Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவரை தள்ளிய விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை

Featured Replies

நடுவரை தள்ளிய விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை

 

பார்சிலோனா அணியுடனான ஆட்டத்தின் போது நடுவரை பிடித்து தள்ளியதால் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடுவரை தள்ளிய விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை
 
மாட்ரிட்:

பார்சிலோனா அணியுடனான ஆட்டத்தின் போது நடுவரை பிடித்து தள்ளியதால் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் ஸ்பானீஸ் சூப்பர் லீக் தொடரில் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதிய முக்கியமான போட்டி நேற்று நடைபெற்றது. இதில், 3-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டினோ கள நடுவரிடம் மஞ்சள் அட்டை பெற்றார்.

201708150304056084_1_ronaldo2._L_styvpf.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் ரொனால்டினோ கோல் அடித்ததும் தனது ஜெர்சியை கழற்றி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். விதிமுறைகளின் படி இது தவறு என்பதால் கள நடுவரிடம் இரண்டாவது மஞ்சள் அட்டையை அவர் பெற்றார். இரண்டு மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் களத்திலிருந்து வெளியேறுமாறு நடுவர் கூறினார்.

இதனால், நடுவருக்கும் ரொனால்டோவுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. அப்போது, நடுவரை ரொனால்டோ பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. சிவப்பு அட்டை பெற்றதால் ஏற்கனவே அவரால் ஒரு போட்டியில் விளையாட முடியாத நிலையில், நடுவரை தள்ளிய விவகாரத்தில் மேலும், நான்கு போட்டிகளில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து போட்டிகளில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அவரால் மேல் முறையீடு செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/15030402/1102423/Cristiano-Ronaldo-Real-Madrid-forward-suspended-for.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

நடுவரை தள்ளிய விவகாரம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் விளையாட தடை

நல்லவிசயம்.....தலைக்கனத்துக்கும் ஒரு அளவிருக்கு...:cool:

  • தொடங்கியவர்

ரொனால்டோவின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டது  

Cristiano Ronaldo's Appeal Against Five-Match Ban Rejected
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவர் தரப்பால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரொனால்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என வெற்றிபெற்றது. குறித்த போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடித்தார். அப்போது அவர் தனது ஜேர்சியைக் கழற்றி பார்சிலோனா ஆதரவாளர்கள் முன்னிலையில் தனது வெற்றியைக் கொண்டாடினார். எனினும், போட்டி விதிமுறைப்படி இந்த நடத்தை தவறு என்பதால் ரொனால்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனையடுத்து சில நிமிடங்கள் கழித்து, பார்சிலோனா கோல் பகுதிக்குள் சென்ற ரொனால்டோ, பெனால்டி பெறும் வகையில் எதிரணி வீரர் தள்ளியமைக்காக கீழே விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, 2ஆவது முறையாக ரொனார்டோவுக்கு போட்டி மத்தியஸ்தர் ரிகார்டோ டி பார்கோஸ் மஞ்சள் அட்டை காண்பித்தார். ஒரே போட்டியில் இரு மஞ்சள் அட்டைகள் பெற்றதால் உடனடியாக ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை வழங்கினார். இதனால் ரொனால்டோவுக்கு களத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது.

இந்நிலையில், ரொனால்டோவுக்கும் மத்தியஸ்தருக்கும் இடையில் வாக்குவாதம் எற்பட்டது. கோபப்பட்ட ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியேறும் முன் மத்தியஸ்தர் ரிகார்டோ முதுகில் கைவைத்து தள்ளினார்.

இதனால் சிவப்பு அட்டை பெற்ற ரொனால்டோவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், நடுவரை தள்ளிவிட்டதற்கு 4 போட்டிகளில் விளையாடத் தடையும் என என மொத்தம் 5 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்க ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது.

மேலும், அவருக்கு 4,500 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும், அடுத்த 10 நாட்களுக்குள் இந்த தடையை எதிர்த்து ரொனால்டோ மேன்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

‘இது ஒரு தண்டனையாக இல்லாத நிலையில் அட்டை காண்பிக்கப்பட்டது கடுமையானது. ரொனால்டோ வெளியேற்றப்பட்டது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது’ என்று ரியல் மெட்ரிட் அணியின் பயிற்சியாளர் சினேடின் சிடேன் போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எனினும், இதை எதிர்த்து ரொனால்டோ சார்பில் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒரு சில மணி நேரங்களில் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவருக்கு ஸ்பானிய சுப்பர் கிண்ண கால்பந்து தொடரின் 2ஆவது கட்டப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் 2ஆவது கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் 2-0 என வெற்றி பெற்றது. இதன்படி ரியல் மெட்ரிட் அணி 5-1 என போட்டியை வென்று 10ஆவது தடவையாகவும் ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்நிலையில், மேன்முறையீடு நிராகரிப்பு குறித்து ரொனால்டோ கருத்து தெரிவிக்கையில், ”இந்த தடையை எப்படி ஏற்றுக்கொள்வது என்றே எனக்கு தெரியவில்லை. அதிலும் 5 போட்டிகள் என்பது என்னைப் பொறுத்தவரையில் மிகைப்படுத்தும் செயலாகும். ஸ்பானிய கால்பந்து சம்மேளனம் அடக்குமுறையை கையாள்வது கால்பந்து விளையாட்டுக்கு ஏற்படுத்துகின்ற மிகப் பெரிய ஆபத்து” என்று தெரிவித்தார்.

இருபினும் குறித்த தடையை குறைப்பது தொடர்பாக ஸ்பானிய விளையாட்டு நீதிமன்றத்தை அனுக ரியல் மெட்ரிட் கால்பந்து நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

  • கருத்துக்கள உறவுகள்
On 16/08/2017 at 2:36 AM, குமாரசாமி said:

நல்லவிசயம்.....தலைக்கனத்துக்கும் ஒரு அளவிருக்கு...:cool:

இவ்வளவு  காலம்  விளையாடுது

இத்தனை பதக்கங்கள்

எத்தனை  கோடி பணம்

ஆனால் சேட்டைக்கழட்டினால் மஞ்சள் அட்டை

அதுவும் முதலில் ஒரு மஞ்சள் எடுத்தாச்சு

இரண்டாவதும் எடுத்தால் சிவப்பு என்று கூட தெரியாமல் கொடுத்தவனை  தள்ளி  விடுகுது...tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.