Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இங்கே மாடுகளுக்கு அப்படியான குறிகள் எதுவும் இல்லை என்று வாதிட்டார்கள். பின்பு நிதர்சன் பட்டிக்குறி இடுவார்கள் என்று சொன்னார்.

இப்பொழுது வேல் குறி இடுவதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நிதர்சன்! நீங்கள் வேளாள சமூகம் மட்டும் வாழும் பகுதியில் வாழ்ந்திருக்கிறீர்கள்: அதனால் அவர்களுடைய மாடுகளில் வேல் குறியை கண்டிருக்கிறீர்கள். வேளாள சமூகம் மட்டும் வாழுகின்ற பகுதியில் வாழ்ந்ததால்தான் உங்களுக்கு "சாதிப் பிரச்சனை" பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் ஈழத்தில் 2004 வரை சாதி பற்றியே அறியவில்லை என்கிறீர்கள். உங்களுக்கு மாடுகளில் உள்ள குறிகள் பற்றி தெரிந்திருக்க நியாயம் இல்லை.

சரி! இன்னொரு தகவல் சொல்கிறேன். இதையாவது ஒத்துக் கொள்கிறீர்களா என்று பார்ப்போம்

புதுக்குடியிருப்பில் இருந்து சில மைல் தூரத்தில் முள்ளிவாய்க்கால் என்று ஒரு இடம் இருக்கிறது. அப் பகுதியில் வேளாள சமூகமும் கடற்தொழிலாள சமூகமும் அதிகமாக வாழ்கிறார்கள். வேளாள சமூகம் வாழுகின்ற பகுதியை "வெள்ளாம் முள்ளிவாய்க்கால்" என்றும் கடற்தொழிலாள சமூகம் வாழுகின்ற பகுதியை "கரையாம் முள்ளிவாய்க்கால்" என்றும் அழைப்பார்கள்.

நீங்கள் அங்கு வாழுகின்று பகுதிக்கு கடிதம் போடுகின்று போது வெறுமனே முள்ளிவாய்க்கால் என்று எழுதினால் போய்ச்சேராது. எந்த முள்ளிவாய்க்கால் என்று எழுத வேண்டும்.

நான் இது போன்ற தகவல்களை சொல்வதற்கு காரணம், எம்மிடம் உள்ள அழுக்குகளை ஒத்துக் கொள்ளவம் இனம் காணவும் நாம் பழக வேண்டும். அந்தப் பக்குவம் இருந்தால்தான், அழுக்குகளை களைவது குறித்தும் பேச முடியும்.

"சாதி இப்பொழுது இல்லை" என்று பீலா விட்டுக்கொண்டிருந்தால், சாதி தொடர்ந்தும் இருந்தே தீரும்.

சபேசன்,

நீங்கள் சொன்னதும் அவசரமாய் நானும் தற்போது 2006 ல் அதுவும் ஐப்பசி மாதமளவில் கனடா வந்த முள்ளியவளையை சேர்ந்த ஒருவரிடம் தொலைபேசியில் கேட்டேன். அவர் சிரிக்கிறார். 2006 ஐப்பசிக்கு பிறகு யாரும் அப்பி செய்தாங்களோ தெரியாதாம் என்று. தான் இருக்கும் வரை அப்பிடி தனக்கு தெரியாதாம். அவரும் நான் சொன்ன பட்டிக்குறியையே அவர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் போல என்கிறார்.

அடுத்து நான் வேல் குறி மட்டும் பயன்படுத்தப்படுத்துவதாய் சொல்லவில்லை. எங்களிடம் மாடுகள் நின்றன எங்கள் பட்டி க்குறியாக நாங்கள் X எனும் அடையாளத்தை மாட்டின் கன்னத்தின், ஈடுவது வழமை. இதற்க்கும் சாதிக்கும் என்ன தொடர்பு ஏதாவது இழுத்து வந்து விடாதீர்கள்.

நீங்கள் சொல்வது போல, முள்ளி வாய்க்கால் பகுதியில் இரு கிராமங்கள் இருக்கின்றன. ஆனால் அது பண்டைய காலத்தில் வைக்கப்பட்ட பெயர் என அவர்கள் சொல்கின்றனர். ஆனால் தங்களுக்குள் சாதிகள் பாரட்டப்படவில்லை என்று மேலே நான் சொன்ன நபர் சொன்னார். ஆக மொத்தம் அது இன்று வைக்கப்பட்ட பெயர் அல்ல. பண்டைய காலத்தில் வைக்ப்பட்ட பெயர் இன்றும் தொடர்கின்றது. ஆனால் அதை மாற்றாது இருப்பது துரதிஸ்டமே ஆனால் அங்கு சாதி பார்க்கப்படுவதில்லை என்று அவர்கள் சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் கதையை சபேசன் விட்டவுடன், எனக்கும் எவை எவை, சாதி அடையாளங்களாக இருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால் ஊர்பெயர்களின் சாதி தழைத்து ஓடுகின்றது

வடமராட்சிக் கிழக்கில் செம்பியன் பற்று என்று ஒரு இடமிருக்கின்றது. செம்பியன் என்பது மீன்பிடிக்கின்றவர்களைக் குறிக்கும். ஐயோ! ஜாதிச் சொல்!

வண்ணாத்திப் பாலம் என்று சாவச்சேரிக்கு புத்தூர் ஊடாக போற பாதை கிடக்கு. அதுவும் ஒரு வகை ஜாதிச் சொல். இதையும் நீக்க வேணும். அப்படியே வண்ணாத்தீப்பூச்சி என்றும் இருக்கின்ற பெயரையும் நீக்க வேணும்.

கரை என்று வந்தாலும் அது ஜாதி எண்டு அர்த்தம். கரைவலை, சீலைக்கரை, குளக்கரை, கடற்கரை என்று யாரும் சொல்லக் கூடாது.

வன்னி மக்கள் விவசாயத்தை, வெள்ளாண்மை எண்டு தான் சொல்கின்றவை, வேளாண்மையை வெள்ளாண்மை என்று சிதைச்சு சொல்வதற்குக் காரணம், அங்கே வெள்ளாளச் சாதியின் ஆதிக்கம் தான். அப்படித் தான், இலுப்பைக்கடவை - பூநகரி வீதியில் வெள்ளாங்குளம் என்று இடம் இருக்கு. அதையும் இந்த வெள்ளாச்சாதிகள் விட்டு வைக்கவில்லை.

அப்படியே, பறையினாலங்குளம் எண்டு இருக்கின்ற இடம் கூட ஜாதியடிப்படையில் வைச்சிட்டார்கள். அதையும் மாத்த வேணும்.

நளன் என்று இருக்கின்ற பார்ப்பானக் கதை கூட, யாழ்பாணத்துச் சாதி முறையை குத்திக்காட்டுவதற்காக அக்காலத்திலேயே திட்ட மிட்ட சதி. நளவெண்பா பற்றிக் கதைப்பவர்கள் ஒன்று பாப்பாணியாக இருக்க வேண்டும். அல்லது, யாழ்பாண வெள்ளாள ஜாதி வழி வந்ததாக இருக்க வேண்டும்.

இதையும் மீறி, உலகத்தில் ஆங்கிலத்தில் கூடத் தொழில் பெயரைச் சொன்னால் கூட அதையும் தடை செய்யவேண்டும்.

தூயவன் சொல்லத்தான் எனக்கு சில யோசனை வருகிறது. யாழ்ப்பாணம் என்று பெயர் வைக்கிறதே பிழை . ஏனென்றால் இது பாணர் என்ற தொழிற்பகுதியினரால் வைக்கப்பட்ட பெயராக இருக்கவேண்டும். அது ஏன் யாழ் என்ற கருவிக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அவர்களின் பெயரில் பெயரைவைக்கவேண்டும். இதனை மாற்றவேண்டும். :lol:

சபேசன் சொல்கின்ற படி அழுக்கு இருப்பதை ஏற்றுக்கொண்டால்தான் அதை போக்குவதை பற்றி சிந்திக்கலாம். சரி அப்படியே சாதியம் இருக்கின்றது என வைத்துக்கொள்வோம். அதற்கு சபேசன் என்ன தீர்வு வைத்திருக்கிறார். அவர் சொல்வாரா?

சாதியத்தின் கோரம் குறைவடைந்து வருகின்ற காலத்தில் அதற்கு அலங்காரம் போட்டு மேடை அமைத்து பேசுவதால் தீர்த்துவிடமுடியுமா? காலங்காலமாக புரையோடியிருக்கும் ஒரு சமூக பிரச்சனையை படிப்படியாகவே மாற்றமுடியும். அதைவிடுத்து ஏதாவது குறுகிய கால வேகப்பாய்ச்சல் திட்டம் இருந்தால் அதனை சபேசன் முன்வைக்கவேண்டும்? செய்வாரா?

அதைவிடுத்து தமிழ் தேசியம் என்ற குடையில் வளரும் தமிழ் சமூகத்தை பிளவுபடுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதி பார்க்கப்படுவது வேறு

சாதி இருப்பது வேறு

நானும் அவ்வப்போது இடையில கேட்டுக் கேட்டுப் பாக்கிறன். சாதி எண்ணக்கருவை இல்லாதொழிக்க செயற்பாட்டு ரீதியாக என்ன செய்யலாம் எண்டு.

பாப்பம்

முள்ளிவாய்க்கால் என்ற உதாரணம் சொல்லப்பட்டதன் காரணம், ஒரு ஊர் சாதியின் அடிப்படையில் இரண்டு பெயர்களில் அழைக்கப்படுவதை சுட்டிக்காட்டுவதற்குத்தான்.

முள்ளியவiளை பற்றி நான் பேசவில்லை. முள்ளியவளை முள்ளிவாக்கால் என்ற இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் இருக்கிறது.

நான் முள்ளிவாய்க்கால் பற்றிக் கேட்க, நீங்கள் முள்ளியவளை பற்றி பேசுகிறீர்கள்.

ஆயினும் முள்ளிவாய்க்கால் பாரம்பரியமாக அப்படி அழைக்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி

மாட்டில் உள்ள சாதிக் குறிகள் தொடைப் பக்கத்தில் இடப்படும்.

ஆரிய மொழியினால் தான் தமிழ் இனம், தமிழ் நாடு, தமிழ் மொழி எல்லாம் சிதைந்தது என்ற வரலாறை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். ஆயினும் ஆரியம் முதலில் சிதைத்தது தமிழ்மொழியை தான். மொழியை சிதைத்து இனத்தை சிதைத்து அந்த சிதைப்பினூடாகத்தான் எம்மிடம் இருந்த இறைமையை ஆட்சியை கைப்பற்றியது என்பது வரலாறு படித்தவர்களிற்கு நன்கு விளங்கும்.

இன்று பிற்கால சோழர் கால இராஜராஐ சோழன் காலத்தை தமிழரின் பொற்காலமென போற்றுகின்றனர். உண்மையில் இராஜராஐ சோழன் காலத்து ஆட்சி, அந்த சோழப்பேரரசின் ஆட்சி உலகத்தில் 130,000-க்கும் மேற்பட்ட படைகளை கொண்ட மிகப்பெரிய வல்லரசாக இருந்தது என்பது உண்மை. ஆனால் தமிழர் தமிழை கற்கின்ற சூழல் அந்த ஆட்சியில் இருக்கவில்லை.

மதக்கல்வியும் வட மொழிக்கல்வியும் தான் அங்கு இருந்தது. அந்தளவுக்கு அந்த ஆட்சி உரிமை இருந்த அந்தக் காலத்தில் மொழியையும் இனத்தையும் சிதைத்து பிற்காலத்திலே எமது உரிமையினை ஆட்சியையும் அவர்கள் பறிக்கின்ற சூழல் ஏற்பட்டது.

சோழப் பேரரசு வீழ்ச்சி அடைந்ததை பார்க்கின்ற போது அவர்களின் இனம் இனக்கலப்பிற்குள்ளாகி பிற்கால சோழர்களது திருமணக் கலப்பினால் சோழராட்சி சிதைவுற்றது. அதனால் தான் தமிழாட்சி சிதைந்தது திட்மிட்ட வகையில் எமது மொழி இனம் படிப்படியாக சிதைந்தது. இந்நிலையில் நாம் விழிப்பாக இருந்து எமது மொழியை காப்பதனூடாகத்தான் விழிப்பை பெருக்கி அதனூடாகத்தான் எமது நாட்டை மீட்கக்கூடியதாக இருக்கின்றோம்.

இன்று ஒரு விடுதலைப்போரினை நடாத்தி கொண்டிருக்கின்றோம். அத்துடன் மொழியை காக்கின்ற பணியுடன் மொழியை வளர்க்கின்ற பணியையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. மொழியை வளர்ப்பதனூடாக தமிழரின் இன அடையாளத்தை காத்து தமிழினத்தை அழிவுக்குள்ளாகாமல் தடுப்பதனூடாகத்தான் இன விடுதலையை அடையக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த தமிழ்ச் சங்கத்தின் பணி தமிழ் ஆர்வலர்களின் பணி மிகுதியாக இருக்கின்றது.

இன்றைய சூழல் பாடசாலை மாணவர்களிற்கு இன உணர்வை, மொழி உணர்வை நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் இன்றைய இந்த தேசிய விடுதலையை வென்றெடுப்பதற்கு உலகமே வியக்கின்ற தமிழரின் தேச அடையாளம் என்றிருப்பது இந்த போராட்டத்தின் மூலம்தான் செயற்பாட்டின் மூலம்தான். உலகத்தில் தமிழன் என்றால் வெளிநாட்டு ஆங்கில அகராதியில கூறியிருக்கின்ற சூழலை மாற்றி ஒரு போராளி என்று தமிழரை குறிப்பிட்ட ஓரு சூழல் இன்று எமது விடுதலைப் போராட்டத்தின் ஊடாகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.