Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

Featured Replies

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரறிவாளன்
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் உள்ளிட்டோர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டது. பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றனர். 

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, அவரது தாயார் அற்புதம்மாள், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைச் சந்தித்து மனு அளித்திருந்தார். இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளையுடன் பேரறிவாளனின் பரோல் முடிவடையும் நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/103089-perarivalan-parole-extended-on-one-more-month.html

  • தொடங்கியவர்

பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து அரசாணை வெளியிடப்படவில்லை..! அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்

 

'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

CV_Shanmugam_long_14354_13598.jpg


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு அளிக்க, கடந்த 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோல் விடுப்பு மட்டுமல்லாது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்துவருகின்றனர். நாளையுடன் ஒரு மாத கால பரோல் முடிவடைகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு மாத காலத்துக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சட்டஅமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். இந்த நிலையில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்கப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. தற்போது, அந்தத் தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறுத்துள்ளார். 'பேரறிவாளனின் பரோல் நீட்டிப்புகுறித்து இதுவரை தமிழக அரசு எந்த அரசாணையும் வெளியிடவில்லை' என்று அவர் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/103095-tn-government-did-not-release-go-any-for-extension-of-perarivalan-parole.html

  • தொடங்கியவர்

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு: அரசாணை வெளியீடு!

 

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பேரறிவாளன்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தை கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்தனர்.

இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக, அவரது பரோலை நீட்டிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழக அரசுக்கு அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். இதனால், பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று காலையே தகவல் வெளியானது.  தற்போது, இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

 

இந்த அரசாணை சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மேலும் ஒரு மாதத்துக்கு பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/103128-perarivalans-parole-extended-for-one-more-month---government-order-released.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?

என்ன திட்டத்தை தீட்டி வைத்திருக்கிறார்களோ யாருக்குத்தெரியும்! :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.