Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரியாரும் பகுத்தறிவுப்பட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்தோ தெரியாமலோ சொல்கின்றேன் இனவெறி,சாதிவெறி,மதவெறி,மொழிவ

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை இயக்கங்களின் தோற்றத்தின் பின்னரும், இடம்பெயர்ந்து அகதிகளாக ஓடித் திரியும் அவல வாழ்க்கையிலும் சாதியம் தளர்ந்துபோய் உள்ளது.. புலிகளால் சில விடயங்கள் கட்டாயப்படுத்தப்பட்டபோது விரும்பியோ, விரும்பாமலோ பலர் ஏற்றுக்கொண்டு நடந்தனர்.. எனினும் பல்வேறு வகையான புதுப்புது வழிகளில் சாதியத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிகள் இருக்கத்தான் செய்கின்றன..

விடுதலைப் போராட்டத்தின் வெற்றியோடு சாதியமும் அழிந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.. அது வீண்போகாது என்றே நினைக்கின்றேன்..

தனிப்பட்ட ரீதியில் அதிலும் இளையோர்கள் செய்ய வேண்டியவை..

1. நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ உரையாடும்போது சாதிகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தல் (இது பெரும்பாலும் தற்போது நடைமுறையில் உள்ளது)

2. பெரியவர்கள் சாதிகளைப் பற்றி உரையாடினால், கண்டும் காணாமல் இருக்காமல் அவர்களுக்கு எடுத்துரைத்து சாதியத்தைத் தவிர்த்தல்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு இவற்றை விதைக்காமலே இருத்தல்.

4. திருமண பேச்சுக்களில் சாதி என்னவென்று பார்க்காமல் இருத்தல்.

5. "background check" என்று பெற்றோர் சாதியைப் பார்த்து சம்பந்தம் வேண்டாமென்று சொன்னால், அதனை ஒரு குறையாக ஏற்க மறுத்தல்.

6. ------

என்ன சார் எங்க நிலைக்கு வந்திட்டீங்க போல. ஆராய்ச்சி அலசல் தரவுகள் ஆதாரங்கள் என்று தேடிப் பிடிச்சு அறிவியல் பூர்வமா பேசுங்கள் என்று ஏதோ புதிசா உங்க அறிவை யூஸ் பண்ணி எழுதிறதாக் காட்டிக்கிறீங்களே சார்.. இதே நீங்கள் முன்னர் ஒரு தலைப்பில் ஆதாரங்களோடு விடயங்களை அறிவியல் சார்ந்து சமூகவியல் சார்ந்து அணுக வேண்டும் என்பதற்கு தாங்களும் இன்னும் சிலரும் ஆதாரம் ஆராய்ச்சி என்று கேட்டுக் கொண்டிருக்கினம் என்று நளினத்தனமான கருத்துக்களை விதைத்த போது இல்லாத ஞானம் எப்படி சார் இப்ப சாதி என்று கூவுவதற்கு... ஆராய்ச்சி தேவையோ...?! ஏன் சாதி என்பதற்கு என்ன சார் மனித உடற்கூற்றியல் அடையாளம் இருக்கு...??! அல்லது பாரம்பரிய அடையாளம் இருக்கு. வெறும் எண்ணக்கரு அடிப்படையில் எழுந்தவற்றிற்கு ஆதாரம் கேட்கும் பிற்போக்கான ஆராய்ச்சியாளரா சார் நீங்கள்..??! கொஞ்சம் சனம் ஏமாளியா இருந்திட்டா உடன வெளிக்கிட்டிட்டிடுவியளே அறிவாளிகள் என்று கொண்டு ஆக்களுக்கு அட்வைஸ் கொடுக்க..!

இளையோர் சாதி பற்றி கேட்கவோ கதைக்கவோ இன்றஸ் இல்லாத நிலையை அடைந்து தசாப்தம் கடந்த பின்னும் உங்க அட்வைசை யாருக்கு யார் சொல்லுறீங்க. உங்க அட்வைஸின் மூலம் ஏதோ சாதி விருட்சமாக இருப்பதும் போலவும் அதை பெரியார் போன்றவர்களின் பகுத்தரிவு வாதமே அரித்து வெட்டிச் சாய்க்கும் என்றும் சினிமா போல பிலிம்பு காட்டுறத நிறுத்துக்க சார். பெரியார் கூவிய இடங்களிலையே சாதி என்ற விருட்சத்தை வேரறுக்க பெரியார் பகுத்தரிவு வாதிகள் இன்னும் முடியாமல் கடந்த பல தசாத்ப கால இடைவெளியில் திமுக அதிமுக வெட்டிக்கிழித்த சாதி ஒழிப்பு மட்டும் என்னாச்சுங்கோ.

வந்திட்டாங்கையா பெரியாரைத் தூக்கிக் கிட்டு.

பெப் 22 என்று படம் காட்டினீங்கள். அரசியலில் கவுந்திட்டதும் இப்போ சமூகம் என்று வெளிக்கொட்டியள். கொஞ்சப் பேருக்கு தங்களை அறிவாளிகள் என்று அலம்பிக்கிறதில அலாதிப் ப்ரியம் போல. இன்னும் சிலர் தலித்தியம் பிறப்பிச்சு தலித்தியம் அழிக்கப் போகினமாம். தமிழ் தேசியத்துக்க தலித்தியத்தை அடையாளம் காட்டப் போகினமாம். இது எப்படி இருக்கென்றால் கிழக்கு லண்டனில் இலங்கையில் மனித உரிமை மீறல் என்று யாழ் நூலக் கட்டடத்தை செல்லன் கந்தையாவை திறக்க விடாததற்கு சாதியச் சாயம் பூசி சாதி இருப்பை பக்குவப் படுத்தி புலிகளை சாதியச் சார்பாகக் காட்டி ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத்தின் விளைவுகளையும் அறிவாளிகள் என்ற போர்வையில் விலை பேசியதை போல இருக்குது.

செங்கல்லும் புத்தகமும் வெண்புறாவும் வெண்டாமரையும் கட்டிய அரைகுறை நூலகத்தை திறந்து தமிழர்கள் மீது கட்டவிழ்ந்துவிட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தின் அழியாத சான்றை கலைத்ததை இனத்துரோகம் என்பதா அல்லது தமிழ் மக்களுக்கு கல்வி வேண்டி செய்த சமூக சேவை என்பதா..?! நூலகமும் நூலும் ஆயிரம் இடங்களில் அமைக்கப்படலாம். ஆனால் ஒரு குற்றத்துக்கான சான்று அழிக்கப்பட்டால் அது அழிக்கப்பட்டதுதான். அமெரிக்காவில் கூட செப் 11 தாக்குதல் மீதிகளை வைத்து நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ள போது தமிழர்கள் மீது சிங்களப் பயங்கரவாதம் செய்த கொடுமைகளின் ஆதாரங்களைக் கலைக்க நினைத்த சில அரசியல் பதவி ஆசை பிடித்தவர்களின் செயல் சாதியச் சாயம் மூலம் இன்னோர் தளத்துக்கு நகர்த்தப்பட்டு இன்று அது மனித உரிமை மீறலாக லண்டனில் ஒலிக்கிறது என்றால் யாழ் களம் காக்க நினைக்கும் சாதிய உச்சரிப்பும் பிறப்பிக்க நிற்கும் தலித்தியமும் நிச்சயம் தமிழ் தேசியத்தின் இருப்பை வேரறுக்கும் கறையான் ஆக புற்றுக்களில் இருந்து வெளிவருவதை தடுக்க முடியாதிருக்கும். அதுதான் நிகழ்கால யதார்த்தம். அநாவசியமாக தமிழகத் தலித்திய அரசியல் போக்கை ஈழத்துக்குள் திணிக்க முயல்வது தலித்தியம் சாதியம் இருக்கு அதற்கு பெரியார் போதனை வேண்டும் என்று கூவுவது பல பத்தாண்டுகளாக இருந்து போல சாதியமும் அதன் விளைவுகளும் சமூகத்தில் காக்கப்படவும் தொடரவுமே செய்யும். செய்யாதே என்று சொல்லிச் செய்யமாட்டினமாம் என்றார் மிஸ்டர் கிருப்னசு. அப்படிக் கேட்கிறவை பாரதியார் கவிதைகளைப் படிச்ச போதே கேட்டிருக்கனும் சார். நீங்கள் கூலிங் கிளாஸ் போட்டு வந்து யாழில் சொல்லும் வரைக்கும் காத்திருக்க வேணும் என்ற அவசியம் இல்லை சார். :lol::lol:

30 வருடகால போராட்ட வரலாற்றில் பல திருப்பு முனைகளை போர்க்களத்திலும் சமூகக் களத்திலும் கண்டுள்ள ஈழத்து மண்ணுக்கும் பெரியார் போன்ற வெற்றுக் கூச்சல் ஆசாமிகள் கூச்சலிட்ட தமிழக மண்ணுக்கும் இடையில் பலத்த வேறுபாடுண்டு. அந்தக் கதைகள் எங்களுக்கு ஆகாது. ஈழத்து சமூகப்பாகுபாடுகள் பல தளம் தகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் கருணாக்களும் கருநாகங்களும் சமூக முற்போக்கு பேச்சு என்ற போர்வையில் சாதிய இருப்பை அடையாளப்படுத்த நினைப்பதையும் அதற்கு அறிவாளித்தன சாயம் பூசி பெருமைப்பட்டுக் கொள்வதும் மக்களை மந்தைகளாகக் கருதிய செயற்பாடுகளே. அது ஈழத்தில் எனி எடுபடாது. புகலிடத்தில் உள்ள பிசியான இளசுகளிடமும் எடுபடாது என்பதே யதார்த்தம். :P :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் எங்க நிலைக்கு வந்திட்டீங்க போல. ஆராய்ச்சி அலசல் தரவுகள் ஆதாரங்கள் என்று தேடிப் பிடிச்சு அறிவியல் பூர்வமா பேசுங்கள்.......................

:rolleyes::lol: குப்பைகளை வாசித்து நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.. :lol::lol::lol: :P :P

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::lol: குப்பைகளை வாசித்து நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை.. :lol::lol::lol: :P :P

ஏன் சார் நீங்க எழுதினதுகளை நாங்க என்ன சமூகவியலுக்கான பி எச் டி திசிஸ் எண்டமா..?!

எல்லாமே குப்பைகளுக்குள் உள்ள குப்பைகள் தான் சார். உங்களுக்கும் சேர்த்து நீங்கலே சிரிச்சுக்கிறது... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சார் நீங்க எழுதினதுகளை நாங்க என்ன சமூகவியலுக்கான பி எச் டி திசிஸ் எண்டமா..?!

எல்லாமே குப்பைகளுக்குள் உள்ள குப்பைகள் தான் சார். உங்களுக்கும் சேர்த்து நீங்கலே சிரிச்சுக்கிறது... :lol::rolleyes:

:lol::lol: :P :P :lol: நம்மைவிட அறிவுகூடியவர்களின் எழுத்துக்களைப் படித்தால், நமது அறிவாற்றல் குறைந்தது என்று தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.. எனவே அவற்றைக் குப்பை என்று ஒதுக்குவது நமது உளநலத்துக்கு நல்லது என்று தீர்மானித்துவிட்டோம்.. :P :lol::lol: :P

சாதி எல்லா நாடுகளிலும்தான் இருக்கிறது. ஆனால் சாதிகளுக்கிடையேயான ஏற்றதாழ்வுகள் ஆசியாவில் குறிக்காக தமிழினத்தில் அதிகமாகவே உள்ளது. எனினும் யாழ்ப்பாணத்தில், இத்தகைய ஏற்றதாழ்வுகள் காலத்துக்குக் காலம் சுருங்கியே வந்துள்ளன. அது போராட்ட காலத்திலேதான் நிகழ்ந்தது என்று கூறமுடியாது. ஏற்கெனவே தேர்தல் காலங்களிலே ஆலயப் பிரவேசம் போன்ற நிகழ்வுகளினால் தடைகள் உடைபட்டுள்ளன. பாடசாலைகளில் மாணவர்கள் ஒன்றாகத்தானே படிக்கிறார்கள். நகரங்களில்.. ஏன் பல கிராமங்களின் உணவுச்சாலைகளில் ஒன்றாகத்தானே உணவுண்ணுகிறார்கள்.

எங்க ஐயாமார் ஊரில சில வீடுகளுக்கு செல்லாமல் இருந்தார்கள். ஆனால் புகலிட நாடுகளில் திவசம் போன்ற காரியங்களுக்கு எல்லாருடைய இல்லங்களுக்கும் போய் நல்லவழி காட்டுகிறார்கள்தானே?! ஆக, வசதிகளும் வாய்ப்புகளும் சாதீய முரண்பாடுகளைத் தகர்க்கிறதைத்தானே அனுபவம் காட்டி நிற்கிறது.

இன்று இந்த முரண்பாடு திருமணம் என்ற ஒரு விடயத்தில்தான் விடாப்பிடியாக முரண்டுபிடிக்கிறது. அதுவும் அடுத்த சந்ததியோடு முடிவுக்கு வரும் என்பதைத்தானே நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆக, செத்தக் கொண்டிருக்கும் முரண்பாடுகளை கிளறிக் கொண்டிருப்பது தேவைதானா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D :P :P :D நம்மைவிட அறிவுகூடியவர்களின் எழுத்துக்களைப் படித்தால், நமது அறிவாற்றல் குறைந்தது என்று தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.. எனவே அவற்றைக் குப்பை என்று ஒதுக்குவது நமது உளநலத்துக்கு நல்லது என்று தீர்மானித்துவிட்டோம்.. :P :D:D :P

அறிவா... அப்படின்னா என்று கேட்கும் கூட்டத்தின் மத்தியில் உள்ள நீங்களே இந்தளவுக்கு தாழ்வுமனப்பான்மையோட என்றால் அறிவியல் கூட்டத்தின் முன்... மாரடைப்பு வந்து மாண்டிடுவீர்கள் போல இருக்கே..! எதுக்கு பெரியாரின் பகுத்தரிவு வாதத்தை பற்றிப் பிடிச்சுக்கோங்க. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.