Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள்.

Featured Replies

பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள்.

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் இந்திய தென்பிராந்திய பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் நடத்திய மாநாடு ஒன்றில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கேற்ப புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகளின் முக்கிய நிலையமாக தமிழ்நாடு மாநிலமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் புலனாய்வுத்துறையினர் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் தென்னிந்தியாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடைப்பட்ட குறுகிய கடற்பரப்பில் பாக்கு நீரிணைப் பகுதியில் மட்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தற்கொலைக் கடற்புலியினரின் 15 தாக்குதல் படகுகள் நடமாடிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்படி 15 படகுகளிலும் நடமாடிக் கொண்டிருக்கும் தற்கொலைத் தாக்குதல் படையணியினரதும் குறிக்கோள் அப்பிராந்தியத்திலுள்ள சிறீலங்காவின் பிரதான துறைமுகங்கள் மீது தாக்குதல் தொடுப்பதும் மற்றும் அப்பிராந்தியம் ஊடாகச் செல்லும் சிறீலங்கா கடற்படைக்கப்பல்களைத் தாக்குவதுமே எனவும் மேற்படி இந்தியத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொண்ட தாக்குதலைப் போன்று சிறீலங்கா வடபிராந்தியத்திலும் அவ்வாறான ஒரு தீவிர தாக்குதலை நடத்துவதும் மேற்படி புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படையணியின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியப் புலனாய்வுத்துறை மேலும் பாக்கு நீரிணைப் பகுதியில் நடமாடிக் கொண்டிருக்கும் புலிகளின் தாக்குதல் படையணியினருக்குத் தமது தாக்குதல் இலக்கு பற்றி எதுவுமே தெரியாது எனவும் அவர்கள் குறித்த தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய தினத்திற்கு முன்தினமோ அல்லது அன்றைய தினமே அவர்களுக்கு அதுபற்றி புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தால் அறிவிக்கப்படுமெனவும் இந்திய புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் அனைத்திலும் செய்மதி தொழில்நுட்பத்தில் இயங்கும் தொலைத்தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் இவர்களின் தாக்குதலுக்கான கட்டளைகள் அத்தொடர்பு சாதனங்கள் மூலம் புலிகள் இயக்கத்தின் வன்னிப் பிரிவுத் தலைவர்களிடமிருந்தே கிடைப்பதாகவும் மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, தற்கொலைத் தாக்குதல்களுக்காக பாக்குநீரிணைப் பகுதியில் நடமாடிக் கொண்டிருக்கும் 15 கடற் கரும்புலிகள் படகுகளில் ஒன்றையே கடந்த 13 ஆம் திகதி தமிழ்நாடு கரையோரப் பிராந்தியத்தில் வைத்து இந்திய கடற்படையின் தென்பிராந்திய கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியதாகவும் அவற்றில் பயணம் செய்த கடற்புலிகளை இந்தியக் கடற்படையினர் கைது செய்ததுடன், அப்படகிலிருந்து பாரிய குண்டுத்தாக்குதல்களுக்குத் தேவையான பெருந்தொகையான அதிசக்தி வாய்ந்த ரீ.என்.ரி. மற்றும் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துப் பொருட்களையும் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கைப்பற்றப்பட்ட கடற் கரும்புலிகளின் படகில் பொருத்தப்பட்டிருந்த செய்மதித் தொழில்நுட்ப தொலைத்தொடர்பு சாதனத்தில் பதியப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாடு காவற்துறையினர் பரந்த அளவிலான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி கல்பிட்டி கடற்பிராந்தியத்தில் வைத்து சிறீலங்கா கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தினரின் இரண்டு படகுகளும் மேற்படியான தாக்குதல்களுக்காகவே வந்துள்ளதாகவும் அப்படகுகள் குறித்த கடற் கரும்புலிகளின் தாக்குதல் படையினரின் 15 தற்கொலைத் தாக்குதல் படகுகளில் இரண்டாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் புலிகள் இயக்கம் தீவிரமானதும் பயங்கரமானதுமான தாக்குதல்களை நடத்த தற்போது தயாராகி வருவதாகவே நடப்பு நிலைமைகளிலிருந்து தெரிய வருவதாக இந்தியப் புலனாய்வுத் தரப்பினரும் சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரும் முன்னெச்சரிக்கை செய்துள்ளனர்.

-Thinakkural-

http://www.thinakkural.com/news/2007/2/28/...s_page22295.htm

Edited by யாழ்வினோ

ஐயோ,,,,,,,,, தாராள மனசு இந்திய அதிகாரிகளுக்கு. அப்படி 15 படகுகளையும் ஒன்றுவிடாமல் எண்ணி அதனுள் ஏறி ஆராய்ந்து பார்த்தவர்கள் ஏன் எல்லாவற்றையும் இந்தியாவுக்கு பிடித்துக்கொண்டு சென்றிருக்கலாமே ?

சீ சீ சீ ..... அப்படி இருக்காது அதிகாரிகள் மலையாள மாந்திரிகத்தால் ஸ்கான் செய்து பார்த்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

'' சீ சீ சீ ..... அப்படி இருக்காது அதிகாரிகள் மலையாள மாந்திரிகத்தால் ஸ்கான் செய்து பார்த்திருப்பார்கள். "

பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள்.

சரியாகச் சொன்னீங்க மாதுகா. இவங்க இரண்டுபேரும் கணக்கிலை ரொம்ப புலியா இருக்கிறாங்க..

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'' சீ சீ சீ ..... அப்படி இருக்காது அதிகாரிகள் மலையாள மாந்திரிகத்தால் ஸ்கான் செய்து பார்த்திருப்பார்கள். "

பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள்.

சரியாகச் சொன்னீங்க மாதுகா. இவங்க இரண்டுபேரும் கணக்கிலை ரொம்ப புலியா இருக்கிறாங்க..<<<<

அதிலையாவது 'புலியாய் இருக்காங்களே என்று சந்தோஷப் படுங்கோ

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

  • கருத்துக்கள உறவுகள்

'' சீ சீ சீ ..... அப்படி இருக்காது அதிகாரிகள் மலையாள மாந்திரிகத்தால் ஸ்கான் செய்து பார்த்திருப்பார்கள். "

பாக்கு நீரிணையில் காத்திருக்கும் 15 கரும்புலி தாக்குதல் படகுகள்.

சரியாகச் சொன்னீங்க மாதுகா. இவங்க இரண்டுபேரும் கணக்கிலை ரொம்ப புலியா இருக்கிறாங்க..

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

படகு காத்திருப்பதை அறிந்தால் போய் குண்டை போட்டு அழிக்க வேண்டியதுதானே? இப்படி கதைகள் விடுவதன் நோக்கம் என்ன? அவ்வாறாயின் இது வெறும் புருடாவா? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கதை. மணிரத்தினத்தின் திரைக்கதையுடன் படமாக்கலாம். ஆனால் தமிழில் எடுத்தால் வசூல் அவ்வளவு நன்றாக இருக்காது. ஹிந்தியில் எடுத்தால் வசூல் அமோகமாக இருக்கும். ஹிந்திப்பட மார்க்கெட் பெரியது என்பதால் சொன்னேன். கதை தமிழகத்தை மையப்படுத்தி உள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்யலாம். அத்தோடு மெகா பட்ஜெட் படம் என்பதால் தமிழில் தயாரிப்பாளர்களும் முன்வருவார்களோ தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா. பொதுவாக கேரளக் கதைகள் வெற்றிபெறுபவைதான். இதுவும் வெற்றி பெறுவதற்கான சாத்தியமிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ,,,,,,,,, தாராள மனசு இந்திய அதிகாரிகளுக்கு. அப்படி 15 படகுகளையும் ஒன்றுவிடாமல் எண்ணி அதனுள் ஏறி ஆராய்ந்து பார்த்தவர்கள் ஏன் எல்லாவற்றையும் இந்தியாவுக்கு பிடித்துக்கொண்டு சென்றிருக்கலாமே ?

சீ சீ சீ ..... அப்படி இருக்காது அதிகாரிகள் மலையாள மாந்திரிகத்தால் ஸ்கான் செய்து பார்த்திருப்பார்கள்.

குறும்பு ஜாஸ்திதான் உங்களுக்கு

நல்ல கதை. மணிரத்தினத்தின் திரைக்கதையுடன் படமாக்கலாம். ஆனால் தமிழில் எடுத்தால் வசூல் அவ்வளவு நன்றாக இருக்காது. ஹிந்தியில் எடுத்தால் வசூல் அமோகமாக இருக்கும். ஹிந்திப்பட மார்க்கெட் பெரியது என்பதால் சொன்னேன். கதை தமிழகத்தை மையப்படுத்தி உள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்யலாம். அத்தோடு மெகா பட்ஜெட் படம் என்பதால் தமிழில் தயாரிப்பாளர்களும் முன்வருவார்களோ தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா. பொதுவாக கேரளக் கதைகள் வெற்றிபெறுபவைதான். இதுவும் வெற்றி பெறுவதற்கான சாத்தியமிருக்கு.

ஏன் கஸ்தூரி' ராஜா... நீங்க இயக்கிற எண்ணம் ஏதாச்சும் இருக்கோ? பாக்கிறது, கேக்கிறது எல்லாத்தையும் எல்லா படமாக்க நினைக்கிறியள். ரொம்ப ரு மச் :angry:

படகு காத்திருப்பதை அறிந்தால் போய் குண்டை போட்டு அழிக்க வேண்டியதுதானே? இப்படி கதைகள் விடுவதன் நோக்கம் என்ன? அவ்வாறாயின் இது வெறும் புருடாவா? :o

அவனவனுக்கு என்னத்திலை எல்லாம் சுகம் காணுறது என்டு விபஸ்தையே இல்லாமப்போச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறும்பு ஜாஸ்திதான் உங்களுக்கு

ஏன் கஸ்தூரி' ராஜா... நீங்க இயக்கிற எண்ணம் ஏதாச்சும் இருக்கோ? பாக்கிறது, கேக்கிறது எல்லாத்தையும் எல்லா படமாக்க நினைக்கிறியள். ரொம்ப ரு மச் :angry:

என்னுடைய திறமைக்கு ஏற்றமாதிரியும் இளைஞர்களுக்குத் தேவையான விடயங்கள் எதுவுமே இந்தக் கதையில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் மணிரத்தினத்தைத் தெரிவுசெய்தேன். மணிரத்தினம் இயலாதென்றால் நானே இறங்கும் எண்ணமும் உள்ளது. நாம் எப்போதுமே கதையைப்பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது. கதை கிடக்குது தன்பாட்டில.

ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது----- என்று படத்திற்கு பெயர் வைக்கலாம்.

னடிகர்கள்- தமிழ் நாட்டில் சிங்கள அரசால் வாங்கபட்ட அதிகாரிகள்(பூச்சாண்டிகள்)

இயக்கம்- தயாரிப்பு- இலங்கை

தயாரிப்பு நோக்கம் : தன்னால் பாதுகாக்கமுடியாததை இந்தியா மூலம்(மாட்டி)

சாதிக்கலாம் என்றுதான்.

எங்கோ மறைந்தனர் எதிரிகள் எமது தமிழினம் ஒன்றாதல் கண்டு(மிரண்டு).

என்ன 15 படகுகளாமா? படகுகள் நிறையக்குண்டாமா? 2 படகுகள் மூழ்கடிக்கப் பட்டதாமா?

மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து செத்த மீனல்லவோ மிதக்குதாம். படகுகளில் பிடிபட்டவர்கள்

விடுதலைப்புலிகளல்ல என தமிழ்நாட்டின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி அறிக்கை விட்ட

தாக தீபம் தொலைக்காட்சி கூறியது. அதற்குப்பின்பும் கதைவடுகிறார்கள். தமிழ்ச்செல்வனின்

பேட்டியை வாசித்துப் பாருங்கள் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவத்தின் படகுகளினால் கொல்லப்படும் அப்பாவி தமிழக மீனவர்கள் பற்றிக் கவலையில்லை. கொல்லும் சிங்கள இராணுவத்தினை தடுப்பதில்லை(எத்தனை படகில் வந்து சுடுகிறார்கள் என்பது கூடத் தெரியாது). ஆனால் கடலில் உள்ள கரும்புலிகளின் படகுகளின் எண்ணிக்கை மட்டும் சரியாகத் தெரியுது.

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.