Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்ஸ்போர்டு பல்கலையின் மரியாதையை இழந்தாரா?

Featured Replies

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து ஆங் சாங் சூகி படம் அகற்றம்!

 

மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அவரது புகைப்படத்தை அகற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங் சாங் சூகி

 

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருகிறார்கள். இதற்கு உலக நாடுகளிலிருந்து, ஐ.நா சபை வரை அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகராக இருப்பவர் ஆங் சாங் சூகி. இவர் தனது பட்டப்படிப்பை 1967-ம் ஆண்டு லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருக்கும் இக்கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்த ஆங் சாங் சூகியின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழுள்ள அந்தக் கல்லூரியில் 1999-ம் ஆண்டு முதல் சூகியின் புகைப்படம் இடம்பெற்று வருகிறது.

மேலும், சூகி நோபல் பரிசு வென்றவுடன் இக்கல்லூரி அவரை சிரப்பு விருந்தினராக அழைத்து வந்து கவுரவப்படுத்தியது. ஆனால், தற்போது மியான்மரில் பாதிக்கப்பட்டு தவித்து வரும் ரோஹிங்யா மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த சூகியின் புகைப்படத்தை கல்லூரி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி நிர்வாகமோ, புதிய புகைப்படங்கள் வைக்க உள்ளதால் தான் அகற்றினோம் எனக் காரணம் கூறியுள்ளனர்.

http://www.vikatan.com/news/world/103787-oxford-university-removed-aung-san-suu-kyi.html

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை இடத்திலை படிக்கலை ஆனா வந்து உரை நிகழ்த்த வந்தவரை  மகிந்தவை திருப்பி அனுப்பிய  பொழுதுகள் நினைவுக்கு வருது நன்றி ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு .

(மகிந்த  இங்கு வந்து உரை ஆற்றுவதுக்கு முக்கிய எடுபிடி ஈழத்து Intellectual அறிவுஜீவி எனப்படும் ஜிவன்ஹூல் )

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்ஸ்போர்டு பல்கலையின் மரியாதையை இழந்தாரா?

 

i3.php_-300x200.jpgமியான்மர் நாட்டின் அரசு ஆங் சாங் சூகி அவர்களின் ஆலோசனையில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் ஆங் சாங் சூகி எந்தவித நடவடிக்கையும் எடுக்க தவறியதால் அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இதுவரை வழங்கி வந்த மரியாதையை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஆங் சாங் சூகி லண்டனில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார படிப்பை முடித்தார். இந்த கல்லூரி ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்திருப்பதால் இக்கல்லூரி நிர்வாகம் அவருக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அவருடைய புகைப்படத்தை கல்லூரியில் கடந்த 1999ஆம் ஆண்டு வைத்தது இந்த நிலையில் மியான்மரில் ரோஹிங்கா முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறியதால் அந்த படத்தை பல்கலை நிர்வாகம் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் ஆங் சாங் சூகி அவர்களின் வேறு புதிய படத்தை வைக்கவே பழைய படத்தை நீக்கியுள்ளதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

http://www.etr.news/ஆக்ஸ்போர்டு-பல்கலையின்-ம/

  • தொடங்கியவர்

ஆங் சான் சூகிக்கு வழங்­கப்­பட்ட கௌரவ பட்டம் பறிமுதல்

 

 

மியன்­மாரின் ஜன­நா­யகத் தலைவர் ஆங் சான்  சூகிக்கு  ஜன­நா­ய­கத்தை  நிலை­நாட்ட   அவர் மேற்­கொண்ட நீண்ட கால போராட்­டத்­திற்­காக  1997  ஆம் ஆண்டு  தன்னால் வழங்­கப்­பட்ட கௌரவ ஒக்ஸ்போர்ட் சுதந்­திர பட்­டத்தை பிரித்­தா­னிய  ஒக்ஸ்போர்ட் நகர சபை  பறி­முதல் செய்­துள்­ளது.

angshan-su-ji-oxford.jpg

 அவர்  அந்தப் பட்­டத்தை இனி­மேலும் பெற்­றி­ருப்­பது சரி­யா­ன­தல்ல என அந்த சபை குறிப்­பிட்­டுள்­ளது. ஆங் சான் சூகியின் கௌரவ பட்­டத்தை பறி­முதல் செய்­வ­தற்கு தான் ஆத­ர­வ­ளித்­துள்­ளதை ஒக்ஸ்போர்ட் நகர சபையின் தலைவர்  பொப் பிறைஸ்  உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார். 

மியன்­மாரின் ராகைன் பிராந்­தி­யத்தில் அண்­மையில் இடம்­பெற்ற வன்­மு­றை­களால் அந்தப் பிராந்­தி­யத்­தைச்­சேர்ந்த அரை மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான ரோ­ஹிங்யா முஸ்­லிம்கள் நாட்டை விட்டு இடம்­பெ­யர்ந்து  அயல் நாடான பங்­க­ளா­தேஷை தஞ்­ச­ம­டைந்­துள்ள நிலையில்  ஆங் சான் சூகி அது தொடர்பில் பாரா­மு­க­மாக இருப்­ப­தற்கு கண்­டனம் தெரி­வித்தே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் நிலை­யங்கள் மீது ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த கிளர்ச்­சி­யா­ளர்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தை­ய­டுத்­து அங்கு வன்­மு­றை கள் கிளர்ந்­தெ­ழுந்­தன. ஆங் சான் சூகி மியன்­மாரை இரா­ணுவ சர்­வா­தி­கார ஆட்­சி­யி­லி­ருந்து விடு­விக்கும் போராட்­டத்தில்  பல வரு­டங்­களை வீட்டுக் காவலில் கழித்­த­வ­ராவார்.

 தொடர்ந்து  2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற  தேர்­தலில் அவ­ரது கட்சி  பெரும் வெற்­றியைப் பெற்று ஆட்­சியைக் கைப்­பற்­றி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் ராகைன் பிராந்­தி­யத்தில் ரோஹி ங்யா இன மக்­க­ளுக்கு எதி­ராக இரா­ணு­வத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் வன்­மு­றை­களை தடுத்து நிறுத்தத் தவ­றி­யமை கார­ண­மாக அவர் சர்­வ­தேச ரீதி­யான கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்ளார். 

ரோஹிங்யா முஸ்­லிம்கள் தொடர்பில் ஆங் சான் சூகி  நட­வ­டிக்கை எத­னையும் எடுக்க முயற் சிக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  ஏனைய அமைப்புகளும் அவருக்கு தம்மால் வழங்கப்பட் டுள்ள  கௌரவ பட்டங்களை வாபஸ் பெறுவது குறித்து ஆராய்ந்து  வருவதாக தெரிவிக்கப் படுகிறது.

http://www.virakesari.lk/article/25329

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மார் UK வேண்டிக் கேட்டது ஏதாவதை கொடுக்க மறுத்துவிட்டதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.