Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 7 இலட்சம் பேரம் பேசினார் சிறிதரன்!

Featured Replies

வைரவிழாவுக்கு வடமாகாணமுதலமைச்சர், கல்வி அமைச்சரை அழைக்காதிருக்க 7 இலட்சம் பேரம் பேசினார் சிறிதரன்!

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா நிகழ்விற்கு பிரதமவிருந்தினர் அழைப்புத் தொடர்பாக இடம்பெற்ற பிரச்சனையில் குறித்த விழா கல்வி அமைச்சினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிப்படுகின்றது.

குறித்த சம்பவம்தொடர்பாகத் தெரியவருவதாவது,

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் 60ஆவது ஆண்டு வைர விழா நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை அழைக்காது என்னை அழைத்தால் நான் 2 இலட்சம் ரூபா பணமும், சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறி 5மில்லியன் பெறுமதியான கட்டடம் ஒன்றையும்  கட்டித்தருவேன் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தற்கமைய அவர் பிரதம விருந்தினராக அழைக்கப்படவுள்ளார் என பாடசாலை அதிபர் தெரிவித்திருந்தார்.

பாடசாலை  அதிபரின் இச்செயற்பாட்டைக் கண்டித்த பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் காரணமாக எதிர்வரும் 2ஆம் நாள் நடைபெறவிருந்த வைரவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தவிடயம் குறித்து நேற்று வடக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம் பெற்ற கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் விடயத்தை வடக்கு கல்வி அமைச்சர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் குறித்த நிகழ்வை உடனே இடைநிறுத்தி பாடசாலையின் அனைத்து சமூகங்களின் முழு ஒத்துழைப்புகிடைக்கும் பட்சத்தில் வேறு ஒரு நாளில் நிகழ்ச்சியை நடாத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு ஆலோசனைவழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில்  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

எதிர்வரும் இரண்டாம் திகதி  கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழா நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதம் மூலம் விழாவினை பிறிதொரு தினத்தில் ஒத்தி வைக்குமாறு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு ஊடாக கடிதம் அனுப்பபட்டுள்ளது.

22054416_693639284164261_1563686818_n.jp

22054416_693639284164261_1563686818_n.jp

 

http://thuliyam.com/?p=80063

  • தொடங்கியவர்

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா இடை நிறுத்தம் தொடர்பான வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் ஊடக அறிக்கை.

கிளிநொச்சி இராமநாதபுரம் வைரவிழாக் கொண்டாட்டங்கள் தொடர்பானது
கிளிநொச்சி இராமநாதபுர மகா வித்தியாலயத்தில் 02.10.2017 அன்று கொண்டாடப்படவுள்ள வரைவிழா நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் ஊடகப் பிரிவி அறிக்கை

1. மேற்படி வைரவிழா நிகழ்வுகள் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினதோ அல்லது முதல்வரினதோ பிரசன்னமின்றி பாடசாலையின் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமை தொடர்பாக மேற்படி பாடசாலைச் சமுகம்,பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்களின் முறைப்பாடுகளை அடுத்து இம்முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பின்னர்,கல்வி அமைச்சின் அனுசரணையுடன், நடைபெற வேண்டுமென்பதால், இந் நிகழ்வை இடை நிறுத்துமாறு செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.

2. இவ்வைர விழாக் கொண்டாட்டங்கள் பாடசாலைச் சமுகத்திற்கு விருப்பமில்லாத வகையில் நடைபெறுவதாகவும்,ஒரு சிலஅரசியல்வாதிகளின்; தனிப்பட்ட குறுகிய அரசியல் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் சில அழுத்தங்களைக் கொடுத்து,தமக்கு விருப்பமில்லாத விருந்தினர்களை அழைக்க வைத்ததுடன்; கல்வி அமைச்சின் கீழ் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சரையோ அல்லது முதலமைச்சரையோ அழைக்காது, இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டதை தாம் விரும்பவில்லை எனவும் பாடாலைச் சமுகத்தினர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

3. அவர்களது முறைப்பாடுகளில்; கிளிநொச்சி மாவட்ட்ததைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி பாடசாலை அதிபர் மற்றும் சமுக்ததினரிடம் இவ்விழாவுக்குத்தன்னைப் பிரதம விருந்தினராக அழைக்க வேண்டுமெனவும் வைர விழா கொண்டாட்டங்களுக்கான செலவை ஈடு செய்யும் வகையில் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கு வதாகவும்,மேலும் மாடிக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக 50 மில்லியன் ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசி ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டு இந்த விழாவுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் வடக்கு மகாண கல்வி அமைச்சரையோ அல்லது முதலமைச்சரையோ அழைக்கக்கூடாது என்றும் நிபந்தனை போட்டுள்ளதுடன் கிளிநொச்சிப் பிரதேசத்திற்குத் தானே எல்லாவகையிலும் பொறுப்பாக இருப்பதால், வெளியார் எவரையும் அழைக்கக் கூடாது என்றும் கடுமையாகத் தெரிவித்;துள்ளார் என்று எமக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பழைய மாணவர்களோ அல்லது அபிவிருத்திச் சங்கமோ குறிப்பிட்ட அரசியல்வாதியை பிரதம விருந்தினராக அழைக்க விரும்பவில்லை என்பதை, அதிபர் குறித்த அரசியல்வாதியிடம் தெரிவி;தத பின்பே, இந்த நிதி அன்பளிப்புக்களைக் காட்டித் தன்னை பிரதம விருந்தினராகப் போட வைத்துள்ளார். .பாடசாலை அபிவிருத்திக் குழு விரும்பவில்லை என்பதைத் தெரிந்து,அவர்களையும் அழைத்து, நெருக்கடிகளைக் கொடுத்தே ஏற்றுக் கொள்ள வைத்தார் என்பதை சம்பந்தப் பட்டவர்களே எமக்குத் தெரிவி;த்துள்ளனர்.

இத்தகைய ஒரு சூழலில் பாடசாலையையும், பாடசாலை நிகழ்வுகளையும் அரசியல் களமாக்குவதை ஏற்றுக் கொள்வது தவறான முன்னுதாரணமாகும்.  பாடசாலையின் நிர்வாகத்தைக் குழப்பும் வகையில் அரசியல் வாதிகளோ அல்லது வெளியார் எவருமோ பாடசாலை விடயங்களில் தலையிடுவதை கல்வி அமைச்சு அனுமதிக்க முடியாது.

4. பாடசாலை நிர்வாகம் என்பது பிள்ளைகள் ஆசிரியர்கள் பெறறோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் கல்வி அபிவிருத்தியையும்,நல்லொழுக்கத்தையும் பேணிவருகின்ற ஒரு புனிதமான நிறுவனம் என்ற வகையில் அரசியல் வாதிகளின் தேவையற்ற தலையீடுகள் மற்றும் அடாவடித் தனங்களினால் பாடசாலையின் இயல்பு நிலை குழம்பக் கூடாது என்ற  வகையில் பொது மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையிலேயே இம் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

001-741x1024.jpg

 

 

 

002-727x1024.jpg

http://thuliyam.com/?p=80125

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீதரனின் குழப்படி கூடிக்கொண்டு போகுது தமிவின்னும் சோடை போகத்தொடங்கி விட்டுது கொப்பி பேஸ்ட் பண்ணி அலுத்துவிட்டுதாக்கும் .

  • தொடங்கியவர்

ஸ்ரீதரன் ஒரு மோசமான அரசியல்வாதி எனத் தெரியும் , ஆனால் இவ்வளவு கேவலமானவர் என நான் எதிர்பார்க்கவில்லை. தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேனும் இவர், அவர்களின் அடிவருடியாகவே தாயகத்தில் செயற்படுகிறார் , தன் மீது களங்கம் வரும் போதெல்லாம் புலி புராணம் பாடி மக்களைத் திசை திருப்பும் கபட வேடதாரி. அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து சக எம்.பி யை தாக்கச் சென்றது ரவுடித் தனத்தின் உச்சம். தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து முற்றாகத் துரத்தப் பட வேண்டிய கூத்தாடி

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.