Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிகுந்த மரியாதையுடன் அமெரிக்கத் தூதுவருக்கு...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகுந்த மரியாதையுடன் அமெரிக்கத் தூதுவருக்கு...!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் இலங்கை இனநெருக்கடி தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. குறிப்பாக இனநெருக்கடிக்கு இராணுவத்தீர்வு காண முடியாது என்ற கருத்தை அண்மைக்காலமாக அவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று சந்தர்ப்பங்களில் அமெரிக்கத் தூதுவர் இராணுத்தீர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு கடந்த மாத இறுதியில் காலியில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிளேக், இலங்கை நெருக்கடிக்கு இராணுவத்தீர்வு இருக்க முடியாது என்ற தடுமாற்றத்துக்கு இடமில்லாத நிலைப்பாட்டைத் தனது நாடு கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். அடுத்ததாக, போர் நிறுத்த உடன்படிக்கை ஐந்து வருடங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு தேசிய சமாதானப் பேரவை கொழும்பில் கடந்தவாரம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பிளேக், அரசியல் தீர்வு காணப்படுவதற்கு இலங்கைக்கு உற்சாகமளிப்பதற்கு அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் சாத்தியமான சகல உதவிகளையும் செய்யத் தயாராயிருப்பதாக அறிவித்தார். முன்றாவது சந்தர்ப்பம் இந்திய ஆசிய செய்திச் சேவைக்கு (ஐஅ?கு) அவர் கடந்த திங்களன்று அளித்திருக்கும் ஒரு பேட்டியாகும்.

இந்தப் பேட்டியிலே அமெரிக்கத்தூதுவர் இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் விடயத்தில் முன்னைய சந்தர்ப்பங்களைவிட மிகவும் உறுதியாக தனது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கின்றார். அத்துடன், தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளைத் திருப்தி செய்யக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் மாத்திரமே இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் அடிப்படையாக அமைய முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். `இராணுவத்தீர்வு சாத்தியமென்று தென்னிலங்கையில் பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள். மிகவும் மரியாதையுடன் கூறுகிறோம்.இது எமக்கு இணக்கமானதல்ல. தமிழச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அரசியல் தந்திரோபாயம் ஒன்று இல்லாமல் விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் தோற்கடிக்க முடியாது. விடுதலைப்புலிகள் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடிய கணிசமான ஆற்றலைத் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இராணுவத் தந்திரோபாயங்களில் நாட்டம் காட்டினால் பெரும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும். நம்பகத்தன்மையான அரசியல் செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டியதே முக்கியமானதாகும். இராணுவத்தீர்வில் இராணுவம் நம்பிக்கை கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தீர்வொன்றை காண்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கிறது. தற்போதைய தருணத்தில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதுவுமேயில்லை. விடுதலைப்புலிகள் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குத் தயாராயிருக்கிறார்களா என்பதைப்பார்ப்பதற்கு அரசாங்கம் தான் விரைவில் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க வேண்டும்' என்று பிளேக் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கத் தூதுவரைப் பொறுத்தவரை, அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்துவக் குழுவின் செயற்பாடுகளில் மிதமிஞ்சிய நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார் என்று நாம் முன்னரும் ஒருதடவை எமது ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். அந்தப் பிரதிநிதித்துவக் குழுவினால் முன்வைக்கப்படக்கூடிய யோசனைகளை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உருப்படியான அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என்பது பிளேக்கின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அமெரிக்கத் தூதுவர் நம்புகின்ற அளவுக்கு அரசாங்கம் அரசியல் தீர்வில் பற்றுறுதி கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எம்மால் கேட்காமல் இருக்கமுடியவில்லை. சர்வ கட்சி மகாநாட்டைக் கூட்டிய நாள் தொடக்கம் இன்றுவரை ஜனாதிபதி ராஜபக்ஷவோ அல்லது அவரது அரசாங்கமோ தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மானசீகமாக மேற்கொள்ள வில்லை என்பதே உண்மை. அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதற்குப்பதிலாக, தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தை மேலும் கூறுபடுத்துவதற்கு உதவக்கூடிய தந்திரோபாயங்களே முன்னெடுக்கப்பட்டுவருகின்ற

தினக்குரல் கொஞ்ச நாளாக அமெரிக்க தூதரை துரத்தி, துரத்தி வால் பிடிக்கிறார்கள். தமிழீழம் என்றொரு நாட்டை தன்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியாது என்று சொன்ன Robert O Blake இற்கு தமிழ் மக்கள் மரியாதை கொடுக்க வேண்டுமா? தினக்குரல் நாகபாம்பை தலையில் வைத்து நாட்டியம் ஆடத்தொடங்கியுள்ளது. இதெல்லாம் நல்லதுக்கில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினக்குரல் நாகபாம்பை தலையில் வைத்து நாட்டியம் ஆடத்தொடங்கியுள்ளது.

கொன்னுட்டீங்க மாப்பு! :o :o :D

  • கருத்துக்கள உறவுகள்

பெரியண்ணாவின் செய்திகளுக்கு கருத்து கூறி நேரத்தை விரயமாக்குவதைவிட ஒதுங்கி இருப்பது தான் நல்லதென்று எனக்கு தோன்றுது.

நண்றி,

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

மாப்ஸ், இங்கை ஒருதர் என்னவோ சொல்லுறார் எனக்கு விளங்கேல்லை- உங்களுக்கு ஏதும் விளங்குதாண்டு பாருங்க.

கவியரசர் தங்களுக்கே விளங்காவிட்டால் தமிழை அரையுங், குறையுமாகப் படித்த எனக்கெங்கே இது விளங்கப்போகிறது. யாராவது விளக்கம் எழுதிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்! எழுத்துப்பிழைகளினூடாக அண்ணா ஏதோ சங்கேத பாசையில் உரையாடுகிறார் போல இருக்கிறது! :o:o:D

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.