Jump to content

மாலிங்க தலைமையில் இளம் சிங்கங்கள் ; இன்றைய போட்டியிலாவது வெற்றிபெறுமா என ஏங்கும் ரசிகர்கள் ?


Recommended Posts

இலங்கை அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்­விகள் குறித்தும் அப் போட்டிகளில் தலைமையேற்ற தலை­வர்கள் குறித்தும் எந்த சிந்­த­னையும் இல்லை. நடை­பெ­ற­வுள்ள இன்­றைய போட்­டி­கு­றித்தே அனைத்துக் கவ­னமும் இருக்­கி­றது என்று இலங்கை அணியின் புதிய தலைவர் லசித் மாலிங்க தெரி­வித்துள்ளார்.

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–0 என்ற கணக்கில் ஏற்­க­னவே இந்­தியா கைப்­பற்­றி­யுள்ள நிலையில் இன்று நான்­கா­வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா? அல்லது மாலிங்க தலைமையிலான இளம் இலங்கை அணி வெற்றி பெற்று தமக்கு விருந்தளிக்குமாவென இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்குகின்றனர்.

இலங்கை அணியின் தொடர் தோல்விகளில் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்கள் தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியிலும் கண்டி பல்லேகலயில் இடம்பெற்ற போட்டியிலும் தமது வெறுப்பை காண்பித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய போட்டி இலங்கை ரசிகர்களின் ஏக்கங்களின் மத்தியிலும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்­டி­யிலும் இந்திய அணி வென்று 4-0 என்ற கணக்கில் முன்­னிலை பெறும் ஆர்­வத்­துடன் இந்­திய அணி உள்­ளது. ஆனாலும் லசித் மாலிங்க தலை­மை­யி­லான இலங்கை அணி எஞ்­சி­யுள்ள இரண்டு போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்று 2019 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்­ணத்­திற்கு நேர­டி­யாக தகு­தி­பெற வேண்டும் என்ற முடிவில் இருக்­கி­றது.

இந்­திய அணி தொடரை வென்று விட்­டதால் விளை­யா­டாத வீரர்­க­ளுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்­கப்­படும் என்று இந்­திய அணித் தலைவர் கோலி ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்தார். அந்­த­வ­கையில் இந்திய அணியில் இன்­றைய போட்­ டியில் புதுமுக வீரர்கள் கள­மி­றங்க வாய்ப்­புள்­ளது. 

உபுல் தரங்கவிற்கு ஐ.சி.சி. விதித்த தடையினால் தலைவர்  பொறுப்பை ஏற்ற சாமர கபுகெதரவும் காயத்திற்குள்ளான நிலையில் தலைவர் பதவி மலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதே­வேளை சாமர கபு­கெ­தர, குண­தி­லக்க, சந்­திமால் ஆகியோர் காயம் கார­ண­மாக வில­கி­யுள்­ளனர். அதி­ரடி வீரர் டில்ஷான் முன­வீர அணிக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார். இன்றைய களநிலையை ஆராய்ந்தே ஆடும் பதினொருவர் கொண்ட இலங்கை அணி தெரிவு செய்யப்படவுள்ளது.

அநேகமாக திரிமான்னவும் டில்ஷான் முனவீரவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்க வாய்ப்புள்ளது.

இன்றையய போட்டியை பொறுத்திருந்து பார்ப்போம் லசித் மாலிங்க தனது அனுபவத்தை பயன்படுத்திய இளம் வீரர்களை வழிப்படுத்தி, தொடர் தோல்வியால் வெறுப்படைந்துள்ள இலங்கை ரசிகர்களுக்கு விருந்தளிப்பாராவென ? 

http://www.virakesari.lk/article/23801

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.