Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர்

Featured Replies

ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர்

 
ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர்
 
 

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­சின் தலை­வர் ரவூப் ஹக்­கீ­மும், தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் அண்­மை­யில் வெவ்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் தெரி­வித்த கருத்­துக்­கள் இன்­றைய சூழ்­நி­லை­யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன.

‘‘தமி­ழர்­க­ளின் விருப்­பத்­துக்­குக் குறுக்கே முஸ்­லிம்­கள் நிற்­கக் கூடாது. அர­சி­யல்­வா­தி­கள் இணைப் பைத் தடுப்­ப­தி­லும் பிரிப்­பைக் கேட்­ப­தி­லும் தான் தமது காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­ப­ரா­யின், அது அவர்­க­ளின் அர­சி­யல் வங்­கு­ரோத்­தின் உச்­சக்­கட்­டம் என்றே கூற வேண்­டும்’’ இவ்­வாறு ஹக்­கீம் தெரிவித்துள்ளமை அவ­ரது தெளிந்த அர­சி­யல் ஞானத்தை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

அவர் வடக்­குக் கிழக்கு மாகா­ ணங்­களை மன­தில் கொண்டே இந்­தக் கருத்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளார் என நம்­ப­லாம்.

இணைந்­தி­ருந்த மாகா­ணங்­கள் நீதி­மன்­றத் தீர்ப்­பின் மூலம் பிரிக்­கப்­பட்ட பரி­தா­பம்

நாட்­டின் அர­ச­மைப்­புக்­கான 13ஆவது திருத்­தத்­தின் பிர­கா­ரம் ஒன்­றி­ணைக்­கப்­பட்ட வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் ஒரு நீதி­மன்­றத்­தீர்ப்­பின் மூல­மா­கப் பிரிக்­கப்பட் டன.

இந்­திய இலங்கை ஒப்­பந்­த­மும் இதன் மூல­மா­கத் தூக்­கி­யெ­ றி­யப்­பட்­டது. ஆனால் இது தொடர்­பாக இந்­திய இலங்கை அர­சு­கள் கவ­லைப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

பிரிப்­புக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வில்லை.
வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தமது பூர்­வீக இடங்­க­ளாக இன்­ற­ள­வும் தமிழ்­மக்­கள் நினைத்­துக் கொண்­டி­ருந்­கின்­ற­னர்.

இணைந்த இவ்­வி­ரண்டு மாகா­ணங்­க­ளில் அவர்­களே பெரும்­பான் மை­யி­னர் என்ற அந்­தஸ்­தை­யும் பெற்­றுள்­ள­னர்.ஆனால் இரண்டு மாகா­ணங்­க­ளும் பிரிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் அந்த நிலை மாறி விட்­டது. இதைத் தொடர்ந்து பரா­ம­ரித்து வரு­வ­தைத்­தான் கிழக்­கில் உள்ள முஸ்­லிம் மக்­கள் விரும்­பு­கின்­ற­னர். போரா­ட­வும் செய்­கின்­ற­னர்.

ஆனால் கிழக்­கில் துரி­த­மாக இடம்­பெற்று வரு­கின்ற சிங்­க­ளக்­கு­டி யேற்­றங்­க­ளால் தமி­ழ­ர்களின் காணி­ கள் மட்­டும் பறி­போ­க­வில்லை. முஸ்­லிம் மக்­க­ளின் காணி­க­ளும் பறி­போய்க் கொண்­டி­ருக்­கின்றன.

இந்த நிலை தொட­ரு­மா­னால், அந்த மக்­க­ளின் இருப்பே கேள்­விக்­கு­றி­யாக மாறி­வி­டும். இதைச் சுய­ந­லம் மிக்க சில முஸ்­லிம் அர­சி­யல் தலை­மை­கள் உணர்ந்து கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை.

அர­சி­ய­லில் பத­வி­க­ளைப் பெறு­வது மட்­டுமே இவர்­க­ளின் நோக்­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது. தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் இணைந்­தி­ருக்­கும் போது­தான் பெரும்­பான்­மை­யின இன­வா­தி­க­ளின் சவால்­க­ளுக்கு முகம் கொடுக்க முடி­யும் என்­பதை இவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.

ரவூப் ஹக்­கீம் இதை நன்கு உணர்ந்து கொண்­ட­தால் தற்­போது சரி­யான கரு­த்தைத் தெரி­வித்­துள்­ளார். இதே­வேளை கூட்­ட­ மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் தெரி­வித்த கருத்­துக்­க­ளும் இங்கு முக்­கி­யத்­து­ வம் பெறு­கின்­றன.

சம்­பந்­த­னின் கருத்து வெளிப்­பாடு சிங்­கள தலை­மைத்­து­வங்­க­ளுக்கு ஒரு எச்­ச­ரிக்கை

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் பிரி­வி­னை­யைத் தடுக்­கின்ற உறு­தி ­மொழி வழங்­கப்­பட்­டுள்­ள­தால் வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் இணை­வ­தால் நாடு பிள­வு­பட்டு விடு­மென சிங்­கள மக்­கள் அச்­ச­ம­டை­யத்­தே­வை­யில்­லை­யெ­ன­வும், உரிய தீர்வு கிடைக்­கா­து­விட்­டால் தமி­ழர்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­வி­டு­வார்­கள் என­வும் சம்­பந்­தன் கூறிய கருத்­துக்­க­ளைப் பெரும்­பான்­மை­யின அர­சி­யல் தலை­வர்­கள் சிங்கள மக்­க­ளி­டம் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.

இன­வா­தி­கள் வழக்­கம் போன்று புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டால் நாடு இரண்­டா­கப் பிள­வு­பட்­டு­வி­டும் என­வும், வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் இணைந்து விட்­டால் நாடு பிளவு படு­வ­தற்­குச் சமம் என­வும் தவ­றான பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

மக்­க­ளும் இதை நம்­பு­ கின்றனர் என்றே தெரி­கின்­றது. முன் னாள் அரச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­ப­டு­ வ­தைத் தடுத்தே தீரு­வேன் எனச் சூளு­ரைத்­துள்­ளமை இங்கு கவ­னிக்­கத்­தக்­கது.

தமி­ழர்– முஸ்­லிம்­கள் ஒற்­று­மை­ இன்­மை­யை வாய்ப்பாகப் பயன்படுத்தும் சிங்­களத் தலை­மை­கள்

சிறு­பான்­மை­யி­னர் எனக் குறிப்பி­டப்­ப­டும்­போது தமி­ழர்­க­ளும், முஸ்­லிம்­க­ளும் அதில் உள்­ள­டக்­கப்­ப­டு­கின்­ற­னர். பாதிப்­புக்­களை அடிக்­கடி எதிர்­கொள்­ள­ப­வர்­க­ளும் இவர்­கள்­தான்.

இவர்­கள் இரண்டு பிரி­வு­க­ளா­கப் பிள­வு­பட்டு நிற்­ப­தால் இவர்­க­ளைத் துன்­பு­ றுத்­து­வது இன­வா­தி­க­ளுக்கு எளி­தா­கப் போய்­விட்­டது. தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் ஒன்­றாக இணைந்து செயற்­ப­டு­வார்­க­ளா­யின் அவர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற சவால்­க­ளைச் சமா­ளிப்­பது எளி­தா­கவே இருக்­கும்.

இன­வா­தி­க­ளும் இவர்­க­ளது ஒற்­று­மை­யைக் கண்டு மிரண்டு போய்­வி­டு­வார்­கள்.
முஸ்­லிம் தலை­மை­கள் தமிழ்த் த­லை­மை­யு­டன் ஒன்­றாக அமர்ந்து மனம் விட்­டுப் பேசு­வ­தால் தமக்­கி­டையே உள்ள முரண்­பா­டு­களுக் குத் தீர்­வைக் காண முடி­யும்.

ஆற அமர இருந்து பேசும்­போது முரண்­பா­டு­க­ளுக்­கான தீர்­வும் சுல­ப­மா­கக் கிடைத்­து­வி­டும்.

இன்­றைய நிலை­யில் முஸ்­லிம் தலை­மை­கள் கூறு­பட்­டுக் கிடக்­கின்­றன. சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ ர­சுக்­குள்­ளேயே முரண்­பா­டு­கள் வலுத்து வரு­கின்­றன. அதன் தலை­மைக்கு எதி­ரா­கப் போர்க்­கொடி தூக்­கு­ப­வர்­கள் அங்கு இல்­லா­ம­லில்லை.

இதை­விட அதாவுல்லா, றிசாட் பதி­யு­தீன், பஸீர் சேரு தாவூத் ஆகி­யோ­ரும் தம்மை முஸ்­லிம் தலை­மை­களாக உரு­வ­கப்­ப­டுத்­திச் செயற்­ப­டு­கின்­ற­னர். இத­னால் தமிழ் முஸ்­லிம் தலை­வர்­க­ளின் பேச்சு இல­கு­வாக இருக்­கப் போவ­தில்லை. இழு­ப­றி­கள் ஏற்­ப­டத்­தான் செய்­யும்.

தற்­போது ஹக்­கீம் காட்­டி­யள்ள நல்­லெண்­ணச் சமிக்­ஞை­யைத் தமிழ்த் தலை­மை­கள் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வர வேண்­டும். கடந்­த­கால கசப்­பான அனு­ப­வங்­களை இனிப்பான­வை­யாக மாற்றிக் கொள்ள வேண்­டும்.

ஏனென்­றால் இன்று ஓர் உறு­தி­யான, தீர்க்­க­மான கட்­டத்­தில் தமி­ழர்­கள் உள்­ள­னர். வாழ்வா? சாவா? என்ற நிலை­தான் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. வாழ்­வை­யும் சாவை­யும் நிச்­ச­ யிக்­கப் போவது எமது எதிர்­கால நட­வ­டிக்­கை­கள்­தான்.

இதில் கவ­ன­மா­க­வும் உறு­தி­யா­க­வும் இருப்­ப­து­தான் வெற்­றிக்கு வழி­வ­குக்­கும். தமிழ் முஸ்­லிம் தலை­மை­கள் இதை உணர்ந்த செயற்­பட்­டால் போது
மா­னது.

http://newuthayan.com/story/36157.html

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்த்தல் முடியும் போது கக்கீமின் சுய முகம் தெரிந்து விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.