Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாது ஜனாதிபதி யாழ்.வரக்கூடாது

Featured Replies

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாது ஜனாதிபதி யாழ்.வரக்கூடாது

 

வித்­தியா கொலை வழக்கை கொலை அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி ­யிலும் யாழ்.மேல் நீதி­மன்றில் விசா­ரணை செய்ய முடியும் என் றால், அர­சியல் கைதி­க­ளு­டைய வழக்­கு­களை ஏன் வவு­னியா நீதி­மன்றில் விசா­ரணை செய்ய முடி­யாது? என கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பொதுசெய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், நாளை நடை­பெ­ற­வுள்ள ஹர்த்­தா­லுக்கு அனைத்து தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்­றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லகம் முன்­பாக அனைத்து தரப்­பி­னரும் ஒன்று கூடவேண்டும் என்றும் அழைப்பு விடுத்­துள்ளார்.

 

யாழ். ஊடக அமை­யத்தில் நேற்று மதியம் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளான ம.சுலக்சன், க.தர்சன் இ.திரு­வருள் ஆகி­யோரின் வழக்­குகள் வவு­னியா நீதி­மன்­றி­லி­ருந்து அனு­ரா­த­புரம் நீதி­மன்­றுக்கு உரிய கார­ணங்­க­ளின்றி மாற்­றப்­பட்­டுள்­ளன. இதனால் அர­சியல் கைதி­களும் அவர்­க­ளது குடும்­பத்­தி­னரும் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். இந்த வழக்கு விசா­ர­ணை­களை மறு­ப­டியும் வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு மாற்ற கோரி கடந்த 16 நாட்­க­ளாக உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் அவர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வாறு உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் உடல் நிலை மிக மோச­மான நிலைக்கு சென்­றுள்­ளன. கைதி­களின் உடல் நிலை ஆபத்­தான நிலைக்கு சென்ற பின்­னரும் கூட மனி­த­நே­ய­மற்ற முறையில். சிறைச்­சாலை திணைக்­கள அதி­கா­ரிகள் செயற்­பட்டு வரு­கின்­றனர். தமி­ழர்கள் தானே உயி­ர­ழந்து போகட்டும் என்ற நிலையில் தான் அவர்கள் இருப்­ப­தாக தோன்­று­கின்­றது. முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச உண்­ணா­வி­ரதம் இருந்த போது அவ­ரது கோரிக்­கைகள் எதோ ஒரு வகையில் நிறை­வேற்­றப்­பட்டு உண்­ணா­வி­ரதம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

ஆனால் குற்­றங்கள் எது­வுமே செய்­யாத அல்­லது தமக்கு மக்­க­ளுக்­காக சில­வற்றை செய்த இந்த அப்­பா­வி­க­ளு­டைய கோரிக்­கை­களை இந்த அர­சாங்கம் கண்டும் காணா­தது போல் இருந்து வரு­கின்­றது. உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற அர­சியல் கைதி­க­ளு­டைய குடும்­பங்­களும் மிக மோச­மான நிலையில் மன­த­ளவில் பாதிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். அவர்­க­ளது பிள்­ளைகள் சிறை­களில் உணவு உண்­ணாமல் இருக்க அவர்­க­ளது தாய்­மார்­களும் உற­வு­களும் உணவை தவிர்த்தே வரு­கின்­றனர். இதனால் அவர்­க­ளு­டைய குடும்­பங்­களும் பாதிப்பை எதிர்­நோக்கி வரு­கின்­றன.

சாட்­சி­க­ளுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்தல் என கூறு­கின்­றார்கள். ஆனால் யுத்தம் முடிந்­து­விட்­டது பாது­காப்பு அச்­சு­றுத்தல் இல்லை என இதே அர­சாங்கம் தான் பிரச்­சாரம் செய்தும் வரு­கின்­றது. ஏன் பாது­காப்பு அச்­சு­றுத்தல். யாரால் பாது­காப்பு அச்­சு­றுத்தல் என்­ப­தனை சட்­டமா அதிபர் திணைகள் வெளிப்­ப­டுத்த வேண்டும். வித்­தியா கொலை வழக்கின் போது விசா­ர­ணையில் ஈடு­பட்ட நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீதும் துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்டு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவர் கொழும்­புக்கு செல்­ல­வில்லை. வழக்கும் வேறு இடங்­க­ளுக்கு மாற்­றப்­ப­ட­வில்லை. அதே போல் இந்த கைதிகள் விட­யத்தில் ஏன் செய்ய முடி­யாது. இலங்­கையின் நீதி­மன்­றங்கள் மீது எமக்கு நம்­பிக்கை இல்லை என்­றாலும். அவர்­க­ளது வழக்கு விசா­ரணை மீளவும் வவு­னியா நீதி­மன்றில் நடை­பெற வேண்டும்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுக்கு அச்­சு­றுத்தல் என கூறி அவர் செல்லும் இடங்­க­ளுக்கு எல்லாம் பாது­காப்பு வழங்க முடியும் என்றால் அர­சியல் கைதி­களின் வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏன் பாது­காப்பு வழங்க முடி­யாது?

அர­சியல் கைதி­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும் என்ற வெறி­யோடு தான் சட்­டமா அதிபர் திணைக்­களம் செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­காக தான் அவர்­க­ளது வழக்கு விசா­ர­ணை­களை அனு­ரா­த­புரம் நீதி­மன்­றுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் மாற்­றி­யுள்­ளது. இவர்­களின் நியா­ய­மான கோரிக்கை தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான முடி­வெ­டுத்து அவர்­க­ளது வழக்­கு­களை உட­ன­டி­யாக வவு­னியா நீதி­மன்­றுக்கு மீண்டும் மாற்­று­மாறும் அது தொடர்­பான அறி­வித்­தலை அவ் அர­சியல் கைதிகள் மூவ­ருக்கும் உட­ன­டி­யாக அறி­விக்­கு­மாறும் வேண்­டு­கோள்­வி­டுக்­கின்றோம்.

மேலும் அனைத்து அர­சியல் கைதிகள் தொடர்­பா­கவும் அரசு அர­சியல் தீர்­மானம் எடுத்து நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்­யு­மாறும் கோரிக்கை விடுக்­கின்றோம். இம்­மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்­பாணம் வருகை தரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்குள் அர­சியல் கைதி­க­ளது கோரிக்­கைகள் தொடர்பில் நியா­ய­மான தீர்­வொன்றை பெற்­றுத்­தர வேண்டும். அவ்­வாறு அர­சியல் கைதி­க­ளு­டைய பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வை காணாமல் ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு வர முடி­யாது. இம்­மாதம் 13 ஆம் திகதி வடக்கு மாகாணம் தழு­விய ஹர்த்தால் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்கு அனைத்து தரப்­பி­னரும் ஆத­ரவு தர வேண்டும். அன்­றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லகம் முற்­று­கை­யி­டப்­ப­ட­வுள்­ளதால் அனை­வரும் ஆளுநர் அலுவலகம் முன்பாக ஒன்று கூடுமாறு கேட்டு கொள்கின்றோம்.

ஆகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை தர வேண்டும். அவ்வாறு தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்தால் அவருக்கு எதிராக போராடுவோம். அரசியல் கைதிகள் பிரச்சனை அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. தமிழ் மக்களுடைய விடிவுக்காக போராடியதாலேயே அவர்கள் சிறையில் உள்ளார்கள். எனவே இதனை உணர்ந்து ஒவ்வொரு தமிழ் மகனும் போராட முன்வர வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/25637

அரசியல் கைதிகள் விவகாரம்;மல்வத்தை பீட தேரர் ஜனாதிபதியுடன் பேச்சு

வவுனியாவில் இருந்து அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில்  உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாக மல்வத்தை பீடத்தைச் சேர்ந்த விஜிதசிறி அனுநாயக தேரர் தெரிவித்தார். 

வவுனியா நீதிமன்றத்திற்கு மீண்டும் மாற்றுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  அரசியல் கைதிகளுக்கு நியாயம் கோரி பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தை ரெலோ இயக்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் கணேஸ்வரன் வேலாயுதம் கண்டி மல்வத்தை பீடத்தின் விஜிதசிறி அனுநாயக தேரரிடம்  கையளித்தார்.

அதன்போது இது விடயம் தொடர்பாக  விஜிதசிறி அனுநாயக தேரர்   ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி நியாயத்தை விளக்குவதாக  உறுதியளித்தார்.

http://www.thinakkural.lk/article.php?local/kyrbsoiobd4732fd1d83de2522832wgy4i17a02d4e221ede9a681432lfjwv

 

சம்பந்தன் தன் பலத்தை உணராவிடின் ஆபத்தே! - பிரபா கணேசன் எச்சரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அவரது பலத்தை உண ராமல் இருப்பது, தமிழ்மக்களுக்கு ஆபத்தாகவே முடியும் என, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், உண்ணாவிரதக் கைதிகள் நிலைமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட் சியின் தமிழ் அமைச்சர்களுமே காரணம் எனவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக  அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
தமது வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மீண்டும் மாற்ற வேண்டும் என்று கடந்த 18 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் நிலைமை மிகவும் பாரதூரமான நிலையை அடைந்துள்ளது.
 
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின ரும் நாடாளுமன்ற தமிழ் அமைச்சர்களும் இது சம்பந்தமான அறிக்கைகளை வெளி யிடுவதில் அவரவர்களுக்கிடையே மோதிக் கொள்கின்றார்கள்.
 
மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண் டும் என்றால் இவர்கள் நாடாளுமன்றக் கதிரையில்  அமர்ந்து சுகபோகங்களை அனுபவிப்பதில் என்ன பயன்? இதனையே தீர்க்க முடியாத இவர்கள், தமிழ் மக்களின் உரிமைகளை எப்படிப் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை. 
 
உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஏதும் ஆபத்து நடந்தால் முழுப் பொறுப்பையும் இவர்களே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=15535&ctype=news

 

இவர்களின் அரசியல் கைதிகள் நாடகத்தின் ஒருபகுதியை முதலமைச்சர் விக்னேஸ்வரன் போட்டுடைத்துள்ளார்.

சிங்கள நீதித்துறை தமிழர்களுக்கு எந்தவொரு முழுமையான நீதி, நியாயத்தையும் வழங்கிவிடாது என்று சிலர் கூறுவது உண்மையாகி வருகிறது.

அரசியல் கைதிகளுக்கு நியாயம் தேடும் முயற்சியை குழிதோண்டிப்புதைக்கும் விதமாகவே அரச பக்கவாத்தியங்களாக உள்ள மனோகணேசன், சம்பந்தன், சுமந்திரன், சுவாமிநாதனின் செயல்கள் அமைந்துள்ளன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.