Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில்

Featured Replies

வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில்

வீரமக்கள் தின நிகழ்வுகள் கொழும்பில்
  •  

28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று கொழும்பில் நடைபெற்றன.

புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகச் செயலாளர் ம.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

20170716_091816.jpg

நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரனின் உருவப்படத்துக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

http://uthayandaily.com/story/11803.html

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, putthan said:

அஞ்சலிகள்

புத்தன் இவர்களுக்கு எப்படி உங்களால் அஞ்சலி செய்ய முடிகிறது. 

கடைசி வரை இன அழிப்பின் உச்சம் வரை சொந்த இனத்தைக் காட்டிக்கொடுத்து.. சொந்த இனத்தை இன அழிப்புச் செய்தவனோடு கூட நின்று கொன்று குவித்த.. இந்தக் கும்பலுக்கு அஞ்சலி செய்ய மனசே வராது.

புளொட்... சொந்த மக்கள் மீது செய்த அனைத்து காட்டிக்கொடுப்புகளுக்கும்.. கொலைகளுக்கும்.. பாலியல் வன்புணர்வுகளுக்கும்.. இனப்படுகொலைக்கும்.. பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தமிழீழ விடுதல என்ற உச்சரிப்போடு தமிழீழ மக்களின் காசில் சோற்றில் வளர்ந்து விட்டு.. பின்னர்.. எதிரியோடு கூடி நின்று சொந்த மக்களையே அழித்த இந்தக் கொடூரர்களுக்கு அஞ்சலி செய்வது மனதுக்கு இசைவாக இல்லை. மன்னிக்கக் கடினமான கொடூரர்கள். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nedukkalapoovan said:

புத்தன் இவர்களுக்கு எப்படி உங்களால் அஞ்சலி செய்ய முடிகிறது. 

கடைசி வரை இன அழிப்பின் உச்சம் வரை சொந்த இனத்தைக் காட்டிக்கொடுத்து.. சொந்த இனத்தை இன அழிப்புச் செய்தவனோடு கூட நின்று கொன்று குவித்த.. இந்தக் கும்பலுக்கு அஞ்சலி செய்ய மனசே வராது.

புளொட்... சொந்த மக்கள் மீது செய்த அனைத்து காட்டிக்கொடுப்புகளுக்கும்.. கொலைகளுக்கும்.. பாலியல் வன்புணர்வுகளுக்கும்.. இனப்படுகொலைக்கும்.. பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தமிழீழ விடுதல என்ற உச்சரிப்போடு தமிழீழ மக்களின் காசில் சோற்றில் வளர்ந்து விட்டு.. பின்னர்.. எதிரியோடு கூடி நின்று சொந்த மக்களையே அழித்த இந்தக் கொடூரர்களுக்கு அஞ்சலி செய்வது மனதுக்கு இசைவாக இல்லை. மன்னிக்கக் கடினமான கொடூரர்கள். tw_angry:

மரணித்த பின்பு மன்னித்து விடலாம் என்பது எனது கருத்து....மேலும் ஆரம்பத்தில் அவர்களும் போரட புறப்படும் பொழுது தங்களது இளமை கனவுகளை துறந்து குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் தானே...அதற்காக தான் அந்த அஞ்சலி அவர்களின் செயலுக்காகவோ நடவடிக்கைகளுக்காவோ அல்ல.
 சித்தார்த்தனை தாயக மக்கள் அதிகப்படியான வாக்குகள் போட்டு பாரளுமன்று அனுப்பியுள்ளார்கள்....
 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

 சித்தார்த்தனை தாயக மக்கள் அதிகப்படியான வாக்குகள் போட்டு பாரளுமன்று அனுப்பியுள்ளார்கள்....
 

டக்கிளசையும் தான்.. ஏன் சம் சும் மாவை.... கும்பலையும் தான். இப்ப வாக்குப் போட்டிட்டு ஒப்பாரி வைப்பதும் அதே மக்கள் தான்.

மக்கள் தங்களின் வாக்கை செலுத்த சரியான ஆக்களை நிறுத்தாதற்கு அந்த மக்களைக் குறை சொல்ல முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒரு கழுதையை நிற்பாட்டினாலும் மக்கள் அதனை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்புவார்கள். காரணம்.. அந்த கட்சிக்கு தமிழீழ தேசிய தலைமை வழங்கி இருந்த அங்கீகாரம். அதுவும் இப்போ மங்க ஆரம்பித்துள்ளது.. இவர்களின் மக்களை ஏமாற்றும் செயல்களால். 

சித்தார்த்தன் புளொட்டாக நின்று தமிழ் மக்களால்.. பல முறை தொடர் தோல்வியை சந்தித்து வீதியில் விடப்பட்டவர். இதையும் மறக்கலாகாது. :rolleyes:

சொந்த உறவுகளை புளொட்டின் காட்டிக்கொடுப்புக்கும் அராஜகப் படுகொலைக்கும் பலி கொடுத்த எம் மக்கள் நிச்சயம்.. புளொட் ஒட்டுக்குழு கும்பலை மன்னிக்கத்தயாராக இருப்பார்கள் என்று நம்பவில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

 :rolleyes:

சொந்த உறவுகளை புளொட்டின் காட்டிக்கொடுப்புக்கும் அராஜகப் படுகொலைக்கும் பலி கொடுத்த எம் மக்கள் நிச்சயம்.. புளொட் ஒட்டுக்குழு கும்பலை மன்னிக்கத்தயாராக இருப்பார்கள் என்று நம்பவில்லை. 

பொன்சேகாவை மன்னித்த எம் மக்கள் புளொட்டையும் மன்னிப்பார்கள்,மைத்திரியை மன்னித்த மக்கள் நிச்சயம் புளோட்டையும் மன்னிப்பார்கள் ......இந்தியாவை மன்னித்தவர்கள் ,ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள்(போத்துகீசர்,டச்சு,ஆங்கிலேயர்) மன்னித்து அவர்களின் மதத்தையும் கலச்சாரத்தையும் பின்பற்றும் எம்மவர்கள் இவர்களையும் மன்னிக்க கூடும் என்பது எனது கணிப்பு

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

பொன்சேகாவை மன்னித்த எம் மக்கள் புளொட்டையும் மன்னிப்பார்கள்,மைத்திரியை மன்னித்த மக்கள் நிச்சயம் புளோட்டையும் மன்னிப்பார்கள் ......இந்தியாவை மன்னித்தவர்கள் ,ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள்(போத்துகீசர்,டச்சு,ஆங்கிலேயர்) மன்னித்து அவர்களின் மதத்தையும் கலச்சாரத்தையும் பின்பற்றும் எம்மவர்கள் இவர்களையும் மன்னிக்க கூடும் என்பது எனது கணிப்பு

பொன்சேக்காவால்.. செம்மணியில் உயிர் விட்ட சொந்தங்கள் மன்னிக்கவில்லை.. ஆனால் பொன்சேகாவுக்கு வேண்டப்பட்டவர்கள் மக்களின் பெயரால் அவரை மன்னித்திருப்பார்கள். அதுக்காக மக்கள் மன்னித்துவிட்டார்கள் என்பது பொருள் அல்ல. அதே போல் தான்.. இந்திய ஆக்கிரமிப்புப் படையின் பயங்கரவாதச் செயலுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அதனை மன்னிக்கவில்லை. இந்தியாவால்.. பாதுக்காப்பட்டவை மக்களின் பெயரால்.. அதனை மன்னிச்சிருப்பினம். அதே தான் ஐரோப்பியர்களின் செயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை மறக்கவோ மன்னிக்கவோ முயன்றிருக்கார்.. மதமாற்றத்தால்.. ஐரோப்பியரின் வருகையால்.. பயன்பெற்றோர் மக்களின் பெயரால் மன்னித்திருப்பர்.

இங்கும் அதே தான்.. புளொட்டின் காட்டிக்கொடுப்பால்.. அரச பயங்கரவாதத்துக்கு வழங்கிய நேரடி ஒத்துழைப்பால்.. பாதிக்கப்பட்ட மக்கள் அதனை மன்னித்திருக்கார்.. புளொட்டினை கூட்டமைப்புக்குள் இழுத்துவிட்டு.. தமக்கு எதிரானவர்களை பழிவாங்க.. நினைத்தோர்... அதனை மன்னித்திருப்பர். மக்கள் ஆனால் எதனையும் மறக்கவில்லை.. மன்னிக்கவும் அவ்வளவு இலகுவில் தயாரில்லை. :rolleyes:

அதனால் தான் இப்படியான அஞ்சலிகள் இன்னும் பூட்டிய அறைக்குள் அல்லது மண்படங்களுக்குள்.. மட்டும் நிகழ்த்தப்படுகின்றன.. ஒரு சிலரால். :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.