Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செப்ரிசிமியா...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் ஒரு இடத்தில் (இடத்தின் பெயர் வடிவாக தெரியவில்லை) வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம், மூத்த மகள் வயசு 8 அல்லது 9 இருக்கும், என்னொமொரு மகள், அதைவிட அண்மையில் பிறந்த இன்னொமொரு குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்த அந்த குடும்பத்தின் தலையில் நினைத்து பார்க்கமுடியாத ஒரு இடி.

கடைசியாக ஒரு மாதத்துக்கு முன்னர் யாரோ ஒருவரின் பிறந்த நாள் விழாவில் துள்ளி திரிந்த சிறுமி (8 வயசு) அடுத்த நாள் லண்டன் சிட்டிக்குள் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார், காரணம் தெரியவந்த போது குடும்பம், உறவினர்கள் கதறி அழுதனர், அந்த சின்னஞ்சிறு சிறுமியின் உடலில் எதிர்பு சக்தி செயலிழந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார், ஆம் அந்த வருத்ததின் பெயர் செப்ரிசிமியா என்று அழைகப்படுவதாக (பெயர் அப்படித்தான் இருக்கவேண்டும், ஒருபொழுதும் இதை கேள்விபடவில்லை நான்) வைத்தியர் தெரிவித்து இருந்தார், செப்ரிசிமியா நோய் அந்த சிறுமியை தாக்கி இருப்பதாக இப்பொழுது தெரியவந்திருக்கிறது.

இந்த நோய் தாக்கியபடியால் அந்த சிறுமியை காப்பாற்றவேண்டுமெனில் அந்த சின்னஞ்சிறு சிறுமியின் கால்கள் இரண்டையும் அகற்றவேண்டுமாம்? அதை இழந்தாலும் பறவாயில்லை செயற்கை கால்கள் மூலம் வாழலாம் என்று காலை அகற்ற ஒத்துகொண்டாலும் பின்பு கைகள் இரண்டையும் எடுக்கவேண்டிய நிலை வருமாம்? பின்பு ஒவ்வொரு உறுப்புக்களாக இழக்க வேண்டி வரும்.. கடைசியில் ???????????

இன்றுவரை மருத்துவமனையில் மருத்துவ குழாய் உதவியுடன் உணர்வுகளற்று இருந்த சிறுமி, இன்று மதியம் அளவில் அதை அகற்றிவிட்டார்கள்??

ஒவ்வொரு செக்கனை அந்த சின்னஞ்சிறு சிறுமி?????????????????????????????????????????????? :unsure::rolleyes::lol:

அந்த சின்னஞ்சிறு சிறுமியை கண்ணால் காணவில்லை நான், இச் செய்தியை கேள்வியுற்றதும் எனக்கே இடிவிழுந்தது போன்று இருந்தது, அந்த சிறுமியை கண்டு கொஞ்சி, வளர்த்தவர்களின் நிலை??

இறைவன் உயிருடன் இருந்தால் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

Septicaema என்பது அந்த நோய். இரத்தத்தில் தொடர்சியான பக்ரீரியத்தாக்கங்களின் விளைவால் ஏற்படும் பல வகை குணங்குறிகள் காட்டும் பல உடற்பாகங்களையும் படிப்படியான தொற்றின் மூலம் செயலிழக்கச் செய்து மரணத்தை உண்டு பண்ணும் ஒரு கொடிய நோய்த்தாக்கம் ஆகும்.

பொதுவாக நிர்பீடனம் குறைவான குழந்தைகள் முதியவர்களை அதிகம் தாக்கும் இந்த நோய் மற்றவர்களையும் தாக்க முடியாதென்றில்லை. தாக்கும்.

சரிவர சரியான நேரத்தில் நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படின் இந்நோயில் இருந்தும் பாதுகாக்கப்படலாம்.

1990 காலப்பகுதியில் சிறீலங்கா விமானப்படை யாழ்ப்பாண நகர் மீது வீசிய பீப்பாக் குண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த மனிதக்கழிவுகளில் இந்த நோயை உண்டு பண்ணக் கூடிய பக்ரீரியாக்கள் கண்டறியப்படிருந்ததுடன் அதன் பின்னர் யாழ் நகரை அண்டிய பிரதேசங்களில் பல சிறுவர்கள் முதியவர்கள் இளையவர்கள் இந்த நோய்க்கு ஆளாகி உயிரிழந்திருந்தனர். தற்போதும் அதன் தாக்கம் அங்குள்ளது. இது சிங்களப் பயங்கரவாதிகளால் திட்டமிட்ட உயிரியல் குண்டுத்தாக்குதலாகும். :rolleyes:

http://en.wikipedia.org/wiki/Sepsis

அண்மைக்காலமாக பிரித்தானியாவில் MRSA ,methicillin resistant Staphylococcus aureus, எனும் வைத்தியசாலைத் தொற்றுள்ள பக்ரீரியாவால் அதிக மரணங்கள் சம்பவிக்கின்றன. வைத்தியசாலைகளுக்கு செல்பவர்கள் அங்குள்ள உபகரணங்கள்,நோயாளிகள் பாவிக்கும் பொது இடங்களைப் பாவிக்கும் போது அவதானமாக இருப்பதுடன் தகுந்த முறையில் கை போன்ற உறுப்புக்களை கிருமி நீக்கம் செய்யவும் கற்றுக் கொள்ள வேண்டும். வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள பக்ரீரியக் கொல்லிக் கிறீம்களை கைகளில் பூசிக் கொள்வது சிறந்தது. அதைப் பூசிக் கொள்ளும் போதும் அதன் பின்னரும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவை நச்சுத்தன்மையானவை. கடந்த ஆண்டில் மட்டும் இங்கிலாந்தில் MRSA வகை நோய் கிருமிகளின் தொற்றால் மட்டும் 5600 பேர் உயிரிழந்துள்ளனர். இது சுகாதார வசதி கூடிய ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ளதை விட அதிகமாகும்.

Edited by nedukkalapoovan

பாவம் அந்த சிறுமி. எம்.எர்.எஸ்.ஆ இந்த நோய் தற்பொழுது கூட குழந்தைகளுக்கு தான் வருகின்றது. என்னோடு வெலை செய்யும் ஒருவரின் 1 வயது ஆககத குழந்தை கூட இப்பொழுது 4 மாதங்களா...ICU ல் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றது. இன்னும் தானாக சுவாசிக்க முடியாத நிலை தான்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததும் இந் நோய் ஆளை ஆக்கிரமித்து விடுகின்றது போலும். அண்டிபியோட்டிக்வால் கூட காலப்போக்கில்...இவ் பக்ரீரியாக்களை செயலிழக்கவோ இல்லை..கொல்லவோ முடியாமால் போய் விடுகின்றது. ஒவ்வொரு அண்டிபியோட்டிக்காவையும் அறிந்து அவ் பக்ரீரியாக்கள் அவைக்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றனவாம். கண்ணுக்கே தெரியாத இக் கிருமிகள் நம்மை எப்பிடியோ ஆக்கி விடுகின்றன. :rolleyes:

:rolleyes:செப்ரிசிமியா :lol::unsure::(:(:(:(:(:(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை நேற்று நான் தொடங்கும் பொழுது 8வயது சிறுமியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. முக்கிய அவயங்கள் செயலிழந்த நிலையில் நேற்று இரவு இதயத்துடிப்பும் நின்றுபோனது.

அத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.:rolleyes:

அச்சிறுமியின் ஆத்மா சாந்தியடைய இரைவனை பிரார்த்திக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில மாதங்களுக்கு முன்னரும் இப்படியான ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றதாக அறிந்தேன். இளைஞன் ஒருவருக்கு இந்த நோய் ஏற்பட்டது, வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு கால்களும் அகற்றப்பட்டன, இனி பிரச்சினையில்லை என்று நினைத்தவர்களுக்கு பேரதிர்ச்சி, காரணம் இரண்டு கைகளும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது, இறுதியில் அந்த இளைஞன் கெஞ்சி மண்டாடி தன்னை கொல்லுமாறு கேட்டதற்கு இணங்க கருனை கொலை அல்லது அவருக்கு வழங்கப்பட்ட உதவிகளை நிறுத்தி அவரின் வேண்டுகோளை பூர்த்தி செய்தாக கேள்வியுற்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை நேற்று நான் தொடங்கும் பொழுது 8வயது சிறுமியின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. முக்கிய அவயங்கள் செயலிழந்த நிலையில் நேற்று இரவு இதயத்துடிப்பும் நின்றுபோனது.

அத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.:rolleyes:

நவீன உலகியல் என்ற மாயை இன்னொரு பக்கத்தால் தகர்ந்து கொண்டிருக்கிறது. மனிதன் முன்னேற முன்னேற நோய்க் கிருமிகளும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவையும் உயிர்வாழப் போராடுகின்றன. நாம் தான் சின்னஞ்சிறுசுகள் மீது அதீத கவனமாக இருக்க வேண்டும். வாழ்வுக்காகப் போராடி மாய்ந்து போன அந்த இளம் பிஞ்சுக்கு கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றோம்.

பெற்றோர் அதிக கவனமெடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு நோய் அறிகுறிகள் தென்படும் ஆரம்பத்திலேயே தகுந்த மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துங்கள். பிரித்தானியாவில் டாக்டர்கள் அடிக்கடி தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதிகம் பயிற்சியற்ற வெளிநாட்டு டாக்டர்கள் குவித்திருப்பதால் பல மட்டங்களிலும் தவறுகள் நிகழ்கின்றன. பெற்றோர் தங்கள் குழந்தைச் செலவங்களின் நலன்கள் மீது மிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.