Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி அமைச்சரவை கொடுத்த கிஃப்ட் - பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்

Featured Replies

மோடி அமைச்சரவை கொடுத்த கிஃப்ட் - பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்

 
 

மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

nirmala

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

http://www.vikatan.com/news/india/101206-nirmala-seetharaman-to-take-over-as-defence-minister.html

மத்திய அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு: பாதுகாப்பு அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்; பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித் துறை இணை அமைச்சர் கூடுதல் பொறுப்பு

 

 
photojpg

நிர்மலா சீதாராமன் (இடது), பொன்.ராதாகிருஷ்ணன் (வலது)

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (செப்டம்பர் 3-ம் தேதி) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர்:

 

நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத் துறையை கூடுதலாக சில காலம் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இலாகாக்கள் விவரம்:

இன்று பதவி ஏற்றவர்களில் ஏற்கெனவே இணை அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 பேர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை, பியூஸ் கோயலுக்கு ரயில்வே, சுரேஷ் பிரபுவுக்கு வர்த்தகம், தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே வகித்துவந்த பெட்ரோலியத்துறையோடு திறன் மேம்பாட்டுத்துறையையும் கவனிக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொன் ராதாகிருஷ்ணனுக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த பொறுப்புகளோடு நிதித்துறை (இணை)யும் வழங்கப்பட்டுள்ளது.

ஜேட்லி, ராஜ்நாத், சுஷ்மாவுக்கு அதே பொறுப்பு:

ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அதே பொறுப்பை தொடர்வார் என்றும் அதைப்போல ராஜ்நாத் சிங் (உள்துறை) மற்றும் சுஷ்மா சுவராஜ் (வெளியுறவு) ஏற்கெனவே அவர்கள் கவனித்து வந்த துறைகளில் நீடிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்

இலாகா

நிர்மலா சீதாராமன்

பாதுகாப்பு

பொன்.ராதாகிருஷ்ணன்

நிதித்துறை (இணை அமைச்சர்)

சுரேஷ் பிரபு

வர்த்தகம்

ஹர்தீப் பூரி சிங்

வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டுத்துறை (தனிப்பொறுப்பு)

ஆனந்த்குமார் ஹெக்டே

திறன் மேம்பாட்டுத் துறை

ராஜ்குமார் சிங்  

மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை (தனிப்பொறுப்பு)

கிராஜ்சிங் 

சிறு குறு, நடுத்தரத் தொழில் துறைஅமைச்சர் தனிப்பொறுப்பு

அல்ஃபோன்ஸ்  கண்ணன்தனம் 

சுற்றுலாத் துறை தனிப்பொறுப்பு

சந்தோஷ்குமார் கங்குவார் 

தொழிலாளர்த்துறை தனிப்பொறுப்பு

மகேஷ் சர்மா

கலாச்சாரத்துறை தனிப்பொறுப்பு

உமா பாரதி

குடிநீர் மற்றும் சுகாதாரம்

நிதின் கட்காரி

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை; நீர் ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிராக்கம்

ராஜ்யவர்தன் ரதோர்

(இணை) இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு

(தனிப்பொறுப்பு) தகவல் ஒளிபரப்புத்துறை

முக்தார் அப்பாஸ் நக்வி

சிறுபான்மையினர் நலம்

ஷிவ் பிரதாப் சுக்லா

நிதித்துறை (இணை)

அஷ்வினி குமார் சவுபே

சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் (இணை)

வீரேந்திர குமார்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி; சிறுபான்மையினர் நலன் (இணை))

கஜேந்திர சிங் ஷெகாவத்

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம்

சத்ய பால் சிங்

மனித வள மேம்பாடு; மற்றும் நீர் ஆதாரம், நதி மேம்பாடு

வீரேந்திர குமார்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி; சிறுபான்மையினர் நலன் (இணை)

http://tamil.thehindu.com/india/article19614934.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அமைச்சர் என்றபடியால் ஈழம் கிடைக்கும் என்று கனவு காணவேண்டாம் மக்காள்....

20 minutes ago, நவீனன் said:

 

நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் அமைச்சர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத் துறையை கூடுதலாக சில காலம் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, putthan said:

தமிழ்நாட்டு அமைச்சர் என்றபடியால் ஈழம் கிடைக்கும் என்று கனவு காணவேண்டாம் மக்காள்....

 

தமிழ் எண்டவுடனை வாழ்த்து சொல்ல  இரத்தம் துடிக்குது.:grin:

  • தொடங்கியவர்

இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்புத் துறைக்கு அமைச்சரான 2-வது பெண்: நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த கவுரவம்

 

 
nirmalajpg

இந்திரா காந்தி மற்றும் நிர்மலா சீதாராமன்

நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்பு அமைச்சரான பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இந்திரா காந்திக்குப் பின் ராணுவ அமைச்சராகும் இரண்டாவது பெண்ணும் இவர்தான்.

வர்த்தக தொழில்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு ராணுவ அமைச்சராக பதவியேற்றார். இதன் மூலம் நாட்டின் முதல் முழு நேர பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இதற்கு முன் 1970-களில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ராணுவ அமைச்சக பொறுப்பையும் கவனித்து வந்துள்ளார். இந்திரா காந்திக்கு பிறகு ராணுவ அமைச்சர் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண் நிர்மலா சீதாராமன்.

வர்த்தக தொழில்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது, அவர் ஏற்கெனவே வகித்த வர்த்தக தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டிருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், ‘‘ராணுவ அமைச்சர் பதவிக்கு நிர்மலா சீதாராமன் மிகவும் தகுதியானவர். ஏற்கெனவே அளிக்கப்பட்ட பொறுப்பில் தனது திறமையை அவர் நிரூபித்துள்ளார். இப்போது ராணுவ அமைச்சர் பொறுப்பையும் திறம்படச் செய்வார். அவர் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். அவரது நியமனம் பெண்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே சிறப்புமிக்கது. உலகத்துக்கும் இந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம் பெற்றுள்ளனர். இரு பெண்களுமே தங்கள் தகுதியையும் திறமையையும் நிறுவி உள்ளனர்’’ என்றார்.

நிர்மலா சீதாராமன் மதுரையைச் சேர்ந்தவர். திருச்சியில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் எம்.ஏ.பட்டப் படிப்பும் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/india/article19618595.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.