Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவாகுழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக சந்தேகம்

Featured Replies

ஆவாகுழு வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுவதாக சந்தேகம்

 

ruwan-gunasekara_08082017_NSS_CMY.jpg

கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றி வளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெளிநாடொன்றிலிருந்தே 'ஆவா' குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளபோதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இதனடிப்படையில் 'ஆவா' குழுவுக்கு பணம் வழங்குவது யார்? என்பதைக் கண்டறிய பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேசத்தில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மூன்று தினங்களாக யாழ்ப்பாணத்தின் வடமராட்சி மற்றும் துன்னாலை பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில், இருவரும் கொழும்பில் நால்வருமென ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோப்பாய் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகத்தின்பேரில் ஏற்கனவே ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைதாகியுள்ளபோதும் சம்பவ தினத்தன்று 14 பேர் சமுகமளித்திருந்ததாகவும் எஞ்சியவர்கள் கைது செய்யப்படும் வரை விசாரணைகளும் சுற்றிவளைப்புக்களும் தொடருமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரை கைது செய்யப்பட்டிருப்பவர்கள் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈயின் உறுப்பினர்களா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லையென சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர், அது பற்றி அறிய, அவர்களின் பெயர் பட்டியல் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் 'ஆவா' குழுவினர் ஆயுதங்கள் பாவித்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென்றும் அவர்கள் பெருமளவில் கத்தி, வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி வந்தமையே ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோப்பாய் வாள் வெட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மூவர் கொழும்பு புறக்கோட்டை பகுதியிலும் ஒருவர் மட்டக்குளியிலும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்புக்கு வந்ததற்கான காரணம் மற்றும் 'ஆவா' குழுவின் நோக்கம் ஆகியவற்றை கண்டறியும் நோக்கில் சந்தேக நபர்களிடமிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பிரதான சூத்திரதாரியான சத்தியவேல் நாதன் நிஷாந்தன் அல்லது நிஷா விக்டர் என்றழைக்கப்படுபவர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் காலை புறக்கோட்டை பஸ் தரிப்பிடத்தில் கைது செய்யப்பட்டனர். பிரதான சூத்திரதாரி 2014 ஆம் ஆண்டிலிருந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது அவர் 2014 இல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளார், 2015 இல் வீடு ஒன்றை சேதப்படுத்தியமை,2016 இல் சுன்னாகம் புலனாய்வுப் பிரிவினர் இருவரை காயப்படுத்தியமை, இரண்டு கடைகளை சேதப்படுத்தியமை,2014 இல் கடையிலிருந்த ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியமை, கோப்பாய் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வாளால் வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரதான சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்படுவரென்றும் அவர் தெரிவித்தார்.

பிரதான சூத்திரதாரியான நிஷா விக்டர், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராஜ்குமார் ஜெயக்குமார் அல்லது வினோத் எனப்படுபவரும் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த குலேந்திரன் மனோஜித் அல்லது மனோஜ் என்றழைக்கப்படுபவரும் புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் போல் என்பவர் மட்டக்குளி பிரதேசத்திலும் இனுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிகாந்தன் குகதாஸ் மற்றும் கொக்குவில்லைச் சேர்ந்த அர்ஜூனன் பிரசாந்த் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும் கைது செய்யப்பட்டனர்.

 

http://www.thinakaran.lk/2017/08/09/உள்நாடு/19180

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.