்ந்து வரு­வ­தாக கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

இது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் கபீர் ஹாசிம் கூறு­கையில்.

தேசிய அர­சாங்­கத்தின் கால எல்­லையை நீடிப்­பதா அல்­லது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனித்த பய­ணத்தை ஆரம்­பிப்­பதா என்­பது தொடர்பில் அடுத்த வாரம் ஆரா­யப்­படும். இந்த விடயம் தொடர்பில் ஆராய பிர­தமர் நிய­மித்­துள்ள குழுவில் நாம் கலந்­தா­லோ­சித்து அதேபோல் கட்­சியின் நிலைப்­பாட்டை ஆராய்ந்து தீர்­மானம் ஒன்றை எடுப்போம். கடந்த வாரம் இந்த விடயம் தொடர்பில் ஆராய முயற்­சித்த போதிலும் சில கார­ணங்­களால் இந்த கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்ள முடி­யாது போய்­விட்­டது.

மேலும் ,ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­ளவும் சில தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் சரி­யான காலத்தை குறிப்­பிட முடி­யாது. விரைவில் இந்த பேச்­சு­வார்த்­தை­களை நாம் முன்­னெ­டுப்போம். அதேபோல் இரண்டு ஆண்­டுகள் நாம் இணைந்து புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்­டுள்ளோம். ஆகவே இந்த புரிந்­து­ணர்வின் மூலம் அடுத்த இரண்டு காலமும் நகரும் என்றால் நாட்டில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த முடியும் என நாம் நம்­பு­கின்றோம். எனினும் இரண்டு கட்­சி­களும் இணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் அதி­க­மாக சிந்­திக்க வேண்­டிய நிலைமை உரு­வாக்­கி­யுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து செயற்­ப­டு­வதை விடவும் தனித்து செயற்­ப­டவே விரும்­பு­கின்­றனர். எனவே இந்த விடயம் தொடர்பில் ஆழ­மாக சிந்­திக்க வேண்­டிய தேவை உள்­ளது என அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக தெரி­விக்­கையில்,

கட்­சிகள் இரண்டும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து வரும் நிலையில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் ஆகஸ்ட் மாதத்­துடன் முடி­வுக்கு வரு­கின்­றது. இந்­நி­லையில் மீண்டும் தேசிய அர­சாங்­க­மாக செயற்­ப­டு­வதா அல்­லது தனித்து பய­ணிப்­பதா என்­பது தொடர்பில் ஆரா­ய­வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. கடந்த வாரம் இந்த சந்­திப்பை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்ட போதிலும் ஏற்­பட்ட அனர்த்தம் கார­ண­மாக இதை பிற்­போட வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது.

 மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்­டிய கட்­டா­யத்தில் நாம் உள்ள நிலையில் இந்த சந்­திப்பை தள்­ளிப்­போட நேர்ந்­தது. எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் குழு­வுடன் விரைவில் இந்த சந்­திப்­புகள் இடம்­பெ­ற­வுள்­ளன என அவர் குறிப்­பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் அமைச்­சர்­க­ளான கபீர் ஹாசிம், ரவி கரு­ணா­நா­யக்க, மலிக் சம­ர­விக்­கி­ரம, ரஞ்சித் மத்­தும்­பண்­டார, தலதா அதுகோரள ஆகிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான துமிந்த திசாநாயக, சுசில் பிரேமஜெயந்த, மஹிந்த அமரவீர, அனுர பிரியதர்சன யாப்பா, லக்ஸ்மன் அழகியவன்ன, லக்ஸ்மன் செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் அளவில் இந்த சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.