Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை

Featured Replies

அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை

 

 

சிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 அமெரிக்க கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

american-war-ship.jpg

அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.

war_ship.jpg

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவுக்கு அருகில் பணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்குக் கப்பலுடன் திடீரென மோதியது, இச் சம்பவத்தில் அமெரிக்க கப்பலில் இருந்த 10 கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ship_1.jpg

இந்த விபத்தில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாகவும் சரக்கு கப்பல் அமெரிக்க கப்பலைவிட  அதிக எடையுடன் இருந்ததால் அமெரிக்க கப்பலுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சரக்குக் கப்பலில் 30 ஆயிரம் டொன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ship.jpg

இதேவேளை, குறித்த கப்பல் விபத்தில், அமெரிக்க போர்க்கப்பலில் பயணம் செய்த 10 கடற்படை வீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஹெலிகொப்டர் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் மாயமான வீரர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23389

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை....தண்ணியைப் போட்டிட்டு...ஓடிறாங்களோ...என்னமோ?

கிட்டடியில...ஜப்பானிலையும் ..ஒண்டு நடந்தது போல கிடக்குது...!:mellow: 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை

அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.

இத்தனை அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட அமெரிக்கக் கப்பலை,  ஒரு சாதாரண சரக்குக் கப்பல் மோதி விபத்திற்குள்ளாக்க முடியுமானால்....! ஒரு சாதாரண வட கொரியா, அமெரிக்காவை மோதினால்....... ?????? :shocked: :shocked:  

  • தொடங்கியவர்

 

அமெரிக்க போர்க்கப்பல் மோதியது எப்படி?

அமெரிக்காவின் ஒரு ஏவுகணை எதிர்ப்பு நாசகார கப்பலான யூ எஸ் எஸ் மக்கெய்ன் சிங்கப்பூரின் கடலோரமாக அல்நிக் மக் என்னும் வணிகக் கப்பலுடன் மோதி சேதமடைந்துள்ளது.

காணாமல் போன பத்துப் படையினரை தேடி மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடருகின்றன. ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கப்பல் எப்படி மோதியது. பிபிசியின் காணொளி.

BBC

  • தொடங்கியவர்

டேங்கர்-போர்க்கப்பல் மோதல்: அமெரிக்க கடற்படை பிரிவின் கமாண்டர் நீக்கம்

எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் அமெரிக்க போர்க்கப்பல் மோதிய விபத்தை அடுத்து அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல் தள பிரிவின் கமாண்டர் வைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் அருகே திங்கள்கிழமை நடந்த விபத்தில் யு.எஸ்.எஸ். ஜான் எஸ்.மெக்கெய்ன் என்ற போர்க்கப்பல் எண்ணெய் டேங்கர் ஒன்றுடன் மோதியதில் போர்க்கப்பலின் பக்கவாட்டில் ஓட்டை ஏற்பட்டு உள்ளே தண்ணீர் புகுந்தது.

பத்து மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். தற்போது சிங்கப்பூர் துறைமுகத்தில் உள்ள இந்தக் கப்பலில் மனித உடல் பாகங்கள் கிடைத்ததாக கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன்படத்தின் காப்புரிமைREUTERS Image captionவைஸ் அட்மிரல் ஜோசப் அகாய்ன்

இந்த ஆண்டில், அமெரிக்க கடற்படைக் கப்பலால் ஆசியாவில் நிகழ்ந்துள்ள நான்காவது விபத்து இது.

அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்தொகுப்பு என்பது ஜப்பானின் யோகோசுகாவில் நிலை கொண்டுள்ளது.

இதில் 50 முதல் 70 வரையிலான கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் இருக்கலாம் என்று தெரிகிறது.

இத் தொகுப்பின் கமாண்டராக 2015ல் இருந்து பொறுப்பு வகிக்கும் அகாய்ன் சில வாரங்களில் ஓய்வு பெறவுள்ளார்.

காணாமல் போயுள்ள மாலுமிகளைத் தேடும் பணியில் அமெரிக்க, இந்தோனேசிய, மலேசிய மற்றும் சிங்கப்பூர் கடற்படைகளைச் சேர்ந்த கப்பல்கள், கருவிகள், விமானங்கள் ஈடுபட்டுள்ளன.

http://www.bbc.com/tamil/global-41025119

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.