Jump to content

சிரிக்க சிந்திக்க


Recommended Posts

அமைச்சர் பதவி

வேட்டையாடுவத்ற்குப் புறப்பட்ட மன்னன் வானம் மேகமூட்டமாய் இருப்பதைப் பார்த்தார். அவர் தனது அமைச்சைரப் பார்த்து "இன்று மழை வருமா" என்று கேட்டார், மன்னர் பெருமான் இன்று மழை வராது என் பேச்சை நம்பி வேட்கைக்குப் போங்கள்' என்று அமைச்சர் கூறினார்.

மன்னரும் வேட்டைக்கும் புறப்பட்டுச் சென்றார். காட்டில் ஒரு விவசாயி தனது கழுதயை ஓட்டிக்கொண்டு வந்தான். "இன்று மழை வருமா என்று" விவசாயியிடம் மன்னர் கேட்டார். 'இன்று நிச்சயமாக மழை வரும் நீங்கள் அரண்மனைக்குப் போங்கள்' என்றான் விவசாயி. அதைப் பொருட்டுப் படுதாமல் மன்னர் வேட்டைக்குச் சென்றார். சிறுது நேரத்தில் கடுமையாக மழை பெய்து மன்னர் கடுமையாக நைனைந்து விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. 'இன்று மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்" என்று மன்னர் கேட்டார். மழை பெய்யும் என்று எனக்குத் தெரியாது ஆனல் என் கழுதைக்குத் தெரியும். கழுதை தனது காதுகளை முன்னுக்கு நீட்டினால் மழை பெய்யும் என்று உண்மை எனக்குத் தெரியும்' என்றான் விவசாயி. அரண்மனை திரும்பிய மன்னர் தந்து அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு விவசாயியின் க்ழுதையய் அமைச்சராக்கிவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசரின் முடிவு சரியே.அமைச்சராவதற்க்கு இப்ப களுதைகளுக்குத்தானே முழுத்தகுதியும் இருக்கு. :lol:

Link to comment
Share on other sites

இலங்கை அரசரும் இப்போ இதைதான் பண்னிட்டு இருக்காரு, 100 கழுதைய வச்சு அரசாங்கத்தை ஓட்டிடு இருக்காரு Mr.மகிந்து

Link to comment
Share on other sites

நான் அமைச்சராக இருந்திருந்தால் இன்று மழை வருமா என்று அரசன் கேட்டதற்கு பொறுங்கள் மன்னா கழுதையிடம் கேட்டுச் சொல்கிறேன் என சொல்லி இருப்பேன்! :lol:

Link to comment
Share on other sites

படித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம் செய்தார்கள். இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள். படித்தவனுக்கா இல்லை படிக்காதவனுக்க பொது அறிவு அதிகம்.....? இதுதான் பந்தயம். தோற்றால் பணம் கொடுக்கவேண்டும் என்று முடிவானது. ""எனக்கும் படிப்பறிவில்லை நீதான் படித்தவன், ஒரு கேள்வி கேட்டு நான் தோற்று விட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகின்றேன்! நீ படித்தவன் என் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீ எனக்கு இருநூறு ரூபாய் தரவேண்டும் சரியா"" என்றான். படிக்காதவன் கேள்வியை கேட்கச் சொன்னான் படித்தவன்.

"ஆறு கால்,இரண்டு வால்,ஒரு கொம்பு இருக்கும் மிருகம் எது" என்று கேட்டான் படிக்காதவன். படித்தவன் நீண்ட நேரம் யோசித்தான், அவனிற்க்கு தலை சுத்தியது. விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியை ஒத்துக் கொண்டான்.

ஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன். ""அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு"" என்று கேட்டான் படித்தவன். ""இந்தா நூறூ ரூபாய்"" என்று திருப்பி நீட்டினான் படிக்காதவன். ""எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது"" என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன் :rolleyes: :P

Link to comment
Share on other sites

  • 1 month later...

அந்த கணவனுக்கு தன் மனைவியின் கேட்கும் திறன் பற்றி சநேகம் இருந்தது தொலைவில் நின்று என்ன சொன்னாலும் காதில் வாங்கி பதிலுரைக்க மாட்டேன் என்கின்றாள், அவனுக்கு கவலையாக போய்விட்டது என்னடா நம் மனைவி இப்படி ஆகி விட்டாளே, இதை யாரேனுமறிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று. சரி மருத்துவரிடம் யோசனை கேட்கலாமென செல்கின்றான். மருத்துவரும் இப்படி பொத்தம்பொதுவாக சொன்னால் எப்படி, எவ்வளவு தூரத்தில் அவரது காது சரியாக கேட்க்கவில்லை? அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது? மருத்துவர் சொன்னார் முதலில் வெகு தொலைவில் நின்று ஏதாவது கேளுங்கள், பதிலளிகின்றாரா என்று பாருங்கள், பிறகு படிப்படியாக தூரத்தை குறைத்து கன்டுபிடியுங்கள் என்றார். க்ணவனும் வீடுக்கு வந்து முக்கிய வாயிலில் நின்று, சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதி வரவில்லை.

பிறகு உள்ளே வந்து நுழைவாயிலில்நின்று சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை

பிறகு ஹாலின் உள்ளே வந்து "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை. அவ்ள் சமயல்றையில் இருப்பதை கவனித்து, சமயலறையின் கதவருகே நின்று "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை.

அவனுக்கு ரெம்ப கவலையாகி போயிற்று என்னட நம் மனைவி ரெம்ப செவிடாகி போய் விட்டாளே என்று, பிறகு சமயலறையின் உள்ளே நுழைந்து தன் மனைவியின் அருகேபோய் நின்று ஆத்திரமாக கத்தி கேட்கின்றான்.

"இன்று மதிய உணவு என்ன"??

அவளிடமிருந்து பதில் வருகின்றது "முட்டாள் கனவனே ஏற்கனவே மூன்று முறை நீ கேட்டதுக்கு புளியோதரை என்று சொனேனே"

அவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கணவனுக்கு தன் மனைவியின் கேட்கும் திறன் பற்றி சநேகம் இருந்தது தொலைவில் நின்று என்ன சொன்னாலும் காதில் வாங்கி பதிலுரைக்க மாட்டேன் என்கின்றாள், அவனுக்கு கவலையாக போய்விட்டது என்னடா நம் மனைவி இப்படி ஆகி விட்டாளே, இதை யாரேனுமறிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று. சரி மருத்துவரிடம் யோசனை கேட்கலாமென செல்கின்றான். மருத்துவரும் இப்படி பொத்தம்பொதுவாக சொன்னால் எப்படி, எவ்வளவு தூரத்தில் அவரது காது சரியாக கேட்க்கவில்லை? அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது? மருத்துவர் சொன்னார் முதலில் வெகு தொலைவில் நின்று ஏதாவது கேளுங்கள், பதிலளிகின்றாரா என்று பாருங்கள், பிறகு படிப்படியாக தூரத்தை குறைத்து கன்டுபிடியுங்கள் என்றார். க்ணவனும் வீடுக்கு வந்து முக்கிய வாயிலில் நின்று, சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதி வரவில்லை.

பிறகு உள்ளே வந்து நுழைவாயிலில்நின்று சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை

பிறகு ஹாலின் உள்ளே வந்து "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை. அவ்ள் சமயல்றையில் இருப்பதை கவனித்து, சமயலறையின் கதவருகே நின்று "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை.

அவனுக்கு ரெம்ப கவலையாகி போயிற்று என்னட நம் மனைவி ரெம்ப செவிடாகி போய் விட்டாளே என்று, பிறகு சமயலறையின் உள்ளே நுழைந்து தன் மனைவியின் அருகேபோய் நின்று ஆத்திரமாக கத்தி கேட்கின்றான்.

"இன்று மதிய உணவு என்ன"??

அவளிடமிருந்து பதில் வருகின்றது "முட்டாள் கனவனே ஏற்கனவே மூன்று முறை நீ கேட்டதுக்கு புளியோதரை என்று சொனேனே"

அவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.

hehe..இது நல்லா இருக்கே.... :P :P

Link to comment
Share on other sites

hehe..இது நல்லா இருக்கே.... :P :P

ஆம்பிளைகள் பாவம் உங்ககிட்ட மாட்டு பட்டு படுற பாடி பெரிய பாடு :lol:

Link to comment
Share on other sites

ஆம்பிளைகள் பாவம் உங்ககிட்ட மாட்டு பட்டு படுற பாடி பெரிய பாடு :lol:

தலை இப்ப அதுக்கு ஏனப்பா பீல் பண்ணுறீர் அதுக்கு தானே நானிருக்கிறேன்

:lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.

நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:

இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.

ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்களுக்கு குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”

Link to comment
Share on other sites

சாகிற நேரத்திலையும் லொள்ளுவிட்டு போகவில்லை

Link to comment
Share on other sites

சாகிற நேரத்திலையும் லொள்ளுவிட்டு போகவில்லை

நம்ம சிட்னி சின்னப்பு போல <_<

Link to comment
Share on other sites

நம்ம சிட்னி சின்னப்பு போல <_<

சின்னப்புவை விட தூயவன் சாமி மாதிரி

:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.