Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“யாருக்குமே இனி அஞ்சமாட்டேன்”

Featured Replies

“யாருக்குமே இனி அஞ்சமாட்டேன்”

 
“யாருக்குமே இனி  அஞ்சமாட்டேன்”
 

“நான் இனி யாருக்­கும் அஞ்­சத் தேவை­யில்லை. என்­னு­டைய பலம் மக்­க­ளின் அன்­பு ­தான். அர­சி­யல் ரீதி­யான பலம் எத­னை­யும் நான் சேர்த்­தி­ருக்­க­வில்லை.பொது மக்­க­ளுக்­குச் செய்­யும் எனது சேவையே எனக்குப் பல மாக இருக்கும். ஆகவே நடப்பதை இருந்து பார்ப்போம்” இவ்வாறு கண்ணீர் மல்கத் தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்துக்கு முன்னால் அவருக்கு ஆதாரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இன்று எனக்கு முன்னால் கூடியுள்ள உங்கள் அன்பு என்னை வியக்க வைக்கின்றது. நான் என்னால் முடிந்தளவில் மக்களுக்ககன சேவையை மேற்கொண்டு வருகின்றேன். ஆனால் இந்தளவுக்கு மக்களின் அன்பு எனக்கு இருப்பதை இப்போதுதான் உணர்கின்றேன்.
பல அரசியல் காரனங்களுக்காகப் பல நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நாம் இவ்வளவு காலமும் அரசியலுக்கு அடிமைப்பட்டு மக்களின் நன்மைகள், தேவைகள், ஏக்கங்களை புரிந்துகொள்ளாது இருந்துவிட்டோம்.

உதரணத்துக்கு ஒரு வைத்தியசாலைக்கு தேவையான கருவியை ஊழல் செய்து குறைந்த தரத்தில் வாங்கினோமானால் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் மக்களையே சென்றடைகின்றது. மக்களுக்கு வேண்டுவதாகக் கூறி ஊழல் செய்வதால் அதன் முழுத் தாக்கமும் மக்களுக்குத்தான் சென்றடைகின்றது.

எங்களுக்கு வருமானம் கிடைக்கின்றது. பணம் கிடைக்கின்றது. வசதிகள் கிடைக்கின்றன என்ற காரணத்தால் நாம் செய்வது தார்ப்பரியம் விளங்காமல் போய்விடுகின்றது. இவ்வாறன ஊழல் சம்பவங்கள் தொடர்பாக நான் நடவடிக்கை எடுத்த போது, அது பலரால் விரும்பப் படவில்லை. ஆனால் விருப்பத்துக்கு மாறாக மக்களின் நலன் கருதி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவைகள் இருந்தன.

அந்த நடவடிக்கைகள் எனக்கு அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை உருவாக்கிவிடுமோ? என்ற பயம் இருந்தது. ஆனால் அந்தப்பயம் எனக்கு தற்பொழுது போய்விட்டது. நான் இனி யாருக்கும் அஞ்சத் தேவையில்லை. என்னுடைய பலம் மக்களின் அன்பே ஒழிய அரசியல் ரீதியான பலம் எதுவும் நான் சேர்த்திருக்கவில்லை. பொதுமக்களுக்கு செய்யும் எனது சேவையே எனக்கு இருக்கும் பலம். ஆகவே நடப்பதை இருந்து பார்ப்போம்.

நான் எனது கடமைகளை செய்யும்போது சிலருக்கு பிரச்சனைகளை கொடுக்கலாம். ஆனால் நான் அதனை நினைத்துக் கவலைப்படுவதில்லை. நான் ஊழல் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை சிலருக்குப் பிடிக்கவில்லை போல இருக்கின்றது. நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறைகூறியிருப்பார்கள்.நடவடிக்கை எடுத்த படியால் ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்? எனக் குறை கூறுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்னுடன் பேசினார். இரண்டு அமைச்சர்கள் தகுந்த உத்தரவாதத்தை தந்தால், கட்டாய விடுமுறை தொடர்பான அறிவிப்பைப் பரிசீலிக்கலாம் என அவரிடம் தெரிவித்துள்ளேன்” ” என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார். (வ-8)

http://uthayandaily.com/story/6925.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு ஆதரவாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான

1.ஜி.ரி.லிங்கநாதன்,
2.ப.கஜதீபன்,
3.ஜி.குணசீலன்,
4.ஆர்.இந்திரராஜா,
5.து.ரவிகரன்,
6.கே.சிவநேசன்,
7.அனந்தி சசிதரன்,
8.க.சர்வேஸ்வரன்,
9.பொ.ஐங்கரநேசன்,
10.விந்தன் கணகரட்னம்,
11.ஏ.புவனேஸ்வரன்,
12.செ.மயூரன்
13.எம்.கே.சிவாஜிலிங்கம்
14.எம்.தியாகராசா

நேர்மையாக நடப்பவர்கள் எப்போதும் பயப்படத் தேவையில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.