Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை வழங்க அனைத்துக் கட்சிகளது உதவியை கேட்கிறார் ரணில்

Featured Replies

அரசியல் தீர்வை வழங்க அனைத்துக் கட்சிகளது உதவியை கேட்கிறார் ரணில்

 

அரசியல் தீர்வை வழங்க அனைத்துக் கட்சிகளது உதவியை கேட்கிறார் ரணில்

60 ஆண்டுகாலமாக வழங்க முடியாமலிருக்கும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்பாக செயற்படுகின்ற நிலையில், அதற்கு நாடாளுமன்றத்திலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகாலத்தை கொண்டாடுகின்ற தினத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க முடியாமையிட்டு தான் கவலையடைவதாகவும் பிரதமர் கூறினார்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் விசேட அமர்வு இடம்பெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.

“இந்நாட்டில் செழிப்பும், சௌபாக்கியமும் ஏற்படும் என்று எதிர்பார்த்தே இந்த சபையில் நான் யோசனையை முன்வைத்தேன். நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்களாகியதை முன்னிட்டு பெருமைகொள்கின்ற அதேவேளை கவலைப்படவும் ஒரு விடயம் எமக்கு இருக்கின்றது. 1947ஆம் ஆண்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனத்தாரும் இலங்கையர்கள் என்றே பயணத்தை ஆரம்பித்தோம். இந்த 60 வருடங்களில் எமது நாட்டில் இனப்பிரச்சினையும், ஆயுதப் பிரச்சினையும், பிரிவினைவாதமும் காணப்பட்டது. ஆனாலும் நாங்கள் இவற்றிலும் ஜனநாயகத்தை பாதுகாத்தோம். எனினும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வும், ஐக்கியமும் பெற்றுக்கொள்ள வேண்டும். எமது கட்சி முறையில் அல்லது அரசியல் கட்டமைப்பில் இருக்கின்ற குறைபாடுகளாக இருக்கலாம். எனினும் செழிப்பும், சௌபாக்கியத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எமது நாட்டின் பிரதான பிரச்சினையாக இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சபையாக நாடாளுமன்றத்தை மாற்றி, வழிநடத்தல் குழுவிலுள்ள உறுப்பினர்களது கருத்துக்களை ஒன்றிணைத்து அரசியல் தீர்வை வழங்கும் சிறந்த சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதில் நாங்கள் நலனை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நாட்டு அரசியல் கட்சிகளல்ல, அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் உள்ளார். எமது நாட்டில் விரைவான அபிவிருத்தியை அடைவதற்கும், அரசியல் தீர்வை வழங்கவும் எமது அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/ranil-requesting-to-the-all-mps

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தீர்வு என்று தெரிந்தால்த் தானே ஆதரவு வழங்குவது பற்றி முடிவு எடுக்கலாம்!

  • தொடங்கியவர்

தீர்­வைக்­காண்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு தாருங்கள்

p16-fc75e1cd3e32088ed3256d0dbee85dc8b6c03e7a.jpg

 

பாரா­ளு­மன்ற 70ஆவது ஆண்டு நிறைவில் பிர­தமர் கோரிக்கை

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு வழங்­கியே தீர வேண்டும். எனினும் துரித அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வழங்க முடி­யாமல் போன­மைக்கு எமது பிர­தான 

 கட்­சி­க­ளி­னதும் ஆட்சி கட்­ட­மைப்பின் பிர­தான குறைப்­பா­டுமே பிர­தான கார­ணங்­க­ளாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

துரித அபி­வி­ருத்­தி­யையும் இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்­றையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அன­வைரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாரா­ளு­மன்றம் ஆரம்­பிக்­கப்­பட்டு 70 வருட நிறைவை முன்­னிட்டு நேற்று செவ்­வாய்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற விசேட அமர்வின் போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

நான் இந்த சபையில் முன்­வைத்த பிரே­ர­ணையில் சுபீட்­சமும் சௌபாக்­கி­யமும் உரு­வாக வேண்டும் என்று கூறி­யுள்ளேன். கடந்த 70 வரு­டங்­களில் அவற்றை பெறு­வ­தற்கு நாம் தவ­றி­யுள்ளோம். அது தான் எமது கவ­லை­யாகும். சாதனை படைத்­த­மைக்­காக பெருமை கொண்­டாலும் சாத­னை­யுடன் கவ­லையும் உள்­ளது.

ஐக்­கிய மக்­க­ளா­கவே 1948 ஆம் ஆண்டு எமக்கு சுதந்­திரம் கிடைத்­தது. சிங்­களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்­களும் இலங்­கை­யர்கள் என்ற உணர்­வு­ட­னேயே அப்­போது வாழ்ந்­தனர். எனினும் சுதந்­தி­ரத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் 60 வரு­டங்­க­ளாக இந்த நாட்டில் இனப் பிரச்­சினை இருந்­தது. ஆயுத போர் காணப்­பட்­டது. நாட்டில் பிரி­வி­னை­வாதம் மேலோங்கி காணப்­பட்­டது. இதன்­கா­ர­ண­மாக யுத்த நிலை­மைக்கு சமூகம் தள்­ளப்­பட்­டி­ருந்­தது. எவ்­வா­றி­ருப்­பினும், இவை அனைத்­திலும் இருந்து நாம் ஜன­நா­ய­கத்தை பாது­காத்தோம் எனினும் ஜன­நா­ய­கத்தை இல்­லாமல் செய்­யவே பயங்­க­ர­வாதம் முயற்­சித்­தது.

எனினும், அந்த அர­சியல் தீர்­வையும் ஐக்­கி­யத்­தையும் நாம் இன்னும் இந்த நாட்டில் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. கடந்த 70 ஆண்­டு­களில் அபி­வி­ருத்தி அடைந்த நாடா­வ­தற்கு நாம் தவ­றி­யுள்ளோம். 1977 ஆம் ஆண்டு திறந்த பொரு­ளா­தா­ரத்தை கொண்டு வந்­தாலும் யுத்தம் கார­ண­மாக எமக்கு அதற்­கான உரிய பலனை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போய்­விட்­டது. இதனால், ஏனைய நாடுகள் எம்மை முந்தி சென்­று­விட்­டன.

ஆகவே, இந்த எதிர்­பார்ப்­புகள் இரண்­டையும் நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாமல் போன­மையே எமது பாரா­ளு­மன்ற முறை­மை­யிலும் ஜன­நா­ய­கத்­திலும் குறை­பா­டாக இருக்­கி­றது. அது எமது பிர­தான கட்­சி­க­ளி­னதும்,அர­சியல் கட்­ட­மைப்பில் உள்ள குறை­பா­டாகும்;. எனினும், சுபீட்­சத்­தையும் சௌபாக்­கித்­தையும் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்­டு­மாயின் எமது பிர­தான தேசிய பிரச்­சி­னை­யான இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்று வழங்­கப்­பட வேண்டும்.

நாம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் நோக்­குடன் முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றி, வழி­ப­டுத்தும் குழுவில் சக­லரும் கருத்­துக்­களை முன்­வைக்க இட­ம­ளித்தோம். எனவே நாம் மீண்டும் இலங்­கை­யர்­க­ளாக வாழ்­வ­தற்கு அர­சியல் தீர்­வொன்றை வழங்க ஒரு சந்­தர்ப்­ப­மொன்று கிடைத்­தள்­ளது. நாம் அந்த சந்­தர்ப்­பத்தி பயன்­ப­டுத்தி பலனை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் தீர்வை வழங்குவதற்கு அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் உள்ளார்.

எனவே, துரித அபிவிருத்தியையும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றையும் பெற்றுக்கொள்வதற்கு அனவைரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-04#page-1

  • கருத்துக்கள உறவுகள்

நரி  ஒன்று ஊழையிடுகின்றதென்றால்  எதோ அபத்தம் வரும் என்றுதானே அர்த்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.