Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை

Featured Replies

அனிதாவை எரித்த நெருப்பு! - கவிதை

 

மனுஷ்ய புத்திரன் - படம்: ஜெ.வேங்கடராஜ்

 

நீதிகேட்கும் பயணத்தில்
மற்றவர்களுக்கு என்ன நடந்ததோ
அதுதான் அனிதாவுக்கும் நடந்தது
நீண்ட காயம்பட்ட இரவுகளுக்குப் பின்
கழுத்து அறுபட்ட பறவையாக
பாதி திறந்த கண்களுடன்
தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறாள்

அனிதா ஒரு மூட்டை தூக்குபவரின்
மகளாக இருந்தாள்
தங்கள் மேல் சுமத்தப்பட்ட
வரலாற்றுச் சுமையை
இறக்கிவைக்க விரும்பினாள்
நூற்றாண்டுகளாக
மூட்டை தூக்குபவர்கள்
தங்கள் விதியின் சுமையினால்
முதுகு வளைந்தவர்களாக இருந்தார்கள்
அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்
முதுகு வளைந்தே பிறந்தார்கள்
அவர்கள் எப்போதும் 
ஒரு கடைமட்ட வேலையின்
நுகத்தடியில் பிணைக்கப்பட்டார்கள்

58p1.jpg

வரலாற்றின் இந்த நோய்க்குத்தான்
அனிதா சிகிச்சையளிக்க விரும்பினாள்
அவளுக்கு வளைந்த முதுகுடன்
தாழ்ந்த கண்களுடன் நடந்துபோக விருப்பமில்லை
ஒரு மருத்துவராகி
அந்த நோய்க்குச் சிகிச்சையளிக்க விரும்பினாள்

மூட்டை தூக்குபவர்களின் பரம்பரையில்
எவரும் சுமந்திராத
அத்தனை கனத்த கனவை
சுமந்துகொண்டாள் அனிதா
நீங்கள் அவளை
எவ்வளவு எளிதாக அந்தரத்தில்
தொங்கவிட்டுவிட்டீர்கள்

சமமற்ற குதிரைகளுக்கிடையே
நீங்கள் நடத்திய
சமமற்ற ஒரு போலி பந்தயத்தில்
தோற்ற குதிரையைச் சுட்டுக்கொல்வதுபோல
அனிதாவை நீங்கள் கொலை செய்திருக்கிறீர்கள்
அவளுக்கு வைக்கப்பட்ட
எல்லா சவால்களிலும்
அனிதா வெற்றி பெற்றாள்
அவள் உயர்தரமான நவீன வகுப்பறைகளில் 
படிக்கவில்லை
காற்றோட்டமான வீடுகளிலோ
அவளுக்கென்று தனி அறைகளிலோ
அவள் வசிக்கவில்லை
ஷாப்பிங் மால்களிலும்
திரையரங்குகளிலும்
கேளிக்கை விடுதிகளிலும் 
தங்கள் மாணவ பருவத்தைக் கொண்டாடுபவர்களில்
அவள் ஒருத்தி அல்ல
ஊட்டச்சத்து குறைந்த உணவுடன்
மங்கலான வெளிச்சத்தில் 
இரவெல்லாம் கண் விழித்து 
சிறுகச் சிறுக உருவாக்கிய
கனவு அது
ஒரு எறும்பு ரகசியமாக இழுத்துச்சென்ற
இனிப்பு மலை அது

ஒரு காகிதத்தை
கசக்குவதுபோல 
அந்தக் கனவை கசக்கினீர்கள்
அவள் ஏறிச்சென்ற
ஒரு சிகரத்தின் விளிம்பிலிருந்து
அவள் எதிர்பாராத ஒரு தருணத்தில்
அவளைத் தலைகுப்புறக் கீழே தள்ளினீர்கள்
மூட்டை தூக்குபவர்களின் மகன்கள்
மூட்டை தூக்குபவர்களாகவே இருக்க வேண்டும்
வீட்டுவேலை செய்பவர்களின் மகள்கள்
வீட்டு வேலைக்காரிகளாகத்தான் இருக்க வேண்டும்
அதை மீற முயல்கிறவர்கள்
தூக்கில் தொங்க வேண்டும்

அனிதா அவளது
அறையில் தூக்கிட்டுக்கொள்ளவில்லை
நீதிமன்றத்தின் முற்றத்தில்
அதிகாரத்தின் தூக்குமேடைக்கு
தேசமே பார்க்கும்படி
நீங்ககள்தான் அவளை
அழைத்துச் சென்றீர்கள்

இந்தத் தேசத்தில் 
பொது நுழைவுத்தேர்வு என்ற பெயரால் நடத்தப்பட்ட
மாபெரும் துரோகத்தின் சூதாட்டம் அது
சாவை நோக்கி
அத்தனை உறுதியாக
அனிதாவை வழிநடத்தினீர்கள்
ரோஹித் வெமூலாவை எப்படி வழி நடத்தினீர்களோ 
அதேபோல 

வாடிவாசல் திறக்கத் தெருக்களில்
கூடியவர்கள்
ஒரு வரலாற்று அநீதியின் வழியே
சாவுக்களத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட
தங்கள் மகள்களுக்கு
தங்கள் மகன்களுக்கு
தூக்கில் தொங்கும் அனிதாக்களுக்கு
நீதி கேட்க மறுத்து ஏன் மெளனம் காக்கிறார்கள்?
ஏன் தங்கள் முகங்களை
திருப்பிக்கொள்கிறார்கள்?

அனிதாக்களின் சிதையில் எரியும் நெருப்பை
அவர்களின் கனவுகள்மேல் எரியும் நெருப்பை 
அங்கேயே விட்டுவிட்டு
வீடு திரும்பப் போகிறோமா?

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.