Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காது சொந்த கூட்டு முயற்சியூடாக முன்னேற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

Featured Replies

சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்

 

பன்மொழி வித்தகரான சுவாமி விபுலானநந்த அடிகளார் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது.

சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்

இந்த நிகழ்வின் இறுதி நாளான நேற்றைய தினம் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், சுவாமி விபுலானந்தர் தன்னுடைய முழு வாழ்க்கையையும் மக்களுடைய நலனுக்காக அர்ப்பணித்திருந்தார் என சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கல்விமான் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் உடன் இணைந்து வறிய முஸ்லிம் மக்களுக்கு தனது பங்களிப்பைச் செய்வதற்கு பின்னிற்கவில்லலை.

சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்

விசேடமாக வடக்கு கிழக்கில் பல பாடசாலைகளை ஆரம்பித்து வறிய மாணவர்களுக்கு கல்வி அறிவை சுவாமி விபுலானந்தர் வழங்கியதாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள், படிப்பினைகள், அவருடைய செயற்பாட்டின் மூலமாக மனித சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் மாற்றமடையக் கூடாது, அவை அழியக் கூடாது. அதனை மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

அவருடைய வாழ்க்கைப் படிப்பினைகள், சேவைகள், சிந்தனைகள் மக்களிடையே பரப்பப்பட வேண்டும்.

சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்

அதன் மூலம் மக்கள் நன்மையடைவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், சுவாமி விபுலானநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர், முன்னாள் பேராசிரியர் எஸ். மௌனகுரு உட்பட இன்னும்பல கல்வியியலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்

https://news.ibctamil.com/ta/internal-affairs/Swami-Vipulananda-devoted-to-all-the-people

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காது சொந்த கூட்டு முயற்சியூடாக முன்னேற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

 

 

அனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரத்தினைப்பொறுத்தவரையில் எங்களது சொந்த கூட்டு முயற்சி ஊடாக முன்னேற்றமடையச்செய்து பாதுகாத்துக்கொள்வதற்கு அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sampanthan.jpg

அன்றைய காலகட்டத்தில் வறுமை நிலையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை சுவாமி விபுலானந்தர் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுவாமி விபுலானந்தரின் 125 ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களாக நடாத்தப்பட்டுவந்த சுவாமி விபுலானந்தர் மாநாட்டின் இறுதி நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

20171007_170555.jpg

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,

சுவாமி விபுலானந்தர் பல மொழிகளை கற்றுள்ளதுடன் பல மொழி நூல்களையும் மொழிபெயர்த்து தந்துள்ளார். சுப்ரமணிய பாரதியின் பல பாடல்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.

அனைத்து மக்களும் அனைத்து மொழிகளிலும் வெளிவரும் விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இவ்வாறான மொழிபெயர்ப்பு பணிகளையும் மேற்கொண்டார்.

20171007_170550.jpg

பொதுவாக மக்களுக்கு கல்விப்பணிபுரிவதில் பாரிய பங்களிப்பினை சுவாமி விபுலானந்தர் மேற்கொண்டுளு்ளார். இராமகிருஷ்ண மிசனுக்கும் விபுலானந்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மைலாபபூரில் உள்ள இராமகிருஷ்ண மிசனில்தான் விபுலானந்தர் என்ற பெயரைப்பெற்றார்.

இலங்கையிலும் வடகிழக்கு பகுதிகளிலும் இராமகிருஸ்ண மிசனின் செயற்பாடுகளை பரப்பியவர் விபுலானந்தரே. பல பாடசாலைகளையும் ஆரம்பித்தார்.

வறுமைநிலையில் இருந்த இளைஞர்கள் தொடர்பில் அதிகளவில் சுவாமி விபுலானந்தர் அக்கறை செலுத்தினார். அனைத்து மக்களுக்கும் முடிந்தளவு சேவையாற்றவேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டுவந்தார்.

இலங்கை சிவில் சேவையில் இருந்த கல்விமான் அசீஸ் அவர்களுடன் இணைந்து வறிய முஸ்லிம் மக்களுக்கும் தன்னால் இயன்ற பணியை செய்வதற்கு பின்நிற்கவில்லை. முஸ்லிம் மக்களுக்கு பல உதவிகளை இருவரும் செய்தார்கள்.

சுவாமி விபுலானந்தர் தனது முழு வாழ்வினையும் மக்களது சேவைக்காக மனித சமூதாயத்தின் சேவைக்காக அர்ப்பணித்தார். இராமகிருஸ்ணர்,விவேகானந்தரை இந்தியாவில் உள்ள மக்கள் எவ்வாறு மதித்தார்களோ அவ்வாறு விபுலானந்தரை இலங்கையில் வாழும் மக்கள் மதித்தார்கள்.

அவரை கௌரவிக்கும் வகையில் இலங்கையில் முத்திரையொன்று வெளியிடப்பட்டது. அதேபோன்று ஜேர்மனியிலும் ஒரு முத்திரைவெளியிடப்பட்டது. சுவாமி விபுலானந்தர் மூலம் கிடைத்த படிப்பனைகள் செயற்பாடுகள் மறக்கப்படக்கூடாது. அவை அழியக்கூடாது. இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக அது தொடர்பான அறிவினை மக்களுக்கு வழங்கமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்து கலாசார திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் நடைபெற்றுவந்த இந்த நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வானது நேற்று கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்ணசிங்கம் உட்பட ஆன்மீக தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் எதிர்க்கட்சி தலைவர் கௌரவிக்கப்பட்டு அவருக்கு விபுலானந்தரின் யாழ்நூலும் வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் விபுலானந்தர் மாநாட்டினையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

http://www.virakesari.lk/article/25467

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

அனைத்துக்கும் அரசாங்கத்தினை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரத்தினைப்பொறுத்தவரையில் எங்களது சொந்த கூட்டு முயற்சி ஊடாக முன்னேற்றமடையச்செய்து பாதுகாத்துக்கொள்வதற்கு அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஓமப்பு எல்லோரும் கூட்டு முயற்சியால் கட்டி எழுப்புவதை  விற்று, காட்டிக்குடுத்து பிழைப்பு நடத்துவதற்கு ஒரு தலைவர் நீங்கள் போதும்.

  • தொடங்கியவர்
‘முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்காக சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்தார்’
 

image_4b7c6d3894.jpg-வா. கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்  
சுவாமி விபுலாநந்த அடிகளார், முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.   

சுவாமி விபுலாநந்தரின் 125 ஆவது ஆண்டு ஜனன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் மூன்று தினங்களாக நடாத்தப்பட்ட, சுவாமி விபுலானந்தர் மாநாட்டின் இறுதி நிகழ்வு, சனிக்கிழமை (07) மாலை, சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில், கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் உடுவை தில்லை நடராஜா தலைமையில் நடைபெற்றது.  

இந்து கலாசாரத் திணைக்களமும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.  

இந்த நிகழ்வில், இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,   

“அனைத்துக்கும் அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காமல் தமிழ் மொழி, இந்து மதம், கலை கலாசாரம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில், எங்களது சொந்தக் கூட்டு முயற்சி ஊடாக, அவற்றை முன்னேற்றி, பாதுகாத்துக்கொள்வதற்கு, அனைவரும் இயன்ற பணியை மேற்கொள்ளவேண்டும்.   

“சுவாமி விபுலாநந்தர் பல மொழி நூல்களை மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.சுப்ரமணிய பாரதியின் பல பாடல்களை, ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஆங்கில நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தார்”.   

“அனைத்து மக்களும், அனைத்து மொழிகளிலும் வெளிவரும் விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, இவ்வாறான மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டார்”.  

“மைலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ண மிஷனில்தான், விபுலாநந்தர் என்ற பெயரைப்பெற்றார்”.  

“வறுமை நிலையில் இருந்த இளைஞர்கள் தொடர்பில், சுவாமி விபுலாநந்தர் அதிகளவில் அக்கறை செலுத்தினார். அனைத்து மக்களுக்கும் முடிந்தளவு சேவையாற்றவேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டு வந்தார்”.  

“அவரைக் கௌரவிக்கும் வகையில், இலங்கையிலும் ஜேர்மனியிலும் முத்திரைகள் வெளியிடப்பட்டன. சுவாமியினுடைய கொள்கைகள், படிப்பினைகள், செயற்பாட்டின் மூலமாக, மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட நன்மைகள் மாற்றமடையக் கூடாது; அவை அழியக் கூடாது; அதை அப்படியே அடியொற்றி, மக்கள் அறிந்திருக்க வேண்டும். இவ்விதமான செயற்பாடுகளினூடாக, அவருடைய வாழ்க்கைப் படிப்பினைகள், சேவைகள், சிந்தனைகள் மக்களிடையே பரப்பப்படுகின்றன. அதன் மூலம் மக்கள் நன்மையடைவார்கள்”.  

“கல்விமான் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸுடன் இணைந்து, வறிய முஸ்லிம் மக்களுக்காக விபுலாநந்தர், தனது பங்களிப்பைச் செய்வதற்கு பின்னிற்கவில்லை”.  

“பொதுவாக மக்களுக்கு கல்வியளிப்பதில் அவர், பாரிய பங்களிப்புகளைச் செய்திருந்தார். விசேடமாக வடக்கு, கிழக்கில் பல பாடசாலைகளை ஆரம்பித்தார்” என்று இரா. சம்பந்தன் அங்கு குறிப்பிட்டார்.  

இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைரெட்னசிங்கம், சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர், முன்னாள் பேராசிரியர் எஸ். மௌனகுரு, பேராசிரியர் சண்முகதாஸ் உட்பட ஆன்மீகத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவிக்கப்பட்டதுடன், விபுலாநந்தரின் யாழ்நூலும் வழங்கிவைக்கப்பட்டது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/முஸ்லிம்கள்-உட்பட-அனைத்து-மக்களுக்காக-சுவாமி-விபுலாநந்தர்-வாழ்ந்தார்/73-205177

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, நவீனன் said:

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்காது சொந்த கூட்டு முயற்சியூடாக முன்னேற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்

 

அரசாங்கத்தை நம்பிக்கொண்டிருக்கிறது நீங்களும் உங்கடை கூட்டுவளும் தான்....
சனம் எப்பவோ தாங்களும் தங்கடை அபிவிருத்தியும் எண்டு....

சுயமுயற்சியிலையே மத இன கலாச்சாரம் எண்டு முன்னேறிக்கொண்டிருக்கினம் கண்டியளோ...

இன்றைய ஈழத்தமிழனுக்கு ஒழுங்கான அரசியல்கட்சி இல்லாததுதான் பெரிய குறைபாடு...

அதுக்கு நீங்கள் தான் முட்டுக்கட்டை.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.