Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்தினிப் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலிரவில்,

என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே

நொறுங்கிப்போனது

உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும்.

ஒவ்வொரு நாள் காலையிலும்,

தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில்,

பொய்த்துக் கொண்டிருக்கிறது

மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும்.

புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும்,

உன் முகம் அடையும் பிரகாசத்தை

நம் வீட்டு படுக்கையறையில் கூட

இதுவரை கண்டதில்லை.

உப்புப் போட மறந்ததையும்,

சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும்,

தாண்டி

என்னிடம் பேச

விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை.

'அவரு', 'என் வீட்டுக்காரர்'

உன் உதடுகள்

உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு

என் பெயர்

கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு.

"ம்ம்ம்........ வந்து

அடுத்த வாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா"

தயங்கி தயங்கி

கேட்கும் ஒவ்வொரு முறையும்

உன் குடும்பத்திலிருந்து அந்நியப்பட்டுப் போகிறேன்.

"வாங்க... உட்காருங்க... காஃபி சாப்பிடுங்க..."

இயந்திரத் தனமாய்

இம்மூன்றைத் தவிர வேறெதையும்

என் நண்பர்களிடத்தில் பேசியதாய்,

எனக்கு நினைவில்லை.

தோழியென்றோ, தோழனென்றோ,

ஒருவருமே இல்லாமல்

உன்னுடைய ஒட்டு மொத்த உலகமே

கணவனும், புகுந்த வீடும் மட்டுமே

என்பதில் நீ வேண்டுமானால்,

பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

என் தந்தையின் எதிரே

அமர்ந்து பேச மறுக்கும்

ஒவ்வொறு முறையும் நினைவுறுத்துகிறாய்

உன் தந்தையின் முன்பு மட்டும்

நீ கால் மீது கால் போட்டமர்ந்து

பேசுவதை.

வழி வழியாய் வந்ததையே

பார்த்தோ...

கேட்டோ...

பழகியோ...

நீயும்

'வத்தக் குழம்புக்குள்'

உன் உலகை

தேடிக் கொண்டிருக்கிறாய்.

போர்த்திக் கொண்டு,

தூணின் பின் நின்று,

நிலம் பார்த்து

பதில் சொல்லும் பழக்கம்

நம் பாட்டிகளோடு

போகட்டும்.

வந்து விடு.

கற்புக்கரசிகளும், பத்தினிப் பெண்களும்

காவியங்களோடு போகட்டும்.

சரி, தவறுகள் செய்யும்

சாதாரண மனுஷியாய்,

உன் வட்டத்தைத் தாண்டி

வெளியே வந்து விடு.

http://nandhakumaran.blogspot.com/2007/03/blog-post.html

தன்னிலும் மேலாய்

தாலியை எண்ணினாள்

கணவன் என்றதை

கண்ணிலே ஒத்தினாள்...

நயவஞ்சம் மறந்தவள்

நட்ப்புடன் நடந்தாள்

உயிரிலும் மேலாய்

உன்னையே எண்ணினாள்...

பாசத் தோடுண்ணை

பந்திக்கழைத்தாள்

இவளையா போய் - நீ

இன்றிங்கு இழித்தாய்....???

திருமணம் நடந்தால்

திருப்பங்கள் நடக்கும்

கணவன் பெயரதை

பெண்ணவள் சொல்லால்...

அத்தான் என்றுன்னை

அன்பாய் அழைப்பாள்

அவளையா போயின்று

சந்தேகப் பட்டாய்...???

''புகுந்த வீட்டுக்கு

புதுமைகள் செய்வாள்

தன்னுறவென்றவள்

தாராளம் செய்வாள்....''

அன்புக்கங்கு

அடிபணிந்திருப்பாள்

பண்பை ஒழுகியே

பக்குவம் காப்பாள்....

''படுக்கையில் வந்தவள்

படுக்கையை இடுவாள்

உனக்கு மட்டுமே

உறவுகள் தருவாள்...''

மனைவி யென்ற

மகத்துவம் செய்வாள்

விடிந்ததும் உன்னில்

விழிகளை திறப்பாள்....

ஏன் என்று கேட்டால்

என்னென்று சொல்வாள்..?

இதுவும் புரியாத

புருசன் நீயா....???

உனக்கெல்லாம் இன்று

திருமணம் எதுக்கு...???

............................................

இதை காவியே வந்த

காவடிக்குதையடா..... :):unsure::unsure: :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் அழகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன்..

உமக்கு வீட்டுக்கும் உமக்கும் ஏவல் செய்ய ஆள் வேணுமெண்டால் காசுக்கு யாரையும் பிடியும்.

கலியாணம் என்ற பெயரில் நாடகம் போட வேணாம்.

நீங்கள் எங்கையோ இருக்கிறியள். நாங்கள் எங்கையோ இருக்கிறம். படு பத்தாம் பசலித் தனத்தோடு இருக்கிற உம்மிடம் விவாதிக்க ஒண்டும் இல்லை. அறிவு அறிவு எண்டு ஒரு விசயமிருக்கு. அதை அறிஞ்சு கொள்ள முயற்சியும். இல்லாவிட்டால் ஏதும் ஆயுதக் கப்பல் அசைந்து வரும். நல்லா மிதந்து கொண்டு அதைப் பற்றிப் பாடும்.

வயசு போனதுகளோடை கதைக்கவே முடியாது. பழசுகளுக்கு எண்டு யாழ் களம் திறந்தால் என்ன..?;)

நான் வாத்சாயனரின் காமசூத்திரத்தையோ வெள்ளை நைற்றியோடை அன்ரியென்றோ ஏதாவவு கவிதை எழுதினால் என்னை கட்டி வைச்சு அடியும்.

- இதுக்குள்ளை கறுப்பி வந்து தன்ர வழமையான கடமையை செய்திட்டும் போறா.. -

  • கருத்துக்கள உறவுகள்

பத்தினிப்பெண்களைப்பத்தி கவிதை பாடுறீங்க நான் என்னத்தை ஐயா சொல்லுறது?

பத்தினிப்பெண்களைப்பத்தி கவிதை பாடுறீங்க நான் என்னத்தை ஐயா சொல்லுறது?

அது என்றால் உண்மை தான் பத்தினிகள் பற்றிய பேசில் கறுப்பி க்கு எனன் வேலை????? :P

காவடியும், வன்னிமைந்தனும் ஒரு முடிவோடதான் இருக்கிறீர்கள்? எங்க ரெண்டு பேரும் சேட்டை கழற்றிப் போட்டு அடிபடுங்கோ பார்ப்பம்? கோழிச் சண்டை பார்த்து கனகாலம் ஆகிவிட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடியும், வன்னிமைந்தனும் ஒரு முடிவோடதான் இருக்கிறீர்கள்? எங்க ரெண்டு பேரும் சேட்டை கழற்றிப் போட்டு அடிபடுங்கோ பார்ப்பம்? கோழிச் சண்டை பார்த்து கனகாலம் ஆகிவிட்டது.

உப்பிடி சொன்னால் எப்பிடி.. ஏதாவது ஒரு பக்கத்துக்கு come on come on எண்டு சொல்லி உற்சாகப்படுத்தினால்த்தானெ சண்டை போடலாம்.

கூன் விழுந்த கிளட்டுக்கு

குமரிகள் கதை எதுக்கு...??

ஆண்டாயிரம் முன்னாடி

அவைகள் நடந்ததென்று...

தம்பட்டம் மடிக்கின்ற

தம்பையாக்காளே

கொங்சம் நின்று

கொஞ்சம் சிந்தி....

மங்கையவர் எல்லாம்

மந்திகள் அல்ல

கொப்பு தாவிடும்

குரங்கினம் அல்ல....

மூத்தவர் என்றுமக்கு

முன்னாடி ஓர் வணக்கம்

அகந்தையில்லாது

அன்பான பணீ வணக்கம்...

இந்தைய காலமதில்

ஏற்ப்பில்லையென்றால்

முந்தைய காலமதையேன்

முதுகில் சுமக்கிறீர்...???

தொப்பையை காட்டியவள்

தொப்பயாய் போறாள் என்று

பச்சையாய் சொல்லி நீவீர்

பல்லிழிக்கின்றீர்...

பெண்ணா இவள் என்று

பேசி அவளை

ஏசி பட்டமதை

ஏலமாய் கொடுக்கின்றீர்...

நீவீரா வந்திங்கு

கூச்சல் இடுகின்றீர்...??

போதுமய்யத போதும் உங்கள்

போக்கரி தனங்கள்...

காணுமய்யா விட்டு விட்டு

கடப்பைக்கு போங்கள்...!!!

:blink::huh::o :P :P :P :):unsure::unsure:

காவடி அருமையையாய் காவடி எடுத்திருக்கிறீங்க... ஆனால் இறக்கி வைக்கும் போது தான் கொஞ்சம் நெருடுது.... பத்தினிப் பெண்கள் காவியத்தோடு போகட்டும் என்றால் இனி யாரும் அப்படி இருக்கத் தேவையில்லை என்றா சொல்கிறீர்கள்.... ஆனாலும் கவி நடை நல்லா இருக்கு.... அழகா பலரது உள்ளக் கருத்தை சொல்லியிருக்கிறீங்க.... தொடந்து எடுங்கோ காவடி.... சனம் பார்பினம் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ளீஸ் யாராச்சும் என்னை வன்னி மைந்தனின் கவிக் கணையில இருந்து என்னைக் காப்பாற்றுங்கப்பா.. தாங்க முடியல்லை..

ஆபத்துக்கு பாவமில்லை. கவிக்கணைக்கு எதிர்க்கணை விடமுடியாவிட்டால் உமது மதம் பிடித்த யனைப்படையை களமிறக்கிவிடும். வன்னிமைந்தன் ஓடிவிடுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் என்று கேட்டால்

என்னென்று சொல்வாள்..?

இதுவும் புரியாத

புருசன் நீயா....???

உனக்கெல்லாம் இன்று

திருமணம் எதுக்கு...???

............................................

இதை காவியே வந்த

காவடிக்குதையடா..... :unsure::lol::lol: :P :P :P

கனவுகளோடு காம கவிதை எழுதும் கவிஞரே

இது அனுபவித்ததில் வந்த கவிதையா இல்லை

ஆசையில் வந்த கவிதையா? :angry: :mellow:

உள்ளத்தில் அசை

உயிர்த்தே எழுந்தாள்

உறவுகள் ஆடியே

உறவுகள் பிரியும்...

போது மென்றே

பொறுத்தே போனால்

மனதில் நிலையாய்

நின்மதி கிடைக்கும்...

ஆட ..ஆட..

ஆசை துடித்தால்

அதிகமாய் வெறுப்பு

யாருக்கு பிடிக்கும்...??

கட்டி பிடித்து

கலவிகள் ஆடி

முட்டி பிடித்து

மூச்சை விடுவாய்...

எட்டி உதைத்தாள்

ஏளனம் என்பாய்

ஏனிந்த வாழ்வென்று

எடுத்தே எறிவாய்...

கண்ணீரோடு

காலங்கள் கழியும்

பெண்ணுக்கிந்த- இழி

வாழ்வேதற்கு...???

உள்ளம் விட்டந்த

உண்மையை உரைத்தால்

காமம் என்றா

கத்தி கரைவாய்...???.. (தீபா...??)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணனின் கவிதைக்கு காருத்துச் சொன்னேன்

இருட்டியதும் அண்ணன் என் கன்னித்தன்மையிலே கைவைக்க பார்க்கிறான்.

:angry: :mellow::unsure:

ஜயோ..இது அபச்சாரம்.....உளவாளிகளின் திட்டமிட் ஊடுருவல்...

அட அட ஏன்ன கவிகள் என்ன கவிகள் கவிப்பேரரசு பின்னீஇடார் போங்க காம இச்சைகளுக்கு மொழி கொடுத்து வசனம் கொடுத்து கவிதை எண்டு சொல்லி எழுதும் வரிகள் அருமையிலும் அருமை பாலியல் கல்வியை தமிழீழம் பகுதியில் தன் அனுபவங்களை தன் இச்சைகளை பகிர்ந்த வன்னி மைந்தன் தன் காம இச்சைகளுக்கு வரி கொடுத்த கவிகள் அழகு வளர்க கவியரசே கவித்தாயின் மூத்திர பிள்ளையே சொறி மூத்த பிள்ளையே நீ வழியாவே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.