Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்’

Featured Replies

’விவரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்’
 

image_255db1f2d3.jpg-எஸ்.நிதர்ஷன்

இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று மேற்கொண்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/விவரங்களை-வெளியிடுமாறு-உத்தரவிடுவேன்/150-198470

  • தொடங்கியவர்

காணாமல் போனோர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் – யாழில் மைத்திரி உறுதி

 

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமற் போனோரின் பெற்றோர் குழுவொன்றை சந்தித்து கலந்துரையாடிய வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, காணாமல் போனோரின் உறவுகள் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் மறைமுகமான தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட தமிழ் உறவுகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்களை தன்னால் நிறைவேற்ற முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் நாளை தேசிய பாதுகாப்பு சபை கலந்துரையாடல் நடைபெறவுள்ளமையினால் அந்த கலந்துரையாடலில் காணாமல் போனோரின் பெயர் விபரத்தினை வெளியிட கட்டளையிடுவேன் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் தெரிவித்தனர்.

மேலும் தமக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை தமது கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என்றும் ஜனாபதியின் வாக்குறுதிகள் சாதகமான அமையாவிடின், போராட்ட வடிவங்களை மாற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/29566

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் ஜனாதிபதி

 


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் ஜனாதிபதி
 

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுனர், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

சூழலிற்கு பாதகமற்ற வகையில், பொருத்தமான இடங்களை தெரிவு செய்து மணல் அகழ்வதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.

மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் எனவும், அதற்காக இராணுவத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசு தேசிய பாதுகாப்பு சபையில் நாளை கலந்துரையாடப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

மாதமொரு முறை வடக்கிற்கு விஜயம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்திலிருந்து பல வருடங்களாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியோரின் நியமனம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.

கலந்துரையாடல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக சுகாதாரத் தொண்டர்களும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/06/காணாமல்-ஆக்கப்பட்டோரின-7/

  • கருத்துக்கள உறவுகள்

இவை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சந்தர்ப்பவாத பம்மாத்து வார்த்தைகள். இலங்கையின் முப்படையினரும் வெளியிடவேண்டியது காணாமல்போனோரின் பெயர்விபரங்களை அல்ல. கைதானவர்கள் மற்றும் இறுதிப்போரில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் என்பனவற்றையே இராணுவம் வெளியிடவேண்டும். காணாமல் போனவர்களின் பெயர் விபரங்கள் ஏற்கனவே மக்களிடமிருந்து திரட்டியாயிற்று அந்த விபரங்களை மீண்டும் மக்களுக்கே வழங்கப்போகிறார்களா? இதுபோன்ற உத்தரவை நல்லாட்சியென பறைதட்டும்  ஜனாதிபதி பதவிக்கு வந்தவுடன் உடனடியாக முப்படைக்கும் வழங்கியிருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் இப்ப, நல்லா குளுசை குடுக்க வெளிக்கிட்டார்.

அத்தே ஞான தேரரை பிடிக்க ஆமியை எல்லோ அனுப்பப் போறாராம்.

நல்லா சொல்லுறாரய்யா டீடைலு. :rolleyes:

  • தொடங்கியவர்

பெயர், விப­ரங்­களை வெளிப்­ப­டுத்­துவேன் : காணாமல் போனோ­ரது உற­வி­னர்­க­ளிடம் ஜனா­தி­பதி உறுதி

Published by Priyatharshan on 2017-06-13 09:47:29

 

இறுதி யுத்­தத்­தின்­போது சர­ண­டைந்­த­வர்கள், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள­வர்கள் தொடர்­பான பெயர் விப­ரங்க­ளையும் எங்­கெங்கு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது தொடர்பான விப­ரங்­க­ளையும் வெளியி­டுமாறு தேசிய பாது­காப்பு சபைக்கு உத்­த­ர ­வி­டுவேன் என்று  காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளிடம்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.

city_1-11.jpg

ஜனா­தி­ப­திக்கும் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்­களின் பிர­தி­நி­திகள் மற்றும் சிவில் சமுகப் பிர­தி­நி­தி­க­ளு­மி­டை­யி­லான சந்­திப்பு யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள வட­மா­காண ஆளு­நரின் அலு­வ­ல­கத்தில் நேற்று மாலை நடை­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி இந்த உறு­தி­மொ­ழியை வழங்­கி­யுள்ளார்.

 

காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் தமது உற­வு­களை மீட்டுத் தரு­மாறு கோரி தொடர்ச்­சி­யான போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அண்­மையில் கிளி­நொச்­சியில் காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் வீதி மறியல் போராட்­டத்­தினை நடத்­தி­யி­ருந்­தனர். ஜனா­தி­ப­தியை சந்­தித்து தாம் பேச வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தியை சந்­திப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மென்று ஜனா­தி­பதி செய­லகம் உறுதி அளித்­தை­ய­டுத்தே வீதி மறியல் போராட்­டத்தை இவர்கள் கைவிட்­டி­ருந்­தனர். 

 

இதற்­கி­ணங்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்தே யாழ். செய­ல­கத்தில் விசேட அபி­வி­ருத்தி குழுக் கூட்­டத்தில் பங்­கேற்ற பின்னர் ஆளுநர் அலு­வ­ல­கத்தில் காணாமல் போனோ­ரது பிர­தி­நி­தி­க­ளையும் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேசி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்பில் அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, டி.எம்.சுவா­மி­நாதன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சுகா­தார அமைச்சர் சத்­தி­ய­லிங்கம் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

குறித்த சந்­திப்புத் தொடர்பில் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் சார்பில் கலந்து கொண்ட சட்­டத்­த­ரணி குமா­ர­வ­டிவேல் குரூ­பரன் கருத்துத் தெரி­விக்­கையில்,

2009  ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்தின் போது இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த மற்றும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களின் பெயர் விப­ரங்­களை முழு­மை­யாக வெ ளியி­டப்­ப­ட­வேண்டும். புனர்­வாழ்வு முகாம்­க­ளிலும் தடுப்பு முகாம்­க­ளிலும் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள உற­வு­களின் விப­ரங்­க­ளையும் எங்­கெங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்ற விப­ரங்­க­ளையும் முழு­மை­யாக வெ ளியி­டப்­ப­ட­வேண்டும். 

1983 ஆம் ஆண்டு முதல் தடுப்பு முகாம்கள் இர­க­சிய தடுப்பு முகாம்கள் எங்­கெங்கு அமைக்­கப்­பட்­டுள்­ளன. யார்யார் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­ப­தனை ஆண்­டு­வா­ரி­யாக வெளி­யிட வேண்டும். இத்­த­கைய கோரிக்­கை­களை நாம் முன்­வைத்­த­துடன் அதற்­காக மக­ஜ­ரையும் ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்தோம். இக்­கோ­ரிக்­கை­களை ஜனா­தி­பதி வாசித்­த­துடன் இன்­றைய  தேசிய பாது­காப்பு சபையின் மாதாந்­தக்­கூட்­டத்தில் குறித்த கோரிக்கை தொடர்­பான விப­ரங்­களை வெளி­யி­டு­மாறு உத்­த­ர­வி­ட­வுள்­ள­தா­கவும் வாக்­கு­று­தி­ய­ளித்தார். 

இதே­வேளை காணா­மல்­போனோர் சார்பில் கலந்­து­கொண்ட பிர­தி­நிதி ஒருவர் குறித்த விப­ரத்­தினை எங்­கு­பெற்­றுக்­கொள்­ளலாம் என ஜனா­தி­ப­தி­யிடம் கேட்­ட­தற்குஇ ஜனா­தி­பதி எங்­கு­பெற்­றுக்­கொள்­ளலாம் எப்­போது வெ ளியி­டப்­படும் என்­ப­தனை உட­ன­டி­யாக கூற முடி­யாது விட்­டாலும் விப­ரங்­களை வெளி­யிட  உத்­தி­ர­வி­ட­வுள்ளேன் எனத் தெரி­வித்தார்.

மேலும் ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது வெ ளியி­டப்­பட்ட பிர­சு­ரங்­களில் புகைப்­ப­டங்கள் பிர­சு­ரிக்­கப்­பட்­டமை மற்றும் சிறைச்­சா­லையில் ஒருவர் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக கேள்­வி­கேட்­கப்­பட்ட போது,  இது தொடர்பில் குழு­வொன்றை அமைப்­ப­தாக தெரி­வித்­துள்ளார். எனினும் காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் குழு அமைப்­பது தொடர்பில் ஏற்­றுக்­கொள்­ளாத தன்­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

இதே­வேளை ஜனா­தி­ப­தியின் இக் கருத்துத் தொடர்பில் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் என்­ற­வ­கையில் நாங்கள் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­பட்டு வரு­கின்றோம்.  சர­ண­டைந்­த­வர்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பி­லான விப­ரங்­களை வெளி­யிட கட்­ட­ளை­யி­டு­வ­தாக ஜனா­தி­பதி பகி­ரங்­க­மா­கவே வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார். ஆகவே இவ் வாக்­கு­று­தியை இன்று நடை­பெ­ற­வுள்ள தேசிய பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் நிறை­வேற்­று­வா­ரென நாம்   நம்­பு­கின்றோம் எனத் தெரி­வித்தார்.

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் சார்பில் கலந்­து­கொண்­ட­வர்கள் கருத்துத் தெரி­விக்­கையில்,

காணா­ம­லாக்­கப்­பட்ட எமது உற­வி­னர்­களை மீட்­கக்­கோரி தொடர்ந்து வரும் இப் போராட்­டத்தில் சாத­க­மான முறையில் அமை­ய­வேண்டும் என்ற நோக்­குடன் நாங்கள் இச் சந்­திப்­பினைக் கோரி­யி­ருந்தோம். இச் சந்­திப்பில் மக­ஜ­ரினை நாம் கைய­ளித்தோம். 

அக்­கோ­ரிக்­கைக்கு அமை­வாக இது தொடர்­பாக  நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்தார். குறிப்­பாக இன்று நடை­பெ­ற­வுள்ள தேசிய பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் பெயர்­வி­ப­ரங்­களை வெ ளியி­டக்­கோரி கட்­ட­ளை­யி­டுவேன் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

காணா­ம­லாக்­கப்­பட்ட உறவினர்களின் பெயர்ப்பட்டியலை வெ ளியிடவேண்டும். சிறைச்சாலைகள் மற்றும் மறைமுக தடுப்பு முகாம்களையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் நாங்கள் சென்று பார்வையிட வேண்டும். அனைத்து தமிழ் அரசியல் கைதிகள்இ தடுத்துவைக்கப்பட்டுள்ள உறவினர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். 

எமது இந்தக் கோரிக்கைள் தொடர்பில் முழுமையான நடவடிக்கை இடம்பெறும்வரை எமது கவனயீர்ப்புப்போராட்டம் தொடரும். மேலும் மேலும் இழுத்தடிப்புச்செய்யப்பட்டு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாது விட்டால் நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றி மாறுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தனர்.  

http://www.virakesari.lk/article/20834

  • கருத்துக்கள உறவுகள்

அக்­கோ­ரிக்­கைக்கு அமை­வாக இது தொடர்­பாக  நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்தார். குறிப்­பாக இன்று நடை­பெ­ற­வுள்ள தேசிய பாது­காப்பு சபைக் கூட்­டத்தில் பெயர்­வி­ப­ரங்­களை வெ ளியி­டக்­கோரி கட்­ட­ளை­யி­டுவேன் என உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

ஜனாதிபதி யாழ் கூட்டத்தில் உறுதியளித்ததுபோல் மக்களுக்கு காணாமல்போனவர்களின்(!) பட்டியலை வெளியிடும்படி ஆயுதப்படைக்கு உத்தரவிட்டாரா? இந்த விடயம் இறுதியில் என்னவாயிற்று?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.