Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!!

Featured Replies

 

மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!!

 
 
மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!!கோப்புப் படம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்தர்கள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை அடுத்து மீண்டும் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த மத குருமார்கள் சிலரும், பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, அதில் சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண அமைச்சர், ஏ.எல்.மொஹ்மட் நஸீர் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர் என்றும், இது தொடர்பில் அரச தலைவரின் நேரடி கவனத்துக்குக் கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகின்றது.

http://newuthayan.com/story/25309.html

  • தொடங்கியவர்

மாயக்கல்லி மலையில் மீண்டும் விகாரை

59aba34bce9e1-IBCTAMIL.jpg
59aba34bf30b4-IBCTAMIL.jpg
 
 
 
 
59aba34b9fcd9-IBCTAMIL.jpg
59aba34bce9e1-IBCTAMIL.jpg
59aba34bf30b4-IBCTAMIL.jpg
59aba34c32613-IBCTAMIL.jpg

அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்வி மலையடி வாரத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று புல்டோஸர் வாகனம் ஒன்றின் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்வி மலையடி வாரத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி பௌத்த பிக்குகளினால் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது.

புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு பலர் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் புல்டோஸர் வாகனம் ஒன்றின் மூலம் காடுகள் அழிக்கப்பட்டு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த இறக்காமம் பிரதேச பொது மக்களும் தமண பொலிஸாரும் பௌத்த பிக்குகளுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு முறுகல் நிலையும் ஏற்பட்டது.

முஸ்லிம்களின் ஹஜ்ஜூப் பெருநாளான நேற்று அம்பாறை பிரிவெனா விகாரையைச் சேர்ந்த அம்பேபிடிய சியலரத்ன தேரர் தலைமையில் திடீர் மாயக்கல்லி மலையில் சிரமதானங்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பிக்குவின் செயற்பாட்டிற்கு எதிராக முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். அத்துடன் நீதிமன்ற உத்தரவினையும் தமண பொலிஸார் பௌத்த பிக்குவிடம் காட்டிய போது அதனை மறுத்து தனியார் ஒருவரின் காணியில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

இதனால் பொது மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கிழக்கு மாகாண சபையின் பகிரங்க ஆணைக்குழு ஒன்றின் முன்னால் குறித்த விடயம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினாலும் நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினாலும் சிரமதான பணிகளை நிறுத்துமாறு கோரினார்கள்.

இதனையடுத்து பௌத்த பிக்குகள் புல்டோஸருடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்கள்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Buddhist-Vihara-in-the-Maniadu-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.