Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’

Featured Replies

‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’

 
 
‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

போர்க்­குற்­றம் பற்­றிய விளக்­கம்

கேள்வி: போர்க் ­குற்­றம் என்­றால் என்ன?
பதில்:வெற்றி ஒன்றை நோக்கி இரு தரப்­பி­னர் போர் செய்­யும்­போது அந்­தப் போர் எவ்­வாறு முன்­னெ­டுக் கப்­பட வேண்­டும் என்று பன்­னாட்­டுச் சமூ­கத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வழி­முறை ஒன்று உண்டு.அந்த வழி­மு­றைக்கு அமை­வா­கவே போர் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டும். இந்த விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கை களைச் செய்­தால் அது போர்க்­குற்­ற­மா­கும்.

போர்க்­குற்­ற­த்துக்கான பொறுப்பு எவரிடம்?

கே:இரா­ணு­வத்­தின் பக்­கம் போர்க்­குற்­றம் நிகழ்த்­தப்­பட்­டால், அரசா அல்­லது படை­யி­னரா அல்­லது படை­ யி­ன­ருக்கு ஆலோ­சனை வழங்­கு­வோரா அல்­லது படை­யி­னரை வழி­ந­டத்­து­ப­வர்­களா போர்­குற்­றத்­துக்­கான பொறுப்பை ஏற்க வேண்­டும்?

ப: முத­லில் யார் அதற்­கான ஆலோ­ச­னையை வழங்­கி­னார்­களோ அவர்­களே பொறுப்பை ஏற்க வேண்­டும்.

கே: போரை வழி­ந­டத்­தும் அதி­காரி எந்தளவு பொறுப்பை ஏற்க வேண் டும்?

 

ப: சில நேரங்­க­ளில் இரா­ணு­வத் தள­ப­திக்­குத் தெரி­யா­மல் கீழ்­மட்­டத்­தில் இருந்து படை­யி­ன­ருக்கு உத்­த­ரவு வழங்க முடி­யும்.அப்­படி உத் த­ரவு வழங்­கப்­பட்­டால்
அதற்­கான பொறுப்பை அந்­தக் கீழ்­மட்ட அதி­கா­ரியே ஏற்க வேண்­டும். மற்றும்படி போரை வழிநடத்தும் அதிகாரிக்கே கூடுதல் பொறுப்பு.

கே:அப்­ப­டி­யென்­றால் அந்த அதி­காரி தனிப்­பட்ட முறை­யில் போர்க்­குற்­றம் புரிந்து அந்­தப் போர்க்­குற்­றத்தை அரசு கவ­னத்­தில் எடுக்­கா­மல் இருந்­தால் ஏழு வரு­டங்­கள் கழித்து அந்­தக்­குற்­றம் தொடர்­பில் அர­சாலோ உங்­க­ளாலோ விட்டு விலக முடி­யுமா?

ப:ஆம்.சில நேரங்­க­ளில் அது­பற்றி அறிந்­தி­ரா­மல் இருந்­தி­ருந்­தால் அந்­தப் பொறுப்­பில் இருந்து விடு ப­டு­வ­தற்கு வாய்ப்­புண்டு.
போரில் என்ன நடக்­கின்­றது என்று ஓர­ள­வே­னும் அறிந்
தி­ருப்­பது தலைமை அதி­கா­ரி­யின் பொறுப்­பா­கும்.உத்­த­ரவு விடு­வ­து­போல் அவர் அது­பற்றி அறிந்­தி­ருக்­க­வும் வேண்­டும்.

காலம்­க­டந்­தா­லும்­கூட, அந்த நேரத்­தில் தலைமை வகித்த அதி­காரி அப்­போது நடந்த சம்­ப­வங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டும்.

கே:அந்த அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்டு உங்­கள்­மீ­தும் சுமத்­தப்­ப­ட­லாம் அல்­லவா?

ப:ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ராக இப்­போது பிர­செல்ஸ்­ஸில் தொடுக்­கப்­பட்
டி­ருக்­கும் போர்க்­குற்­றச்­சாட்டை எடுத்­துக்­கொண்­டால் அதில் அடங்­கு­கின்ற பல விட­யங்­க ­ளில் அவர் குற்­ற­வாளி அல்லர்.

போரின்போது விடு­த­லைப் புலி­க­ளின் இடங்­க­ளை­யும் மக்­க­ளின் இடங்­க­ளை­யும் தெளி­வா­கக் கண்­ட­றிந்து வைத்­தி­ருந் தோம். புலி­க­ளின் இலக்கை நோக்­கியே தாக்­கு­தல் நடத்­தி­னோம்.இது­போன்ற குற்­றச் சாட்டுக்­கள் படை­யி­ன­ருக்கு எதி­ராகச் சுமத்­தப்­பட்டால் அதன் பொறுப்பை நான் ஏற்­பேன்.அதற்­கான பதிலை வழங்­கு­வ­தற்­கும் நான் தயார். இதற்கு அப்­பால் வேறு­வ­கை­யான போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் அவ­ருக்கு எதி­ரா­கச் சுமத்­தப்­பட் டதால் அதற்­கான பொறுப்பை அவரே ஏற்க வேண்­டும்.என்­னால் ஏற்க முடி­யாது.

கே:போர்க்­குற்ற விசா­ரணை இலங்­கைக்­குள் நடத்­தப்­பட்­டால், அது தொடர்­பில் நான் சாட்­சி­ய­ம­ளிப்­பேன் என்­றும், எந்­த­வொரு படைச் சிப்­பா­யை­யும் பன் னாட்டு போர்க்­குற்ற நீதி ­மன்­றில் நிறுத்­து­வ தற்கு அனு­ம­திக்­க­மாட்­டேன் என்­றும் கூறிய நீங்­கள் தேவை­யென்­றால் ஜகத் ஜய­சூர்­யா­வுக்கு எதி­ராக போர்க்­குற்ற நீதி­மன்­றில் சாட்­சி­ய­ம­ளிக்­கத் தயார் என்று கூறி­யது ஏன்?

ப:எந்­த­வொரு படைச் சிப்­பா­யை யும் பன்னாட்டு போர்க்­குற்ற நீதி­மன்­றில் நிறுத்­து­வ­தற்கு அனு­ம­திக்­க­மாட்­டேன் என்ற நிலைப்­பாட்­டில் நான் தொடர்ந்­தும் உறு­தி­யாக இருக்­கின்­றேன்.உள்­நாட்­டில் போர்க்­குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் விசா­ரணை நடத்­தப்­பட்­டால்-­­ஜ­கத் ஜய­சூ­ரியா குற்­ற­மி­ ழைத்­தி­ருந்­தால் அந்த விசா­ர­ணைக் குழு முன் தோன்றி சாட்­சி­ய­ம­ளிப்­பேன் என்றே நான் கூறி­னேன்.பன்னாட்டு போர்க்­குற்ற நீதி­மன்­றில் முன் னிலையாக மாட்­டேன்.

அரச சார்­பற்ற நிறு­வ­ன­மும் போர்க்­குற்ற வழக்­கொன்­றை தாக்­கல் செய்ய இய­லும்

கே:ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ராக பிர­செல்ஸ்­ஸில் போர்க்­குற்ற வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருப்­பது அரச சார்­பற்ற நிறு­வ­னம் ஒன்­றா­கும்.அரச சார்­பற்ற நிறு­வ­னம் ஒன்­றால் இவ்­வாறு வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யுமா?

ப:ஒரு குற்­றம் தொடர்­பில் எவ­ரா­வது அறிந்­தி­ருந்­தால் அவர்­கள் அது தொடர்­பில் வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யும்.இது ஒரு சாதா­ரண சட்­டம்.

கே:ஜகத் ஜய­சூ­ரி­யா­வுக்கு எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கப் போவ­தா­கக் கூறி­ய­தும் உங்­க­ளுக்கு துரோ­கிப் பட்­டம் சூட்­டப்­பட்­டுள்­ளதே?

ப: நான் 40 வரு­டங்­கள் இரா­ணு­வத்­தில் சேவை­யாற்­றி­யுள்­ளேன்.30 வரு­டங்­கள் போர்க் களத்­தில்.அன்­றைய காலத்­தில் அநு­ரா­த­
பு­ரத்­துக்கு அப்­பால் செல்­லா­த-­­, பி­ர­பா­ க­ரன் பயங்­க­ர­வாதி என்று சொல்­வ­தற்­குக்­கூட அஞ்­சிய-, மகிந்­த­வில் தொங்­கிக்­கொண்டு அர­சி­யல் இலா­பம் தேடு­கி­ற­வர்­களே என்­னைத் துரோகி என்­கின்­ற­னர்.நாட்­டுக்கு ஆற்ற வேண்­டிய கட­மையை நான் ஆற்­றி­யுள்­ளேன்.இவர்­கள் நாங்­கள் பெற்­றுக்­கொ­டுத்த போர் வெற்­றி­யைப் பயன்­ப­டுத்தி வாழ்­கின்­ற­வர்­கள்.
இரா­ணு­வத்­தில் உள்ள சிலர் புரிந்த குற்­றங்­கள் கார­ண­மா­கவே எமக்கு இப்­போது இந்த நிலை.இவர்­க­ளால் எங்­களை போன்று நேர்­மை­யா­கப் போரில் பங்­கு­கொண்­டோர் வேதனை அடை­கி­றோம்.அர­சைக் கவிழ்ப்­ப­தற்கு முயற்சி செய்­யும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இந்த வேதனை புரி­யாது.

கே:இப்­போ­தெல்­லாம் இரா­ணு­வத்தின­ரும் அர­சுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டம் செய்­கி­றார்­களே?

ப:நான் இரா­ணு­வத் தள­ப­தி­யா­ன­தன் பின்­னர் ஒவ்­வொரு மாத­மும் 4 ஆயி­ரம் பேர் வரை இரா­ணு­வத்­தில் இணைந்­த­னர்.அதற்கு முன்­னர் வரு­டத்­துக்கு மூவா­யி­ரம் பேரே இணைந்­த­னர்.16 ஆயி­ரம் வெற்­றி­டங்­கள் இருந்­தன.அதை நிரப்ப முடி­யா­மல் இருந்­தது.நான் அந்த வெற்­றி­டங்­களை நிரப்பி எல்­லா­மாக புதி­தாக 85 ஆயி­ரம் பேரை படை­யில் இணைத்­தேன். இந்த 85 ஆயி­ரம் பேரும் தொழி­லின்­மை­யா­லேயே இரா­ணு­வத்­தில் இணைந்­த­னர்.நாட்­டின்­மீது பற்று வைத்து அல்ல. போர்க் களத்­தில் இருந்­த­போ­தும்­கூட, தொழி­லுக்­காக இருக்­கின்­றோம் என்ற உணர்­வு­ட­னேயே இருந்­த­னர்.அவர்­கள் காய­ம­டைந்து வெளியே சென்­ற­தும் பணம் ஒன்றே அவர்­க­ளின் குறிக்­கோ­ளாக இருந்­தது. அப்­ப­டி­யா­ன­வர்­கள்­தான் என்­னைத் துரோகி என்­கின்­ற­னர்;ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­து­கின்­ற­னர். சில அர­சி­யல்­வா­தி­கள் இவர்­களை பேருந்தில் ஏற்றி நாடு ­பூ­ரா­வும் கொண்டு சென்று ஆர்ப்­பாட்­டம் நடத்­து­விக்­கின்­ற­னர்.ஊழல் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரும், நெறி­மு­றைப்­படி ஒழு­காத தேரர்­கள் சில­ரும் இணைந்து இந்த வேலை­யைச் செய்­கின்­ற­னர்.

கே:நீங்­கள் ஏற்­க­னவே குறிப் பிட்ட விட­யங்­கள் தொடர்­பில் ஜகத் ஜய­சூ­ரிய போர்க்­குற்­றம் புரி­ய­ வில்லை என்று தெரிவித்தீர்கள்.அப்­ப­டி­என்­றால் அவர் புரிந்த போர்க்­குற்­றம் என்ன?

ப:நான் அறிந்­த­வரை கைது செய்­யப்­பட்­டி­ருந்த விடு­த­லைப் புலி உறுப்­பி­னர்­கள் சிலரை கொலை செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டார்-. உத்­த­ர­விட்­டார்.பொது­வான இரா­ணு­வத்­தைப் பயன்­ப­டுத்தி அவர் இதைச் செய்­ய­வில்லை.அவ­ரின் கீழ் இருந்த சில சிப்­பாய்­க ­ளைப் பயன்­ப­டுத்­தியே இதைச் செய்­தார். போர் முடிந்­த­தன் பின்­னர்­தான் அவர் இந்­தக் குற்­றத்­தைப் புரிந்­தார்.அவ­ரின் கீழ் வேலை செய்த படைச் சிப்­பாயே என்­னி­டம் இந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தார்.அப்­போ­து­தான் அவ­ருக்கு எதி­ராக நான் விசா­ர­ணையை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தேன்.

ஜகத்­ஜ­ய­சூ­ரி­யவைப் 
பழி­வாங்க முயல்­வ­தாக 
குற்­றச்­சாட்டு முன்­வைப்பு

கே:நீங்­கள் அவ­ரைப் பழி­வாங்­கு­வ­தற்­கா­கவே இப்­ப­டிச் செய்­தீர்­கள் என்று சொல்­லப்­ப­டு­கி­றதே?

ப:நான் இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருக்­கும்­போ­து­தான் அவர் தொடர்­பில் விசா­ர­ணை­யைத் தொடங்­கி ­னேன்.அப்­போது அவர் எனக்கு எது­வித தொல்­லை­யும் இழைக்­க­வில்லை.அப்­படி இருக்­கும்­போது நான் ஏன் அவ­ரைப் பழி­வாங்க வேண்­டும்.

கே:அப்­ப­டி­யென்­றால் இரா­ணு­வம் போர்க்­குற்­றம் புரிந் துள்­ளது என்று நிரூ­ப­ண­மா­கி­றது அல்­லவா?

ப:ஒரு­வர் செய்த குற்­றச்­சாட்டை அனைத்­துப் படை­யி­னர்­மீ­தும் சுமத்த இய­லாது.அப்­ப­டி­யென்­றால் கிரு­சாந்தி குமா­ர­சு­வா­மி­யைக் கொலை செய்­தது இரா­ணு­வம் என்­றல்­லவா சொல்ல வேண்­டும்.அதற் கான தண்­டனை இரா­ணு­வத்­தி­லுள்ள அனை­வ­ருக்­கும் அல்­லவா வழங்க வேண்­டும்.

கே: போர் இடம்­பெற்று ஏழு வரு­டங்­கள் கடந்­தும், அதற்கு எதி­ராக அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­த­தால் போர்க்­குற்­றம் வளர்ச்­சி­ய­டை­வ­தற்கு இலங்கை அரசு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளது என்று சொல்­ல­லாமா?

ப: போர் முடிந்து ஐந்து வரு­டங்­கள் மகிந்­த­வின் ஆட்­சியே இருந்­தது கோத்தபாய மற்­றும் ஜகத் ஜய­சூ­ரியா போன்­ற­வர்­கள் அந்த ஆட்­சி­யில் இருந்த பிர­ப­லங்­கள்.ஜகத் ஜய­சூ­ரிய அவ­ரா­கவே தீர்­மா­னித்து எதை­யும் செய்­ய­வில்லை.கோத்­த­பா­ய­வின் ஆலோ­ச­னைப்­ப­டி­தான் எல்­லா­வற்­றை­யும் செய்­தார். அப்­போ­தைய அரசு இவ­ரது போர்க்­குற்­றம் தொடர்­பில் எது­வித நட­வ­டிக்­கை­ யும் எடுக்­க­வில்லை.அர­சாக இருந்­து­கொண்டு இதை பாது­காத்­த­து­போல் இப்­போது எதிர்க்­கட்­சி­யில் இருந்த்­துக்­கொண்டு இவ­ரைப் பாது­காக்­கின்­ற­னர்.படை­யி­ன­ருக்கு அவ­மா­னம் ஏற்­ப­டும் வகை­யில் ஏதா­வது இடம்­பெற்­றால் அதை மறைத்து வைப்­பது நல்­ல­தல்ல.

 

கூட்டு அரசும் போர்க் குற்றத்துக்குத் துணையா?

கே:ஆனால்,ஜகத் ஜய­சூர்­யா­வுக்கு எதி­ராக எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப் போவ­தில்லை என்­றும் , பன்­னாட்டு போர்க்­குற்ற நீதி­மன்­றத்­துக்கு அவரை அனுப்­பப்­போ­வ­தில்லை என்­றும்­அ­ரச தலை­வர் தெரிவித்துள்ளார். அப்­ப­டி­யென்­றால் இந்த அர­சும் போர்க்­குற்­றத்தை மறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கின்­றது அல்­லவா?

ப:இரா­ணு­வத்­துக்கு எதி­ராக பன்­னாட்­டுச் சமூ­கம் செயற்­ப­டு­வ­தற்கு இடம்­கொ­டுக்­க­மாட்­டேன் என்றே அரச தலை­வர் கூறி­னார்.ஆனால்,நாட்­டின் சட்­டப்­படி தவ­றி­ழைத்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு நட­வ­டிக்கை எடுக்க அனு­ம­திக்­க­மாட்­டேன் என்று அவர் கூற­வில்லை.

கே:படை­யி­னர் போர்க்­குற்­றம் புரி­யவே இல்லை என்று தற்­போ­தைய இரா­ணு­வத் தள­பதி கூறி­யுள்­ளாரே?

ப:படை­யி­னர் குற்­றம் செய்­ய­வில்லை என்று எடுத்த எடுப்­பில் ஓர் இரா­ணுவ அதி­கா­ரி­யால் கூற முடி­யாது.படை­யி­ன­ரும் சாதா­ரண மனி­தர்­கள்­தான்.பிழை­கள்செ ய்­தி­ருக்க முடி­யும்.ஒரு பொறுப்பு வாய்ந்த் அதி­காரி என்ற வகை­யில் அது குறித்­துத் தேடிப் பார்த்த பின்பே பதில் கூற வேண்­டும்.

கே:நீங்­கள் இறு­தி­யா­கக் கூற விரும்­பு­வது?

ப:என்­னு­டன் வேலை செய்த இரா­ணுவ அதி­கா­ரி­கள் எவ­ரும் இரா­ணு­வத்­துக்கு கெட்ட பெயர் ஏற்­ப­டு­வதை ஒரு­போ­தும் விரும்­ப­வில்லை.இரா­ணு­வத்­தின் நற்­பெ­யரைப் பாது­காப்­ப­தற்கு அவர்­கள் தியாக மனப்­பான்­மை­யு­டன் உழைத்­த­னர்.குற்­றம் செய்­தால் தண்­டிக்­கப்­பட வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே அவர்­கள் இன்­றும் இருக்­கின்­ற­னர்.

குற்­றம் செய்­த­வர்­க­ளைப் பாது­காப்­ப­வர்­கள் வங்­கு­ரோத்து நிலை அடைந்த
அர­சி­யல்­வா­தி­கள்­தான்.என்­னைச் சிறை­யில் அடைத்­த­போது அவர்­கள் கொண்­டா­டி­னார்­கள்.போர்க்­குற்­றம் புரிந்த்த இரா­ணு­வத்­தி­ன­ரைப் பாது­காப்­ப­தற்கு முயற்சி செய்­கின்­ற­னர்.அர­சி­யல் இலா­பம் பெறு­வ­தற்­காக இவ்­வாறு செய்­கின்­ற­னர்.

பிர­பா­க­ர­னைக்­கூட இவர்­கள் விமர்­சிக்­க­வில்லை.ஆனால் என்னை துரோகி என்று கூறு­கின்­றார்­கள். இவர்­கள் நாட்­டின் நாட்டு மக்­க­ளின் நிதி­யைத் திரு­டி­ ய­தைத் தவிர இந்த நாட்­டுக்­குச் செய்­தது எது­வு­மில்லை .என்­னைத் துரோகி என்று கூறு­வ­தற்கு இவர்­க­ளுக்கு தகுதி இல்லை.இவர்­கள் படை­யி­ன­ருக்­காக ஏதா­வது செய்­தி­ருக்­கி­றார்­களா? கிடை­யாது.

நாம் போர்க் களத்­தில் சிர­மத்­தோடு செயற்­பட்ட வேளை எமக்கு ஆத­ர­வா­கக் குரல் கொடுக்­காத-, எமக்­காக எது­வும் செய்­யாத இந்த அர­சி­யல்­வா­தி­கள், இப்­போது அர­சி­யல் இலா­பத்­துக்­காக படை­யி­ன­ரின் பெயரை விற்­பதை நாங்­கள் அனு­ம­திக்­க­மாட்­டோம்

http://newuthayan.com/story/33819.html

4 hours ago, நவீனன் said:

‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’

தலைப்பை பாத்தவுடனே இதை தமிழர் சொல்லியிருக்க மாட்டினம் என்று நினைத்தது சரியா போச்சு.

ஏனென்டால் தமிழர் அகிம்சை, நாகரிகம் கருதி "மிலேச்ச" என்றெல்லாம் உண்மைகளை உரைக்கமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.