Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வால்காவிலிருந்து கங்கை வரை

Featured Replies

vaalkavilirunthu-gangai-varai-10000066-6

 

Product Description

நூலின் பெயர்    : வால்காவிலிருந்து கங்கை வரை

ஆசிரியர் பெயர்  : ராகுல சங்கிருத்தியாயன்

தமிழில் மொழி பெயர்ப்பு : கண முத்தையா

 

புத்தகம் பற்றி...,

 

1949 முதல் 27 பதிப்புகளை கண்ட அறிய அறிவுப் புதையலான இந்த புத்தகம் தமிழகத்தில் சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட சிறந்த புத்தகம் ஆகும்

ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் ஜெயிலில் இருந்து எழுதி மூல நூலான வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதி முடித்தார்

வால்கா வெளிவந்த சில தினங்களுக்கு பின் அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் என்று சொன்னார்
மனித நாகரிக வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் யாவரும் வாங்கி படிக்க வேண்டியவை ஆகும்

இவைகள் வெறும் கதைகள் அல்ல சமுதாய வளர்ச்சியையும் சரித்திரத்தையும் காலங்களையும் நிர்ணயித்து கதை உருவிலே எழுத பட்டிருப்பதால் சில இடங்களை படிக்கும் போது சரித்திர ஏடுகள் படிப்பதை போன்ற உணர்சிகளைத் தரலாம்
சரித்திரத்தை படிப்பதால் ஏற்படும் சலிப்பும் எற்படாத வன்னம் கதை உருவிலே தந்திருப்பதாலேயே வாசகர்களிடையே இத்தகைய வரவேற்பை பெற்றது இந்த நூல்

இந்த கதையின் முடிவுகளை பற்றி ஆதார பூர்வமாக தர்க்கம் செய்வது எனது சக்திக்கும் அப்பாற்பட்டது இவற்றின் கருத்தை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்ய ராகுல் ஜி போன்று ஞான கடலாய் இல்லாவிட்டாலும்  அவரை அடுத்து செல்லக் கூடிய ஞான மாணவனாக இருக்க வேண்டும். ராகுல் ஜியின் பேனா கற்பனை வடிவத்தால் பல வருடங்கள் முயற்சியினாலே கிடைத்தது இந்த படைப்பு .

 

BOOK NAME           : Valkavilirundhu Gangai Varai

BOOK WRITER       : Kana.Muthiya

BUY ONLINE           :available this tamil book.

https://www.chennaishopping.com/வால்காவிலிருந்து-கங்கை-வரை-valgavil-irunthu-gangai-varai/book/2214/

 

 

 

  • தொடங்கியவர்

சிந்து முதல் கங்கை வரை

71862.jpg

ராகுல் சாங்கிருத்தியாயன் சிறந்த சிந்தனையாளர்.  பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர்.  வரலாற்று அடிப்படையில் கதைகள் பின்னுபவர். சிறந்த எழுத்தாளர்.  எல்லாராலும் விரும்பப்படும் தத்துவஞானி.  த்த்துவ நூல்கள் பல படைத்த இவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை என்னும் நூல் பதினான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூல்களாக அச்சிடப்பட்டன.  அதைப்போலவே சிந்து முதல் கங்களை வரை என்னும் இந்நூலும் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நூலாகும்.
 
இந்நூல் எளிய நளினமான தமிழ் நடையில் வடிவம் பெற்றதற்குச் சிறந்த எழுத்தாளரான திரு. மாஜினிரங்கசாமி அவர்களே காரணமானவர்.
 
தமிழறிஞர்களின் தேவை கருதி சிந்து முதல் கங்கை வரை என்று இந்நூலை வெளியிட்டு வாசகர்களின் ஆதரவைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
 
பதிப்பகத்தார்

 

http://www.noolulagam.com/product/?pid=1862

  • கருத்துக்கள உறவுகள்

வால்காவில் இருந்து கங்கைவரை மிகவும் அருமையான நூல். நீராவியாடியில் செங்கையாழியானின் வீட்டு லைப்பிரரியில் இந்த நுழை எடுத்து வாசித்தது இன்றும் பசுமரத்தாணிபோல் நினைவில் நிலைத்திருக்கின்றது.(1968/70 களில்)அன்று பெண் தலைமையில் குழுக்களாக மனித இனம் வாழ்ந்த வாழ்வியல் பற்றி எல்லாம் சிறப்பாக எழுதியிருக்கும். நிறைய மறந்து விட்டது.....!  :rolleyes:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் படிக்க வேண்டிய மிகவும் அருமையான புத்தகம். எம் முன்னோர் வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை  முறைகள் குழுமுறையான வாழ்வியல் கண்ணோட்டம் அவர்கள் படிப்படியாக எப்படி மாற்றமடைந்தார்கள் நாகரீக வளர்ச்சி பண்பாட்டு விழுமியங்கள் என்று அனைத்தையும் மிகவும் சிறப்பாக எழுதியிருந்தார்கள். நான் பல வருடங்களுக்குமுன் படித்ததால் எனக்கும் நிறைய மறந்து விட்டது ஆனாலும் மனதில் பதந்துவிட்ட நல்லதொரு பதிவு.

ஆக சிறு வயதில் வாசிக்க தொடங்கி பிறகு விட்டு விட்ட புத்தகம். இப்ப போன வாரத்திலிருந்து மீண்டும் வாசிக்கத் தொடங்கி உள்ளேன். ஆரியரின் வருகை, புரோகிதர்களின் பித்தலாட்டம், இந்திரன் என்பவன் யார், வாஸ்து சாத்திரம் எப்படி உருவானது, ரிக் வேதம் எழுதப்பட்ட காலம், யவனர்களின் வருகை என நீளுகின்றது. இப் புத்தகம் பற்றி நேற்று முந்தினமும் நான் குறிப்பிட்டு இருந்தேன்.

சிந்து முதல் கங்கை வரை புத்தகமும் வாசிக்க வேண்டிய லிஸ்ரில் உள்ளது. ஆனால் புத்தகம் இன்னும் கிடைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.