Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல.!

Featured Replies

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல.!

 

 

- எம்.எப்.எம். பஸிர்

துப்பாக்கிச் சூடு நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்தது அல்ல என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேக சற்றுமுன்னர் தெரிவித்தார்.

ruwan.jpg

நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யும் எந்த வழக்கு தொடர்பிலான விடயங்களும் சம்பவத்தின் பின் புலத்தில் இல்லை என்பதும் உறுதியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22229

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நீதிபதி இலக்கில்லை என்கிறார் எஸ்.எஸ்.பி. ஸ்ரனிஸ்லஸ்

vlcsnap-2017-07-23-11h46m32s402.png
 
 
நல்லூர் சம்பவம் நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டது இல்லை. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார்.
 
நல்லூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
நல்லூர் சம்பவம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியினை இலக்கு வைத்து நடத்தப்பட்டது இல்லை. நீதிபதியின் மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது என தற்போது என்னால் சொல்ல முடியும்.

 

 
நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால் , நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டு இருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதி அவர்களும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய்பாதுகாவலரும்,  மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றார். அந்த நேரத்தில் நீதிபதி தான் இலக்கு என வந்திருந்தால் துப்பாக்கிதாரி நீதிபதியை நேராக சுட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தப்பத்தில் சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே என கூறுவேன்.

 

 
நீதிபதிக்கு யாழ்ப்பணத்தில் எந்த விதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். என மேலும் தெரிவித்தார்.
 
 

http://globaltamilnews.net/archives/33856

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை எங்கு மேற்கொள்ளப்பட்டது? தப்பியோடிய குற்றவாளி பிடிபட்டாரா என்ற விபரம் இல்லாமல் அவசரமாக எந்த முடிவுக்கும் வரமுடியாது. இது பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி விடுக்கும் அறிக்கையாக படவில்லை. யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு மரண அச்சுறுத்தல் இல்லையென்றால் வேறு அவருக்கு வேறு ஏதாவது இடத்துpல் மரண அச்சுறுத்தல் உண்டு என்றா அர்த்தம். அனுமானங்களும் அவசர அறிக்கைகளும் இங்கு பயன்படாது.

"நீதிபதி தான் இலக்கு என வந்திருந்தால் துப்பாக்கிதாரி நீதிபதியை நேராக சுட்டு இருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை"
"நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால்  நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டு இருக்க வேண்டும்"

அப்படியாயின் குற்றவாளி யாரை சுடவந்தான் என்பதை கண்டுபிடிக்காமல்  இதுபோன்ற முடிவுகளை அனுமானத்தின் அடிப்படையில் சொல்வது
 குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி   தொழில்முறை திறமை அற்றவர் என்பதையே குறிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியே சொல்கிறார் தன்னுடன் இருந்த பாதுகாப்பாளர்கள் பற்றி பொலிஸ் இராணுவத்தை தவிர யாருக்கும் தெரியாது எனவும் தனது (இறந்த) சிங்கள பாதுகாப்பு உத்தியோகத்தரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் சொன்னார்( cmr.fm/focus    ) . ஒட்டுக்குழுக்கள், இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கியும் இனியும் வழங்க தயங்காதவராக இழஞ்செழியன் இருப்பதால் அவர் தான் நிச்சயமான குறி என்பதை யாராலும் விளங்க முடியும்.இராணுவம் முதலிலேயே பூசி மெழுக பார்க்கிறது.

இறந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் இவர் தான்.

 

20265098_10155569301929855_3175655180889

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
திட்டமிட்டது ஒன்றல்ல’
 

image_4b4e392658.jpgயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மற்றும் அவரது பாதுகாவலர்களை இலக்கு வைத்து நல்லூரில், சனிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம், எதிர்பாராத சம்பவமாகுமெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி. ருவான் குணசேகர,  இது திட்டமிட்டு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக கூறினார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர், மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில், முச்சக்கரவண்டிகளை நிறுத்துமிடம் உள்ளது. அங்குள்ள முச்சக்கரவண்டிகளின் உரிமையாளர்களிடத்தில், நீண்டகாலமாகவே கருத்துவேறுபாடுகள் நிலவிவருகின்றன.

சம்பவதினமன்று, அந்த நிறுத்துமிடத்துக்குப் பின்னால், சிலர் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர். அவர்களுக்கு இடையில், ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வீதிக்கு வந்தமையால், அவ்விடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அப்போதுதான், போதையிலிருந்த ஒருவன் பொலிஸ் சார்ஜன்டின், இடுப்பிலிருந்த கைத் துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்டுள்ளான்.

இதேவேளை, நீதிபதியும் வாகனத்திலிருந்து இறங்கிவிட்டார். எனினும், மற்றுமொரு கான்ஸ்டபிள், நீதிபதியை வாகனத்தினுள்ளே தள்ளிவிட்டு,  துப்பாக்கிதாரியை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம், செய்துள்ளார். இதன்போது, துப்பாக்கிதாரி ஓடி விட்டான்.

சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரைக் கைது செய்வதற்கு, பொலிஸ் குழுக்கள் பலவற்றை ஈடுபடுத்தியுள்ளதாகக் கூறிய பொலிஸ் பேச்சாளர் குணசேகர, நீதிபதியைக் கொல்வதற்கு, துப்பாக்கிதாரி எத்தனித்ததாக கூறப்படுவதை நிராகரித்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான புலன் விசாரணைகளை, வடமாகாணத்தின்  சிரேஸ்ட  பிரதி பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்ணான்டோ நெறிப்படுத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/திட்டமிட்டது-ஒன்றல்ல/175-201207

http://www.tamilmirror.lk/செய்திகள்/திட்டமிட்டது-ஒன்றல்ல/175-201207

  • தொடங்கியவர்

நீதிபதி இளஞ்செழியன் இலக்கல்ல

p9-0c1c1d97dca01799a6c726f19f4b27d5287bd5a3.jpg

 

விசாரணையில் உறுதி; இரு சந்தேக நபர்கள் கைது பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தகவல் 
(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். நல்லூர் கோவிலின் பின்புற­மாக இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்பவமானது நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் இந்த துப்­பாக்கிப் பிர­யோ­கத்­துக்கும் வித்­தியா கொலை வழக்கிற்கோ அல்­லது நீதி­பதி இளஞ்­செ­ழி­யனால் விசா­ரிக்­கப்படும் ஏனைய வழக்­கு­க­ளுக்குமோ எவ்­விதமான தொடர்­பு­களும் இல்லை. வட­மா­கா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசேட விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார்.

நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­வலர் ஒரு­வரின் உயிரைப் பறித்து

 மற்­றொ­ரு­வ­ருக்கு காயத்தை ஏற்­ப­டுத்­திய குறித்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வ­மா­னது எதிர்­பா­ராத ஒரு சம்­பவம் என்றும் இது தொடர்பில் இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்தி, அங்கு வைத்து கருத்து வௌியிடும் போதே அவர் இந்த தக­வல்­களை வெ ளிப்­ப­டுத்­தி­ய­துடன் சம்­பவம் தொடர்பில் பிர­தான சந்­தேக நபர் தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் அவரை கைது செய்ய நட­வ­டிக்­கை­களை முடுக்கி விட்­டுள்­ள­தா­கவும் தெரிவித்தார்.

இந்த சம்­பவம் தொடர்­பிலும் விசா­ர­ணை­களில் வௌிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்கள் குறித்தும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவாண் குண­சே­கர மேலும் தெளிவு படுத்­து­கையில்,

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது நேற்று மாலை (நேற்று முன் தினம்) யாழ்ப்­பாணம் நல்லூர் பகு­தியில் வைத்து துப்­பாக்கிப் பிர­யோகம் நடாத்­தப்­பட்ட சம்­பவம் ஒன்று பதி­வா­னது.

இந்த இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளாவர். நீதி­பதி நேற்று (நேற்று முன் தினம்) யாழ். நல்லூர் பகு­தியை கடந்து பய­ணித்­தார். அவ­ரது காரி­லேயே நீதி­பதி பய­ணித்­துள்ளார்.

இதன்­போது நீதி­ப­திக்கு மேல­தி­க­மாக அவ­ரது காரில் அவரது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான பொலிஸ் கான்ஸ்­டபிள் விம­ல­சி­றியும் இருந்­துள்ளார். இத­னை­விட காருக்கு முன்னால் பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேம­சந்­திர, காருக்கு தேவை­யான பாது­காப்பை வழங்­கிய வண்ணம் முன்னால்மோட்டார் சைக்­கிளில் பய­ணித்­துள்ளார்.

இதன்­போது நல்லூர் பகு­தியில், சம்­பவம் இடம்­பெற்ற இடத்தில் போக்­கு­வ­ரத்து நெரிசலை சார்ஜன்ட் பிரே­ம­சந்­திர அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து மோட்டார் சைக்­கிளை நிறுத்­தி­விட்டு, மேல் நீதி­மன்ற நீதி­ப­தியின் கார் முன்­னோக்கி பய­ணிக்க தேவை­யான போக்­கு­வ­ரத்து வச­தியை சார்ஜன் ட் ஹேம­சந்­திர ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்ளார்.

இவ்­வாறு நீதி­ப­தியின் கார் முன்­னோக்கி பய­ணிக்கும் மறு கணமே சார்ஜன்ட் ஹேம­சந்­திர தனது மோட்டார் சைக்கிள் நிறுத்­தப்­பட்ட இடத்­துக்கு மீள வந்­துள்ளார். நல்லூர் பகு­தியில் குறித்த போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணத்தை பொலிஸார் விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளனர்.

சம்­பவம் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து சில மீற்­றர்கள் தூரத்தில் மூவர் மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அம்­மூ­வரில் ஒரு­வ­ருக்கு முச்­சக்­கர வண்டி இருந்­தது. சம்­பவ இடத்தில் ஒரு முச்­சக்­கர வண்டி தரிப்­பிடம் ஒன்றும் உள்­ளது. அந்த முச்­சக்­கர வண்டி தரிப்­பி­டத்தில் முச்­சக்­கர வண்­டியை நிறு­வத்து தொடர்பில், மது­பானம் அருந்­தி­யுள்ள ஒரு­வ­ருக்கும் பிறி­தொ­ரு­வ­ருக்கும் இடையில் ஏற்­க­னவே முறுகல் நிலை ஒன்று ஏற்­பட்­டுள்­ளது.

அந்த முறுகல் நிலை­மையை தொடர்ந்து பிரச்­சினைப் படுத்­தவே இம்­மூ­வரும் மது­பானம் அருந்­திக்­கொண்டு அந்த முச்­சக்­கர வண்டி தரிப்­பி­டத்து வந்து தக­ராறு செய்­துள்­ளனர். இத­னா­லாயே அந்த பகு­தியில் வாகன நெரிசல் ஏற்­பட்­ட­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து நீதி­ப­தியின் கார் முன்­னோக்கி பய­ணிக்க, பொலிஸ் சார்ஜன்ட் தனது மோட்டார் சைக்­கிளில் ஏறும் போது, அங்கு வந்த தக­ராறு செய்த மூவரில் ஒரு­வ­ரான பிர­தான சந்­தேக நபர், சார்­ஜனிடம் இருந்த அவ­ரது கைத்­துப்­பாக்­­கியைப் பறித்து அவரை சுட்­டுள்ளார்.

இந்த துப்­பாக்கிச் சூட்டு சத்த்­ததைக் கேட்டு நீதி­ப­தியும், காரில் இருந்த மற்­றைய பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ரான கான்ஸ்­ட­பிளும் காரை நிறுத்­தி­விட்டு இறங்­கி­யுள்­ளனர்.

இதன் போது பொலிஸ் கான்ஸ்­டபிள் சந்­தேக நபரை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்ளார். இதன்­போது சந்­தேக நபர் பொலிஸ் கான்ஸ்­டபிள் மீதும் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்ளார்.

இதனையடுத்து காய­ம­டைந்த பொலிஸ் கானஸ்­டபிள் விம­ல­சி­றியும், பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேம­சந்­தி­ரவும் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் சிகிச்சைப் பல­னின்றி சார்ஜன்ட் உயி­ரி­ழந்­துள்ளார்.

சம்­ப­வத்­தை­ய­டுத்து சந்­தேக நபர் ஸ்தலத்தில் இருந்து தப்பிச் சென்­றுள்ளார். துப்­பாக்கிச் சூட்டை நடாத்­திய அவர் பறித்த பொலிஸ் சார்­ஜன்டின் கைத்­துப்­பாக்­கியை அவ்­வி­டத்­தி­லேயே போட்­டு­விட்டு அவர் தப்பிச் சென்­றி­ருந்தார். எனினும் அந்த கைத்­துப்­பாக்­கியின் மெக­ஸினை காண­வில்லை. (நேற்று நண்­பகல் மெகசின் அருகில் உள்ள கால் வாய் ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தது.) இது தான் நடந்­துள்ள சம்­பவம்.

பிர­தான சந்­தேக நபர் தற்­போது தப்பிச் சென்­றுள்ளார். இந்­நி­லையில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தரவின் ஆலோ­ச­னைக்கு அமைய வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில் பல குழுக்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளன. பிர­தான சந்­தேக நப­ருடன் மது­பானம் அருந்­திய ஏனைய இரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்பட்­டுள்ள சந்­தேக நபர்­களில் ஒருவர் பிர­தான சந்­தேக நபரின் மூத்த சகோ­தரர். மற்­றை­யவர் பிர­தான சந்­தேக நபரின் உற­வுக்­காரர் என்றார்.

42வய­தான பால­சிங்கம் மகேந்­திர ராசா, 49வய­து­டைய செல்­வ­ராசா மகேந்­திரன் ஆகிய இரு­வ­ரையே பொலிஸார் இவ்­வாறு கைது செய்­துள்­ள­தாக வட மாகாண பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன. மேலும் துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தின் போது 11 வேட்­டுக்கள் தீர்க்­கப்­பட்­டுள்­ளன. மூன்று அருகில் உள்ள தக­ரத்தில் பட்­டுள்­ள­தாக விசா­ர­ணைக்கு பொறுப்­பான உயர் அதி­காரி தெரி­வித்தார்.

இந் நிலையில் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி, துப்­பாக்கிச் சூடு தன்னை இலக்கு வைத்­தது என கூறி­யுள்­ளாரே என்று பொலிஸ் பேச்­சா­ள­ரிடம் கேள்வி எழுப்­பி­ய­போது, அதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவாண் குண­சே­கர, அவரை இலக்கு வைத்­தது அல்ல. நான் சம்­ப­வத்தை தெளிவாக கூறினேன் அல்­லவா. விசா­ர­ணை­களில் துப்­பாக்கிச் சூடா­னது நீதி­ப­தியை இலக்கு வைத்து நடத்­தப்பட்­டது அல்ல என்­பது தெளிவா­கி­யுள்­ளது. இது ஒரு திடீர் சம்­பவம். அவ்­வ­ளவு தான் என்றார்.

இதன் போது, நீதி­பதி இளஞ்­செ­ழியன், வித்­தியா படு­கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரணை செய்துவரும் நிலையில் அவ்வாறான பின்னணிகள் இந்த தாக்குதலில் உள்ளதா? என மீளவும் பொலிஸ் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர, இல்லை. அப்படி எதுவும் இல்லை. வித்தியா கொலை உள்ளிட்ட எந்த வழக்குடனும் தொடர்புபட்டது அல்ல இந்த சம்பவம். இது திடீரென ஏற்பட்ட ஒரு சம்பவம் என்றார்.

இந்த சம்பவம் குறித்து பிரதான சந்தேக நபரைக் கைது செய்யவும் ஏனைய விசாரணைகளை முன்னெடுக்கவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ண்னான்டோ உள்ளிட்டோரின் கீழ் விஷேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-24#page-1

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாவலரின் பணித்துப்பாக்கியை பறித்து அவரையே சுடுமளவுக்கு பாதுகாவலர் குற்றவாளியை நெருங்கவிட்டுள்ளார் என்றால் குற்றவாளி பாதுகாவலருக்கு அறிமுகமான ஒரு சிங்களவர் அல்லது இராணுவத்தில் கடமைபுரியும் ஒருவராகத்தான் இருக்க முடியும்.  குற்றவாளியை கண்டுபிடித்து குற்றவாளியிடம் விசாரணை செய்யாமல் எந்த அனுமானத்தையும் கூறமுடியாது. நீதிபதி துப்பாக்கியை பறிக்க முயன்றது பின் குற்றவாளி துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடியதை வைத்து பார்த்தபோது குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி குற்றவாளியினுடையது அல்ல என்றே ஆரம்பத்தில் எண்ணத் தோன்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவ சூத்திரதாரி பழைய புலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்

நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலை வழக்கு ஒன்று தொடர்பாக இவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை இன்றிரவுக்குள் கைது செய்து விடுவோம் என்று யாழ். பிராந்திய காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். ”இது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. நீதிபதியின் மெய்க்காவலருடன் முரண்பட்டுக் கொண்டே, குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். அவர் ஒரு முன்னாள் போராளி. இன்றிரவுக்குள் அவரைக் கைது செய்து விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்

 

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=150339 .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.