Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா மீது வரலாறு காணாத தாக்குதல்: ஜெனிவாவில் வடகொரியா பகிரங்க மிரட்டல்

Featured Replies

வட கொரியா மீது ஐ.நா. புதிய தடைகள்

அண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளன.

வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி முகமை வெளியிட்ட ஏவுகணை சோதனையின்போது எடுக்கப்பட்டதாக கருதப்படும் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 15-0 என்று ஐ.நா. கவுன்சில் வாக்களித்துள்ளது.

அண்மையில், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை தான்வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வட கொரியாஅறிவித்தது.

மேலும், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் விதமாக தொடர்ந்து வடகொரியா அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.

அதிகாரிகளுடன் கிம் ஜோங்-உன்படத்தின் காப்புரிமைKCNA

முன்னதாக, கடந்த வாரத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சில கடுமையான தீர்மானங்களை அந்நாடு அகற்றிய பின்னர், இந்த புதிய தடைகளை ஐ.நா. கவுன்சிலில் நிறைவேற்ற கடந்த திங்கள்கிழமையன்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா முன்மொழிந்த கடுமையான தீர்மானங்களில் வட கொரியா மீது முழுமையான எண்ணெய் விலக்கு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கும்.

வட கொரியா மீது புதிய தடைகள்: ஐ.நா. விதிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

முன்னதாக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-41235901

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

முன்னதாக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது சரியென்றே உள்விடயம் தெரிந்தவர்களால் நோக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் துள்ளுவதிற்கு  காரணம் என்னவெனில் வடகொரியாவின் ஜப்பான் மீதான விண்வெளியில் புரட்டாதி மாத முதல் வாரத்தில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணையை அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஏவுகணை நாசகாரிகளின் ராடர் கண்காணிப்பினுள் (Radar locking  ) சிக்கவில்லை. அதனால் அந்த ஏவுகணையை விண்வெளியிலோ அல்லது (மனித சஞ்சாரமற்ற) பூமிப்பரப்பின் மேலாகவோ  அழிக்கமுடியவில்லை.

ராடர் கண்காணிப்பினுள் வடகொரியாவின் அந்த  ஏவுகணை சித்தித்திற்கான காரணம்,  ஏவுகணை செலுத்தும்  எந்திரத்தை தவிர மற்றைய பகுதிகள் ராடாரின் கண்காணிப்பினுள் அகப்படவில்லை.

ஏனெனில் வடகொரியாவின் அந்த  ஏவுகணை நெய்யப்பட்ட கார்பன் பைபர் இழைகளால் (woven  carbon  fibre filament)  சுற்றி மூடப்பட்டிருந்தால் ஆகும்.

இதே தொழில்நுட்பத்தைதான் அமெரிக்காவும் மற்றும் வளர்ந்த மேற்கு நாடுகளும் (இஸ்ரேலும்) தமது கபடத்தனமுடைய போர் விமானக்களில் (stealth fighter aircraft) ராடாரின் கண்காணிப்பினுள் அகப்படாமல் இருப்பதற்கும் மற்றும் இத்தகைய போர் விமானக்களின்  இப்பிரரெட் (infrared), ஒளி, ஒலி, radio-frequency  (மின்காந்த அலைகள்) ஒப்பங்களை ஒடுக்கி மறைக்கவும் பயன்படுதுகின்றன.

வல்லவனுக்கு வல்லவன் உண்டு. ஆட்டம் ஆரம்பம்.  எனவே கொரியா தீபகற்பத்தின் வாயிலாக   போர் மூள்வதிற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. அதையும் மீறி போர் மூளுமானால்?....    

  • தொடங்கியவர்

ஐ.நாவின் புதிய தடை: 'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்': வட கொரியா அச்சுறுத்தல்

ஐ.நா கவுன்சில் விதித்த புதியதடைகள் குறித்து கருத்து தெரிவித்த வட கொரியா, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும் என்று அச்சுறுத்தியுள்ளது.

'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்'படத்தின் காப்புரிமைREUTERS Image caption'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்'

தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கும் புதிய தடைகள் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.-வுக்கான வட கொரிய தூதர், வட கொரியாவுடன் 'அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ மோதல்' ஏற்படுவதை அமெரிக்கா விரும்புகிறது என்று அந்நாட்டின் மீது குற்றம்சாட்டினார்.

வட கொரியாவை சமாளிப்பதற்கு அண்மையில் ஐ.நா கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தடை நடவடிக்கை ஆகியவை பெரிதாக ஒன்றுமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐ.நா. விதித்துள்ள புதிய தடைகள், தங்களின் அணு ஆயுத திட்டங்களுக்கு தேவைப்படும் எரிவாயு மற்றும் நிதி ஆகியவற்றை வட கொரியாவுக்கு கிடைக்கவிடாமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும்.

வட கொரியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆடைகள் ஏற்றுமதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவட கொரியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஆடைகள் ஏற்றுமதி

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை நடத்திய வட கொரியா நடத்திய சூழலில், இந்த புதிய தடைகள் அந்நாடு எண்ணெய் இறக்குமதி செய்வதையும், வட கொரியா ஆடைகள் ஏற்றுமதி செய்வதையும் தடுக்கும்.

தங்கள் நாட்டின் மீதான ஐ.நாவின் புதிய தடைகளை முற்றிலும் தான்புறந்தள்ளுவதாக குறிப்பிட்ட ஐ.நா.-வுக்கான வட கொரிய தூதரான ஹான் டே சோங், ஐ.நா. விதித்துள்ள புதிய தடை உத்தரவுகளை ஒரு சட்டவிரோதமான தீர்மானம் என்று வர்ணித்துள்ளார்.

  •  

ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா

அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உணவு ஆகியற்றை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த வாரத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சில கடுமையான தீர்மானங்களை அந்நாடு அகற்றிய பின்னர், இந்த புதிய தடைகளை ஐ.நா. கவுன்சிலில் நிறைவேற்ற கடந்த திங்கள்கிழமையன்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா முன்மொழிந்த கடுமையான தீர்மானங்களில் வட கொரியா மீது முழுமையான எண்ணெய் விலக்கு மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவை உள்ளடங்கும்.

அண்மையில், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை தான்வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக வட கொரியாஅறிவித்தது.

'அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வலி ஏற்படும்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் விதமாக தொடர்ந்து வடகொரியா அச்சுறுத்திய வண்ணம் உள்ளது.

ஐநா அமைப்பு விதித்துள்ள தடைகளையும், சர்வதேச அழுத்தத்தையும் மீறி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ள வடகொரியா, அமெரிக்க பெருநிலப்பரப்பை சென்றடையக்கூடிய திறன் படைத்த ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

முன்னதாக, செப்டம்பர் முதல் வாரத்தில் ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global-41249979

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில் பேசிய அமெரிக்காவுக்கான வடகொரியா தூதர் ஹான் டே வடகொரியா மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது என்றார். மீண்டும் மீண்டும் வடகொரியாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா கலங்கம் விளைவித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதன் பலனை அமெரிக்கா விரைவில் உணரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

   
அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து அரங்கேற்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகளை ஏற்படுத்த அமெரிக்கா வரைவு தீர்மானம் ஏற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது. வாக்கெடுப்புக்கு விடப்பட்ட தீர்மானத்திற்கு 15 உறுப்பு நாடுகளும் ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து வடகொரியா மீது மேலும் 3 பொருளாதார தடைகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

http://www.seithy.com/breifNews.php?newsID=190130&category=WorldNews&language=tamil

  • தொடங்கியவர்

அமெரிக்கா பெரிய வலியை சந்திக்க நேரிடும்: ஐ.நா தடைகளை நிராகரித்த வடகொரியா அறிக்கை

 

 
 

அணுகுண்டு சோதனை நடத்தியதற்காக ஐ.நா சபை சில தடைகளை விதித்துள்ள நிலையில், எந்த தடையையும் ஏற்கப்போவதில்லை என்றும் அமெரிக்கா பெரிய வலியை சந்திக்க நேரிடும் என வடகொரியா தெரிவித்துள்ளது.

 
 
 
 
அமெரிக்கா பெரிய வலியை சந்திக்க நேரிடும்: ஐ.நா தடைகளை நிராகரித்த வடகொரியா அறிக்கை
 
பியான்யங்:
 
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
 
சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த வாரம் சக்திவாய்ந்த அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.
 
இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்தது.
 
அதில், வடகொரியாவின் நிலக்கரி, லெட் (கனிமப்பொருள்) மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் திருத்தங்களுடன் கூடிய தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.
 
அமெரிக்காவின் இந்த தீர்மானம் சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஒருமனதாக பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேறியது. ஏற்கனவே, பலமுறை வடகொரியாவுக்கு எதிராக பல தீர்மானங்களை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், ஐ.நா.வின் தடைகளுக்கு பதிலளித்துள்ள வடகொரிய தூதர் ஹான் டே சாங், “சமீபத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் சட்டவிரோதமானது. இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களுக்கு தடை மற்றும் கிம் ஜாங் உன் சொத்துக்கள் முடக்கம் ஆகிய அம்சங்கள் இடம் பெற்ற அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறினால் அதற்காக அமெரிக்கா பெரும் வலியை சந்திக்க நேரிடும் என வடகொரியா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

http://www.maalaimalar.com/News/World/2017/09/13100053/1107744/North-Korea-rejects-UN-sanctions-warns-US-will-face.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.